#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் சிதறல்.
ஆன்றோர்களும் அகண்ட வாழ்வும்.
வானமே நொறுங்கி வீழ்ந்தாலும்..
வையகமே காலடியில் வீழ்ந்தாலும்..
ஆன்றோர் கலங்கியது இல்லை.
தானறிந்த பாதையில் பதற்றமின்றி..
தடம் மாறாமல்..
நிமிர்ந்து நடப்பர்.!
நம் திறன்களை அரித்து..
நமது முன்னேற்றத்திற்குத் தடை விதிக்கும் இயலாமைகளை
வேரறுப்போம்.
உற்சாகத்தை இழந்து விட்டால்..
சோம்பல் முதுகில் ஏறி படுத்துக் கொள்ளும்!
அறியாமையைச் சொல்லியே
காலம் கடத்தி விட்டோம்.
ஆன்றோர்
அவசரப்படுவதில்லை; நிதானித்து வாழ்வர்.
கோபமும் பகையும்
விதியாடும் சதுரங்கத்தின்
விந்தைக் கணங்களே.!
சினத்தை அகற்றுங்கள்..
சினம் நம்மை வலுவிழக்கச் செய்யும்!
எரிகின்ற பெருங்காட்டில் ஈரமான சிறுவிறகு எரியாமல் தனியே நின்றிடுமோ..?பாட்டிகள் அடிக்கடி பயன்படுத்தும் பழமொழி.
கோபத்தினால் எல்லாவற்றையும்
இழந்தே விடுகிறோம். 😊😊😊