தெரிந்தது கொள்ளுங்கள்

N.ராஜாமுனியப்பன்
738 views
5 days ago
*❤️ இன்றைய கதை: கடைசி பேனா = நம்பிக்கை+முதலீடு* மதுரை மீனாட்சி கோவில் வாசல். பெரியசாமி. வயசு 60. காலைல 6 மணிக்கு கோவில் வாசல்ல உட்கார்ந்துடுவாரு. முன்னாடி ஒரு துணி விரிப்பு. அதுல பேனா, பென்சில், அழிப்பான், காம்பஸ். பிளாட்பாரம் கடை. ஆனா வியாபாரம் இல்ல. பெரியசாமிக்கு ஒரு விதி. யார் பேனா கேட்டாலும் முதல்ல ஒரு கேள்வி கேப்பாரு. "தம்பி. பரீட்சையா." "ஆமா தாத்தா. இன்னைக்கு கணக்கு பரீட்சை. பேனா மறந்துட்டேன்." உடனே பெரியசாமி நல்ல பேனாவா எடுத்து கொடுப்பாரு. "இந்தா. இது ராசியான பேனா. நூறு மார்க் வாங்கிட்டு வா." "காசு எவ்ளோ தாத்தா." "காசு அப்புறம். முதல்ல பரீட்சை எழுது. மார்க் வந்து சொல்லு. அப்புறம் காசு தா." பிள்ளைங்க சிரிச்சுட்டே ஓடிடும். திரும்பி வராது. பெரியசாமி கேக்கவும் மாட்டாரு. மனைவி தங்கம் திட்டுவா. "யோவ். பைத்தியமா உனக்கு. பேனா ஒன்னு பத்து ரூபா. இப்படி சும்மா கொடுத்தா நாம என்ன திங்க. வாடகை யார் கட்டுவா." பெரியசாமி பழைய டயரிய எடுப்பாரு. அதுல தேதி வாரியா எழுதியிருப்பாரு. "12.03.2010 - ரமேஷ் - கணக்கு பரீட்சை - பேனா - பாக்கி" "05.06.2011 - சுமதி - ஹிந்தி பரீட்சை - பேனா - பாக்கி" "18.09.2013 - முருகன் - பத்தாவது பப்ளிக் - பேனா - பாக்கி" டயரி முழுக்க பாக்கி. கூட்டி பார்த்தா மூவாயிரத்து சொச்சம் பேனா. முப்பதாயிரம் ரூபா. "இத பாரு தங்கம். இது பாக்கி இல்ல. முதலீடு. ஒரு நாள் வரும்." தங்கம் தலைல அடிச்சுக்குவா. "உன் முதலீடு மண்ணா போகுது. வயசாயிடுச்சு. இனிமே யாரு வர போறா." இருபது வருஷம் ஓடிடுச்சு. பெரியசாமிக்கு இப்ப வயசு 80. கண்ணு மங்கிடுச்சு. காது கேக்கல. ஆனாலும் தினமும் கோவில் வாசல். அதே துணி. அதே பேனா. ஆனா இப்ப வியாபாரமே இல்ல. பிள்ளைங்க எல்லாம் ஜெல் பேனா. ஸ்கெட்ச். ஆன்லைன். ஒரு நாள் காலைல. கோவில் வாசல்ல ஒரு கார் வந்து நின்னுச்சு. உள்ள இருந்து ஒருத்தர் இறங்கினாரு. வயசு 35 இருக்கும். கோட் சூட். கையில ஒரு பூங்கொத்து. நேரா பெரியசாமி கிட்ட வந்தாரு. கால்ல விழுந்தாரு. "தாத்தா. என்ன தெரியுதா." பெரியசாமி கண்ண கசக்கினாரு. "தம்பி. வயசாயிடுச்சு. சரியா தெரியல." "தாத்தா. பதினெட்டு வருஷம் முன்னாடி. பத்தாவது பப்ளிக் எக்ஸாம். கணக்கு பரீட்சை அன்னைக்கு காலைல. நான் அழுதுட்டே வந்தேன். பேனா உடைஞ்சு போச்சு. வீட்ல காசு இல்ல. நீங்க தான் தாத்தா ஒரு பேனா கொடுத்தீங்க. 'ராசியான பேனா. நூறு மார்க் வாங்கிட்டு வா'னு சொன்னீங்க. காசு கேக்கல." பெரியசாமிக்கு லேசா ஞாபகம் வந்துச்சு. "தம்பி. நீ..." "நான் தாத்தா. முருகன். அந்த பேனால தான் கணக்கு எழுதினேன். 