கதை படிப்போம்

🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
624 views
7 days ago
சிந்தனை.*.( 23..05.2026).. ……………………………………………............. *"வாசிப்பை நேசிப்போம்.''* ........................................................ வீட்டுக்கு வெளிச்சம் தருவது சாளரம்; புத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது”. நம்மை ஏமாற்றாத, சிறந்த நண்பன் புத்தகம் தான். நல்ல புத்தகங்களைப் படிப்பதால் அறிவு வளரும்; உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும்; எண்ணங்கள் நேர் பெறும்; நமது ஆற்றல் பெருகும்; திறமைகள் மிளிரும்; உற்சாகம் ஊற்றெடுக்கும்; சோர்வு அகலும்; மனம் நிறைவு பெறும்; துணிவான முடிவுகள் எடுக்க புத்தகம் துணை புரியும்! வாழ்க்கை மேம்படும்! முன்னேற வழி காணும்..! புத்தகங்களை படித்தவர்கள் நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தரப் போராடி உள்ளர்கள்; வரலாற்றை மாற்றி எழுதி உள்ளார்கள்! புத்தகங்கள் மட்டுமே, நமக்கு ஏற்ப்படுகிற சிக்கல்களை தீர்க்க நல்ல வழியை நயம்படச் சொல்லும்.மனச் சோர்விலும், இறுக்கத்தில் உழலும் போது நல்ல புத்தகங்கள் அமைதியையும், தெளிவையும், வழிகாட்டுதலையும், ஆலோசனைகளையும் வழங்கும். நமக்கும், நமது வீட்டிற்கும் தேவையான பொருட்களை நாம் தவறாமல் வாங்குகிறோம். அதைப் போல, நமது அறிவை வளர்த்துக் கொள்ளவும், வாழ்க்கையில் முன்னேறவும் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் வாங்கத் தரப்படும் பணம், செலவு அல்ல; மூலதனம் ஆகும்! அது, வட்டியை ஈட்டித் தருவதைப் போல அறிவைப் பெருக்கச் செய்யும் மூலதனம்! புத்தகங்கள் படிக்க நேரம் இல்லை என்று பெரும்பான்மையோர் கூறுகிறார்கள். விமானம்,பேருந்து தொடர்வண்டி பயணத்தின் போது மருத்துவரை,உயர் அலுவலர்களை, தலைவர்களைச் சந்திக்கக் காத்து இருக்கும் போதும், புத்தகங்கள் படிக்கலாம். நேரம் வீணாய்க் கழியாமல், பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், புத்தகப் படிப்பிற்காக தினமும் நேரத்தை ஒதுக்கலாம். நாம் நமது நண்பர்களுடன் கேளிக்கைகளிலும், வீண் பேச்சுகளிலும், அரட்டைகளிலும் பொன்னான நேரத்தை வீண் அடிக்கிறோம். ஆனால், நம்மை உயர்த்திக் கொள்ளப் புத்தகங்களைப் படிப்பதற்கு மட்டும் நேரம் இல்லை என்று புலம்பித் தள்ளுகின்றோம். இது வேடிக்கையாக இல்லை.?! எனவே, நமக்குக் கிடைக்கும் நேரத்தை வீண் அடிக்காமல் புத்தகங்களைப் படிப்போம். நூலகங்களுக்குச் சென்று, புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். குழந்தைகளையும் நூலகங்களுக்கு அழைத்துச் சென்று, புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை அவர்களுக்கும் ஊட்டுவோம்.. ஒவ்வொருவரும், புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி தங்கள் வீட்டில் சிறு நூலகம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நமது, குடும்பமே, வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பு ஏற்படும். புத்தகங்கள் நிறைந்த சூழலில் வளரும் குழந்தைகள், அறிவு உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும், இனிய பண்புள்ளவர்களாகவும்,நேர்மை,, நாணயம் உடையவர்களாகவும் வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களாகவும் விளங்குவார்கள். நல்ல புத்தகங்களைப் படித்து, கெட்டுப் போனவர்கள் யாரும் உலகில் இல்லை. புத்தகங்கள் படிப்பதைக் கடமை