கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி என்ற பகுதியைச் நபர் ஒருவர் பள்ளி செல்லும் தனது 11 வயது மகளை மிரட்டி மூன்று முறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். சிறுமி படித்து வந்த பள்ளியில் பெண் குழந்தைகளை தொட்டு பேசுவதில் உள்ள வித்தியாசங்கள் (Good Touch - Bad Touch) குறித்து விழிப்புணர்வு வகுப்பு எடுக்கப்பட்டபோது அந்த சிறுமி தன்னது தந்தை தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து ஆசிரியையிடம் கூறியிருக்கிறார். அப்போது தான் அந்த சிறுமியை அவரது தந்தை பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2023ஆம் ஆண்டு ஜனவரி வரை ஓராண்டு காலத்தில் மூன்று முறை அந்த நபர் தனது மகளை பலாத்காரம் செய்திருக்கிறார். முதல்முறையாக சிறுமி தூங்கிக் கொண்டிருந்தபோது சிறுமியை அந்த நபர் பலாத்காரம் செய்திருக்கிறார். இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதால் சிறுமிகு தொடர்பாக யாரிடமும் கூறவில்லை. அடுத்தடுத்து 2 முறை மிரட்டியே மகளை பலாத்காரம் செய்திருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியை போலீசில் புகார் அளித்ததன் பேரில் சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம். அஷ்ரப் முன்னிலையில் விசாரணை நடைபெற்று முடிந்தது. இந்த வழக்கில் பெற்ற மகளையே கற்பழித்த தந்தைக்கு 178 ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் 10.7 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சிறுமியை கற்பழித்த அவரின் தந்தை ஏற்கனவே வேறு வழக்குகளில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தாவனூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு இவர் தனது பக்கத்து வீட்டு மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்கார வழக்கில் பிணையில் வெளிவந்த சிறுமியின் தந்தை, தான் பெற்ற மகள் என்றும் கூசாமல் சிறுமியை பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
#🔴இன்றைய முக்கிய செய்திகள் #சிறுமி பாலியல் பலாத்காரம்