திரு.சுப்புராம்முத்துராஜ் மாவட்டதலைவர் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ்

சுப்புராம் முத்துராஜ்
4.4K views
5 days ago
#காங்கிரஸ் திரு.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட தலைவர் அவர்கள் விருதுநகர் கிழக்கு மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றோம்... உடன் நகரதலைவர் கவுன்சிலர் திரு.ராஜ்குமார் திரு.பிச்சைகனி மற்றும் திரு.பால்சாமி ஆகியோர் உடனிருந்தனர்... #சுப்புராம்முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #திரு.சுப்புராம்முத்துராஜ் மாவட்டதலைவர் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #சுப்புராம் முத்துராஜ் மாவட்டதலைவர் obc விருதுநகர் மேற்குமாவட்ட காங்கிரஸ் #திரு.சுப்புராம் முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ்
சுப்புராம் முத்துராஜ்
480 views
4 months ago
சுப்புராம் முத்துராஜ்
544 views
4 months ago
சுப்புராம் முத்துராஜ்
608 views
5 months ago
வீட்டிற்கு வரும் BLO ஒருவருக்கு ஒரு படிவம் கொடுத்து நிரப்பி தர சொல்வார்... தேவையான விவரங்களை நிரப்பி கொடுக்க வேண்டும்.. தவறெனில் மாற்று படிவம் கொடுக்கப்பட மாட்டாது. அதில் மூன்று நிலையாக வாக்காளர்களை பிரித்து விவரம் கேட்கப்பட்டுள்ளது... * 1987க்கு முன் பிறந்தவர்கள் * 1987 - 2004 இல் பிறந்தவர்கள் * 2004 க்கு பின் பிறந்தவர்கள் ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு விதமான ஆவண விவரங்களை நிரப்பித் தர வேண்டும்... அரைகுறை விண்ணப்பங்கள் தேவையான ஆவண விவரங்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். #சுப்புராம்முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #திரு.சுப்புராம்முத்துராஜ் மாவட்டதலைவர் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #சுப்புராம் முத்துராஜ் மாவட்டதலைவர் obc விருதுநகர் மேற்குமாவட்ட காங்கிரஸ் #திரு.சுப்புராம் முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #திரு.சுப்புராம் முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் காங்கிரஸ்
சுப்புராம் முத்துராஜ்
602 views
5 months ago
#📢 நவம்பர் 03 முக்கிய தகவல்🤗 தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இடமில்லை அதற்கு மாறாக , ஒன்றிய பாஜக அமைச்சருக்கு இடம் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய வாக்குச் சாவடியின் சிசி டிவி காட்சிகளை தர மறுக்கிறது தேர்தல் ஆணையம் பதிவாகும் வாக்குகளை விட எண்ணப்படும் வாக்குகள் அதிகமாக வருகின்றன தேர்தல் ஆணையத்தால் இறந்து போனதாக நீக்கப்பட்ட வாக்காளர்கள் உயிருடன் வருகின்றனர் ஒப்புகைச் சீட்டை எண்ண மறுக்கிறது தேர்தல் ஆணையம் ஹரியானாவில் தோல்வி அடைந்ததாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட நபருக்கு பதிவான வாக்குகளை உச்ச நீதிமன்றம் எண்ணிய போது தோல்வி அடைந்ததாகச் சொல்லப்பட்டவர் வெற்றி பெறுகிறார்… பஞ்சாபில் கண் முன்னே பதிவான வாக்குகளை செல்லாத வாக்குகளாக மாற்றுகிறார் தேர்தல் அதிகாரி.. நம்புங்கள் தேர்தல் ஆணையம் நியாயமாகத்தான் தேர்தலை நடத்துகிறது என்று #சுப்புராம்முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #திரு.சுப்புராம்முத்துராஜ் மாவட்டதலைவர் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #சுப்புராம் முத்துராஜ் மாவட்டதலைவர் obc விருதுநகர் மேற்குமாவட்ட காங்கிரஸ் #திரு.சுப்புராம் முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ்
சுப்புராம் முத்துராஜ்
582 views
5 months ago
