lifes

messi
571 views
23 hours ago
#ஜலியான்வாலா_பாக் #நினைவு_தினம் #ஏப்ரல்_13 பஞ்சாப் மன்னரான மகாராஜா ரஞ்சித்சிங்கிடம் பணிபுரிந்த சர்தார் ஹிமத்சிங் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் இது. அவரது குடும்பம் 'ஜல்லா' என்ற சிற்றூரில் இருந்து வந்ததால் ’ஜலியான்வாலா பாக்’ என்று பெயர் பெற்றது. 13 ஏப்ரல் 1919 அன்று 6.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஜலியான்வாலா பாக் தோட்டத்தில் கூடியிருந்த இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய விடுதலை இயக்கத்தினர் மீது முன் அறிவிப்பு ஏதுமின்றி ஆங்கிலேயே இராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு எட்வர்டு ஹாரி டையர் தலைமையிலான இராணுவத்தினர் 1650 இரவுண்டு ரவைகளை துப்பாக்கிகளால் தொடர்ந்து சுட்டனர். இதனை வரலாற்றில் ஜாலியன்வாலா பாக் படுகொலை என்பர். ஜலியான்வாலாபாக் படுகொலையில் 379 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 1110 பேருக்கும் மேலாக படுகாயம் அடைந்தனர். இப்படுகொலையில் இறந்த இந்திய விடுதலை இயக்கத்தினரை நினைவு கூறும் வகையில் இத்தோட்டத்தை 1951-ஆம் ஆண்டு இந்திய அரசு தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்து இறந்த தியாகிகளுக்கு இத்தோட்டத்தில் நினைவுச் சின்னம் எழுப்பியுள்ளது. #life #lifes
messi
635 views
1 days ago
#சர்வதேச_விண்வெளி_வீரர்கள்_தினம் #ஏப்ரல்_12 மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. விண்வெளிக்கு முதன் முதலில் பயணம் செய்த உருசியரான யூரி ககாரின் நினைவாக இந்நாளை சிறப்பு நாளாக உலகெங்கும் கொண்டாடுவதற்கு 2011 ஏப்ரல் 7 ஆம் நாள் கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஏகமனதாகத் தீர்மானித்தது. உருசியாவினால் இத்தீர்மானம் ஐநா பொதுச் சபையில் கொண்டுவரப்பட்டது. 1961 இல் விண்வெளிக்கு முதன் முதலில் சென்ற உருசியரான யூரி ககாரின் நினைவாக உருசியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் விண்வெளி வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. #life #lifes
messi
6.8K views
3 days ago
இன்று ஏப்ரல் 10ம் நாள் உலக ஹோமியோபதி நாள். ஜெர்மனியைச் சேர்ந்த அலோபதி மருத்துவரான டாக்டர் சாமுவேல் ஹானிமன், 1796ஆம் ஆண்டில் கண்டுபிடித்த மருத்துவ முறைதான் ஹோமியோபதி. அலோபதி மருத்துவத்தின் பக்கவிளைவுகள் குறித்துப் பெரும் சங்கடம் கொண்டிருந்த டாக்டர் ஹானிமனுக்கு, ஹோமியோபதி மருத்துவம் பெரும் மனநிம்மதியைத் தந்தது. ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர் என்பது போலவே, ஒவ்வொரு மனிதருக்கு வரும் நோயும், அதன் காரணங்களும் தனியானவை. ஒருவருக்குத் தலைவலி வருகிறதென்றால், அதற்கு ஒற்றைப் பொது மருந்து கிடையாது என்பதே ஹோமியோபதி காட்டும் வழிமுறை. ஒவ்வொரு உயிரும், அதற்கே உரிய பிரத்யேக உயிர்சக்தியால் கட்டுப்படுத்தப்படவும் நிர்வகிக்கவும் படுகிறது என்பதை உலகுக்கு முதலில் சொன்னவர் டாக்டர் ஹானிமன். அதாவது "ஒத்தது ஒத்ததைக் குணப்படுத்தும்" (Likes are cured by likes) என்பது தான் ஹோமியோபதியின் அடிப்படை தத்துவம். #life #lifes
messi
783 views
5 days ago
#ஏப்ரல்_8, புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவு தினம் இன்று.(2015) ஜெயகாந்தன் தமிழ்நாட்டில் கடலூரில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, 1934 ஆம் ஆண்டில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார். 1950களில் அவரது இலக்கிய வாழ்க்கையை தொடங்கினார். அவர்கள், மிகுந்த ஆற்றலும், ஆளுமையும், வேகமும், உயர்வும், தனித்துவமும் கொண்ட தலைச்சிறந்த எழுத்தாளர். அவர் ஓரளவே படித்திருந்தாலும், தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்து, தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைத் தன் எழுத்துக்களால் கொள்ளைக் கொண்டவர். ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாமல், கட்டுரையாளர், பத்திரிகையாளர், துண்டு வெளியீடுகளை எழுதுபவர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர் எனப் பல்வேறு முகங்கள் கொண்டு, தமிழ் இலக்கியத்திற்கு அருட்தொண்டாற்றியவர் ஜெயகாந்தன் அவர்கள், பல்வேறு வாழ்க்கை வரலாறு, நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு, கட்டுரைகள், போன்றவற்றைப் படைத்துள்ளார். அவற்றுள் சில குறிப்பிடத்தக்கப் படைப்புகள்: ‘வாழ்விக்க வந்த காந்தி ‘ஒரு கதாசிரியனின் கதை’, ‘பிரம்ம உபதேசம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’, ‘கண்ணன்’, ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘ரிஷிமூலம்’, ‘கருணையினால் அல்ல’, ‘கங்கை எங்கே போகிறாள்’, ‘ஒவ்வொரு கூரைக்கும் கீழே…’, ‘சுந்தர காண்டம்’ மற்றும் பல. ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் • 1972 – சாஹித்ய அகாடமி விருது • 2002 – இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். • 2009 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’, இலக்கியத்துறைக்காக முதல்முறை வென்றார். • 2011 – ரஷ்ய விருது தலைமுறைகளைச் சிந்திக்கவும், சினக்கவும், சீர்திருத்தவும் வைத்தவை ஜெயகாந்தன் எழுத்துக்கள்..அவர் மறைந்தாலும் அவர் எழுத்துக்கள் வரலாறு பேசும்.. #life #lifes
messi
707 views
6 days ago
#உலக_சுகாதார_தினம் #ஏப்ரல்_7 உலக சுகாதார தினம் என்பது உலக சுகாதார விழிப்புணர்வு தினமாகும், இது உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளின் நிதியுதவியின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று கொண்டாடப்படுகிறது. 1948 இல், WHO முதல் உலக சுகாதார மாநாட்டை நடத்தியது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஐ உலக சுகாதார தினமாக 1950 முதல் அமல்படுத்த சட்டமன்றம் முடிவு செய்தது. உலக சுகாதார தினம் WHO இன் ஸ்தாபனத்தை குறிக்கும் வகையில் நடத்தப்படுகிறது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தில் உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் அமைப்பால் இது ஒரு வாய்ப்பாக கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுடன் தொடர்புடைய நாளில் சர்வதேச, பிராந்திய மற்றும் உள்ளூர் நிகழ்வுகளை WHO ஏற்பாடு செய்கிறது. உலக சுகாதார தினம் பல்வேறு அரசாங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் பொது சுகாதார பிரச்சினைகளில் ஆர்வமுள்ளவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது, அவர்கள் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துகிறார்கள் மற்றும் உலகளாவிய சுகாதார கவுன்சில் போன்ற ஊடக அறிக்கைகளில் தங்கள் ஆதரவை எடுத்துக்காட்டுகின்றனர். உலக காசநோய் தினம், உலக நோய்த்தடுப்பு வாரம், உலக மலேரியா தினம், உலக புகையிலை இல்லாத நாள், உலக எய்ட்ஸ் தினம், உலக இரத்த தானம் தினம், உலக சாகஸ் நோய் தினம், உலக நோயாளி ஆகியவற்றுடன் உலக சுகாதார தினத்தால் குறிக்கப்பட்ட 11 உத்தியோகபூர்வ உலக சுகாதார பிரச்சாரங்களில் உலக சுகாதார தினம் ஒன்றாகும். பாதுகாப்பு நாள், உலக ஆண்டிமைக்ரோபியல் விழிப்புணர்வு வாரம் மற்றும் உலக ஹெபடைடிஸ் தினம். #life #lifes
messi
558 views
7 days ago
வரலாற்றில் இன்று - 1896ஆம் ஆண்டு #ஏப்ரல்_6 தேதி முதன் முதலாக ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்டன. ஒலிம்பிக் போட்டியானது, கி.மு. 776 முதல் கி.பி. 393 வரை கிரேக்கத்தில் உள்ள ஒலிம்பியாவில் நடைபெற்று வந்தது. அதன் பின்னர் சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நவீன ஒலிம்பிக் போட்டிகள் 1894ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒலிம்பிக் குழு மூலமாக 1896ஆம் ஆண்டு நடத்தப்பட்டன. இந்த போட்டிகள் கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதேன்ஸ் நகரில் நடைபெற்றன. இப்போட்டியில் சுமார் 200 நாடுகள் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த முதலாம் ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் பங்கு பெறும் போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டன #life #lifes
messi
947 views
9 days ago
ஏப்ரல் 4, 1968 - வரலாற்றில் இன்று - - அமெரிக்காவின் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் டென்னிசி மாநிலத்தில் மெம்பிசு நகரில் படுகொலை செய்யப்பட்டார். . . அமெரிக்காவில் இனவெறியை எதிர்த்து அகிம்சை வழியில் போராடியவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். லூதர் கிங், “எனக்கு ஒரு கனவு உண்டு” என்ற தலைப்பில் 1963ம் ஆண்டு லூதர் கிங் நிகழ்த்திய உரை வரலாற்றில் பொறிக்கப் பட்டுள்ளது.. அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க பல போராட்டங்களை நடத்தினார். மேலும், வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது, அதை எதிர்த்து அகிம்சை வழியில் போராடினார். இதற்காக லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த மார்ட்டின் லூதர் கிங், 1968ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி, டென்னிசி மாகாணம் மெம்பிஸ் என்ற பகுதியில் உள்ள லோரைன் ஓட்டல் பால்கனியில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்ற வெள்ளைக்கார நிறவெறியர் ஜேம்ஸ் ஏர்ல் ராய்க்கு 99 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்ட பின், அவர் தங்கியிருந்த அறையில் யாரும் தங்கவில்லை. அதன்பின் அந்த ஓட்டல் மார்ட்டின் லூதர் கிங் நினைவைப் போற்றும் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. #life #lifes
