ஆந்தை அப்டேட்

ஆந்தை ரிப்போர்ட்டர்
490 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
🦉🌟 Daily Fresh • Positive • Rare News 🦉✨ 📢 Only Good Vibes from Aanthai Reporter 💛 🚫 No Politics ❌ 🚫 No Violence ❌ ✅ Only Uplifting Stories ✅ Inspiring Insights ✅ Smiles & Hope 😊🌈 📰 தினமும் நல்ல செய்தி மட்டும்! 💡 மனசுக்கு நல்லது • மனசுக்கு தெம்பு • மனசுக்கு சிரிப்பு 😄 Follow 👉 https://x.com/aanthaireporter @aanthaireporter Stay Positive. Stay Informed. Stay Happy 💫 #PositiveNews 💙 #GoodVibesOnly 🌿 #AanthaiReporter 🦉 #DailyDose 😊 #ஆந்தை அப்டேட்
ஆந்தை ரிப்போர்ட்டர்
4.3K காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த ஒரு துறவியிடம் நியூயார்க் பத்திரிக்கையாளர் ஒருவா் பேட்டி எடுப்பதாக இருந்தது. திட்டமிட்டபடி பத்திரிக்கை நிரூபர் பேட்டியை ஆரம்பித்தார் *நிருபர்* : ஐயா உங்களுடைய முந்தய சொற்பொழிவில் "தொடர்பு" மற்றும் "இணைப்பு" என்பது பற்றி பேசினீர்கள், அது உண்மையிலேயே மிகவும் குழப்பமாக இருந்தது. சற்று விளக்கி சொல்ல முடியுமா? என்றார். துறவி முன்முறுவலோடு நிரூபர் கேட்ட கேள்வியிலிருந்து விஷயத்தை  திசைதிருப்புகின்ற விதமாக, அந்த நிரூபரிடம் கேள்வி கேட்டார், நீங்கள் நியூயார்கில்தான் வசிக்கிறீர்களா?  *நிரூபர்* : ஆம்.  *துறவி* : வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? இந்த துறவி  என் சொந்த வாழ்வைப் பற்றியும், தேவையற்ற கேள்விகளையும் கேட்டு தன்னுடைய கேள்விக்கு பதில் தருவதை தவிர்க்க முயற்சிக்கிறார், என்று நிரூபா் நினைத்தார், இருந்தாலும் துறவியின் கேள்விக்கு "என் தாயார் இறந்து விட்டார், தந்தையார் இருக்கிறார், மூன்று சகோதரா்கள் மற்றும் ஒரு சகோதரி இருக்கிறார், அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று பதிலளித்தார் துறவி, முகத்திலே புன்னகையுடன், நீங்கள் உங்கள் தந்தையுடன் பேசுகிறீா்களா? என்று மீண்டும் கேட்டார் இப்போது நி்ரூபா் சற்று எரிச்சலடைந்துவிட்டார்.... *துறவி* : கடைசியாக எப்போது அவரிடம் பேசினீா்கள்? *நிருபர்* : எரிச்சலை அடக்கிக்கொண்டு, "ஒரு மாதத்திற்கு முன்பு இருக்கலாம்" என்றார். *துறவி* :உங்களுடைய சகோதர சகோதரிகளை அடிக்கடி சந்திப்பதுண்டா?  குடும்பமாக சந்தித்தது கடைசியாக எப்போது? என்றார்.இப்போது அந்த நிருபரின் நெற்றியில் வியர்வை தெரிந்தது.  இதைப் பார்த்தால் துறவிதான் நிருபரை பேட்டி காண்பது போல இருந்தது.நீண்ட பெருமூச்சுடன் நிரூபர் சொன்னார், "இரண்டு வருடங்களுக்கு முன் கிருஸ்துமஸ் சமயத்தில் சந்தித்தோம்" என்று. *துறவி* : எல்லோரும் சேர்ந்து எத்தனை நாட்கள் இருந்தீர்கள்? புருவத்தின் மீது வடிந்த வியர்வையை துடைத்தவாறே நிரூபர் "மூன்று நாள்" என்றார். *துறவி* :உங்களுடைய அப்பாவின் அருகில் அமர்ந்து, அவரோடு  எவ்வளவு நேரம் கழித்தீர்கள்? இப்போது நிருபர் பதட்டத்துடனும் சங்கடத்துடனும் ஒரு  காகிதத்தில் ஏதோ கிறுக்க