கதை படிப்போம்

🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
1.7K views
3 days ago
#⏱ஒரு நிமிட கதை📜 #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் வரிகள். 1. அனுபவம் ஓர் உயர்ந்த நகை. ஏனென்றால் அது மிகவும் கூடுதலான விலை கொடுத்தே வாங்கப்பட்டிருக்கிறது. 2. உதவும் கரங்கள் பிரார்த்திக்கும் உதடுகளை விடச் சிறந்தது. 3. அறிவுத் தேவையை விட கவனக்குறைவு தான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது. 4. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகி விடும். 5. கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது இலட்சியத்தை அடைய முடியாது. 6. எனது வெற்றிகளின் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள், எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதன் மூலம் மதிப்பிடுங்கள். 7. எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. 8. தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம். 9. உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வர வேண்டும். #உற்சாக பானம்# #உற்சாக பானம்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
652 views
5 days ago
*🌹🌹🌹🙏🏻🌺🌺🌺☘️இன்றைய சிந்தனை.*.( 05.05.2026).. …………………………………………...... *"பகைமை மறப்போம்'* ..................................................... இப்போதெல்லாம் சிறிய செயலுக்குக் கூட பொறுமை இல்லாமல் கொதித்துப் போகிறோம். இதனால் பகைமை வளர்ந்து விடுகிறது. இந்த பகைமை நாளாவட்டத்தில் நம் உறவுகளையும் நட்புகளையும் இழந்து ஒன்றும் இல்லாமல் செய்து விடுகிறது. உங்களை திட்டுபவர் அல்லது துன்புறுத்துபவர் மீது உங்கள் இதயத்தில் எந்த விதமான பகைமை உணர்ச்சியையும் கொள்ளாதீர்கள். வெளிப்படையாக கோபத்தை காட்டுவதை விட இது மிகவும் மோசமானது. இது மானசீகப் புற்று நோய். பகைமையை வளர்க்காதீர்கள். மறந்து விடுங்கள். மன்னியுங்கள். இது ஏதோ ஒரு வெறும் லட்சியவாத பழமொழி அல்ல. உங்கள் அமைதியை பாதுகாக்க ஒரே வழி இது தான். உள்ளே பகைமை வளர்ப்பது என்பது ஒருவனுக்கு மிகுந்த கெடுதி யைச் செய்யும். உங்களுக்கு தூக்கம் போய் விடும். உங்கள் இரத்தத்தை நீங்கள் நஞ்சு ஆக்குகின்றீர்கள். இரத்தக் கொதிப்பும், படபடப்பும் உங்களிடம் அதிகரிக்கும் மாவீரன் அலெக்சாண்டரின் தந்தை பிலிப் சிறந்த அறிவாற்றல் மிக்கவர். பலம் பொருந்திய மன்னராக ஆட்சி செய்து வந்தார். அவரது பகுதிக்கு உட்பட்ட ஜமீன்தார் ஒருவர் மன்னரைப்பற்றி எப்போதும் குறை கூறிக் கொண்டு இருப்பார். இது மன்னரின் காதிற்கு எட்டியது. அந்த நாட்டு வழக்கப்படி அது தேசவிரோதம். அந்த ஜமீன்தார் ஆர்க்கீடியஸ் இருக்கும் பகுதிக்கு சென்ற மன்னர் தன் அதிகாரிகளிடம் அந்த ஆர்க்கீடியஸை அழைத்து வரும்படி கூறினார். தன் மந்திரியிடம் ஆர்க்கீடியஸ் என்னிடம் கொண்டுள்ள பகைமைக்கு இன்று முடிவு கட்டுகின்றேன் என்றார். விபரம் அறிந்த