[26/07, 4:18 pm] +91 95665 31860: *🙏🕉️நந்தி தேவனுக்கு பாலில் அபிஷேகம் செய்தால் உடல்நலம் மேம்படும். நீண்ட ஆயுள் கிடைக்கும். சந்தனத்தில் அபிஷேகம் செய்ய அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கும்,* *அதிகாரமும் உள்ள பதவி கிடைக்கும். மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்தால் திருமணத் தடைப்பட்டு இருப்போருக்கு விரைவில் திருமணம் நிச்சயம் ஆகும். நந்திக்கு பச்சரிசி மாவில் அபிஷேகம் செய்ய கடன் தொல்லை நீங்கும். தீராத வியாதிகள் தீரும், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு பாக்கியம் கிடைக்கும். பன்னீர் அபிஷேகம் செய்தால் நாக தோஷம் நீங்கும். சஞ்சலமான மனம் அமைதியடையும். மகிழ்ச்சி பெறுகும். குடும்ப வாழ்க்கை சிறக்கும். இளநீர் அபிஷேகம் செய்தால் குடும்பப் பிரச்னையால் இழந்த சொத்துக்கள் திரும்பக் கிடைக்கும். நீண்ட நாட்கள் இழுவையில் இருந்த வழக்குகளில் வெற்றி பெறலாம். வாசனை திரவிய அபிஷேகத்தால் சொந்த வீடு கட்டும் பாக்கியம் கிடைக்கும். நந்திக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் உயர்வான கல்வி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.🙇♂️🤲🕉️🙏*
*🙏🕉️🙇♂️பிரதோஷ நந்தி 108 போற்றி🙇♂️🕉️🙏*
*🙏🕉️🙇♂️ஓம் அன்பின் வடிவே போற்றி*
*ஓம் அறத்தின் உருவே போற்றி*
*ஓம் அகிலத்தைக் காப்பாய் போற்றி*
*ஓம் அரனுக்குக் காவலனே போற்றி*
*ஓம் அரியாய்வந்து அமர்ந்தவனே போற்றி*
*ஓம் அம்பலக் கூத்தனே போற்றி*
*ஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றி*
*ஓம் இருளை ஒழிப்பவனே போற்றி*
*ஓம் இடபமே போற்றி*
*🙏🙇♂️ஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி*
*ஓம் இகாபரசுகம் அளிப்பவனே போற்றி*
*ஓம் ஈகை உடையவனே போற்றி*
*ஓம் உலக ரட்சகனே போற்றி*
*ஓம் உபதேச காரணனே போற்றி*
*ஓம் ஊக்க முடையவனே போற்றி*
*ஓம் எருது உருவம் கொண்டவனே போற்றி*
*ஓம் எங்களுக்கு வரம் தருபவனே போற்றி*
*ஓம் ஏவல்களை ஒழித்தவனே போற்றி*
*ஓம் ஐயன் பால் அமர்ந்த வனே போற்றி*
*ஓம் ஒப்பில்லாதவனே போற்றி*
*ஓம் ஓங்கார வடிவானவனே போற்றி*
*ஓம் ஒளடதமாய் இருப்பவனே போற்றி*
*ஓம் கணநாயகனே போற்றி*
*ஓம் கஷ்டங்களைப் போக்குவாய் போற்றி*
*ஓம் கல்யாண மங்களமே போற்றி*
*ஓம் கலைகள் பலதெரிந்தோய் போற்றி*
*🙏🙇♂️ஓம் கற்பகத் தருநிழல் அமர்ந்தாய் போற்றி*
*ஓம் கஸ்தூரி நிறம் ஒளி அணிந்தாய் போற்றி*
*ஓம் கவலைகளை ஒழிக்கும் வல்லவனே போற்றி*
*ஓம் காலனுக்கும் காவலனே போற்றி*
*ஓம் கிரிவல்லயன் துணையே போற்றி*
*ஓம் கீர்த்திகள் பல பெற்றாய் போற்றி*
*ஓம் குணநிதியே போற்றி*
*ஓம் குற்றம் களைவாய் போற்றி*
