தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்

alxstma
608 views
4 days ago
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவனான என் அன்பு வேண்டுகோள்: 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் பத்து நாட்களே உள்ளன. செல்லும் இடம் எங்கும் கழக உடன்பிறப்புகளின் எழுச்சியைக் காண்கிறேன். தமிழ்நாட்டு மக்களிடம் மகிழ்ச்சியைக் காண்கிறேன். ஐந்து ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் ஒவ்வொன்றும் மக்களுக்குத் தந்திருக்கக் கூடிய பயனும், தொடரவிருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நாம் நிறைவேற்றவிருக்கும் சாதனைத் திட்டங்களின் மீதான மக்களின் எதிர்பார்ப்பும் அனைத்து தொகுதிகளிலும் வெளிப்படுகிறது. தேர்தல் களத்தில் திமுக தொண்டர்களின் பணி என்பது எதிரிகளாலும் வியந்து பார்க்கக் கூடியது என்பதே நம் வரலாறு. கடந்த ஓராண்டுக்கு மேலாக தமிழ்நாட்டில் உள்ள 75,000 பாகங்களிலும் கழக உடன்பிறப்புகள் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வந்திருக்கிறார்கள். மக்களுடனான நம் உறவு எப்போதும் தொடர வேண்டும். குறிப்பாக இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாக உடன்பிறப்புகள் களப்பணி ஆற்ற வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகளை வழங்கி வாக்குகளைச் சேகரிப்பதில் முழுமையான கவனம் செலுத்துவதுடன், கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளிலும் உங்களில் ஒருவனான நானே நிற்கிறேன் என்ற எண்ணத்துடன் களப்பணியாற்றி வெற்றியை உறுதி செய்ய வேண்டும். 92 வயது நிறைந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள் கடும் வெயிலிலும் பரப்புரை செய்கிறார். அகவை 80-ஐ தாண்டிய அண்ணன் சிதம்பரமும், அண்ணன் வைகோவும் மூலைமுடுக்கெல்லாம் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதன் அருமையை விளக்கி வருகின்றனர். 87 வயதான நம் கழகப் பொதுச் செயலாளர் அன்பு அண்ணன் துரைமுருகன் அவர்களும், 28 வயதே ஆன அவிநாசி கழக வேட்பாளர் டாக்டர் கோகிலாமணியும் பம்பரமாகக் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உறுதுணையாக கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் பணியாற்றி வருகிறார்கள். உடன்பிறப்புகளான உங்களின் உழைப்பின் மீது உள்ள நம்பிக்கையில் உறுதியுடன் சொல்கிறேன், இந்த தேர்தல் களத்தில் நாம்தான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். இதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டு பெண்கள் முகத்தில் வெளிப்படும் மலர்ச்சியும், இளைஞர்களின் மனதில் உள்ள நம்பிக்கையும், சிறுபான்மைச் சமுதாயத்தினர் உள்ளிட்ட அனைத்து மக்களின் ஆதரவும் நமது வெற்றிக்கு அடித்தளமாக உள்ளன. வாக்குப்பதிவு நாளில் அதை வெற்றியாகக் கட்டி எழுப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. முற்றிய நெற்கதிரைக் கவனமாக அறுவடை செய்வதுதான் தேர்தல் களப்பணி என நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறார். அதைத்தான் உங்களில் ஒருவனான நானும் மீண்டும் நினைவுபடுத்துகிறேன். ஒவ்வொரு வாக்கும் மிகவும் முக்கியம். 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்பதை உறுதி செய்யும் உழைப்பை உடன்பிறப்புகள் வழங்கினால் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிதான். அதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். ஒற்றுமையாகவும் ஒருங்கிணைப்புடனும் உடன்பிறப்புகள் ஓயாது உழைக்கிறார்கள் என்ற செய்தி என் காதுக்கு வரும்போது எல்லாம் நான் உற்சாகத்துடன் உங்களை மிஞ்சும் உழைப்பை வழங்கும் ஆற்றலைப் பெறுகிறேன். கொளுத்தும் வெயிலையும், கோடை மழையையும் பொருட்படுத்தாமல் களத்தில் பணியாற்றுகின்ற உடன்பிறப்புகளுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சலிக்காமல் உழைப்பதில் நம் உடன்பிறப்புகளுக்கு