ஆர்க்கீடியஸ் மிகவும் பதற்றம் அடைந்தார். தன் ராஜதுரோகச் செயலுக்கு மரணதண்டனைதான் கிடைக்கும் என்ற கலவரத்தில் புறப்பட்டுச் சென்றார். அவர் வந்ததும் மன்னர், எல்லா அதிகாரிகளையும் வெளியில் அனுப்பி விட்டு தனிமையில் சந்தித்தார். மன்னரின் தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் வெளியில் தயாராக காத்து இருந்தனர். சிறுது நேரம் கழித்ததும் மன்னரும் ஆர்க்கீடியஸும் கைக்கோர்த்துக் கொண்டு புன்முறுவலுடன் வெளியில் வந்தனர். எல்லோருக்கும் அதிர்ச்சி. மந்திரி, ‘மன்னா பகைவனை ஒழித்துக் கட்டுவேன் என்றீர்கள்’ என ஆச்சரியத்தின் விழிம்பில் கேட்டார். அதற்கு மன்னர், ‘ஆம், பகைவனை ஒழித்து கட்டிவிட்டு அவனிடத்தில் ஒரு புதிய நண்பனை உருவாக்கி விட்டேன். ஆர்க்கீடியஸ் நல்ல மனிதர், என்னைப் பற்றி தவறாக புரிந்து கொண்டு இருந்துள்ளார். நேரில் பேசியதில் அது புரிந்து எங்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கியது. என்னைச் சரியாக புரிந்து கொண்டதால் அவர் என்மீது கொண்டிருந்த பகை உணர்வுகள் நீங்கி நட்பு மலர்ந்து உள்ளது’ என்றார்.. பகைவனை அழிப்பது என்றால் பகைமையை அழிப்பது என்று தான் அர்த்தம், பகைவனைக் கொல்வதல்ல! அப்படிசெய்தால் பகைமை அழியாது. வம்ச வம்சமாகத் தொடரும் என்றார்... . *ஆம்.,நண்பர்களே..* “நம்மை வெறுப்பவர்கள் நமக்கு பகைவர்கள் இல்லை, நம்மால் வெறுக்கப்படுபவர்களே நம் பகைவர்கள் பகைமை மறப்போம் . அன்பை செலுத்துவோம்..(ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி..)💐💐💐🙏🏻🌹🌹🌹* #💪ஊக்குவிக்கும் கதைகள் #⏱ஒரு நிமிட கதை📜 #😍குட்டி கதை📜 #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
586 views
6 days ago
*🌹🌹🌹🙏🏻🌺🌺🌺🌳இன்றைய சிந்தனை*.( 04.05.2026) .............................................................. *"உங்களின் சிறந்த நண்பர்’’* ……………………………………. உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. ஒருவரின் வெற்றிக்கு உழைப்பு எந்த அளவுக்கு அவசியமோ,அதே அளவு நல்லவர்களின் நட்பும் அவசியம்.. நமது பெற்றோர்களையும், சகோதரிகளையும் நம்மால் தீர்மானிக்க முடியாது.ஆனால் நண்பனாக யார் வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். ஒருவரின் வாழ்க்கையையே திசை மாற்றும் வல்லமை கொண்டது நட்பு., நல்ல செயல்கள் மீது உங்கள் எண்ணங்களை ஊன்ற வைக்கும்படி ஓர் உண்மையான நண்பரால் செய்ய முடியும். துன்பத்தில் இருக்கும் போது அவர் உங்களை உற்சாகப்படுத்தி தூக்கி விடுவார். உங்கள் துக்கத்திலும் பங்கு கொள்வார். எல்லா துன்பங்களிலும் தோள் கொடுத்து, இன்பங்களில் பங்கு பெற்று, தோல்வியில் தேற்றி விட்டு, வெற்றியை உற்சாகப்படுத்தி, மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் ஒருவனே உண்மையான நெருங்கிய நண்பன். பணம் வரும் போது வருபவனும், பதவிக்காக உடன் இருப்பவனும் நண்பன் இல்லை. உண்மையான நட்பு உங்கள் வாழ்க்கையை