*ஓம் கூத்தனுக்கு மத்தளம் அடித்தாய் போற்றி*
*ஓம் கோலங்கள் பல செய்வாய் போற்றி*
*ஓம் கைலாச வாகனனே போற்றி*
*ஓம் கந்தனைக் கையால் அமர்த்தினாய் போற்றி*
*ஓம் காலமெல்லாம் ஈசன் சிந்தனையே போற்றி*
*ஓம் பஞ்சாக்ஷர ஜெபம் செய்பவனே போற்றி*
*ஓம் பஞ்சலிங்கத்தில் ஒருவன் ஆனாய் போற்றி*
*ஓம் பரமசிவன் தன்மை தெரிந்தோய் போற்றி*
*ஓம் பார்வதிக்கும் வாகனமாய் நின்றாய் போற்றி*
*ஓம் பிரதோஷ காலம் உடையவனே போற்றி*
*🙏🙇♂️ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி*
*ஓம் பிஞ்ஞகன் ஏவல் செய்வாய் போற்றி*
*ஓம் புகழ்கள் பல பெற்றோய் போற்றி*
*ஓம் பூத கணங்களுக்குத் தலைவனே போற்றி*
*ஓம் பூத பிசாசுகளை அடக்குவாய் போற்றி*
*ஓம் மகாதேவனே போற்றி*
*ஓம் மகிமை பல செய்வாய் போற்றி*
*ஓம் மஹேஸ்வரன் தூதனே போற்றி*
*ஓம் மங்கள நாயகனே போற்றி*
*ஓம் மதோன் மத்தம் தடுப்பாய் போற்றி*
*ஓம் மஞ்சள் மகிமை கொடுப்பாய் போற்றி*
*ஓம் மணங்கள் செய்காரணனே போற்றி*
*ஓம் மந்திர மகிமை உனக்கே போற்றி*
*ஓம் அகிலமெல்லாம் உன் அருள் போற்றி*
*ஓம் தட்சனுக்கு உபதேசம் செய்தாய் போற்றி*
*ஓம் தண்டங்களின் மேல் அமர்ந்தாய் போற்றி*
*ஓம் தன்மை களெல்லாம் அறிந்தோய் போற்றி*
*ஓம் தயாபரன் அருள் பெற்றவனே போற்றி*
*ஓம் தஞ்ச மென்றவர்க்கருள் செய்வாய் போற்றி*
*🙏🤲ஓம் நஞ்சுண்டவனை நாயகனாய் அடைந்தாய் போற்றி*
*ஓம் நாக நந்தனின் நயனம் தெறிந்தவனே போற்றி*
*ஓம் நாதமும் பிந்துவும் ஆனாய் போற்றி*
*ஓம் பழமும் சுவையும் நீயே போற்றி*
*ஓம் பண்புகள் பல செய்வாய் போற்றி*
*ஓம் பாரெல்லாம் உன்புகழ் போற்றி*
*ஓம் பிறவிப் பிணி அறுப்பாய் போற்றி*
*ஓம் அடியவர்க்கெல்லாம் அன்பே போற்றி*
*ஓம் ஆண்டவனிடம் அன்பு கொண்டாய் போற்றி*
*ஓம் ஆதாரசக்தி மயம் பெற்றாய் போற்றி*
*ஓம் சிவனின் வாகனம் ஆனாய் போற்றி*
*ஓம் இன்னல் தீர்க்கும் இறைவனே போற்றி*
*ஓம் நீண்ட கொம்புடையவனே போற்றி*
*ஓம் நீலாயதாட்சி அருள் பெற்றாய் போற்றி*
*ஓம் நீலகண்டன் முன் நின்றாய் போற்றி*
*ஓம் வேதங்களை காலாய் உடையவனே போற்றி*
*ஓம் வேள்விக்குத் தலைவனே போற்றி*
*🙏🙇♂️ஓம் வித்யா காரணனே போற்றி*
*ஓம் விவேகம் எனக்குத் தருவாய் போற்றி*
*ஓம் விண்ணுலகம் செல்லும் வழியே போற்றி*
*ஓம் வில்வத்தின் மகிமையே போற்றி*
*ஓம் விஸ்வே உன் வல்லமையே போற்றி*
*ஓம் வேல்உடையவனே போற்றி*
*ஓம் மகா காளனே போற்றி*
*ஓம் மக்கள் பேறு தருவாய் போற்றி*
*ஓம் மாயைகளை அகற்றுவாய் போற்றி*
*ஓம் வெள்ளை நிறம் உடையாய் போற்றி*
*ஓம் உலகம் அறிந்த உத்தமனே போற்றி*
*🙏🙇♂️ஓம் உன்மகிமை உலகமெல்லாம் போற்றி*
*ஓம் ஊஞ்சல் ஆட்டுபவனே போற்றி*
*ஓம் ஊடலுக்குதவியனே போற்றி*
