கண் திருஷ்டி விலக எளிய பரிகாரம்

k.R
1.2K views
27 days ago
#👁கண் திருஷ்டி பரிகாரங்கள்🔯 #கண் திருஷ்டி விலக எளிய பரிகாரம் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 திருஷ்டி சம்பந்தமாக திருஷ்டி சுத்தி போடுவதில் இத்தனை வகைகள் தெரியுமா? *1. உப்பு சுற்றி போடுதல்:-* கல் உப்பை சிறிது வலது கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நீரில் போட்டு கரைக்க அந்த உப்பு கரையும்போழுது நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும் என்பதும் ஒரு நம்பிக்கை. *2. சிகப்பு மிளகாய் சுற்றி போடுதல்:* சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட திருஷ்டி கழியும் என்பதும் ஒரு நம்பிக்கை. திருஷ்டி இருந்தால் மிளகாய் வெடிக்கும் ஆனால் நமக்கு கமறாது. திருஷ்டி இல்லையெனில் நமக்கு நெடி ஏற்பட்டு கமறும். *3. கற்பூரம் ஏற்றுதல்:-* கற்பூரத்தை ஏற்றி வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு, தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்பூரத்தை வாசலில் போட்டுவிடுவர். கற்பூரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையுமாம். *4. படிகாரம் சுற்றுதல்:-* மிளகாய் சுற்றி போடுவதுபோலவே படிகாரம் கொண்டும் திருஷ்டி சுற்றி போடலாம். திருஷ்டி இருந்தால் நெருப்பில் போடப்பட்ட படிகாரம் ஒரு பொம்மை மாதிரி மாறிவிடுமாம். *5. கருப்பு வளையல்:-* பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு கருப்பு வளையலை ஆரத்தியுடன் சேர்த்து சுற்றிபோடும் வழக்கம் இன்றும் நாம் பல வீடுகளில் காண்கிறோம். *6.மண் சிறிது மண்ணை கையிலெடுத்து திருஷ்டி சுற்றிவிட்டு அதில் எச்சிலை 3 முறை துப்பச்செய்து அதை வெளியில் எறிந்தால் திருஷ்டி போய்விடும் என்பதும் இன்றும் நம்பப்படுகிறது. இன்று பல கிராமங்களில் இது நடைமுறையில் உள்ளது! *7. எலுமிச்சை குங்குமம்:-* சில வியாபார ஸ்தலங்களுக்கும், வண்டி வாகனம் , வீடு முதலியவற்றுக்கும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின்மேல் குங்குமத்தை நன்றாக தடவி திருஷ்டி சுற்றி விட்டு வாசல் வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிவதையும் இன்றும் நாம் பின்பற்றுகிறோம். *8. தேங்காய் உடைத்தல்* ஒரு தேங்காயின்மேல் கற்பூரத்தை ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்றும் பரவலாக நம்பப்பட்டு வருகிறது. *9. பூசணிக்காய் உடைத்தல்:-* பூசணிக்காயில் குங்குமத்தையும் சிறிது சில்லறைகளையும் போட்டு அதன்மீது கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்று பரவலாக நம்பப்பட்டு வருகிறது. *10. ஆரத்தி:-* கல்யாணம் மற்றும் பூஜை முதலியன முடிந்தவுடனும் மற்றும் சில முக்கியமான சமயத்திலும் ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் வெகு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவும் ஒரு விதமான திருஷ்டி கழித்தலே ஆகும். *11. பட்சி திருஷ்டி:-* குழந்தை பிறந்த வீடுகளில் மாடியில் குழந்தை துணியை உலர வைத்திருப்பார்கள். அவற்றை சூரியன் மறைவதற்குள் எடுத்துவிடுவார்கள். ஏனென்றால் சூரிய அஸ்தமன சமயத்தில்தான் பறவைகள் தமது கூட்டுக்கு திரும்புமாம். அப்பொழுது அவை இத்துணிகளைப்பார்த்து கண் வைக்குமாம். அது குழந்தைக்கு ஆகாது. ஆகவேதான் துணிகள் சூரியன் மறைவதற்குமுன் எடுக்கப்படுகின்றன. பொதுவாக