#ஏகாதசி விரதம்#

MUTHUPANDIAN RAMKUMAR
723 views
15 days ago
AI indicator
*🙏🕉️25.07.2026 தேவசயனி ஏகாதசி🕉️🙏* *🙏🪷தேவசயனி ஏகாதசி,🪷🙏* *🙏🪷சாதுர்மாஸ்ய விரதம்* *வாசுதேவ துவாதசி* *விரத மகிமைகள், வழிமுறைகள்..🌷🙏* *🙏🕉️கடுமையான துயரங்கள் மற்றும் இக்கட் டான தருணங்களை நம் வாழ்வில் சந்திக் கும்போது இவற்றிலிருந்து மீண்டுவர வழியே இல்லையா என்பதுதான் மனித மனத்தில் எழும் கேள்வி.🙏* *🙏அத்தகைய கேள்விகளுக்கான விடைகளா க நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத் திருக்கும் முறையே விரதங்கள். 🕉️🙏* *🙏ஒரு மாதத்தில் ஓரிரு நாள்கள் விரதமிரு ந்து இறை வனை வழிபட ஏற்பட இருக்கும் அல்லது ஏற்பட்டிருக்கும் துன்பங்களிலிரு ந்து காத்துக்கொள்ளலாம் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். 🙏* *🙏அவற்றைக் கடைப்பிடித்து அதன் பலனை யும் புராணங்களாக எழுதிவைத்தார்கள். அப்படிப்பட்ட விரதங்களில் மிகவும் முக்கி யமானது ஏகாதசி விரதம்.🕉️🙏* *🙏🪷தேவசயனி ஏகாதசி🪷🙏* *🙏🪷‘ஏகாதசிக்கு மிஞ்சிய விரதம் இல்லை’ என் பது ஆன்றோர் வாக்கு. ஏகாதசி திதி ஒரு மாதத்தில் இருமுறை வரும். ஒவ்வோர் ஏகாதசியும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. அப்படி ஆஷாடமாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு தேவசயனி ஏகாதசி என்று பெயர். 🪷🙏* *🙏சயனம் என்றால் உறக்கம். தேவர்களும் மகாவிஷ்ணுவும் உறங்கச் செல்லும் நாள் தேவசயனி ஏகாதசி. இந்த நாளில் யோக நித்திரையில் ஆளும் மகாவிஷ்ணு பின்பு கார்த்திகை மாதத்தில்வரும் பிரபோதினி ஏகாதசி அன்றுதான் கண்விழிப்பதாக ஐதிகம். 🙏* *🙏புராண வரலாறு🙏* *🙏மக்களுக்காக வாழ்ந்த மன்னன் மாந்தாதா* *ஏகாதசி விரத மகிமைகளை பாண்டவர்க ள்* *கேட்பதுபோலவும் பகவான் கிருஷ்ணர் சொல்வதுபோலவும் அமைந்திருப்பது ஏகாதசி மஹாத்மியம் என்னும் நூல்.*🙏 *🙏இதன் காரணம், பகவான் கிருஷ்ணரே இந்த ஏகாதசி விரதத்தின் மகிமைகளை ப் போற்றிக்கூறியிருப்பதுதான். மேலும் கிருஷ்ண பரமாத்மாவின் காலத்துக்கு முன்பாகவே ஏகாதசி விரதங்கள் புகழ் பெற்று விளங்கின என்பதையும் இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.🙏* *🙏யுதிஷ்ட்டிரர் கண்ணனிடம் தேவ சயனி ஏகாதசியின் மகிமைகளைக் கேட்க, கிருஷ்ணரோ, பிரம்மா, நாரதருக்கு எடுத் துச் சொன்ன ஒரு நிகழ்வைச் சொல்லி இதன் சிறப்பை விளக்குகிறார்.* *🙏சூரிய வம்சத்தில் பிறந்த மன்னன் மாந்தாதா. தன் நாட்டில் நீதி வழுவாமல் ஆட்சி செய்துவந்தான். நாடும் சுபிட்சமாக இருந்தது. ஒருமுறை அவன் நாட்டில் மழை குறைந்து பஞ்சம் ஏற்பட்டது.* *🙏தான் நீதி வழுவாமல் ஆட்சி புரிந்தும் இப்படி ஆகிவிட்டதே என்று வருந்திய மன்னன் இதன் காரணம் அறிய கானகத் தில் வாழும் ரிஷிகளைச் சந்திக்கச் சென்றான்.* *🙏அங்கு ஆங்கிரஸ முனிவரைச் சந்தித்து ஆசிபெற்றான். அப்போது தன் நாட்டின் பஞ்சத்துக்கு என்ன காரணம்? தான் நீதி வழுவாமல்தானே ஆட்சி செய்கிறேன்’ என்று கேட்டார்.