98 மார்க். பாஸ் ஆனேன். காலேஜ் போனேன். இன்னைக்கு நான் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி வச்சிருக்கேன். பேரு 'பேனா டெக்னாலஜிஸ்' தாத்தா. உங்க பேனால தான் என் வாழ்க்கை ஆரம்பிச்சது." தங்கம் பாட்டி வாசல்ல நின்னு கேட்டுட்டு இருந்தா. வாய பொத்திக்கிட்டு அழுதா. முருகன் பர்ஸ் எடுத்தான். ஒரு கவர். "தாத்தா. அன்னைக்கு பத்து ரூபா பாக்கி. இன்னைக்கு வட்டியோட தரேன்." உள்ள ஒரு செக். பத்து லட்சம். பெரியசாமி கை நடுங்குச்சு. "தம்பி. எனக்கு காசு வேண்டாம். நீ பெரிய ஆளா வந்துட்டியே. அதுவே போதும்." "இல்ல தாத்தா. இது காசு இல்ல. நீங்க போட்ட முதலீடு. இன்னைக்கு லாபத்தோட திரும்ப வந்திருக்கு. இனிமே இந்த பிளாட்பாரம் வேண்டாம். உங்களுக்கும் பாட்டிக்கும் நான் இருக்கேன்." அடுத்த நாள் பேப்பர்ல நியூஸ். "பிளாட்பாரம் தாத்தாவுக்கு சாஃப்ட்வேர் முதலாளி குருதட்சணை. பத்து லட்சம் பரிசு." நியூஸ் பார்த்துட்டு அடுத்த நாள் இன்னொரு கார். "தாத்தா. நான் சுமதி. ஹிந்தி பரீட்சைக்கு பேனா வாங்கினேன். இப்ப ஹிந்தி டீச்சர்." அடுத்து ரமேஷ். "தாத்தா. நான் இப்ப ஆடிட்டர். உங்க பேனா தான் என் முதல் பேலன்ஸ் ஷீட் எழுதுச்சு." ஒரு வாரம். கோவில் வாசல் கல்யாண வீடு மாதிரி ஆயிடுச்சு. டாக்டர், இன்ஜினியர், கலெக்டர், போலீஸ். எல்லாரும் வரிசைல வந்து பெரியசாமி கால்ல விழுந்தாங்க. கையில பூ, பழம், கவர். தங்கம் பாட்டி பழைய டயரிய எடுத்தா. மூவாயிரம் பேரு. பாக்கி முப்பதாயிரம். ஆனா இப்ப வந்திருக்கு மூணு கோடி. பெரியசாமி அழுதுட்டே சொன்னாரு. "தங்கம். நான் சொன்னேன்ல. இது பாக்கி இல்லனு. இது விதை. நான் விதைச்சேன். இன்னைக்கு காடா வளர்ந்து நிக்குது." இன்னைக்கு மீனாட்சி கோவில் வாசல்ல ஒரு பெரிய கடை இருக்கு. பேரு "பெரியசாமி பேனா அங்காடி". வாடகை இல்ல. முருகன் வாங்கி கொடுத்துட்டான். கடைல போர்டு. "இங்க பரீட்சை எழுத போற பிள்ளைகளுக்கு பேனா இலவசம். மார்க் வந்து சொன்னா போதும். காசு அப்புறம்." கீழ சின்னதா ஒரு வரி. "ஒரு பத்து ரூபா பேனா ஒரு உயிரோட வாழ்க்கைய மாத்தும். நம்புங்க." இப்ப அந்த கடைய நடத்துறது யாரு தெரியுமா. முருகன். சாஃப்ட்வேர் கம்பெனி முதலாளி. வாரத்துல ரெண்டு நாள் கோட் சூட்ட கழட்டி வச்சுட்டு கடைல உட்கார்ந்து பிள்ளைகளுக்கு பேனா கொடுக்குறான். "தம்பி. இது ராசியான பேனா. நூறு மார்க் வாங்கிட்டு வா." நீ கொடுக்குறது பேனா இல்ல. நம்பிக்கை. அந்த நம்பிக்கை ஒரு நாள் உன் கால்ல வந்து விழும். அன்னைக்கு தெரியும். நீ ஏழை இல்லனு. நீ தான் பெரிய பணக்காரன்னு. #தெரிந்து கொள்ளுங்கள் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
772 views
23 days ago