நீங்கள் திருஷ்டி சுற்றி போடும்பொழுது அனைவரும் கையில் கருப்பு கயிறு அல்லது சிகப்பு கயிறு இருக்க வேண்டும்! நெற்றியில் பொட்டோ, குங்குமமோ அல்லது விபூதியோ இட்டுக்கொண்டிருக்க வேண்டும். கிழக்கு நோக்கி நிற்கச்சொல்லி திருஷ்டி சுற்றி போடவேண்டும். இப்படி சுற்றும்பொழுது திருஷ்டி மந்திரம் தெரிந்தவர்கள் அதை கூறி சுற்றுவர். பெரியவர்கள் "தன் திருஷ்டி, தாயார் திருஷ்டி, நாய் திருஷ்டி, நரி திருஷ்டி, உற்றார் திருஷ்டி... தீயசக்திகள் திருஷ்டி" என்று பலவிதமான திருஷ்டிகளை கூற கேட்டிருக்கிறேன். திருஷ்டி மந்திரத்தை மனதிற்குள்தான் கூறவேண்டுமாம். அதை ஒரு குருவின்மூலம் உபதேசம் பெற்றுதான் பிரயோகிக்க வேண்டும். பொதுவாக ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி மேலும் மிக முக்கியமான நாளான அமாவாசை தினங்கள் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தினமாக கருதப்படுகிறது. அதுவும் அமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வந்தால் அது திருஷ்டி சுற்றி போடுவதற்கு மிகவும் ஏற்ற தினமாகும். சூரிய அஸ்தமன சமயம்தான் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தருணமாக கருதப்படுகிறது. இந்த பழக்கத்தையெல்லாம் எப்படி நம்புவது என்றும் சிலர் கேட்கிறார்கள். ஒரு மனிதனுக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகள் மனக்குழப்பங்கள் நஷ்டங்கள் தீராத வியாதிகள்... வந்த வியாதி குணமடையாமல், வந்த தடைகள் விலகாமல் இருந்திருந்தால் யாராவது இன்று திருஷ்டி சுற்றி கொள்ள முன்வருவார்களா? பலன் கிடைப்பதனால்தானே இந்த பழக்கம் ஆயிரக்கணக்கான வருடங்களாக விட்டுப்போகாமல் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. *எண்ணம் போல் வாழ்க்கை* *எண்ணம் போல் தான் வாழ்க்கை* *எல்லாம் வல்ல இறைவனுடைய ஆசிரத்தில் அனைவரும் வளமுடன் நலமுடன் வாழ வேண்டும்.!*🌹 #💐Have a nice day🤩
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.9K views
1 months ago
. சிகப்பு மிளகாய் சுற்றி போடுதல்:*🌶️ சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட திருஷ்டி கழியும் என்பதும் ஒரு நம்பிக்கை. திருஷ்டி இருந்தால் மிளகாய் வெடிக்கும் ஆனால் நமக்கு கமறாது. திருஷ்டி இல்லையெனில் நமக்கு நெடி ஏற்பட்டு கமறும். *3. கற்பூரம் ஏற்றுதல்:-*🔥 கற்பூரத்தை ஏற்றி வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு, தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்பூரத்தை வாசலில் போட்டுவிடுவர். கற்பூரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையுமாம். *4. படிகாரம் சுற்றுதல்:-*💎 மிளகாய் சுற்றி போடுவதுபோலவே படிகாரம் கொண்டும் திருஷ்டி சுற்றி போடலாம். திருஷ்டி இருந்தால் நெருப்பில் போடப்பட்ட படிகாரம் ஒரு பொம்மை மாதிரி மாறிவிடுமாம். *5. கருப்பு வளையல்:-*🧿 பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு கருப்பு வளையலை ஆரத்தியுடன் சேர்த்து சுற்றிபோடும் வழக்கம் இன்றும் நாம் பல வீடுகளில் காண்கிறோம். *6.