* *🙏இதைக் கேட்ட முனிவர் அவனின் சிந்தை யைச் சோதிக்கும்விதமாக, “ஒருநாட்டில் குடிமக்கள் செய்யும்பாவம் மன்னனையே சாரும். எனவே உன் நாட்டு மக்களில் ஒருவன் செய்த பாவமே உன் நாட்டை இப்படி வாட்டுகிறது. நீ அவனைத் தேடிக் கண்டுபிடித்துக் கொலை செய்துவிட்டா ல் இந்தப் பஞ்சம் நீங்கிவிடும்” என்றார்.* *🙏அதைக் கேட்ட மன்னன் திடுக்கிட்டு, “ஓர் உயிரை கொல்லும் பாவத்தை செய்யாது, இதிலிருந்து மீள வேறு வழியில்லையா” என்று கேட்டான்.* *🙏இதைக் கேட்ட மகரிஷி குடிமக்கள் மீதான அவன் அன்பை உணர்ந்து மகிழ்ந்து ஆஷாட மாதத்தில் வரும் ஏகாதசி விரதத் தைப் பின்பற்று. அன்றைய தினத்தில் நீயும் உன் நாட்டு மக்களும் விரதம் இருந் து அந்த நாராயணரை வழிபட்டால், அவர் ஜல நாராயணராக பெருமழை பெய்து உன் நாட்டின் பஞ்சத்தைப் போக்குவார்” என்று ஆசிவழங்கினார்.* *🙏மன்னனும் அவ்வாறே விரதம் இருந்து வணங்கினான். முனிவர் சொன்னது போ ல் மழை பொழிந்து பஞ்சம் நீங்கியது. அன்று முதல் தேவசயனி ஏகாதசி என்பது இக்கட்டான தருணங்களில் கடைப்பிடித்து ப் பயன் பெற வேண்டிய ஏகாதசிவிரதமாக ப் போற்றப்பட்டது என்று கிருஷ்ணர் விளக்கினார்.* *🙏விரத முறைகள்🙏* *🙏🌷பொதுவாக ஏகாதசி விரதம் என்பது மூன் று நாள்கள் கொண்டது. ஏகாதசிக்கு முன் தினம் அதாவது தசமி திதி அன்று இரவு உணவைத் தவிர்க்க வேண்டும். மறுநாள் காலையில் நீராடி பெருமாளை வணங்கி விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் அல்லது நாராயண மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.🌷🙏* *🙏🌷ஏகாதசி அன்று முழு உபவாசம் இருப்பது நல்லது. இயலாதவர்கள் முழு அரிசி சோற் றைத் தவிர்க்க வேண்டும். ஏகாதசி அன்று துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். அதற் கான துளசியை தசமி அன்றே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் துவாதசி காலையில் பாரனை செய்து விரதம் முடிக்க வேண்டும்.🌷🙏* *🙏🌷இதைத் தொடர்ந்துவரும் பௌர்ணமியில் இருந்து சாதுர்மாஸ்ய விரதம் தொடங்குகிறது.🌷🙏* *🌷சாதுர்மாஸ்ய விரதம்🌷* *🙏தேவசயனி ஏகாதசிக்குப் பின்வரும் பௌ ர்ணமியிலிருந்து நான்கு மாத காலம் மேற் கொள்ளப்படும் விரதமே சாதுர்மாஸ்ய விரதம். அதாவது ஆஷாட பௌர்ணமியி ல் இருந்து கார்த்திகை பௌர்ணமி வரை யான கால கட்டமே சாதுர்மாஸ்ய விரத காலம்.🙏* *🙏இந்தக் காலம் மிகவும் புனிதமான காலமா கப் போற்றப்படுகிறது. இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் தங்கள் உணவு முறை யில் ஒரு நெறிமுறையைப் பின்பற்றுவார் கள்.*🙏 *🙏குறிப்பாக, முதல் மாதம் உணவில் காயும் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொள்வார் கள். இரண்டாம் மாதத்தில் பால் அருந்து வதை த் தவிர்ப்பார்கள். மூன்றாம் மாதம் தயிரை த் தவிர்ப்பார்கள். நான்காம் மாதம் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்க ள். இப்படி உணவிலு ம் ஒரு கட்டுப்பாடு கொள்வதோடு மனதை இறைவழிபாட்டி லேயே வைத்திருப்பார்கள்.*🙏 *🙏இந்தக் காலகட்டத்தில் சூரியன் தன் உத்தி ராயண சஞ்சாரத்திலிருந்து விலகி தட்சி ணாயின சஞ்சாரத்தில் பிரவேசிப்பார். இவை எல்லாமே தேவசயனி ஏகாதசியை அடுத்துவரும் நிகழ்வுகள்.* *🙏வாஸுதேவ துவாதசி🙏* *🙏🌷தேவ சயனி ஏகாதசியை அடுத்துவரும் துவாதசி வாசுதேவ துவாதசி ஆகும். இந்த நாளில் வாசுதேவ கிருஷ்ணரை வழிபடும் முறை உள்ளது.* *🙏இந்த நாளில் காலையில் நீராடி பகவான் கிருஷ்ணரை முழுமுதற்கடவுளாக எண்ணி வழிபட வேண்டும். மேலும் வாசு தேவ துவாதசி அன்று செய்யும் தானம் பல மடங்கு பலன் அளிக்கக் கூடியது. இந்த நாளில் உணவு தேவை உள்ளவர்களுக்கு த் தானியம் தானம் செய்வது சிறப்பு.*💐🌷🌹🙏 *🙏🕉️ஓம் நமோ நாராயணாய....🕉️🙏* *🙏🕉️ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்....🕉️🙏* ##ஏகாதசி விரதம்# #வைகுண்ட ஏகாதசி #ஆடி தேய்பிறை ஏகாதசி #வருத்தினி ஏகாதசி
k.R
764 views
1 months ago
ஜெய் ஸ்ரீராம் 🙏 ஜெய் ஸ்ரீகிருஷ்ணா 🙏 ஓம் நமோ வெங்கடேசாய 🙏 *அனைத்து பாப* *விளைவுகளையும் போக்கி*, *88,000 அந்தணர்களுக்கு உணவளித்த பலனை பெற்றுத்தரும்* * *யோகினி ஏகாதசி விரதம்* 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 *யோகினி ஏகாதசி* *11.07.26 , ஆனி 27*, *சனிக்கிழமை கிருஷ்ணபக்ஷ ஏகாதசி* ( *ஏகாதசி திதி* *10.07. 26 வெள்ளிக்கிழமை காலை 8.17 மணி முதல் 11.07.26 சனிக்கிழமை விடியற்காலை 5.23 மணி வரை உள்ளது*.) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 யோகினி ஏகாதசி 🌼🌼🌼🌼🌼 ஆனி மாத தேய்பிறையில் (ஜூன் /ஜூலை) தோன்றக்கூடிய யோகினி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரர் கேட்டார், ஓ! முழுமுதற் கடவுளே! ஓ! மதுசூதனா நான் நிர்ஜல ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்டுள்ளேன். இப்பொழுது ஆனி மாத (ஜூன்/ஜூலை) தேய்ப்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி கேட்க விரும்புகிறேன். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னா! ஆனி மாத தேய்பிறையில் (ஜூன்/ஜூலை) தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி நான் விளக்குகிறேன். இந்த ஏகாதசியின் பெயர் யோகினி. எல்லா கடுமையான பாவ விளைவுகளையும் அழித்து ஒருவரை ஜட இருப்பிலிருந்து விடுவிக்கிறது. ஓ! மன்னர்களில் சிறந்தோனே! இந்த உண்மையை விளக்க புராணத்தில் உள்ள ஒரு கதையைக் கூறுகிறேன். அழகாபுரியின் மன்னனான குபேரன். பகவான் சிவபெருமானின் தீவிர பக்தன், அவரிடம் யக்ஷ வம்சத்தை சேர்ந்த தோட்டக்காரன் இருந்தான். அவன் பெயர் ஹேமா. அவன் மனைவியின் பெயர் விசாலாக்ஷி மிக அழகானவர். ஹேமா அவனிடம் மிக்க பற்று கொண்டிருந்தான். ஹேமா தினந்தோறும் மானஸ சரோவரில் இருந்து மலர்களை சேகரித்து அவற்றை குபேரனிடம் கொடுக்க, குபேரன் அம்மலர்களை கொண்டு