உயர்த்தும், பொய் மற்றும் தவறான நட்பு உங்களை அழித்து விடும் இளைஞன் ஒருவன் கயிற்றுப் பாலத்தில் நடந்து வந்தான்., அது மிகுந்த உயரத்தில் இருந்தது, அவன் மிகுந்த பயத்துடன் அந்தப் பாலத்தை கடக்க முடியாமல் தவித்தான்.. அந்த நேரத்தில் தான் அவனுடைய நண்பன் அந்த பாலத்தில் மறு முனையில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். அந்த இளைஞன் தன் நண்பனை தன்னிடம் வருமாறு கூவினான்.. ஆனால் அவன் வரவில்லை. பல முறை அந்த இளைஞன் அழைத்தும் அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. மிகுந்த கோபம் அடைந்த அந்த இளைஞன் பாலத்தை ஒரு வழியாக கடந்து மறுபுறம் வந்து சேர்ந்தான்..பல முறை அழைத்தும் உதவிக்கு வராத தன் நண்பனைக் கொட்டித் தீர்த்தான் ஆனால் அவன் அதற்கும் சிரித்துக் கொண்டு தான் இருந்தான். அப்போது அந்த இளைஞன் எதேச்சையாக தன் நண்பனின் கைகளைப் பார்த்தான். அந்த உடைந்த, பழுதடைந்த கயிற்றுப் பாலத்தை தன் நண்பன் கைகளால் பிடித்துக் கொண்டு இருந்ததால் கையில் இரத்தம் வழிந்தது...தன் நண்பனை அப்படியே வாரி அணைத்துக் கொண்டான்.. நண்பனுக்குத் துன்பம் வந்தால் தொலைவில் நின்று வேடிக்கை பார்க்காமல் உடனே உதவக் கூடியது தான் நட்பு. நல்ல நட்பு வளர்பிறை போன்றது. அது நாளுக்கு நாள் வளரும். உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது .அதை இழந்து விடும் வரை நாம் அதன் உண்மையான மதிப்பை உணர்வதே இல்லை. *ஆம்.,நண்பர்களே..,* தீய நட்பு தேய்பிறை போன்றது. அது சிறிது சிறிதாக தேய்ந்து பின்னர் மறைந்து போகும். எனவே நல்ல நட்பை நேசிப்போம்! நல்ல நட்பை வாசிப்போம்!! நல்ல நட்பையே சுவாசிப்போம்!!! ( ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி..)💐🌺🌺🌹🙏🏻🌳🌹 #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #உற்சாக பானம் #பொழுது போக்கு
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
2.1K views
17 days ago
*இன்று மக்களிடம் ஒரு தவறான கெட்ட பழக்கம் பரவியுள்ளது.* *அதாவது நாம் நல்ல வார்த்தைகளைப் பேசினால் நல்லதே நடக்கும், நேர்மறையான எண்ணங்கள் சிந்தனைகள் இருக்க வேண்டும். நாம் என்ன செய்கின்றோமோ அதுதான் நடக்கும் என்கின்றார்கள்.* *சரி... நான் தெரியாமல்தான் கேட்கின்றேன்...?* *குழந்தைகளுக்கு உள்ளாடை அணிவிப்பதற்குப் பதிலாக ஒருமுறை பயன்படுத்தும் டயாப்பர் பயன்படுத்துகிறீர்கள்...?* *அப்படியென்றால்.... அந்த டயாப்பரைத் தூக்கி எறிவது போன்று அந்தக் குழந்தையையும் தூக்கி எறிகிறீர்கள் என்றுதானே பொருள்...?* *சரி அதையெல்லாம் விடுங்கள்....* *அந்த டயாப்பரில் என்ன வேதிப்பொருட்கள் இருக்கின்றன? என்கின்ற விடையாமாவது தெரியுமா?* *ஒரு மண்ணும் தெரியாது.* *விளம்பரதில் பார்த்தேன். பெரிய பணக்காரர்கள் இதைத்தான் பயன்படுத்துவார்கள். அதனால் வறட்டு கவுரவத்திக்காக நாங்களும் இதைத்தான் எங்கள் குழந்தைகளுக்குப் பயன்படுத்துகின்றோம். அப்புறம் இப்போதெல்லாம் யாருங்க வீட்டில் துணி துவைக்கின்றார்கள்? துணி துவைத்தால் நல்ல குடும்பம் கிடையாது. கவுரவக் குறைச்சல் ஆமாம்...!