மண் சிறிது மண்ணை கையிலெடுத்து திருஷ்டி சுற்றிவிட்டு அதில் எச்சிலை 3 முறை துப்பச்செய்து அதை வெளியில் எறிந்தால் திருஷ்டி போய்விடும் என்பதும் இன்றும் நம்பப்படுகிறது. இன்று பல கிராமங்களில் இது நடைமுறையில் உள்ளது! *7. எலுமிச்சை🍋 குங்குமம்:-* சில வியாபார ஸ்தலங்களுக்கும், வண்டி வாகனம் , வீடு முதலியவற்றுக்கும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின்மேல் குங்குமத்தை நன்றாக தடவி திருஷ்டி சுற்றி விட்டு வாசல் வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிவதையும் இன்றும் நாம் பின்பற்றுகிறோம். *8. தேங்காய்🥥 உடைத்தல்:-* ஒரு தேங்காயின்மேல் கற்பூரத்தை ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்றும் பரவலாக நம்பப்பட்டு வருகிறது. *9. பூசணிக்காய் உடைத்தல்:-*🍈 பூசணிக்காயில் குங்குமத்தையும் சிறிது சில்லறைகளையும் போட்டு அதன்மீது கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்று பரவலாக நம்பப்பட்டு வருகிறது. *10. ஆரத்தி:-* கல்யாணம் மற்றும் பூஜை முதலியன முடிந்தவுடனும் மற்றும் சில முக்கியமான சமயத்திலும் ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் வெகு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவும் ஒரு விதமான திருஷ்டி கழித்தலே ஆகும். *11. பட்சி திருஷ்டி:-* குழந்தை பிறந்த வீடுகளில் மாடியில் குழந்தை துணியை உலர வைத்திருப்பார்கள். அவற்றை சூரியன் மறைவதற்குள் எடுத்துவிடுவார்கள். ஏனென்றால் சூரிய அஸ்தமன சமயத்தில்தான் பறவைகள் தமது கூட்டுக்கு திரும்புமாம். அப்பொழுது அவை இத்துணிகளைப்பார்த்து கண் வைக்குமாம். அது குழந்தைக்கு ஆகாது. ஆகவேதான் துணிகள் சூரியன் மறைவதற்குமுன் எடுக்கப்படுகின்றன. பொதுவாக நீங்கள் திருஷ்டி சுற்றி போடும்பொழுது அனைவரும் கையில் கருப்பு கயிறு அல்லது சிகப்பு கயிறு இருக்க வேண்டும்! நெற்றியில் பொட்டோ, குங்குமமோ அல்லது விபூதியோ இட்டுக்கொண்டிருக்க வேண்டும். கிழக்கு நோக்கி நிற்கச்சொல்லி திருஷ்டி சுற்றி போடவேண்டும். இப்படி சுற்றும்பொழுது திருஷ்டி மந்திரம் தெரிந்தவர்கள் அதை கூறி சுற்றுவர். பெரியவர்கள் "தன் திருஷ்டி, தாயார் திருஷ்டி, நாய் திருஷ்டி, நரி திருஷ்டி, உற்றார் திருஷ்டி… தீயசக்திகள் திருஷ்டி" என்று பலவிதமான திருஷ்டிகளை கூற கேட்டிருக்கிறேன். திருஷ்டி மந்திரத்தை மனதிற்குள்தான் கூறவேண்டுமாம். அதை ஒரு குருவின்மூலம் உபதேசம் பெற்றுதான் பிரயோகிக்க வேண்டும். பொதுவாக ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி மேலும் மிக முக்கியமான நாளான அமாவாசை தினங்கள் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தினமாக கருதப்படுகிறது. அதுவும் அமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வந்தால் அது திருஷ்டி சுற்றி போடுவதற்கு மிகவும் ஏற்ற தினமாகும். சூரிய அஸ்தமன சமயம்தான் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தருணமாக கருதப்படுகிறது. இந்த பழக்கத்தையெல்லாம் எப்படி நம்புவது என்றும் சிலர் கேட்கிறார்கள். ஒரு மனிதனுக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகள் மனக்குழப்பங்கள் நஷ்டங்கள் தீராத வியாதிகள்… வந்த வியாதி குணமடையாமல், வந்த தடைகள் விலகாமல் இருந்திருந்தால் யாராவது இன்று திருஷ்டி சுற்றி கொள்ள முன்வருவார்களா? பலன் கிடைப்பதனால்தானே இந்த பழக்கம் ஆயிரக்கணக்கான வருடங்களாக விட்டுப்போகாமல் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. *எண்ணம் போல் வாழ்க்கை* *எண்ணம் போல் தான் வாழ்க்கை* #👁கண் திருஷ்டி பரிகாரங்கள்🔯 #கண் திருஷ்டி எப்படி தெரிந்துகொள்ள #கண் திருஷ்டி விலக எளிய பரிகாரம் #கண்👀 திருஷ்டி🕳 #கண் திருஷ்டி பரிகாரம்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.2K views