நிகர் யாருமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கின்ற உங்கள் உழைப்பினால், தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து நீங்கள் ஒற்றுமையாக ஆற்றுகின்ற பணியினால், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியை உறுதி செய்து, இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சியை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் அமைத்துக் காட்டினார்கள் என்ற பெருமையை விட உங்களில் ஒருவனான எனக்கு வேறென்ன வேண்டும்! #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் #💪தி.மு.க
alxstma
700 views
8 days ago
#தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் #💪தி.மு.க"வாக்காளர்களுக்கு ரூ.1,000 அண்ணாமலை கிட்ட இத கேட்டு சொல்லுங்க"- செந்தில்பாலாஜி எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பதால் தான் அண்ணாமலை எங்கு இருக்க வேண்டுமோ அங்கு தான் இருக்கிறார் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட காந்திபுரம் வி கே கே மேனன் சாலையில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வி கே கே மேனன் சாலையிலிருந்து சித்தாபுதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு நடந்து சென்றேன் வாக்குகளை சேகரித்த செந்தில் பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, "2021 தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு அண்ணாமலை ரூ.1000 கொடுத்தாரா? என நீண்ட நாட்களாக கேட்டு வருகிறேன். இதுவரை பதில் இல்லை. இப்போது நாமும் கேட்பதில்லை. 2021 தேர்தலில் அரவக்குறிச்சியில் பணம் கொடுத்தாரா? இல்லை? நேர்மையான அரசியல்வாதி எனக் கூறும் அவர் பதில் சொல்லட்டும். தேர்தலில் சுயட்சை வேட்பாளர்கள் போட்டியிடுவது அவரவர் விருப்பம் இதில் அரசியல் கட்சி பங்கு என்ன உள்ளது?. என்னுடன் வந்தவர்களில் கரூரை சேர்ந்த 10 பேரை காட்டுங்கள். நாடாளுமன்ற தேர்தலின் போது கோவையில் அவருடன் பணியாற்றிவர்கள், அவர் அமைத்த "வார் ரூமில்" இருந்தவர்கள் கோவையை சேர்ந்தவர்களா? அனைத்திற்கு ஒரு அளவு உள்ளது. நேரலையில் காட்டுவதால் எதை வேண்டுமானாலும் பேசலாமா? இதனால் தான் அவர் எங்க இருக்க வேண்டுமோ அங்கு இருக்கிறார். சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு கடைசியாக தான் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று முதல் பிரச்சாரம் துவங்கியுள்ளனர். விரைவில் செயல் வீரர் கூட்டம் நடைபெற உள்ளது. மக்களிடம் வாக்கு கேட்க வரும் பாஜக கூட்டணி வேட்பாளர் ஒன்றிய அரசு கோவைக்கு கொடுத்த திட்டங்களை சொல்லி வாக்கு கேட்க வேண்டும். எதுவும் செய்யாமல் மெட்ரோ திட்டத்தையும் புறக்கணித்தவர்கள், கோவை வளர்ச்சியில் என்ன அக்கறை செலுத்த போகிறார்கள். பாஜக அரசு அமைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் கோவைக்கு என்ன செய்தார்கள்? கோவையில் வளர்ச்சி திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் அந்த அளவிற்கு முதல்வர் கொடுத்துள்ளார். திராவிட மாடல் அரசு கோவைக்கு செம்மொழி பூங்கா, பெரியார் நூலகம், ஜி.டி.நாயுடு மேம்பாலம், மேற்கு புறவழிசாலை, ஹாக்கி மைதானம், என திட்டங்களை அடுக்கி சொல்கிறேன். அண்ணாமலை பட்டியலிட்ட ஒரு திட்டத்தையாவது சொல்லுங்கள். மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளுக்கு மெட்ரோ கொடுத்த அரசுக்கு கோவை, மதுரைக்கு கொடுப்பதில் என்ன பிரச்சனை. இங்கு மக்கள் பயணிக்க கூடாதா? இதுவரை 5 தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளேன். இது 6 வது தேர்தல் எதிர் கட்சி வேட்பாளர் அல்லது கட்சியை விமர்சித்து வாக்கு கேட்டது இல்லை. நாங்கள் என்ன செய்வோம், என்ன செய்துள்ளோம் என சொல்லி தான் வாக்கு கேட்பேன். அது மக்களிடையே நம்பிக்கை உருவாக்கும், தனிப்பட்ட விமர்சனம் என்னிடம் இருக்காது" என்றார். #தெரிந்துகொள்வோம் #
alxstma
661 views