*ஓம் உபதேசம் பெற்றவனே போற்றி*
*ஓம் உலகுக்கு அருள்வாய் போற்றி*
*ஓம் பிழைகள் பொறுப்பாய் போற்றி*
*ஓம் பிள்ளையார் சோதரனே போற்றி*
*ஓம் மாயை ஏடுக்கும் மாடாய் நின்றாய் போற்றி*
*ஓம் மாமன்னநம் உன்பனி செய்வார் போற்றி*
*ஓம் மகாதேவன் கருணையே போற்றி*
*ஓம் பரப்பிரம்மமே போற்றி*
*ஓம் விண்ணோர்க்கு அரிய மருந்தே போற்றி*
*ஓம் கண்டனின் வாகனமானாய் போற்றி*
*ஓம் சிவனின் பாதியை சுமந்தாய் போற்றி*
*ஓம் கையிலையின் காவலனே போற்றி*
*ஓம் மக்கள் குறைதீர்ப்பாய் போற்றி*
*ஓம் பிரதோஷ நாயகனே போற்றி போற்றி…💐🌷🌹🙇♂️🤲👣🕉️🙏*
[26/07, 4:18 pm] +91 95665 31860: *🙏🕉️108 சிவன் போற்றி 🕉️🙏*
*🙏🕉️🙇♂️ஓம் அப்பா போற்றி!*
*ஓம் அரனே போற்றி!*
*ஓம் அரசே போற்றி!*
*ஓம் அமுதே போற்றி!*
*ஓம் அழகே போற்றி!*
*ஓம் அத்தா போற்றி!*
*ஓம் அற்புதா போற்றி!*
*ஓம் அறிவா போற்றி!*
*🙏🙇♂️ஓம் அம்பலா போற்றி!*
*ஓம் அரியோய் போற்றி!*
*ஓம் அருந்தவா போற்றி!*
*ஓம் அனுவே போற்றி!*
*ஓம் அன்பா போற்றி!*
*ஓம் ஆதியே போற்றி!*
*ஓம் ஆத்மா போற்றி!*
*ஓம் ஆரமுதே போற்றி!*
*ஓம் ஆரணனே போற்றி!*
*ஓம் ஆண்டவா போற்றி!*
*🙏🙇♂️ஓம் ஆலவாயா போற்றி!*
*ஓம் ஆரூரா போற்றி!*
*ஓம் இறைவா போற்றி!*
*ஓம் இடபா போற்றி!*
*ஓம் இன்பா போற்றி!*
*ஓம் ஈசா போற்றி!*
*ஓம் உடையாய் போற்றி!*
*ஓம் உணர்வே போற்றி!*
*ஓம் உயிரே போற்றி!*
*ஓம் ஊழியே போற்றி!*
*ஓம் எண்ணே போற்றி!*
*ஓம் எழுத்தே போற்றி!*
*🙏🙇♂️ஓம் எண் குணா போற்றி!*
*ஓம் எழிலா போற்றி!*
*ஓம் எளியா போற்றி!*
*ஓம் ஏகா போற்றி!*
*ஓம் ஏழிசையே போற்றி!*
*ஓம் ஏறுர்ந்தாய் போற்றி!*
*ஓம் ஐயா போற்றி!*
*ஓம் ஒருவா போற்றி!*
*ஓம் ஒப்பிலானே போற்றி!*
*ஓம் ஒளியே போற்றி!*
*ஓம் ஓங்காரா போற்றி!*
*ஓம் கடம்பா போற்றி!*
*ஓம் கதிரே போற்றி!*
*🙏🙇♂️ஓம் கதியே போற்றி!*
*ஓம் கனியே போற்றி!*
*ஓம் கலையே போற்றி!*
*ஓம் காருண்யா போற்றி!*
*ஓம் குறியே போற்றி!*
*ஓம் குணமே போற்றி!*
*ஓம் கூத்தா போற்றி!*
*ஓம் கூன்பிறையாய் போற்றி!*
*ஓம் சங்கரா போற்றி!*
*🙏🙇♂️ஓம் சதுரா போற்றி!*
*ஓம் சதாசிவா போற்றி!*
*ஓம் சிவையே போற்றி!*
*ஓம் சிவமே போற்றி!*
*ஓம் சித்தமே போற்றி!*
*ஓம் சீரா போற்றி!*
*ஓம் சுடரே போற்றி!*
*ஓம் சுந்தரா போற்றி!*
*🙏🙇♂️ஓம் செல்வா போற்றி!*
*ஓம் செங்கணா போற்றி!*
*ஓம் சொல்லே போற்றி!*
*ஓம் ஞாயிறே போற்றி!*
*ஓம் ஞானமே போற்றி!*
*ஓம் தமிழே போற்றி!*
*ஓம் தத்துவா போற்றி!*
*ஓம் தலைவா போற்றி!*
*ஓம் தந்தையே போற்றி!*
*🙏🙇♂️ஓம் தாயே போற்றி!*
*ஓம் தாண்டவா போற்றி!*
*ஓம் திங்களே போற்றி!*
*ஓம் திசையே போற்றி!*
*ஓம் திரிசூலா போற்றி!*
*ஓம் துணையே போற்றி!*