ஆரம்பித்தார்..... *துறவி* : எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவை சாப்பிட்டீர்களா? அம்மா இறந்த பிறகு நாட்களை எப்படி கழிக்கிறீர்கள் என்று அப்பாவிடம் கேட்டீர்களா? இப்போது நிருபரின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் கீழே விழத் தொடங்கியது. துறவி அந்த நிரூபரின் கைகளை பற்றியவாறு கூறினார், "சங்கடப்படாதீர்கள், மனம் உடைந்து போகாதீர்கள், கவலையும் கொள்ளாதீர்கள். தெரியாமல் உங்கள் மனதை நான் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னியுங்கள்.......ஆனால் இதுதான் நீங்கள் "தொடர்பு மற்றும் இணைப்பு" பற்றி கேட்ட கேள்விக்கான பதில். நீங்கள் உங்களுடைய அப்பாவுடன் தொடர்பில் இருக்கிறீர்கள் ஆனால் அவரோடு நீங்கள் இணைப்பில் இல்லை. நீங்கள் அவரோடு இணைக்கப்படவில்லை. *இணைப்பு என்பது இதயத்துக்கும் இதயத்துக்கும் இடையே இருப்பது.......* ஒன்றாய் அமர்ந்து, உணவை பகிர்ந்து, ஒருவர்மீது ஒருவர் அக்கரை கொண்டு, தொட்டுக்கொண்டு, கைகுலுக்கி, கண்களை நேருக்கு நேர் பார்த்து, ஒன்றாய் சேர்ந்து , நேரத்தை செலவிடுவதுதான் இணைப்பு(connection). ......நீங்கள், உங்கள் சகோதர சகோதரிகளுடன் தொடர்பில்(contact) இருக்கிறீர்கள் ஆனால் நீங்கள் யாரும் இணைப்பில் இல்லை என்றார். இப்போது நிருபர் கண்களை துடைத்துக்கொண்டு, "எனக்கு அருமையான மற்றும் மறக்க முடியாத பாடத்தை சொல்லித் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா" என்றார். இதுதான் இன்றைய வாழ்வின் நிஜமாக இருக்கிறது. வீட்டில் ஆகட்டும் அல்லது சமுதாயத்தில் ஆகட்டும் ஒவ்வொருவரும் நிறைய தொடர்பை வைத்திருக்கின்றனர் ஆனால் இணைப்பில் இருப்பதில்லை. எல்லோருமே அவரவர் சொந்த உலகில் மிகவும் பரபரப்பாக இருக்கின்றனர்...... நாம் இதுபோல வெறும் "தொடா்பை" பராமரிக்காமல்,  "இணைப்பில்" வாழ்வோமாக.  நம்முடைய அன்புக்கு உரிய அனைவரோடும் அக்கரையோடும், அன்பை பகிா்ந்துகொள்வதற்காக நேரத்தை செலவழித்தும் வாழ்வோமாக.               ****** அந்தத் துறவி வேறு யாருமல்ல, ஸ்வாமி விவேகானந்தா்தான் அவா். #ஆந்தை அப்டேட்
ஆந்தை ரிப்போர்ட்டர்
601 காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
*#இன்றைய_பஞ்சாங்கம்**#விசுவாவசு_ஆண்டு*மார்கழி-181,#நாள்:வெள்ளிக்கிழமை(02-01-2026)2,*#நட்சத்திரம்*:மிருகசீரிஷம் இரவு 08:16 வரை பின்பு திருவாதிரை.3,*#திதி*:சதுர்தசி மாலை 06:43 வரை பின்பு பௌர்ணமி.4,*#யோகம்*:சித்த-யோகம்.5,*#கர்ணம்*:வணிசை மாலை 06:43 வரை பின்பு பத்திரை.*#நாமயோகம்*: சுப்பிரம் மதியம் 01:14 வரை பின்பு பிராம்யம்.ஜீவன்-1நேத்திரம்- 2நல்ல நேரம்09:30 - 10:30 கா / AM04:30 - 05:30 மா / PMகௌரி நல்ல நேரம்12:30 - 01:30 கா / காலை06:30 - 07:30 மா / மாலை.சுகம் காலை 06:35 - காலை 07:59சோரம் காலை 07:59 - காலை 09:24உதி காலை 09:24 - காலை 10:48விஷம் காலை 10:48 - மதியம் 12:12அம்ரிதா மதியம் 12:12 - மதியம் 13:37ரோகம் பிற்பகல் 13:37 - பிற்பகல் 15:01லாபம் பிற்பகல் 15:01 - 16:25தனம் மாலை 16:25 - மாலை 17:50.