11 days ago
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? விஜயகாந்த் என்ற ஆளுமையின் நிழலில் இருந்து வெளியே வந்து, இன்று தேமுதிகவின் கேப்டனாகவே கிட்டத்தட்ட பிரேமலதா விஜயகாந்த் உருவெடுத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க கூட்டணியில் பிரேமலதாவின் வருகை திமுக கூட்டணிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக, கடந்த மூன்று நாட்களாக சென்னையில் அவர் மேற்கொண்ட சூறாவளிப் பிரச்சாரம், அறிவாலய வட்டாரங்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையை சுழற்றியடித்த பிரச்சாரப் புயல் தனது கட்சி வேட்பாளர்களுக்காக மட்டும் உழைக்காமல், 'கூட்டணி தர்மம்' காப்பதில் பிரேமலதா காட்டும் வேகம் வியப்பாக உள்ளது. வட சென்னை முதல் தென் சென்னை வரை, தி.மு.க வேட்பாளர்களுக்காக அவர் மைக்கை பிடிக்கும்போது தொண்டர்களிடையே ஒரு புது உற்சாகம் பற்றிக்கொள்கிறது. தொடக்கத்தில் தி.மு.க. கூட்டணியில் தேமுதிக இணைந்தபோது, 10 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினர் பதவி என்பது "அதிகப்படியான தாராளம்" என்றும், தேமுதிகவின் தற்போதைய வாக்கு வங்கிக்கு இது மிதமிஞ்சிய ஒதுக்கீடு என்றும் அரசியல் விமர்சகர்கள் முணுமுணுத்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரேமலதா மேற்கொண்ட அனல் பறக்கும் பிரச்சாரம் அந்த விமர்சனங்களை தவிடு பொடியாக்கியுள்ளது. கூட்டணி வேட்பாளர்களுக்காக அவர் காட்டும் அர்ப்பணிப்பு.. குறிப்பாகப் பெண்களிடம் அவருக்குக் கிடைக்கும் பெரும் வரவேற்பும், தி.மு.க. தலைமை எடுத்த முடிவு ஒரு "மாஸ்டர் ஸ்ட்ரோக்" என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது. வெறும் இடங்களைப் பெற்றதோடு நின்றுவிடாமல், கூட்டணிக் கட்சிகளுக்கான வெற்றியை உறுதி செய்யும் ஒரு சக்தியாக மாறி, தான் ஒரு "மேக்னட்" என்பதை பிரேமலதா நிரூபித்து வருகிறார். "கேப்டன் வழியில் வந்தவர்கள் நாங்கள்... சொன்னால் சொன்னபடி செய்வோம்!" என்ற பாணியில் அவர் பேசும் பேச்சுகள், கூட்டத்தில் அமர்ந்திருக்கும் சாமானிய மக்களை எளிதில் சென்றடைகிறது. பெண்கள் ஆதரவு: ஒரு சைலண்ட் புரட்சி பிரேமலதாவின் பிரச்சாரக் கூட்டங்களில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் - பெண்களின் வருகை. குடும்பத் தலைவிகளிடம் அவர் உரையாடும் விதம், அவர்களின் அன்றாடப் பிரச்சனைகளைத் தொட்டுப் பேசுவது எனப் பெண்களின் 'வோட் பேங்க்'கைக் கவரும் வித்தையை அவர் நன்கு அறிந்து வைத்துள்ளார். தி.மு.க-வின் நலத்திட்டங்களையும், தேமுதிகவின் உறுதியையும் இணைத்து அவர் முன்வைக்கும் வாதங்கள் அடிமட்ட அளவில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கிரவுண்ட் ஒர்க்: பக்கா பிளான்! வெறும் மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல், களப்பணிகளிலும் தேமுதிகவினர் காட்டும் தீவிரம் தி.மு.க நிர்வாகிகளையே வியக்க வைத்துள்ளது. பூத் கமிட்டி வேலைகள் முதல் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது வரை, தி.மு.க மற்றும் தேமுதிக தொண்டர்கள் இடையே ஒரு சுமூகமான ஒருங்கிணைப்பு தெரிகிறது. இந்தத் தேர்தலில் பிரேமலதா ஒரு 'மேக்னட்' போலச் செயல்படுகிறார். கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும், அதே சமயம் மக்களிடம் ஒரு நம்பிக்கையை விதைப்பதிலும் அவர் வெற்றி பெற்று வருகிறார். தி.மு.க கூட்டணிக்குத் தேமுதிக ஒரு பலமான சேர்க்கை என்பதைத் தனது உழைப்பால் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் பிரேமலதா. கேப்டன் இல்லாத முதல் பெரிய தேர்தல் களம் இது என்றாலும், அந்தப் பொறுப்பைத் தோளில் சுமந்து செயல்படுகிறார் 'பிரேமலதா'. இந்த உழைப்பு வாக்கு எண்ணிக்கையில் எதிரொலிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்! #💪தி.மு.க #தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் #தெரிந்துகொள்வோம் #