* *அப்போதுதானே பார்ப்பவர்கள் எங்களை educated பேமுழி ன்னு நெனச்சு மதிப்பாங்க.?* *எங்களுடைய பேமுழிக்குன்னு ஒரு கவுரவம் அந்தஸ்து இருக்கிறதா? இல்லையா?* *ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.... நோய்க்கும், மரணத்திற்கும் காசு பணம் கவுரவம் அந்தஸ்து எதுவுமே பார்த்து வாராது மகனே....!* *அடிச்சா ஒரே அடி...! தூக்கி வீசிட்டுப் போயிக்கிட்டே இருக்கும்.* *காசு பணம் இருக்கிறது என்பதற்காக இன்று குழந்தைகளின் அப்பனும் ஆத்தாளும் என்ன ஆட்டம் ஆடுறாங்க?* *குழந்தைகளை வெளிநபர்கள் யாருமே பார்க்கவே கூடாது, வெளிநபர்களின் மூச்சுக் காற்று நிழல் குழந்தையின் மீது விழவே கூடாது.* *அய்யயையோ.....* *சூரிய ஒளி குழந்தையின்மீது விழக்கூடாது....* *பூமியில் இந்த மண்ணில் குழந்தையின் கை கால் படவே கூடாது....* *மழை நீர் பனி குழந்தையின் மீது விழவே கூடாது.* *அட.... அந்த வீட்டில் இருக்கின்ற கிழடுகள் இருக்கின்றார்கள் பாருங்கள்.... அவர்கள் பெயரன் பெயர்தியை ஏதோ வேற்று உலகத்தில் இருந்து வந்த திருட்டுப் பொருள் போன்று யாருக்குமே தெரியாமல் பாத்துக்கொள்கின்றேன் என்ற பெயரில்.... அய்யய்யோ....* *இப்படி பொத்திப் பொத்தி வளர்த்து கடைசியில் என்ன நடக்கும் தெரியுமா?* *இவர்களே குழந்தைகளுக்கு விசத்தைக் கொடுப்பார்கள். அதுவும் தெரிந்தேதான் கொடுப்பார்கள்.* *எப்படி?* *கைசீனிக் என்ற பெயரில் ஹார்லிக்ஸ் போர்ன்விட்டா பீடியாசுயர் மால்டோவா சத்துமாவு லொட்டு லொசுக்குன்னு வாங்கிக் கொடுப்பாங்க.* *சரி... நாளைக்கு அந்தப் பிள்ளைங்க பெரியவர்கள் ஆனதும் எங்கு வாழ்வார்கள்?* *கண்ணாடிக் கூண்டிற்குள்ளா?* *அல்லது வேற்று கிரகத்திலா?* *கடைசியில் இந்த மண்ணில்தானே?* *இங்கதான் டுவிஸ்ட்டே ஆரம்பம்.* *குழந்தைகளுக்கு தங்க பஸ்பம் எல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்து கடைசியில் இந்த பூமியில் இந்த மண்ணில் (அது எந்த நாடாகவும் இருக்கட்டும்) இங்கு வாழ விடுகிறீர்கள்...?* *அந்தக் குழந்தை மண்ணில் விளையாடியிருந்தால்தானே அந்த மண்ணிலுள்ள கிருமிகளை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகியிருக்கும்?* *அந்தக் குழந்தையின் உடலிலுள்ள தோலில் சூரிய ஒளி பட்டிருந்தால்தானே உடல் நலமாக வளமாக இருந்திருக்கும்?* *டேய் சோணை முத்தான்....!?* *போச்சா....? என்ற கதையாக ஆகிவிட்டபின்....* *அழுது புலம்பி என்ன பயன்?* *அடுத்த மக்களின் மூச்சுக்காற்று நிழல் வாசம் படாமல் வளர்த்தபின் அந்த மக்களின் மத்தியில் உங்கள் பிள்ளைகளை வாழவிட்டால்...? அப்போது பிற மனிதர்களின் இருமல் காற்றுக் கிருமிகளை எதிர்கொள்ள உங்களின் குழந்தைகளின் உடலில் எதிர்ப்பு சக்தி இருக்காதே?* #💪ஊக்குவிக்கும் கதைகள் #😍குட்டி கதை📜 #⏱ஒரு நிமிட கதை📜 #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம்