புரட்டாசி

Jeeva.Kamaraj
4.4K views
6 months ago
#😅புரட்டாசி மாசத்துக்கு Bye Bye👋 அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் #கலியபெருமாள் திருக்கோயில் #கல்லங்குறிச்சி , அரியலூர் #புரட்டாசி மாத கடைசி நாள் #ஓம்நமோநாராயணா #Purattasi #perumal #Kaliyaperumaltemple #ariyalur
RamaswamyAnnamali
8.6K views
6 months ago
#புரட்டாசி #🙏ஆன்மீகம் #🙏கோவில் ஸ்பெஷல்* *தமிழகத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த வெங்கடாசலபதி ஆலயங்கள்*🌹 வெங்கடாசலபதி என்றாலே நம் நினைவுக்கு வருவது, திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். ஆனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெங்கடாசலபதிக்கு,பல்வேறு பெயர்களில் திருக்கோவில்கள் அமைந்துள்ளன.அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம். தலைமலை நாமக்கல் மாவட்டத்தில் முசிறியில் இருந்து நாமக்கல் செல்லும் வழித்தடத்தில் மணல்மேடு என்ற ஊர் உள்ளது.இங்கிருந்து வடக்கு திசையில் நீலயாம்பட்டி அடுத்துள்ளது செவிந்தப்பட்டி.இங்கு தான் தலைமலை வெங்கடாசலபதி கோவில் இருக்கிறது.மூலவர் பெயர்,வெங்கடாசலபதி. தாயார் திருநாமம் ஸ்ரீதேவி-பூதேவி.850 அடி உயரம் கொண்ட இந்த மலை மீது ஏறிச்செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆனால் இந்த மலையின் மீதுள்ள கோவிலைச் சுற்றிவர வழி கிடையாது.ஆனாலும் சில பக்தர்கள் கோவில் சுவற்றின் மீது ஏறியபடி கோவிலை ஆபத்தாக வலம் வருகிறார்கள்.பல்வேறு அரிய வகை மூலிகைகள் கொண்ட மலை என்பதால்,அதனைச் சிறப்பிக்கும் வகையில் ‘தலைமலை’ என்று அழைக்கிறார்கள்.இத்தல இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார். சாத்தூர் விருதுநகரில் இருந்து சுமார் 26 கி.மீ.தொலைவில் உள்ளது,சாத்தூர்.இங்கு பாய்ந்தோடும் ‘வைப்பாறு’ நதியின் வடகரையில் இருக்கிறது,ஸ்ரீதேவி- பூதேவி உடனாய வெங்கடாசலபதி திருக்கோவில். மூலவர் பெயர் வெங்கடாசலபதி.பக்தர்கள் ‘சாத்தூரப்பன்’ என்றும் அழைக்கிறார்கள்.எட்டையபுரம் ஜமீன்தார்கள்,அந்த காலத்தில் இந்த ஆலயத்தின் மீது ஈடுபாடு கொண்டு,பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார்கள்.திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர்,இந்த ஆலயத்து இறைவனைப் பற்றி பாடியிருக்கிறார்.எட்டயபுரத்தில் பிறந்த மகாகவி சுப்பிரமணி பாரதியும் இந்த ஆலய பெருமாளை வழிபட்டதற்கான சான்றுகள் உள்ளன. சிந்துப்பட்டி மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டி செல்லும் பாதையில் 18 கி.மீ.தொலைவில் உள்ளது சிந்துப்பட்டி.இங்குள்ள வெங்கடேசப் பெருமாள் ஆலயம்,சுமார் ஐநூறு ஆண்டுகள் பழமையானது.விஜயநகர மன்னர்கள் ஆட்சி காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மூலவர்-வெங்கடேசப் பெருமாள். தாயார்-அலர்மேலுமங்கை.சந்திரகிரி பகுதியில் இருந்து இங்கு வந்த நாயக்கர்கள்,புளியமரங்கள் அடர்ந்திருந்த இந்தப் பகுதியில்,தாங்கள் பூஜை செய்து வந்த மூர்த்திகளை,பெருமாள் உத்தரவுப்படி பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர்.