#📢 அக்டோபர் 30 முக்கிய தகவல்🤗 "பால்வெளி மண்டலத்தில் பல பில்லியன் நட்சத்திரங்கள், கோள்கள் அசுர வேகத்தில் சுழன்றுக் கொண்டு இருக்கின்றன. ஆனால், இத்தனை ஆண்டுகளில் நம் பூமி மீது ஒரு நட்சத்திரம் கூட இதுவரை மோதவில்லையே....எப்படி இந்த அற்புதம் நிகழ்கிறது..."? இப்படி ஒரு கேள்வியை கேட்டு ஒரு நண்பர் விளக்கம் கேட்டுருந்தார். இந்த சந்தேகம் அவருக்கு மட்டுமல்ல....பலருக்கும் இன்னும் வியப்பான சந்தேகமாகவே இருக்கும். இதற்கான எளிமையான விளக்கத்தை தெரிந்துக் கொள்வோம். கடினமான புரிதல் உள்ளவர்களுக்கு step-by-step சொல்கிறேன். நாம் வசிக்கும் இந்த பிரமாண்ட பூமியானது சூரிய மண்டலம் என்கிற மிகப் பிரமாண்டமான இடத்தில் அமைந்துள்ளது. சூரியனை தலைமையாக கொண்டுள்ள இந்த சூரிய மண்டலமானது மிக மிக பிரமாண்டமான பால்வெளி மண்டலத்தின்(Milky way Galaxy) மையத்தில் அமைந்துள்ளது. இந்த மிக மிக பிரமாண்டமான பால்வெளி மண்டலமானது நன் கற்பனையில் கூட நிறுத்த முடியாத அளவுள்ள இந்த பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு இடத்தில் அமைந்துள்ளது. இது அடிப்படை. இப்போது நம் பூமியானது வினாடிக்கு 30 கிமீ வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது. இதே போல் நம் சூரியன் பிற கோள்களை இழுத்துக் கொண்டு பால்வெளி மண்டலத்திற்குள்ளேயே வினாடிக்கு 230 கிமீ வேகத்தில் சுற்றிக் கொண்டுள்ளது. அதாவது, ஒட்டுமொத்த சூரிய குடும்பமும் பால்வெளி மண்டலத்தின் மையத்திலேயே ஒரு வட்டமாக சுற்றி வருகிறது. இந்த பால்வெளி மண்டலத்திற்குள் நம் சூரியனை போல் பெரிய/சிறிய அளவில் சுமார் 100-300 பில்லியன் நட்சத்திரங்களும், பூமியை போல் 200-400 பில்லியன் கோள்களும் அசுர வேகத்தில் உள்ளேயே சுற்றிக் கொண்டுள்ளன. இப்போது தான் அந்த கேள்வி வருகிறது. 'நம் சூரிய மண்டலமே வினாடிக்கு 230 கிமீ வேகத்தில் சுழன்றுக் கொண்டுள்ளது. இதே போல் தான் எல்லா நட்சத்திரங்களும் கோள்களும் சுழன்றுக் கொண்டுள்ளன. ஆனால், ஏன் நம் மீது எந்த மோதலும் இதுவரை நிகழவில்லை....'? இங்கே தான் நாம் பால்வெளி மண்டலத்தின் பிரமாண்டத்தை நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும். பால்வெளி மண்டலத்தின் ஒரு எல்லையில் இருந்து எதிர் முனை எல்லை வரையிலான தூரம் 1,00,000 ஒளி ஆண்டுகள். அதாவது, வினாடிக்கு 3 லட்சம் கிமீ வேகத்தில் பயணிக்கும் ஒளியானது பால்வெளி மண்டலத்தின் ஒரு எல்லையிலிருந்து எதிர் முனை எல்லைக்கு செல்ல 1,00,000 ஆண்டுகள் ஆகும். அவ்வளவு பிரமாண்டமானது. இப்படி ஒரு பிரமாண்டமான இடத்தின் மையத்தில் உள்ள நம் சூரிய மண்டலம் ஒரு முழு வட்டம் அடிக்க எவ்வளவு ஆண்டுகள் ஆகும் தெரியுமா...? 240 மில்லியன் ஆண்டுகள்....!!! ஆக, நம் சூரிய மண்டலம் கடக்கும் பாதையின் தூரம் எவ்வளவு என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். ஆனால், குறுக்கே ஏன் இதுவரை எந்த நட்சத்திரமும், கோளும் வரவில்லை...? ஏனெனில், இந்த பால்வெளி மண்டலம் முழுவதும் ஆல்மோஸ்ட் வெற்றிடம் தான் உள்ளது. "ஏங்க....இப்ப தான் 200 பில்லியன் நட்சத்திரங்கள், 400 பில்லியன் கோள்கள் இருக்குன்னு சொன்னீங்க...இப்ப முழுக்க முழுக்க வெற்றிடம்னு சொல்றீங்களே..."? என நீங்கள் கேட்கலாம். நியாயம் தான். இந்த நட்சத்திரங்கள் கோள்கள் உள்ளே இருந்தாலும் கூட நம் பால்வெளி மண்டலம் ஒரு பிரமாண்டமான வெற்றிடம் தான். எவ்வளவு பிரமாண்டமான வெற்றிடம் தெரியுமா...? 