1 months ago
அவரின் எதிர்மறையான எண்ணங்கள், அந்த நபர் மீது கண் திருஷ்டியாக விழுகிறது. இதுமட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்கள் மூலம் ஒருவர் மீதோ அல்லது ஒரு குடும்பத்தின் மீதோ கண் திருஷ்டி ஏற்படுகிறது. இதனால் கண்பட்டவருக்கு உடல் ரீதியாகவும் உள ரீதியாவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இவ்வாறான எதிர்மறை சக்திகளை நீக்கி நேர்மறை சக்திகளை எம்மை நோக்கி ஈர்க்க செய்வதற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு சில வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கண் திருஷ்டி பரிகாரங்கள் சனிக்கிழமைகளில் 7 பேருக்கு கருப்பு துணி வாங்கி கொடுக்கலாம் இது உங்கள் மேல் இருக்கும் கண் திருஷ்டியை போக்க பெரிதும் துணைப்புரிகின்றது. கருப்பு துணியை தானம் செய்வது நல்ல கர்மாவை பலப்படுத்துவதாக அமையும். இது உங்களை நோக்கி நேர்மறை ஆற்றல்களை ஈர்க்க செய்கின்றது. கராம்பு,மிளகு மற்றும் செடியில் இருந்து காய்ந்து கீழே விழுந்த துளசி இலைகள் ஆகியவற்றை வாரம் ஒரு முறை எரித்து அந்த புகையை வீட்டில் பரவச்செய்யலாம்.அல்லது சாம்பிராணி தூபம் காட்டும் போது இதில் இந்த பொருட்களை போட்டு தூபம் காட்டலாம். இதனால் கண் திருஷ்டி காரணமாக ஏற்பட்ட எதிர்மறை சக்திகளின் தாக்கம் முற்றிலும் நீங்கும். உப்பை எடுத்து 7 முறை உங்கள் தலையை சுற்றி தண்ணீரில் கரைத்து விடுவதன் மூலமும் கண் திருஷ்டி நீங்கும். இவ்வாறு தலையை சுற்றும் போது கடிகாரத்தின் திசைக்கு எதிர் திசையில் சுற்றுதல் வேண்டும். உப்பு எதிர்மறை ஆற்றல்களை அழிக்கக்கூடிய பொருட்களுள் மிகவும் முக்கிய இடம் வகிக்கின்றது. கண் திருஷ்டியை போக்க வீட்டில் அல்லது வேலை பார்க்கும் இடத்தில் ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து இதில் ஒரு எலுச்சை பழத்தை போட்டு வைத்து விட்டால் இது அந்த இடத்தில் உள்ள அனைத்து எதிர்மறை ஆற்றல்களையும் அழித்துவிடும். இதனால் கண் திருஷ்டியால் ஏற்படும் பாதக விளைவுகளில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். #👁கண் திருஷ்டி பரிகாரங்கள்🔯 #கண் திருஷ்டி எப்படி தெரிந்துகொள்ள #கண் திருஷ்டி விலக எளிய பரிகாரம் #குழந்தைகளுக்கு கண் திருஷ்டி நீங்க ஓதும் துஆ
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.2K views
1 months ago
அந்தப் பொறாமைப் பார்வையைத் தான் நாம் கண் திருஷ்டி என்று கூறுகிறோம். திடீரென ஏற்படும் தலைவலி, உடல் சோர்வு, வீணான சண்டை சச்சரவுகள் எல்லாவற்றுக்கும் காரணம் இந்தத் திருஷ்டி தான் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அறிவியல் இதை முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், உளவியல் ரீதியாக மற்றவர்களின் நெகட்டிவ் எனர்ஜி நம்மைப் பாதிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த எதிர்மறை ஆற்றலில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள, பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் 6 முக்கியமான பொருட்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க. 1. கல் உப்பு! பழங்காலம் முதலே கல் உப்புக்கு கெட்ட சக்திகளை ஈர்க்கும் தன்மை இருப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு. உங்கள் வீட்டில் யாருக்காவது திருஷ்டி பட்டுவிட்டது என்று தோன்றினால், உடனே ஒரு கைப்பிடி கல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களை கிழக்கு முகமாக அமரவைத்து, தலையைச் சுற்றி வலது மற்றும் இடதுபுறமாக மூன்று முறை சுற்றி தண்ணீரில் கரைத்துவிடுவது நம் ஊர் வழக்கம். இது கண் திருஷ்டியை மட்டுமல்லாமல், உடலில் உள்ள எதிர்மறை ஆற்றலையும் முழுமையாக நீக்கிவிடும். 2. எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாய்! புதிதாக வண்டி வாங்கினாலோ அல்லது புதுக்கடை திறந்தாலோ, முதலில் நாம் தேடுவது இந்த எலுமிச்சை மற்றும் மிளகாயைத்தான். ஒரு கருப்புக் கயிற்றில் இவற்றைச் சேர்த்து வாசல் படியில் தொங்கவிடுவதால், வீட்டுக்குள் நுழையும் கெட்ட எண்ணங்கள் வாசலோடு திரும்பிவிடும் என்பது ஐதீகம். மேலும், இவற்றிலிருந்து வெளிவரும் வாசம் காற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மையும் கொண்டது. 3. கருப்புக் கயிறு! இது ரொம்பவே சிம்பிளான, ஆனால் மிகவும் பவர்ஃபுல்லான ஒரு ட்ரிக். பிறந்த குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை பலரும் கைகளிலோ அல்லது கால்களிலோ கருப்புக் கயிறு கட்டுவதைப் பார்த்திருப்போம். கருப்பு நிறம் என்பது மற்றவர்களின் தீய பார்வையைத் தன்னுள் ஈர்த்து, நம்மை நோக்கி வரும் கெட்ட அதிர்வலையைத் தடுத்து நிறுத்தும் ஒரு கவசமாகச் செயல்படுகிறது. 4. நீல நிறக் கண் கல்! இப்போதெல்லாம் பலரது கழுத்திலும், வீட்டு வாசலிலும், கார் கண்ணாடியிலும் நீல நிறத்தில் ஒரு கண் வரைந்த படிகக் கல்லைப் பார்க்க முடிகிறது. துருக்கி போன்ற நாடுகளில் உருவான இது, தற்போது நம்மூரிலும் ரொம்பவே ட்ரெண்ட் ஆகிவிட்டது. பிறரின் பொறாமைப் பார்வையை அந்த நீலக் கண் தன்னுள் இழுத்துக் கொண்டு, அதை அப்படியே திருப்பி அனுப்பிவிடும் என்பது நம்பிக்கை. 5. படிகாரம்! படிகாரக் கல்லை ஒரு கருப்புத் துணியில் கட்டி வீட்டின் முன் தொங்கவிடுவது ஒரு சிறப்பான பாரம்பரிய வழக்கம். வீட்டிற்கு வரும் நபர்களின் பொறாமைப் பார்வை இந்தக் கல்லின் மீது படும்போது, அது அந்த எண்ணங்களை ஈர்த்துக்கொள்ளும். திருஷ்டி அதிகமாக இருந்தால், ஒரு கட்டத்தில் படிகாரம் தானாகவே வெடித்துச் சிதறிவிடும் என்று பாட்டிகள் சொல்லக் கேட்டிருப்போம். இளமை மாறாத சருமத்திற்கு 'கற்றாழை பவுடர்' - ஒரு இயற்கை அதிசயம்! 6. கற்றாழை! வாசல் படியில் முள் நிறைந்த கற்றாழையை வேரோடு கட்டித் தொங்கவிடுவது பலரது வீடுகளில் இன்றும் நடக்கும் ஒரு விஷயம். இது பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றினாலும், வீட்டைச் சுற்றி ஒரு பெரிய பாதுகாப்பு வளையத்தை உருவாக்குகிறது. கற்றாழை பல மாதங்கள் தண்ணீர் இல்லாமல் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி உயிர்வாழும் தன்மை கொண்டது. அதே போல வீட்டின் மீது விழும் கண் திருஷ்டியையும் இது முழுமையாக உறிஞ்சிவிடும். நம் முன்னோர்கள் காரணமில்லாமல் எதையும் செய்யவில்லை என்பதைப் புரிந்துகொண்டு, நமது வீட்டின் நிம்மதிக்காக இந்தச் சின்னச் சின்ன விஷயங்களைப் பின்பற்றுவதில் எந்தத் தவறும் இல்லை. எதிர்மறை எண்ணங்களை விலக்கி நேர்மறையாக வாழ்வோம் #👁கண் திருஷ்டி பரிகாரங்கள்🔯 #கண் திருஷ்டி விலக எளிய பரிகாரம் #கண் திருஷ்டி பரிகாரம் #கண் திருஷ்டி எப்படி தெரிந்துகொள்ள