கோவில் கொடி மரத்தில் கருப்பண்ண சுவாமியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.இத்தல பெருமாள் நின்ற கோலத்தில் வீற்றிருந்து அருள்கிறார். நன்னகரம் திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் 63 கி.மீ.தொலைவில் இருக்கிறது,நன்னகரம் என்ற ஊர்.இங்கு பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளது. மூலவர்- பிரசன்ன வெங்கடாசலபதி. தாயார் -ஸ்ரீதேவி மற்றும் பூதேவி.குலசேகர பாண்டியனின் ஆட்சி காலம் அது.அவனது அரசவைக்கு கர்க முனிவர் என்பவர் வந்தார்.மன்னன் மனக் குழப்பத்திலும்,துயரத்திலும் இருப்பதை அறிந்தவர்,‘துன்பமும்,மனக் குழப்பமும் நீங்க,தென்னகம் சென்று திருவேங்கமுடையானுக்கு திருக்கோவில் ஒன்று கட்டு’என்று உத்தரவிட்டார்.அதன்படி மன்னன்,நிர்மாணித்ததே இந்த ஆலயம் என்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணாபுரம் திருநெல்வேலியில் இருந்து தென்கிழக்கில் சுமார் 13 கி.மீ.சென்றால்,கிருஷ்ணாபுரம் என்ற ஊர் வரும்.தாமிரபரணி ஆற்றின் கரையில் இந்த ஊர் அமைந்துள்ளது.இங்குள்ள வெங்கடாசலபதி கோவிலில்,மூலவராக பெருமாள் அருள்பாலிக்கிறார்.தாயார் திருநாமம் பத்மாவதி என்பதாகும்.16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த ஆலயத்திற்கு என்று தல வரலாறு எதுவும் கிடைக்கப்பெறவில்லை.இந்த ஆலயத்தின் கல்தூண்கள் அனைத்தும் கலைநயத்துடன் வடிக்கப்பட்டுள்ளன.ஒரு முறை சிற்பி ஒருவர் இந்தப் பகுதிக்கு வந்துள்ளார்.அவர் இங்கிருக்கும் பாறைகளில் செந்நிற ரேகைகள் ஓடுவதைக் கண்டு பரவசடைந்து, தன்னுடைய கற்பனையில் பல சிற்பங்களை செதுக்கி,ஆலயத்திற்கு அர்ப்பணித்ததாக கூறப்படுகிறது. *ௐநமோநாராயணாயநமஹ*🙏🌹
RamaswamyAnnamali
701 views
6 months ago
#பத்திஸ்டேட்ஸ் #🙏ஆன்மீகம் #புரட்டாசி ஸ்பெஷல்* *குலதெய்வம்_இஷ்டதெய்வம்* *வெங்கடாசலபதி*🌹 ஹிந்துக்களுக்கு எத்தனையோ தெய்வங்கள். முக்கியமாக திருப்பதி பாலாஜி அநேகரின் குலா தெய்வம். இஷ்ட தெய்வம். கலியுக வரதன். கண்கண்ட தெய்வம். நினைத்ததை நடத்தி வைக்கும் பகவான் என்று நம்பிக்கை. ஒரு சம்பவம் உங்களுக்கு தெரியுமா? வெள்ளைக் காரன் காலத்தில் நம்மை ஆண்டவர்களில் பிரபலமான ஒரு பெயர் ஸர் தாமஸ் மன்றோ. சென்னையில் தீவுத் திடலில் குதிரை மீது வெகு காலமாக அமர்ந்திருப்பவர். தெரியாத மெட்ராஸ் ஆசாமி கிடையாது. இப்போது திருமலை திருப்பதி ஆந்திரர் வசம் இருந்தாலும் அப்போது சென்னை மாகாணத்தில் அது ஒரு பகுதி. சித்தூர் மாவட்டம். இந்த மாவட்டத்துக்கு கலெக்டர் மன்றோ. அப்போது எல்லாம் மந்திரிகள் கிடையாது. கலெக்டர்கள் வைத்தது தான் சட்டம். வேலை விஷயமாக திருமலை-திருப்பதிக்கு அடிக்கடி மன்றோ போகவேண்டி இருந்தது. திருப்பதி பாலாஜி பெருமை மஹிமை பற்றி யாரெல்லாமோ சொல்லி கேட்டிருந்தாலும் மன்றோ அதைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தவில்லை. அவர் நம்பிக்கை மதம் வேறு. ‘திருப்பதியில் தினமும் எவ்வளவு வசூல் தேறும்? அதை அரசாங்கத்துக்கு அனுப்பவேண்டும் ’ என்பது மட்டுமே கவலை. வெங்கடாசலபதி கோவிலுக்கு போனாலும் அவனைப் பார்ப்பதில்லை. உண்டில் மேல் தான் கவனம். . ‘கோயில் அதிகாரிகள் இந்தப் பணத்தைச் சுருட்டாமல் இருக்க