99.999999999999% வெற்றிடம் மட்டுமே. மீதி இருக்கிற 0.000000000001% இடத்தில் மட்டுமே நம் சூரிய மண்டலமும், மேலே சொன்ன பில்லியன் கணக்கான நட்சத்திரங்களும் கோள்களும் அமைந்துள்ளன. ஒரு எளிமையான உதாரணம் சொல்றேன். நம் இந்தியாவின் மொத்த பரப்பளவையும் உங்க mind-ல் கொண்டு வாங்க. இப்ப இந்தியா தான் பால்வெளி மண்டலம் என கற்பனை செய்யுங்கள். இப்போது நம் சூரிய மண்டலம், பிற நட்சத்திரங்கள், கோள்கள் என அனைத்தையும் ஒரு அரிசி பருக்கைக்குள் அடைத்து நம் இந்தியாவில் ஏதோ ஒரு இடத்தில் போட்டு விடுகிறோம். இப்ப அந்த அரிசி பருக்கை இருக்கும் இடத்தை தவிர்த்து இந்தியாவில் மீதியிருக்கிற எல்லா இடமும் வெற்றிடம் தான். இப்ப உங்களுக்கு புரிந்திருக்குமே...!! இந்தியாவில் கிடக்கும் இந்த ஒரு அரிசி பருக்கைக்குள் தான் நம் சூரிய மண்டலமும், பிற நட்சத்திரங்களும் கோள்களும் இருந்தால், நம் பூமியின் அளவு என்ன...? சும்மா காமெடி பண்ணாதீங்க பாஸ்... நீங்கள் நம் பூமியை கண்ணாலும், மைக்ரோஸ்கோப் மூலம் கூட பார்க்க முடியாத அளவில் ஒரு அணுவை விட சின்னதாக இருக்கும். ஆக, இந்த பால்வெளி மண்டலத்தை பொருத்தவரை பூமியும், நட்சத்திரங்களும் வெறும் தூசுக்களே...!!! ஆனால், இந்த தூசுக்களுக்கு இடையேயும் மேலே சொன்ன பிரமாண்டமான வெற்றிடம் நிரம்பிக் கிடக்கிறது. இப்ப சொல்லுங்க....இந்த பிரமாண்டமான வெற்றிடத்தில் இந்த தூசுக்கள், அதாவது நம் சூரியன், பூமி மீது எவ்வித மோதல்களும் நிகழாமல் பயணப்பதில் ஆச்சர்யம் இல்லை தானே...? #சுப்புராம்முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #திரு.சுப்புராம்முத்துராஜ் மாவட்டதலைவர் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #சுப்புராம் முத்துராஜ் மாவட்டதலைவர் obc விருதுநகர் மேற்குமாவட்ட காங்கிரஸ் #திரு.சுப்புராம் முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ்
சுப்புராம் முத்துராஜ்
559 views
5 months ago
१६ प्रतिक्रिया | 🇮🇳 பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யாவை நினைவுகூரல் 🇮🇳 தமிழகத்தின் மண்ணில் பிறந்து, தைரியம், சமத்துவம், ஆன்மீக வலிமை ஆகியவற்றின் உருவாக வாழ்ந்த மாபெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யா. 🕊️ 1908 அக்டோபர் 30, பசும்பொன் கிராமத்தில் பிறந்த அய்யா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்,இந்தியாவின் விடுதலைக்கும் சமூக உயர்விற்கும் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். அரசியலை விட நீதியும் மனிதத்துவமும் மேலானவை என்று நம்பிய உண்மையான தேசபக்தர். ✊ Criminal Tribes Act-ஐ எதிர்த்து போராடி, புறக்கணிக்கப்பட்ட மக்களின் கண்ணியத்திற்காக தன்னலமற்ற போராட்டம் நடத்தியவர். 💫 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடன் நெருங்கிய உறவு கொண்டவர். Forward Bloc இயக்கத்தின் தலைசிறந்த ஆதரவாளர். சுயமரியாதை, ஒழுக்கம், தேசப் பெருமை ஆகியவற்றை தன் வாழ்வின் நெறிகளாக வைத்தவர். 🏡 தனது கடைசி நாட்களை திருநகர், மதுரையில் கழித்த அய்யா, எளிமையும் ஆன்மீக ஞானமும் கொண்ட தலைவராக மக்களை வழிநடத்தியார். இந்திய பிரதமராக பசும்பொன் சென்ற ஒரே தலைவர் ராஜீவ் காந்தி ஜி, அய்யாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி, தேவர் அய்யாவிற்கான காங்கிரஸ் கட்சியின் ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்தினார். 🙏 இன்று தேவர் ஜெயந்தியை நினைவு கூர்ந்தபோது, நாம் அனைவரும் அய்யாவின் ஒற்றுமை, சமத்துவம், சேவை என்ற மூன்று தத்துவங்களையும் மீண்டும் உறுதிப்படுத்துவோம். அய்யாவின் வழி — அன்பும் நம்பிக்கையும் நிறைந்த இந்தியா! 🇮🇳 #ThevarJayanthi #PasumponMuthuramalingaThevar #RajivGandhi #Madurai #முத்துராமலிங்கதேவர் #PasumponMuthuramalingaDevar #Congress #ManickamTagore | Manickam Tagore
🇮🇳 பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யாவை நினைவுகூரல் 🇮🇳 தமிழகத்தின் மண்ணில் பிறந்து, தைரியம், சமத்துவம், ஆன்மீக வலிமை ஆகியவற்றின் உருவாக வாழ்ந்த...