சிவபெருமானை வழிபட்டு வந்தார். ஒரு நாள் மானஸ சரோவரில் இருந்து மலர்களை சேகரித்து வந்து ஹேமா, தன் பிரியமான மனைவியின் அன்பால் கட்டுப்பட்டு வீட்டிலேயே தங்கிவிட்டான். ஓ! மன்னா. இதன் விளைவாக அன்று குபேரனுக்கு மலர்கள் கிடைக்கவில்லை. யக்ஷ வம்சத்தின் மன்னனான குபேரன் ஹேமாவின் வருகைக்காக ஆறு மணி நேரம் காத்திருந்தார். மலர்கள் இல்லாததால் அவரால் சிவபெருமானின் வழிபாட்டை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் மிக்க ஆத்திரம் அடைந்த மன்னர். தோட்டக்காரனின் தாமதத்திற்குரிய காரணத்தை அறியுமாறு தன் காதுவர்களை ஏவினார். யக்ஷ தூதுவர்கள் சிறிது நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்து மன்னரிடம் ஓ! எஜமானே! ஹேமா தன் மனைவியிடம் மோகம் கொண்டு வீட்டிலேயே தங்கியுள்ளான். எனக் கூறினார். இவ்வார்த்தைகளைக் கேட்ட குபேரன் மிகவும் ஆத்திரமடைந்தார். உடனே ஹேமாவை அழைத்து வந்து, தன் முன் நிறுத்துமாறு குபேரன் தன் சேவகர்களுக்கு கட்டளையிட்டார். தன் தவறை உணர்ந்த ஹேமா நாணமுற்று மிகுந்த பயத்துடன் குபேரன் முன் சென்று வணங்கினான். கோபத்தால் குபேரன் உடல் நடுக்கத்துடனும் கண்கள் சிவந்தும் காணப்பட்டார். குபேரன் கோபத்துடன் கூறினார். ஓ! பாவியே! மதக்கொள்கைளை அழிப்பவனே, நீ என்னுடைய வழிபாட்டிற்குரிய சிவபெருமானை அலட்சியம் செய்து, உன்னுடைய புலன் நுகர்வு செயல்களில் ஈடுபட்டிருக்கிறாய். ஆகையால் நான் உன்னை சபிக்கிறேன். வெண்குஷ்டத்தால், அவதிப்பட்டு உன்னுடைய மனைவியை நிரந்தரமாக பிரிந்திருப்பாய். ஓ! தாழ்ந்த மூடனே! நீ உடனே இங்கிருந்து வெளியேற வேண்டும். குபேரனால் சபிக்கப்பட்ட ஹேமமாலி உடனே அழகாபுரியில் இருந்து கீழிறங்கி இந்த மண்ணுலகில் பிறவி எடுத்தான். வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டு மிகுந்த துன்பத்திற்கு ஆளானான். மிகுந்த மன உளைச்சலுடன், உணவும், நீரும் இன்றி ஒரு பயங்கரமான அடர்ந்த காட்டிற்குச் சென்றான். அங்கு அவன் பசி மற்றும் தாகத்தால் இரவும் பகலும் துன்பப்பட்டான். பகலில் எந்தவொரு இன்பமும் கிடைக்கவில்லை. இரவில் அவனால் தூங்கவும் முடியவில்லை. கோடையிலும் குளிர்காலத்திலும் அவன் மிக துன்பப்பட்டான். சிவபெருமானின் வழிபாட்டிற்கு உதவியதால் அவனுடைய பூர்விகம் நினைவில் இருந்தது. பல பாவச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவனுடைய முந்தைய செயல்களை அவனால் நினைத்துக் கொள்ள முடிந்தது. மற்றும் அவனுடைய உணர்வு தூய்மையுடனும் எச்சரிக்கையுடனும் இருந்தது. இதுபோன்று பல நாட்கள் காட்டில் திரிந்த பிறகு அதிர்ஷ்டவசமாக ஒரு நாள் ஹேமாமாலி இமயமலைத் தொடரை அடைந்தான். அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தபோது கடவுளருளால் மார்கண்டேய பெருமுனிவரை சந்திக்க நேர்ந்தது. மார்கண்டேயர் துறவிகளில் மிகச்சிறந்தவர். அவருடைய ஆயுட்காலம் ஏழு கல்பங்கள் ஆகும். தன்பாவங்களை