ஆக கொண்டவர்கள் வாசிப்பதை உயிர் என்று மதித்தவர்களும் மிக உயர்ந்த நிலையை அடைந்து உள்ளார்கள். புத்தகங்கள் பெற்றோரைப் போல அறிவுரை கூறும்; மனைவியைப் போலத் தாங்கி நிற்கும்; மக்களைப் போன்று மகிழ்ச்சி அளிக்கும்; நெருங்கிய நண்பனாய் ஆலோசனை வழங்கும்! *ஆம்.,நண்பர்களே..,* அறிவை விருத்தி செய்ய நல்ல புத்தங்களை நாளும் படிப்போம். வாசிப்பை நேசிப்போம்! வாழ்க்கையிலும் பயன்படுத்துவோம்! புத்தகங்களை, காலமென்னும் அலை கடலின் ஓரம் உயர்ந்து நிற்கும்,கலங்கரை தீபங்கள் என்போம் ( ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி..............)💐💐💐🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹* #😍குட்டி கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் #⏱ஒரு நிமிட கதை📜 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
1.5K views
14 days ago
சிந்தனை.*.( 16.05.2026).. ……………………………………………......... *''சாதனையாளராகத் திகழுங்கள்...''* ...................................................... நாம் இந்த உலகில் ஒரே ஒருமுறை தான் வாழ்கிறோம் அல்லது வாழப் போகிறோம். இந்த உலகில் மூன்று வகைப்பட்ட மனிதர்கள் உள்ளனர்.. முதல் வகை மனிதர்கள் - வாய்ச்சொல் வீரர்கள்.. இரண்டாவது வகை மனிதர்கள் - செயல் வீரர்கள்.. மூன்றாவது வகை மனிதர்கள் - சாதைனையாளர்கள்.. முதல் வகை மனிதர்கள் - வாய்ச்சொல் வீரர்கள்.. ................................................... இந்த முதல் வகையை சேர்ந்த வாய்ச்சொல் வீரர்கள், உலகில் நடந்த மற்றும் நடந்து கொண்டு இருக்கும் நிகழ்வுகளைப் பற்றிய முழுமையான அறிவு இல்லாதவர்கள். இன்றைய உலக மக்கள் தொகையில், 99 சதவீதம் பேர் வாய்ச் சொல் வீரர்கள். இவர்கள் உலகில் நிகழ்ந்த மற்றும் நிகழ்ந்து கொண்டு இருப்பவைகளைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள். இத்தகைய நிலையில் உள்ள 99 சதவீத மக்கள் சமுதாயத்தில் சாதாரண மனிதர்களாக வாழ்க்கையைத் தொடங்கி, சாதாரண மனிதர்களாக வாழ்ந்து முடித்து விடுகின்றனர். இத்தகைய வாய்ச்சொல் வீரர்கள், தான் உண்டு, தன் குடும்பம் உண்டு, தன் வேலை அல்லது தொழில் உண்டு என்று மனம் எல்லை கட்டிய நிலையில் மிகக் குறுகிய வட்டத்தில் வாழ்பவர்கள். இந்த வாய்ச்சொல் வீரர்கள் தனக்கு என்று மிகச் சிறிய சுயநல உலகத்தை ஏற்படுத்திக் கொண்டு,அந்த உலகில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள். இத்தகைய வாய்ச்சொல் வீரர்கள்,கிணற்றுத் தவளையாக இந்த உலகில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள். இரண்டாவது வகை மனிதர்கள் - செயல் வீரர்கள்.. .................................................... இன்றைய சமுதாயத்தில் உள்ள 100 சதவீத மக்களில் வாய்ச்சொல் வீரர்களான 99 சதவீத மக்கள் போக, மீதம் உள்ள ஒரு சதவீத மக்களே செயல் மற்றும் சாதனைகள் செய்ய மிஞ்சுபவர்கள். அந்த 1 சதவீத மாறுபட்ட மக்களில்,0.999 சதவீத மக்கள் தான், சமுதாய அமைப்பில் வரும் வாய்ப்புகள் மற்றும் உலக நிகழ்வுகளை மிக உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். இத்தகைய செயல் வீரர்கள் உலகில் நிகழ்ந்த மற்றும் நிகழ்ந்து கொண்டு இருப்பவைகளைப் பற்றிய விழிப்பு உணர்ச்சி உள்ளவர்கள். மூன்றாவது வகை மனிதர்கள்.. சாதனையாளர்கள் ..................................................... இந்த உலகில் உள்ள வாய்ப்புகளைக் கூர்ந்து