messi
903 views
11 days ago
#உலக_ஆட்டிசம்_விழிப்புணர்வு_தினம் #ஏப்ரல்_2 உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் தேதி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நாளாகும், இது உலகெங்கிலும் ஆட்டிசம் மற்றும் ஆஸ்பெர்கர் நோய்க்குறி உள்ளிட்ட ஆட்டிஸ்டிக் ஸ்பெக்ட்ரம் கோளாறுகள் உள்ளவர்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை ஊக்குவிக்கிறது. இது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைத் தீர்மானத்தால் (A / RES / 62/139) நியமிக்கப்பட்டது. உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ", நவம்பர் 1, 2007 அன்று சபையில் நிறைவேற்றப்பட்டு, டிசம்பர் 18, 2007 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது கட்டாரிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியால் முன்மொழியப்பட்டது. கத்தார் மாநிலத்தின் அமீரான அல்-தானி மற்றும் அனைத்து உறுப்பு நாடுகளின் ஆதரவும் கொண்டது. இந்த தீர்மானம் ஐ.நா பொதுச் சபையில் வாக்களிக்காமல் நிறைவேற்றப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது, முக்கியமாக மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முந்தைய ஐ.நா. முயற்சிகளுக்கு ஒரு துணை. உலக ஆட்டிசம் தினம் ஏழு உத்தியோகபூர்வ சுகாதார-குறிப்பிட்ட ஐ.நா. நாட்களில் ஒன்றாகும். மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட வளர்ச்சிப் பாதையில் இருப்பவர்களுக்கு ஆராய்ச்சி, நோயறிதல்கள், சிகிச்சை மற்றும் ஏற்றுக்கொள்வது போன்ற விஷயங்களுக்கு உதவுவதற்காக உலகெங்கிலும் உள்ள தனிப்பட்ட மன இறுக்கம் கொண்ட அமைப்புகளை இந்த நாள் கொண்டுவருகிறது. #life #lifes
messi
1K views
14 days ago
#மார்ச்_30 பூமி நேரம் கடைபிடிக்க வேண்டிய நாள் இன்று. மார்ச்-30, (சனிக்கிழமை), 2019 இரவு 8.30 முதல் 9.30 வரை ஒரு மணி நேரம் விளக்குகளை அணைத்து நாமும் பூமி நேரம்- (EARTH HOUR) கொண்டாடலாமே... நோக்கம்:- புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த பூமி தினம் நாள் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. இது மின் ஆற்றல் சேமிப்பை ஊக்குவிப்பதையும், கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. ஒளிசார் மாசடைதலைக் குறைப்பதற்கும் இது உதவக்கூடும். வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்திவைக்கக் கோரும் ஒரு நிகழ்வாக உலகம் முழுவதும் பூமி நேரம் (Earth Hour) கொண்டாடப்படுகிறது. உறுதிமொழி:- “நாம் பூமி நேரம் கொண்டாடும் விதமாக, இயற்கை இழப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து, நான் என் வீட்டில் அனைத்து அத்தியாவசிய விளக்குகளை இரவு 8:30 இருந்து 9:30 மணிவரையில் ஒருமணிநேரம் அணைத்துவிடப் போகிறேன். நீங்களும் இவ்வாறு செய்யவேண்டுமென வேண்டுகிறேன்”. உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் சமுதாயம் வாழ்வதற்கு உகந்த சுற்றுச்சூழலுக்கான மிகப்பெரிய அடித்தளமாக இந்த பூமி நேரம் இருக்கிறது. அவர்கள் பருவநிலை மாற்றங்களுக்கு எதிராக ஒரு மணிநேரம் மட்டுமே அத்தியவசிய மின் விளக்குகளை நிறுத்தும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறோம். #life #lifes
messi
995 views
16 days ago
#மார்ச்_28, 1868.- இன்று பிரபல ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி பிறந்த நாள் ! மாக்சிம் கார்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார். பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த ‘தாய்’ (Mother) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இரஷ்ய சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சிக்கு நிதியுதவி அளித்துவந்தார். ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கு நிதி திரட்ட பல நாடுகளுக்குச் சென்றார். உலகம் முழுவதும் உள்ள சிறந்த எழுத்தாளர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். #life #lifes