*#சூலம்* :மேற்குபரிகாரம்-வெல்லம்*#சந்திராஷ்டமம்*விசாகம் +அனுஷம்*#நாள்* சம நோக்கு நாள்*#லக்னம்* தனுர் லக்னம் இருப்பு நாழிகை 02 வினாடி 23.*#சுபகாரியம்*:ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்.*#சூரிய_உதயம்* - காலை 6:35 மணி*#சூரிய_அஸ்தமனம்* - மாலை 5:50 மணி.*#சந்திர_உதயம்* - ஜனவரி 02 மாலை 4:47.*#சந்திர_அஸ்தமனம்* - ஜனவரி 03 காலை 6:18.*#ராகுகாலம்* - 10:48 AM - 12:12 PM*#யமகண்டம்* - 3:01 PM - 4:25 PM*#குளிகை* - காலை 7:59 – காலை 9:24.*#துர்முஹூர்த்தம்* - 08:50 AM - 09:35 AM, 12:35 PM - 01:20 PM.*#வாஜ்யம்* - 03:33 AM - 04:59 AM.மங்களகரமான காலம்*#அபிஜித்_முஹூர்த்தம்* - 11:50 AM - 12:35 PM.*#அமிர்த_காலம்* - 12:15 PM - 01:40 PM.*#பிரம்ம_முகூர்த்தம்* - 04:59 AM – 05:47 AM.ஆனந்தாதி யோகம்மானசா வரை - இரவு 08:04 மணிபத்மா.சூரிய ராசிதனுசில் சூரியன் (தனுசு)சந்திர ராசிசந்திரன் ரிஷபம் ராசியின் வழியாக ஜனவரி 02, 08:25 AM வரை மிதுனம் ராசிக்குள் நுழைகிறார்.சந்திர மாதம்/ஆண்டுஅமந்தா - பௌசாபூர்ணிமந்தா - பௌசாவிக்ரம் ஆண்டு - 2082, கலாயுக்திஷாகா ஆண்டு - 1947, விசுவசுவாசாகா ஆண்டு (தேசிய நாட்காட்டி) - பௌசா 12, 1947.அக்னிவாசா - ஆகாஷா (சொர்க்கம்) வரை 06:53 PM பாதலா (நாதிர்)சந்திர வாசா - தெற்கு காலை 09:25 மணி வரை மேற்குராகுகால வாசம் - தென்கிழக்கு.​______________________________கணிதவியலாளர் எஸ் ஆர் ஸ்ரீனிவாச வரதன் பிறந்த தினம்.விடுதலை போராட்ட வீரர் லட்சுமண ஐயர் நினைவு தினம்._______________________________*#இன்றைய_ராசிபலன்கள்*(02-01-2026 வெள்ளிக்கிழமை)💐மேஷம்மேஷ ராசி நண்பர்களே, குடும்ப அந்தஸ்து உயரும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். தன விரையங்கள் உண்டாகும்.பணவரவு தாமதப்படும். தேவையின்றி கடன் வாங்குவதும் கொடுப்பதும் கூடாது. உத்யோகத்தில் நற் பெயர் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.💐ரிஷபம்ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் ஆலோசனை வரவேற்கப்படும். அடுத்தவர்கள் மனம் நோகும் படி பேச வேண்டாம்.யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள்.சுற்று வட்டாரத்தில் பொறுமை அவசியம். உணவுக்கட்டுப்பாடு மிக அவசியம்.தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.💐மிதுனம்மிதுன ராசி நண்பர்களே, எதிர்பார்ப்புகள் சீக்கிரத்தில் நிறைவேறும். பிரியமானவர்கள் பாசமழைப் பொழிவர். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள் இரவு நேர வாகன பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.💐கடகம்கடக ராசி நண்பர்களே, திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும். தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். வண்டி வாகன யோகம் உண்டு . கணவன் மனைவிக்குள் விவாதம் வந்துப் போகும். உத்யோகத்தில் யாரையும் திருப்திப்படுத்த நினைக்காதீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.