உணர்ந்த ஹேமமாலி. முனிவரிடமிருந்து சற்று விலகி நின்று தன் பணிவான வணக்கங்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பித்தான். கருணை உள்ளம் கொண்ட மார்கண்டேய முனிவர் வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்ட ஹேமாவை அழைத்து ஓ! நீ எப்படி இந்த பயங்கரமான துன்பத்தை அடைந்தாய். இதுபோன்ற அவதிப்படுவதற்கு நீ என்னென்ன பாவமிக்க மற்றும் தீண்டதகாத செயல்களை செய்தாய்? என வினவினார். இதைக் கேட்ட ஹேமா பதிலளித்தார். ஓ! பெருமுனிவரே! நான் யக்ஷகுலத்தின் மன்னனான குபேரனின் தோட்டக்காரன். என் பெயர் ஹேமாமாலி. நான் வழக்கமாக மானஸ் சரோவரில் இருந்து மலர்களை சேகரித்து வந்து, அவற்றை எனது எஜமானரான குபேரனிடம் கொடுப்பேன். குபேரன் அம்மலர்களால் பகவான் சிவபெருமானை வழிபடுவார். ஒரு நாள் என் மனைவியிடம் இச்சை கொண்டு வீட்டிலேயே தங்கியதால் குபேரனுக்கு மலர்களை கொடுக்கத் தவறினேன். அதனால் ஆத்திரமடைந்த யக்ஷ குல மன்னனான குபேரன் என்னை சபித்தார். அதன் விளைவாக நான் என் மனைவியைப் பிரிந்து வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிப்படுகிறேன். ஆனால் ஏனோ தெரியவில்லை. இன்று இந்த துர்பாக்கியசாலியான ஆத்மா. திடீரென பாக்கியசாலியாகி உம்மைப் போன்ற பெரியோரை சந்திக்க நேர்ந்தது. சாதுக்கள் எப்பொழுதும் மற்றவர் துன்பத்தை கண்டு துன்புறுவர் என்பதை நான் கேட்டறிந்துள்ளேன். ஓ! பெரு முனிவரே! மங்களகரமான பலன்களை அடையும் விருப்பத்துடன் இந்த நிலையிழந்த ஆத்மா உம்மிடம் சரணடைந்துள்ளது. தயவு செய்து இவனை விடுவியுங்கள். மார்கண்டேய பெருமுனிவர். கருணையுடன் அவனிடம் பேசினார். ஓ! தோட்டக்காரனே! நான் மங்களகரமான மற்றும் பயன்தரும் ஒரு விரதத்தைப் பற்றி உனக்கு அறிவுறுத்துகிறேன். நீ ஆனி மாத தேய்பிறையில் (ஜூன் / ஜூலை) வரக்கூடிய யோகினி ஏகாதசியை அனுஷ்டிக்க வேண்டும். அதன் விளைவாக நீ இந்த வெண்குஷ்டத்தால் அவதிப்படும் சாபத்தில் இருந்து கண்டிப்பாக விடுபடுவாய். மார்கண்டேய முனிவரின் இந்த அறிவுரையைக் கேட்ட ஹேமாமாலி மகிழ்ச்சியடைந்து நன்றியுடன் தன் பணிவான வணக்கங்களை அவருக்கு சமர்ப்பித்தான். பிறகு முனிவரின் அறிவுரைப்படி இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடித்தான். அதன் பலனாக தன்னுடைய தெய்வீக உருவத்தை அடைந்து வீடு திரும்பி தன் மனைவியுடன் சேர்ந்தான். ஒருவர் 88,000 அந்தணர்களுக்கு உணவளிப்பதால் அடையும் பலனை இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதாலேயே அடையலாம். இந்த *யோகினி ஏகாதசி* ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் அழித்து, மிகுந்த தெய்வ பக்தியை கொடுக்கிறது. 🔆🔆🔆🔆K.R 🔆🔆🔆🔆 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே ஓம் நமோ நாராயணாய.✍🏼K. R🌹 #😎வரலாற்றில் இன்று📰 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #ஏகாதசி ##ஏகாதசி விரதம்# #🙏ஏகாதசி🕉️