கண்குத்தி பாம்பாக அதிலே தான் குறி மன்றோவுக்கு. கோயில் வேலையாட்களை, அதிகாரிகளை, அர்ச்சகர்களை சரமாரியாக திட்டுவார். தண்டனை கொடுப்பார் . அதால் அவர்களுக்கு மன்றோ என்ற பெயர் சொன்னாலே சிம்ம சொப்பனம். ''ஸ்ரீநிவாஸா, நீ தான் எங்களை காப்பாற்றவேண்டும் என்று பாலாஜி முன் முறையிடுவார்கள். மொட்டையடிக்க வருபவர்களை கேலி செயது வேறு இடம் கிடைக்கவில்லையா மொட்டைபோட என்றும், இரு மொட்டைகளை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதும் மன்றோவுக்கு பிடிக்கும். ''அபசாரம்’ என்று மனதிற்குள் சபிப்பார்கள் அர்ச்சகர்கள். யாரேனும் வாயைத் திறந்தால் அவன் பிணம் தான் மிஞ்சும் .] வேங்கடாசலபதிக்கு தெரியாதா எப்போது என்ன செய்யவேண்டும் என்று? வழக்கம்போல் ஒரு நாள் வசூல் செய்ய மன்றோ தனது படையுடன் வந்தான். வசூல் விவரம், கோவில் வழிபாடுகளில் கிடைத்த பணம். காணிக்கையாக வந்த பொருள், பணம், கையிருப்பு எல்லா கணக்கும் தயாராக வைத்திருந்தார்கள் கோவில் அதிகாரிகள். ஆலயத்துக்குள் நுழைந்த மன்றோ, வசூலைப் பார்வையிடுவதற்கு முன்னதாக, தன்னிச்சையாக ஆலயத்தை அதிகார மிடுக்குடன் வலம் வந்தார். புனிதமான க்ஷேத்ரத்தில் ஒரு வெள்ளையன் மரியாதை இன்றி சுற்றி வருவது அர்ச்சகர்களும் பக்தர்களுக்கு பிடிக்கவில்லை. என்ன செய்வது? கோவிலின் ஒரு மூலையில் சில பக்தர்கள் அமர்ந்து பெருமாளின் பிரசாதமான வெண்பொங்கலை, இலையில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து மன்றோ முகம் சுளித்தான். அருவறுப்படைந்தான். ''சே இதைப் போய் தின்கிறார்களே, என்னென்ன வியாதிங்க வருமோ? எல்லாரும் முதல்ல அதைத் துப்பி விட்டு தூர எறியுங்கள்'' என்று அருவருப்போடு கண்டிப்பான குரலில்கத்தினான். பக்தர்கள் பதறிப் போனார்கள். துரைக்குப் பயந்து துப்பியவர்களும் உண்டு; பெருமாளுக்கு பயந்து விழுங்கியவர்களும் உண்டு பக்தர்களை விரட்டிவிட்டு மன்றோ பிராகாரத்தில் ஒரு சில அடிகள் எடுத்து வைத்தவன் தாங்கமுடியாத வயிற்று வலியால் துடித்தான். ஐயோ அப்பா என்று வலி தாங்காமல் அலறினான் மன்றோ. சுருண்டு விழுந்தவனை அலுவலக அதிகாரிகளும், கோயில் ஊழியர்களும் தூக்கிவிட்டு பிடித்துக்கொண்டு ,கலெக்டர் பங்களாவுக்கு கொண்டு சென்றார்கள். படுத்த மன்றோவுக்கு மீண்டும் வயிற்றில் சுருக்கென்று வலி. ஆங்கிலேய மருத்துவர்கள்வந்து வைத்தியம் செய்தனர். வயிற்று வலிக்கான காரணம் புரியவில்லை. மருந்துகள், மாத்திரைகள், உறக்கம் வருவதற்கான ஊசிகள் – எதுவும் நிவாரணம் தரவில்லை. தொடர்ந்த வலியும் குத்தலுமா பல நாட்கள் கிழிந்த துணி ஆனான் மன்றோ. ஒருநாள் திருப்பதியில் இருந்து,கோவில் நிர்வாக விஷயமாக மன்றோவைச் சந்திக்க ஓர் அர்ச்சகர் வந்தபோது அவரிடம் புலம்பினான் மன்றோ. அசல்பதிவேற்றியவருக்கு நன்றி. ''துரைஅவர்களே, நான் சொன்னால் கோவிக்கமாட்டீர்களே? ” என்று தயங்கினார் அர்ச்சகர். '' சொல்லுங்கள்… எனக்கு வயிற்று வலி தீர வேண்டும். அன்றைக்குக் கோயிலில் தொடங்கிய வலி இன்னமும் நீங்கிய பாடில்லை. சீக்கிரம் ஏதாவதுவழி தெரிந்தால் சொல்லுங்கள்” என்றான் மன்றோ. ''சுவாமி பிரசாதத்தை