நோக்கும் 1 சதவீத மக்களில், 0.999 சதவீத விழிப்புணர்ச்சி உள்ள மக்கள் போக, மீதம் உள்ளவர்கள் 0.0001 சதவீத மக்கள் மட்டுமே. அவர்கள் தான் தங்களது உயரிய வாழ்க்கைக் கனவை தங்களுடைய வாழ்நாளில் நனவாக்குகின்றனர். இத்தகைய மூன்றாவது வகை மனிதர்களான சாதனையாளர்கள்இந்த உலகில் நிகழும் மாற்றங்களை உன்னிப்பாகப் பார்ப்பதுடன், வரும் காலங்களில் நிகழ இருக்கும் மாற்றத்தை தொலை நோக்குப் பார்வை கொண்டு அகக் கண்ணில் பார்ப்பவர்கள். இந்த மூன்றாவது வகையை சேர்ந்த சாதனையாளர்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பவர்கள். இத்தகைய சாதனையாளர்கள், அடுத்தவர்கள் சிந்திக்கும் முன் வேகமாக சிந்தித்து சமுதாய மறுமலர்ச்சி மற்றும் சாதனைகள் பல நிகழ்த்துபவர்கள். இந்த மூன்றாவது வகை மனிதர்கள் தான் இந்த உலகில் வெறும் வாய்ச்சொல் வீரர்களாகவோ, மற்றும் செயல் வீரர்களாகவோ மட்டும் இருந்து விடாமல், சாதனை வீரர்களாக, உருமாற்றம் அடைந்து சாதனைகள் பல செய்து சமுதாயக் காவலாளராக இருக்கிறார்கள்.. இந்த உலகில் உள்ள மக்களில் 0.0001 சதவீத மக்கள் தான் சாதனையாளர்களாக மிளிர்கிறார்கள். சுருங்கச் சொன்னால் பத்தாயிரத்தில் ஒருவர் தான் சாதனையாளராக இந்த உலகத்தில் உருப்பெறுகிறார்கள். கனவு கண்டவர்கள், பகல் கனவு கண்டவர்கள், தங்கள் கனவில் நினைத்ததை, உலகில் மாற்றி அமைத்ததின் மூலம் சாதனையாளர்களாக பரிணமிக்கிறார்கள். இத்தகைய மூன்றாவது வகை சாதனை மனிதர்கள் தான், இன்றைய உலகிற்கு மிகுந்த அளவில் தேவைப்படுகின்றார்கள். *ஆம்.,நண்பர்களே..,* தெளிவான முடிவு எடுங்கள். அதை செயல்படுத்துங்கள்.... சாதனை படையுங்கள்.. வாழ்வில் எடுத்த தெளிவான முடிவில் உறுதியைச் சேர்த்து அதன்வழி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.. இப்போ.,நீங்கள் சொல்லுங்கள்..,!!! இந்த கிடைத்த வாய்ப்பைக் கொண்டு வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்ளப் போகிறீர்கள்..? வாய்ச் சொல் வீரராக இருக்கப் போகிறீர்களா..? செயல்வீரராக இருக்கப் போகிறீர்களா..? ..? சாதனை வீரராக இருக்கப் போகிறீர்களா.. ? ( ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி.....)💐💐💐🙏🏻🌹🌹🌹* #😍குட்டி கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் #⏱ஒரு நிமிட கதை📜 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
3K views
23 days ago
#⏱ஒரு நிமிட கதை📜 #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் வரிகள். 1. அனுபவம் ஓர் உயர்ந்த நகை. ஏனென்றால் அது மிகவும் கூடுதலான விலை கொடுத்தே வாங்கப்பட்டிருக்கிறது. 2. உதவும் கரங்கள் பிரார்த்திக்கும் உதடுகளை விடச் சிறந்தது. 3. அறிவுத் தேவையை விட கவனக்குறைவு தான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது. 4. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகி விடும். 5. கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது இலட்சியத்தை அடைய முடியாது. 6. எனது வெற்றிகளின் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள், எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதன் மூலம் மதிப்பிடுங்கள். 7. எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. 8. தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம். 9. உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வர வேண்டும். #உற்சாக பானம்# #உற்சாக பானம்