💐சிம்மம்சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தின் ஆதரவை பெற முடியும். அடுத்தவருக்கு உதவும் எண்ணம் இருக்கும். தான தரும காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உத்யோத்தில் வேலைச்சுமை குறையும்.தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.💐கன்னிகன்னி ராசி நண்பர்களே, யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.முன் கோபத்தை தவிற்க்கவும். கணவன் மனைவிக்குள் தேவையற்ற வாக்கு வாதங்கள் உருவாகும். மன அமைதிக்காக தியானம் செய்வது நல்லது. சேமிப்பில் கவனம் செலுத்தவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.💐துலாம்துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் சந்தோஷமான நிலை உருவாகும்.ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். உறவினர்களிடமிருந்து நற்செய்தி கிடைக்கும்.எதிர்மறை எண்ணங்களை மனதில் இருந்து நீக்கவும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.மதியம் 02:15 வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது💐விருச்சிகம்விருச்சிக ராசி நண்பர்களே, பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். கணவன் மனைவிக்குள் நட்பு மலரும்.வீண் கோபம், மன உளைச்சல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. எதிர்ப்புகள் அடங்கும். உத்யோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.மதியம் 02:16 மணிமுதல் சந்திராஷ்டமம் தொடங்குகிறது.💐தனுசுதனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தின் மீது அக்கறையும், பாசமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் நன்மைகள் உண்டு மருத்துவ சிலவுகள் குறையும்.எதிரிகள் அடிபணிந்து போவர். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பதவிகள் தேடி வரும்.தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.💐மகரம்மகர ராசி நண்பர்களே, குடும்ப பொருளாதார நிலை உயரும். எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல் ஒருவர் அறிமுகமாவர். புது நட்பு வட்டாரம் உருவாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.இன்று மனக்குழப்பங்கள் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகள் வழங்காதீர்.💐கும்பம்கும்ப ராசி நண்பர்களே, எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. யாரையும் விமர்சித்து பேச வேண்டாம்.மறைமுக எதிர்ப்புகள் வரும் .உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பழகுவர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.💐மீனம்மீன ராசி நண்பர்களே, குடும்ப செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வீண் விரைங்கள் உண்டாகும்.மனம் தெளிவு பெறும்.ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். சொந்த விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். உத்யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரும்.தொழில் வியாபாரத்தில் மந்தநிலை நீடிக்கும்.🥀ஆந்தையார் 🥀 #ஆந்தை அப்டேட்