|| ராமர் ஏன் உயர்ந்தவர் ||
மஹா விஷ்ணுவின் அவதாரங்கள் பலவகை.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தை சொல்ல வந்தவை,
ஆனால் ஒரு மனிதன் எப்படி உன்னத மனிதனாக மிளிர வேண்டும் , உதாரண தத்துவ வடிவமாக வாழவேண்டும் என சொல்ல வந்த அவதாரம்
ஸ்ரீராம அவதாரம் மட்டுமே.
அயனம் என்றால் வழி என பொருள், ஸ்ரீராமன் காட்டிய வழியே ராமாயணம் ஆயிற்று.
கம்பன் இப்படி சொல்கின்றார் அவர் வரியில் தொடங்கலாம்.
"மும்மைசால் உலகுக்கெல்லாம்
மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னை
கண்களில் தெரியக் கண்டான்"
ஸ்ரீராம நாமம்தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மந்திரம், மூல மந்திரம், அது ஏழு பிறவிகளில் செய்த தீவினைகளைப் பொடியாக்கும் என்பது வால்மீகி சொன்னது.
ஸ்ரீராமனின் சிறப்புகளை சொல்ல தொடங்கினால் ஏடும் தாங்காது, உலகமும் தாங்காது.
காலமுள்ள காலமட்டும் யுகங்களை தாண்டி அவன் நிலைத்திருப்பதற்கும் , அவன் புகழை மானிட குலம் பாடுவற்கும் காரணம் வாழ்வின் ஒவ்வொரு பக்கத்துக்கும், ஒவ்வொரு மனிதனின் நிலைக்கும் அவன் வாழ்ந்து சொன்ன உதாரணம்.
ஸ்ரீராமரின் வாழ்வு முழுக்க மானிட தர்மத்தையே போதித்து வாழ்ந்தார், உன்னதமான மானிடனின் மகா உன்னத குணங்களை தன் வடிவாக வாழ்ந்தான். மானிட வாழ்வு சிக்கலும் சிரமமும் கண்ணீரும் மிகுந்தது அதில் சோதனையினை தாண்டி ஒரு மனிதன் தன் நிலையில் வாழவேண்டும் என வாழ்ந்தும் காட்டினான்.
அப்படி சோகமும் பரிதாபமும் கண்ணீரும் நிறைந்த வாழ்வு அவனுடையது, ஆயினும் ஒரு நொடியிலும் அவன் தன்நிலை தவறவில்லை.
மானிடன் எப்படி கர்மமே சுதர்மமாக கொண்டு வாழவேண்டும் என வாழ்ந்த தத்துவம் அவனுடையது.
சகோதர்களுடன் தாய்களுடனும் தந்தையின் ஒப்பற்ற பாசத்தில் வளர்ந்தவன் அவன், அந்த வில்லை கூட சீதைக்காக அவன் உடைக்கவில்லை, விஸ்வாமித்திரர் சொன்னார் உடைத்தான் சீதைக்கு மாலையிடுவதை தசரதனே முடிவு செய்வார் என ஒதுங்கி நின்றார் ராமன்.
பெரும் அழகியும் அரசியுமான சீதையினை அடையும் பந்தயத்தில் வென்றபின்பும் தந்தையின் அனுமதிக்காக காத்திருந்தார்.
தந்தை செய்தி அனுப்பி அனுமதித்த பின்பே அந்த சீதையினை தன் ஒரே மனைவியாய் ஏற்றும் கொண்டார்.
மறுநாள் பட்டாபிஷேகம் எனும் நிலையில் அவன் அரசு மறுக்கபட்டபொழுது, அவர் கானகம் செல்லவேண்டும் என தசரதன் சொன்னபொழுது "யாருக்கு என் அரசை கொடுக்கின்றேன்? என் தம்பிக்குத்தானே" என பெருமையாக சொல்லி கானகம் புகுந்த அவரை அயோத்தி வணங்கி நின்றது.
ஸ்ரீராமன் சென்ற இடமெல்லாம் தர்மங்கள் அரங்கேறின, அரக்கர் கூட்டமும் ஆணவமும் ஒழிந்தது, தர்மத்தை அவர் அப்படி காத்தார்
பெண்கள் மேல் அவனுக்கு தனி இரக்கம் இருந்தது,
சூர்ப்பநகையின் காதலை அவன் மறுத்து அவளுக்கு போதனையே செய்தார், இது முறையன்று என் இயல்புமன்று என எவ்வளவோ போதித்தார் (ஆனால் சீதை இருக்கும்வரை தன் காதலை ராமன் ஏற்கபோவதில்லை என அவளை கொல்ல முயன்ற சூர்ப்பநகையினை லக்குவனே மூக்கறுத்து விரட்டினார்)
தாடகையினை கொல்லுமுன் கூட விஸ்வாமித்திரரிடம் ஒரு பெண்ணை கொல்வது தர்மமாகாது என வேண்டுகின்றார் , "மானிட குலத்துக்கு எதிரான , தர்மத்துக்கு எதிரான அக்கிரமிகளில் ஆண்பெண் பேதமில்லை" என அவர் குரு விளக்கிய பின்பே அவன் அவளை வதைக்கின்றார் ஸ்ரீராமர்..
கல்லான அகலிகை ராமனால் உயிர்பெற்றாள் அப்பொழுதும் ஏற்க மறுத்தான் அவள் முனி கணவன் "கொளதமர் முக்காலமும் உணர்ந்த உனக்கே எது பொய்கோழி என தெரியவில்லையே, அவளுக்கு எப்படி வந்தவன் முனிவன் என தெரியும்?" என அவன் சொன்னபொழுது மன்னிப்பு கேட்டு அகலிகையினை ஏற்றார் முனிவர்.
#🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள் #SRI VENKATESHA #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்