விதி வீதி வழி நடப் போர்க்கு வீதி தெரியாமல் போனால் வீடு . விதி வீதி வழி நடப் போர்க்கு வீதி தெரியாமல் போனால் வீடு சேருவது எங்கே பிறந்தவன் வாழ்கிறான்..வாழும் பிறந்தவன் விதி தெரியாமல் அதன் சத் சதி உணராமல் வீடு பெறுவது எங்கே வாழ்வில் மரணம் ரகசியம் மரணத்திற்கு பின் நடப்பது ரகசியம் பிறப்புக்கு முன் எங்கே இருந்தோம் என்பது ரகசியம் நாளை நடப்பது ரகசியம் நாமும் நாளைஇருப்போமா அதுவும் ரகசியம் ரகசியத்திலே வாழ்வை கடத்தும்அந்தரகசியம்எது, தலையில் உள்ள எழுத்தும் தரணியில் வாழபோகும் வாழ்வும் ரகசியம் ரகசியம் எத்தனை ரகசியம் இருந்தாலும் அதை சட்டை பண்ணாமல் ஆனந்தமாக வாழும்மனிதரின் ரகசியம் அந்தரகசியமே அறியாமல் திணரும் ரகசியம் ரகசியத்தைதேடிஞானி களும் யோகிகளூம் சித்தர்களும் ரகசிய உலகை அணு அணுவாக சல்லடை போட்டு சளிக்காமல் தேடினார்கள் தேடி சென்ற யோகியூம் கண்டு உணர்ந்தான் அந்த ரகசியம் அட இதுக்கு தானா இவ்வளவு தேடினோம் என வியப்பு வந்து மௌனமான யோகிகள் கோடி கோடி பேர் அதை மக்களுக்கு சொல்லலாம் என முடிவு பண்ணி சொல்லி விட்டு சென்ற சித்தர்களும் லட்சம் லட்சம் பேர் அப்படிஎன்னதான் இருக்கு அந்த ரகசியத்திலே விதி அதைஎழுதுவதுநாமே எழுதியவனேஎழுதியதை தெரியாமல்வாழ வைக்கும் காலமும் சிரிக்க விதியைமாற்றிஅமைக்கும் சக்திமனிதரிடமே உள்ளது என்றஉண்மையை காலம் அறிந்தும் அதை நாமும் அறியும் வரை அமைதி காக்கும்காலமும்வாழ்வின் சுவாரஸ்யமானவையே கண்டவர்கள் விண்டதுண்டு விண்டவர்கள் கண்டது உண்டு அதிசயம் என்னவென்றால் கண்டவர்கள் எதுவும் கூறுவதில்லை உடல் விட்டு சென்ற உயிர் அனைத்தையும் அறியும் உடலோடு இருக்கும் உயிர் எந்த ரகசியமும் அறிவது இல்லை அப்படி என்றால் இங்கு தடை என்பது உடலே உடலைமறந்தவன் உயிராய் ஆனவன் ரகசியம் அறிய முடியும் அந்த உடலை மறப்பதே நிர்வாணம் என்கிற பொருள் அதற்க்காக ஆடை இல்லாமல் திரியும் பைத்தியங்கள் உடலை மறந்தவன் ஆக மாட்டான் உடல் தான் உயிருக்கு ஆடைஅந்த ஆடை மறந்து இருப்பது வேறு வெறும் துணி ஆடைதுறந்துவிட்டுதுறவி வேசம் ரகசியம் அறியாது ரகசியத்தை அறியமுதல் தகுதி உயிராக இருப்பதே அதற்கு தான் யோகா தியானம் அனைத்தும் பயன்படுத்த குருமார்கள் சொல்கிறரார்கள் செம்மையான உடலே மனதை செம்மை ஆக்கும் செம்மையானமனமே உயிரைசெம்மை ஆக்கும் செம்மையான உயிரே உயிரின் ரகசியம் அறியும் அந்த ரகசியம்நாமே விதி அதை படைப்பது நாமே அதை மாற்றுவதும் நாமே அனைத்தும் நம் கையில் உயிரான சிவத்தை உணர்ந்தால்அந்த ரகசியம் யாரும் அறியலாம் உணர்ந்து அறியவேண்டிய ஒன்றை உணராமல் யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றேயாரும் அந்தரகசியம் கூறு வதில்லை ஏழ குதிரை பிடித்து மூன்றாம் கண் வழி ஏழும் வழி கண்டால் அந்த தேரில் ஆண்டவன் அமர அழகு தேரில் உலகைவந்த வேலை முடித்து ஆனந்தமாக யாத்திரை அமைய ஆமரனாகும் ஆருயீர்..ஓம் நமசிவாய.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 #தெரிந்து கொள்ளுங்கள் #god
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
815 views
23 days ago