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
868 views
3 months ago
இது பொதுவாக எதிர்மறை ஆற்றல் மற்றும் கண் திருஷ்டியின் அறிகுறி. அந்த வகையில் கண் திருஷ்டி நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் குறித்து இப்பதிவில் காண்போம். * நேர்மறை ஆற்றலைப் பெற குலதெய்வ வழிபாட்டினை மறக்காமல் செய்ய வேண்டும். இது கண் திருஷ்டியை நீக்கும். * பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்வதோடு, நம் வீடே ஒரு கோயில் என்பதால் தினசரி நம் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவதை கைவிடக் கூடாது. புள்ள பூச்சி அடிச்சா குழந்தை பிறக்காதா? * நம்மிடம் இருக்கும் மனித நேயம், நல்ல எண்ணம், பரோபகாரம், ஈவு, இரக்கம், நேர்மறை எண்ணங்கள் இறைவன் தந்த பெரிய வரம் என்பதால் அதை மனதில் வைத்து ஒவ்வொரு செயலையும் செய்ய நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். * தினமும் விடியற்காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் வாசலில் கோலமிட்டு பின்னர் பூஜை அறையில் அகல் விளக்கேற்றி மனதார வேண்ட கண் திருஷ்டி நீங்கும். * துளசி செடியை வீட்டு வாசலில் துளசி மாடம் கட்டி வளர்த்து பூஜை செய்ய கண் திருஷ்டி கண்கூடாக விலகும். * வாசலில் அரளிச்செடி வளர்ப்பது, கொல்லைப்புறத்தில் மணி பிளான்டு, ஓமவல்லி, சங்கு புஷ்பம் செடி, வெற்றிலை கொடி வளர்ப்பது நோ்மறை சக்தியை வீட்டிற்குள் வரவழைப்பதோடு, வீட்டில் சூழ்ந்துள்ள எதிா்மறை சக்திகளை விலக்கி வைத்து விடும். * ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி ஒவ்வொரு பக்கங்களிலும் தலா மூன்று கல் உப்பு மற்றும் மிளகை சொருகி வைப்பதோடு, இரண்டு மூடிகளிலும் குங்குமத்தை வைத்து சூடம் கொளுத்திக் காட்டி வாசல் நிலைப்படி இருபுறமும் வைக்க கண் திருஷ்டி நீங்கும். பெற்றோர்களுக்கும் வளர்ந்த பிள்ளைகளுக்கும் இடையே ஏன் பேச்சு குறைகிறது? அதிர்ச்சியூட்டும் காரணங்கள்! * நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பிரிஞ்சி இலைகளை வாங்கி வந்து சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு மண் சட்டியில் பச்சை கற்பூரம் சூடம் கொளுத்தி அதில் பிரிஞ்சி இலைகளைப் போட்டு வீடு முழுவதும் புகை போட வீடெங்கும் தெய்வீக மணம் பரவி நேர்மறை சக்தி அதிகரிக்கும். * ஒரு பித்தளை பஞ்ச பாத்திரத்தில் தூய்மையான நீரைக் கொண்டு தினமும் உறங்க செல்வதற்கு முன் மூடி வைப்பதால் எதிர்மறை சக்தி அகன்று விடும். * காக்கைக்கு தினசரி உணவளிப்பது, கை கால் ஊனமான மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு வாரத்தில் ஒரு நாள் உணவு கொடுக்க நேர்மறை சக்தி அதிகரித்து கண் திருஷ்டி நீங்கும். * சுமங்கலி பெண் ஒருவருக்கு மாதத்தில் ஒரு நாள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பூ, ஜாக்கெட் பிட் உரிக்காத மட்டை தேங்காய் வாழைப்பழம் கொடுக்க நேர்மறை சக்திகள் அதிகரிக்கும். நல்லதையே நினைத்து, நல்லதையே செய்து, அனைவரும் நன்றாக வாழ வேண்டுமென ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்வது நேர்மறை ஆற்றலை அதிகரித்து கண் திருஷ்டி நீங்க மிக எளிய பரிகாரமாகும். #👁கண் திருஷ்டி பரிகாரங்கள்🔯 #கண் திருஷ்டி விலக எளிய பரிகாரம் #கண் திருஷ்டி எப்படி தெரிந்துகொள்ள