நீங்க மரியாதைக்குறைவாய் பேசினதால தான், ஒங்களுக்கு இப்படி ஒரு நிலைமை உண்டாகி இருக்கும்னு தோண்றது. இதுக்கு ஒரே ஒரு பரிகாரம்தான் இருக்கு” ''உடனே சொல்லுங்க . அது என்ன பரிகாரம்? நான் ரெடி. செய்றேன்'' கெஞ்சினான் மன்றோ. '' பெருமாளோட வெண்பொங்கல் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். பெருமாளை மனசுக்குள்ள தியானம் பண்ணிண்டு, இதை சாப்டுங்கோ. வந்த வலி தானா போயிடும்” என்றார் அர்ச்சகர். மறுவார்த்தை பேசாமல், மாலவனின் பிரசாதமான வெண்பொங்கலை வாங்கி, கண்களை மூடி பெருமாளை தியானித்து, அதை உண்ணத் தொடங்கினான் மன்றோ. ஒவ்வொரு கவளமாக வெண் பொங்கலை சாப்பிட்ட மன்றோவின் வயிற்று வலியும், குத்தல் வலியும் ஆச்சர்யமாக இருந்த இடம் தெரியவில்லை. ஆச்சரியப்பட்டார் மன்றோ. எங்கள் தேசத்து மருத்துவர்கள் எத்தனையோ வைத்தியம் செய்தும் தீராத இந்த வயிற்று வலி, பொங்கல் பிரசாதத்தால் தீர்ந்தது என்றால், அது உண்மையில் உங்கள் கடவுள் வெங்கடாசலபதி அருளாசிதான்”. நெகிழ்ந்து போய் தன்னைக் குணமாக்கிய இந்த வெண்பொங்கல் பிரசாதம், காலா காலத்துக்கும் பெருமாளுக்கு நடக்க வேண்டும் என்று, வயல்பாடு தாலுகாவில் உள்ள ‘கோடபாயல்’ என்ற கிராமத்தின் வருமானம் முழுவதையும் திருப்பதி பெருமாளுக்கே எழுதி வைத்து உத்தரவு போட்டார் கலெக்டர். அத்துடன், ஒரு பக்தனாகப் திருப்பதிக்கு போய் பிரம்மோத்ஸவம், சகஸ்ர கலசாபிஷேகம் போன்றவற்றை நடத்தி, பெருமாளை வணங்கிப் பேறு பெற்றார். கோடபாயல் கிராமத்தின் வருவாயில் இருந்து எழுதி வைக்கப்பட்ட அந்த வெண் பொங்கல் பிரசாதம், இன்றைக்கும் திருப்பதி ஆலயத்தில் நண்பகல் வழிபாட்டுக்குப் பிறகு நடந்து வருகிறதாம். அந்தக் கட்டளை ‘மன்றோ பிரபு கங்காளம்’ என்றே அழைக்கபடுகிறது. ஸ்ரீ வேங்கடவ உன் திருவடிகளே சரணம்💐🌹🙏 *ஸ்ரீ தாயார் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!*🌹
RamaswamyAnnamali
726 views
6 months ago
#பத்திஸ்டேட்ஸ் #🙏ஆன்மீகம் #புரட்டாசி *புரட்டாசி மாதம் 29ம் நாள் 15-அக்டோபர்-25 நவமி* *திதி கூடிய* *புதன் கிழமை* புண்ணியம் அருளும் புரட்டாசி பெருமாள் திருமாலை போற்றி வணங்கிடுவோம் வாரீர் பிரளய காலத்தில் ஆலமா மரத்தின் இலைமேல் தன்னந்தனியே சின்னஞ் சிறு பாலகனாய் பள்ளிகொண்டவனே பெருமாளே ஈரேழு உலகங்களையும் உண்டு தன் திருவயிற்றிலே அடக்கியவா, பாற்கடலில் அரவ படுக்கையில் துயில்பவனே பெருமாளே ஈடு சொல்லமுடியாத நீலமேனி அழகும், இரத்தின ஆரமும், முத்து மாலை யும், காண மனம் கொள்ளை போகிறதே பெருமாளே மிக கோபம் ஆணவத்தோடு எதிர்த்து வந்த இரணியனின் குடலைத் தன் நகங்களால் கிழித்த நரசிங்க பெருமாளே முகத்து கரியவாகிப், புடைபரந்து, மிளிர்ந்து, செவ்வரியோடி நீண்ட அப்பெரிய கண்கள் எம்மை பேதமை செய்தனவே பெருமாளே சுழியை உடைய சங்கு, அனல் கக்கும் சக்கரம் தனது கரங்களில் ஏந்தி பச்சை மாமலை போல் காட்சி தருபவனே பெருமாளே இன்னமுதர், குழலழகர், வாயழகர், கண்ணழகர், கொப்பூழில் எழுகமலப் பூவழகர், என பேரழகு கொண்ட பெருமாளே சௌம்ய வார புதன் கிழமையில் சௌம்ய நாராயண ரூபமாக காட்சி தரும் உனை பணிந்து நிற்கும் எனை ரக்ஷ் பெருமாளே 🪷🪷🪷