*பிறருக்கு ஏன் உதவ வேண்டும்.* 🌹 மத்தவங்களுக்கு உதவுறதா! மத்தவங்களைப் பத்தி நினைக்கக் கூட நேரம் எங்கே இருக்கு?’ என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத ஓர் ஓட்டப்பந்தயத்தில் நாம் எல்லோருமே ஓடிக் கொண்டேயிருக்கிறோம், அவரவருக்கான தேடல், தேவையின் பொருட்டு. அதிலேயே சுருண்டும் போகிறோம். இதில் பிறரைப் பற்றி அக்கறை கொள்ள நமக்கு நேரமே இல்லை என்பதே உண்மை. ஆனால், சக மனிதர்களின் தேவையை உணர்ந்து உதவி செய்யும் போதுதான் மனித வாழ்க்கை பூரணத்துவம் பெறுகிறது; வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைக்கிறது. நம் சுயநலத்தை, சுய லாபத்தை நினைக்காமல், பிறருக்காக ஒரு காரியத்தைச் செய்தால் என்ன நடக்கும்... அதனால் யாருக்கு ஆதாயம்? விளக்குகிறது மகாபாரதத்தில் சொல்லப்படும் இந்தக் கதை. அது ஒரு காலை நேரம். அஸ்தினாபுரம். தன் மாளிகை உப்பரிகையில் கிருஷ்ணரோடு நின்று பேசிக் கொண்டிருந்தான் அர்ஜுனன். வீதியில் நடந்து வருபவர்களைப் பார்ப்பதும் பேசுவதுமாக இருந்தார்கள் இருவரும். திடீரென்று அர்ஜுனன், "கிருஷ்ணா அங்கே பார்!’’ என்று ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினான். கிருஷ்ணர் பார்வையைத் திருப்பினார். அங்கே அந்தணர் ஒருவர், தன் மேல் துண்டை ஏந்தி யாரிடமோ யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். "பார்த்தால் வேதம் கற்றவர் போல் தெரிகிறது. இவருக்கு ஏன் இந்த நிலை கிருஷ்ணா?’’ "அதுதான் விதி.’’ "நம்மால் முடிந்த உதவியைச் செய்து அவர் நிலையை மாற்றப் பார்க்கலாமா?’’ "முயற்சி செய்து பாரேன்...’’ அர்ஜுனன் ஒரு கணமும் தாமதிக்கவில்லை. ஒரு சேவகனைக் கூப்பிட்டான். அந்த அந்தணரை அழைத்துவரச் சொன்னான். அந்தணர் வந்தார். சோர்ந்து போயிருந்தார். வயிறு ஒட்டிப் போயிருந்தது; கண்களிலேயே பசி தெரிந்தது. அர்ஜுனன், ஒரு பை நிறைய பொற்காசுகளை நிரப்பி அவரிடம் கொடுத்தான்.அந்தணர் மகிழ்ந்து போனார். கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நன்றி சொல்லிவிட்டு வெளியே போனார். அர்ஜுனன் நிறைந்த மனத்தோடு கிருஷ்ணரைப் பார்த்து சிரித்தான். அன்று கிருஷ்ண பரமாத்மா சொன்ன விதி அந்தணரை விரட்டியது. வீடு செல்லும் வழியில், ஒரு வனம் இருந்தது. தனியாகச் சென்ற அந்தணர் ஒரு திருடனிடம் மாட்டிக் கொண்டார். பொற்காசுப் பையைப் பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டான் அந்தத் திருடன். அடுத்த நாள் காலை. முதல் நாளைப் போலவே கிருஷ்ணரும் அர்ஜுனனும் மாளிகை உப்பரிகையில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தைப் பார்த்த அர்ஜுனன் அதிர்ந்து போனான். அங்கே முதல் நாள் பார்த்த அதே அந்தணர், யாரிடமோ அன்றைக்கும் யாசகம் கேட்டுக்கொண்டிருந்தார். சேவகனை அழைத்து அவரை அழைத்து வரச் சொன்னான் அர்ஜுனன். விசாரித்தான். "என் தலையெழுத்து அப்படியிருக்கிறது. நான் ஒரு அதிர்ஷ்டக்கட்டை. அதுதான் உங்களிடம் வாங்கிய பொற்காசு கூட கொள்ளை போய் விட்டது...’’ கண்களில் நீர் துளிர்க்கச் சொன்னார் அந்தணர். அர்ஜுனனுக்கு அவர் பேசியதைக் கேட்டு இரக்கம் சுரந்தது. விலையுயர்ந்த வைரம் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தான். "அந்தணரே... கவனம்! இந்த முறையாவது இந்த வைரத்தை வைத்து, புத்திசாலித்தனமாகப் பிழைத்துக் கொள்ளும் வழியைப் பாரும்...’’ அவர் நன்றி சொல்லி விட்டுக் கிளம்பிப் போனார். இந்த முறை இருட்டுவதற்கு முன்னரே வீடு திரும்ப முடிவு செய்தார். எனக்கு நம்பிக்கையில்லை’’ என்றான் அர்ஜுனன். அர்ஜுனனுக்கு அவர் பேசியதைக் கேட்டு இரக்கம் சுரந்தது. விலையுயர்ந்த வைரம் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தான். ``அந்தணரே... கவனம்! இந்த முறையாவது இந்த வைரத்தை வைத்து, புத்திசாலித்தனமாகப் பிழைத்துக்கொள்ளும் வழியைப் பாரும்...’’ அவர் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனார். இந்த முறை இருட்டுவதற்கு முன்னரே வீடு திரும்ப முடிவு செய்தார். `இந்த வைரத்தை எப்படி விற்கலாம், யாரிடம் விற்கலாம், இதை வாங்கும் அளவுக்கு நம்மூரில் வியாபாரிகள் இருக்கிறார்களா, ஏனென்றால் அர்ஜுனன் கொடுத்த வைரமாயிற்றே..!’ என்றெல்லாம் யோசனை செய்தபடி நடந்து போனார். அவர் வீட்டுக்கு வந்தபோது வீட்டில் யாருமில்லை. அந்தணருக்கு இப்போது அந்த வைரத்தை எங்கே ஒளித்து வைப்பது என்கிற சங்கடம். அவர் வீட்டில் பாதுகாப்பான பெட்டிகளோ, அலமாரிகளோ இல்லை. அப்போதுதான் ரொம்ப நாள்களாகப் பயன் படுத்தாத ஒரு மண் பானை இருப்பது நினைவுக்கு வந்தது. அதில் வைரத்தை ஒளித்துவைப்பதுதான் பாதுகாப்பு என்று நினைத்தார் அந்தணர். அந்தப் பானைக்குள் வைரத்தைப் போட்டுவைத்தார். அன்று இரவு நன்றாக உறங்கியும் போனார். அடுத்த நாள் காலை, அந்தணருக்கு முன்னதாகவே எழுந்துகொண்டாள் அவரின் மனைவி. ஒரு பானையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு நீரெடுக்கச் சென்றாள். திரும்ப வரும் வழியில், ஓரிடத்தில் கால் தடுக்கி, பானையைக் கீழே போட்டுவிட்டாள். பானை உடைந்து போனது. அப்போது அவளுக்கு வீட்டிலிருக்கும் பழைய பானை நினைவுக்கு வந்தது. வீடு திரும்பியவள், கணவர் வைரத்தைப் போட்டு வைத்திருந்த பானையை எடுத்துக் கொண்டு திரும்பவும் ஆற்றை நோக்கிச் சென்றாள். பானையைக் கழுவுவதற்காக தண்ணீருக்குள் அவள் பானையை அழுத்த, அதற்குள்ளிருந்த வைரம் ஆற்றுத் தண்ணீருக்குள் விழுந்து விட்டது. மூன்றாம் நாள். அதே அஸ்தினாபுரம். அன்றைக்கும் அந்தணர் யாசகம் கேட்பதைப் பார்த்து துடித்துப் போனான் அர்ஜுனன். அவரை அழைத்து விசாரித்தான். அவர் நடந்ததைச் சொன்னார். இந்த முறை அர்ஜுனனை முந்திக் கொண்டார் கிருஷ்ணர். இரண்டு செப்புக் காசுகளை எடுத்து அந்தணரிடம் கொடுத்தார். "போய் வாருங்கள் ஐயா..!’’ என்று அனுப்பிவைத்தார். "கிருஷ்ணா, பொற்காசுகளாலும் வைரத்தாலும் மாற்றியமைக்க முடியாத இவரின் வாழ்க்கையை, இந்தச் செப்பு காசுகளா மாற்றி விடப் போகிறது? எனக்கு நம்பிக்கையில்லை’’ என்றான் அர்ஜுனன். "பொறுத் திரு!’’ அந்தணர் மாளிகையிலிருந்து வெளியே வந்தார். அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவருக்கு மனம் ஒரு பக்கம் உறுத்தியது. "ஒரு வேளை கிருஷ்ணரும் அர்ஜுனனும் நான் பொய் சொல்கிறேன் என்று நினைத்திருப்பார்களோ..!’ என்றெல்லாம் எண்ணம் ஓடியது. கால்போன போக்கில் நடந்தார் அந்தணர். ஆற்றங்கரையோரம். ஆற்று நீரில் ஒருவன் தூண்டில் போட்டுக் காத்திருப்பதையும், அப்போதுதான் ஒரு அழகான மீன் அதில் மாட்டிக் கொண்டதையும் பார்த்தார். உடனே அவனிடம் ஓடினார். `ஏம்ப்பா... அந்த மீனை விட்டுடேன். பாவம் அழகா இருக்கு’’ என்றார். "சரிங்கய்யா... இந்த மீனை விட்டுடுறேன். எனக்கு நீங்க என்ன தருவீங்க?’’ அந்தணர் தன்னிடமிருந்த இரண்டு செப்பு காசுகளைக் கொடுத்தார். அவன், மீனை அவரிடம் கொடுக்க வாங்கி ஆற்றுக்குள் எறிந்தார். அந்த வேகத்தில் அதுவரை மீனின் தொண்டையில் மாட்டிக் கொண்டிருந்த ஏதோ ஒன்று எகிறி கரையில் வந்து விழுந்தது. அந்தணர் அதை எடுத்துப் பார்த்தார். அவர் முதல் நாள் பானைக்குள் பத்திரப்படுத்திய அதே வைரம். அவர் மகிழ்ச்சியில் "பிடிச்சிட்டேன்...பிடிச்சிட்டேன்... கண்டு பிடிச்சுட்டேன்!’’ என்று சத்தம் போட்டார். யதேச்சையாக அந்தப் பக்கமாக வந்த திருடன் (அவரிடம் கொள்ளையடித்தவன்) அவர் போட்ட சத்தத்தில் பதறிப் போனான். என்ன நினைத்தானோ... அவரிடம் திருடிய பொற்காசுப் பையை அவரிடமே கொடுத்து விட்டு, தன் வழியே போனான். மறுநாள் காலை அந்தணர், அர்ஜுனனைத் தேடிப் போய் நடந்ததைச் சொன்னார். மறுபடியும் நன்றி சொல்லி விட்டுக் கிளம்பிப் போனார். அவர் போனதும் அர்ஜுனன் ஆச்சர்யத்தோடு கேட்டான்... "கிருஷ்ணா... இதெல்லாம் என்ன?’’ "அது ஒன்றுமில்லை. அந்தணருக்கு பொற்காசுகளும் வைரமும் கிடைத்த போது, அவர் அவரைப் பற்றியும், அவருடைய தேவைகளைப் பற்றியுமே யோசித்துக் கொண்டிருந்தார். அவரிடம் இரண்டே இரண்டு செப்பு காசுகள் மட்டும் இருந்த போது இன்னோர் உயிரைப் பற்றி நினைத்தார். அந்த எண்ணம்தான் அவருக்கு உதவியது. மற்றவர்களின் வேதனையை உணர்ந்து அவர்களின் தேவைகளுக்கு உதவ நினைத்து செயல்படும்போது, ஒருவர் கடவுளின் வேலையைச் செய்கிறார்; கடவுளே அந்த மனிதருக்கு உதவ முன் வருகிறார்.’’✍️🌹 #தெரிந்து கொள்ளுங்கள் #god
N.ராஜாமுனியப்பன்
971 views
26 days ago
வருங்காலத்தில் இனி ஆளப்போவது க்ரிப்டோ கரன்சி தான் இன்றே KPK CRYPTO CURRENCY ல் முதலீடு செய்யுங்கள். தொடர்புக்கு:- 9245406023 #தெரிந்து கொள்ளுங்கள் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