*ஓம் தெளிவே போற்றி!*
*ஓம் தேவதேவா போற்றி!*
*ஓம் தோழா போற்றி!*
*🙏🙇♂️ஓம் நமசிவாயா போற்றி!*
*ஓம் நண்பா போற்றி!*
*ஓம் நஞ்சுண்டாய் போற்றி!*
*ஓம் நான்மறையாய் போற்றி!*
*ஓம் நிறைவா போற்றி!*
*ஓம் நினைவே போற்றி!*
*ஓம் நீலகண்டா போற்றி!*
*ஓம் நெறியே போற்றி!*
*ஓம் பண்ணே போற்றி!*
*ஓம் பித்தா போற்றி!🙏*
*🙏🙇♂️ஓம் புனிதா போற்றி!*
*ஓம் புராணா போற்றி!*
*ஓம் பெரியோய் போற்றி!*
*ஓம் பொருளே போற்றி!*
*ஓம் பொங்கரவா போற்றி!*
*ஓம் மதிசூடியே போற்றி!*
*ஓம் மருந்தே போற்றி!*
*ஓம் மலையே போற்றி!*
*🙏🙇♂️ஓம் மனமே போற்றி!*
*ஓம் மணாளா போற்றி!*
*ஓம் மணியே போற்றி!*
*ஓம் மெய்யே போற்றி!*
*ஓம் முகிலே போற்றி!*
*ஓம் முக்தா போற்றி!*
*ஓம் முதல்வா போற்றி!*
*ஓம் வானமே போற்றி!*
*ஓம் வாழ்வே போற்றி!*
*ஓம் வையமே போற்றி!*
*ஓம் விநயனே போற்றி!*
*ஓம் விநாயகனே போற்றி! போற்றி!🌷🌹🙇♂️🤲👣🕉️🙏*
*🙏🕉️🙇♂️தென்னாடுடைய சிவனே போற்றி*
*எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி…🤲🙇♂️🕉️🙏*
[26/07, 4:18 pm] +91 95665 31860: *🙏🕉️நந்தீஸ்வரர் துதி🕉️🙏*
*🙏🕉️🙇♂️சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி*
*சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி*
*கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி*
*கைலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி...!*
*🙏🙇♂️பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி*
*பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி*
*நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி*
*நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி...!*
*🙏🙇♂️செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி*
*சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி*
*மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி*
*மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி...!*
*🙏🤲அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி*
*அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி*
*வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி*
*வணங்குகிறோம் எமைக்காக்க வருக...!🤲🙇♂️🕉️🙏*
*🙏🙇♂️நந்தி பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி*
*பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி*
*வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி*
*வறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி...!🙇♂️🤲🕉️🙏*
*🙏🙇♂️கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி*
*கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி*
*வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி*
*விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி...!🙇♂️🤲🕉️🙏*
*🙏🙇♂️வேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி*
*வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி*
*சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி*
*செவி சாய்த்து அருள் கொடுக்கும் செல்வ நந்தி...!🙇♂️🤲🕉️🙏*
*🙏🙇♂️கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி*
*குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி*
*பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி*
*புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி...!🙇♂️🤲🕉️🙏*
*🙏மேற்கண்ட துதியினை பிரதோஷ வேளைகளில் செபித்து சிவ தரிசனம் கண்டால் நந்தியின் அருளும், சிவபெருமானின் அருளும் ஒருங்கே உண்டாகும்....🙇♂️🤲🕉️🙏*
*🙏🕉️🙇♂️தென்னாடுடைய சிவனே போற்றி…!*
*எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!🤲🙇♂️🕉️🙏*
*🙏🕉️ௐ_நமசிவாய🕉️🙏*
*🙏🕉️சிவாயநம_ௐ🕉️🙏*
[26/07, 4:18 pm] +91 95665 31860: *🙏🕉️ சிவபுராணம் பாடல் வரிகள் 🕉️🙏*
*🙏🕉️மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் –* *முதல் பதிகம் | முழு 95 அடிகள், விளக்கம் & பலன்கள்🕉️🙏*
*📖 நூல்: திருவாசகம் (8-ஆம் திருமுறை)*
*🙏🕉️அருளியவர்: மாணிக்கவாசகர் (திருவாதவூரார்)🕉️🙏*
*📚அருளிய தலம்: 🛕திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)*
*🎵 பண்: கலிவெண்பா*
*📏 அடிகள்: 95 அடிகள்*
*🙏 பயன்: மனக்கவலை நீங்கி, பிறவா நிலை அடைய, சிவன் அருள் பெற*
*🙏🕉️ சிவபுராணம் என்றால் என்ன?*
*🙏சிவபுராணம் என்பது மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் முதல் பதிகம் ஆகும். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகர், திருப்பெருந்துறையில் ஈசனைக் குரு வடிவில் கண்டவுடனேயே கதறி அழுது பாடிய பாடல் இது. 95 அடிகள் கொண்ட கலிவெண்பா வடிவில் அமைந்த இந்தப் பாடல், சைவ சித்தாந்தத்தின் சாரமாகவும், சிவபெருமானின் பெருமையை விளக்கும் மறைநடைப் பாடலாகவும் திகழ்கிறது.🕉️🙏*
*🙏🕉️🙇♂️“திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்று சொல்வார்கள்.* *திருவாசகத்தின் ஒட்டுமொத்த சாரமும், சைவத்தின் கருத்துகள் மொத்தமும் சிவபுராணத்தில் அடங்கி விடுகின்றன என்றே சொல்லலாம்.🙇♂️🤲🕉️🙏*
*✨ மாணிக்கவாசகர் – சிறு வரலாறு*
*மதுரை மாநகரத்திலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில், வாதபூரீசுவரர் என்னும் திருநாமத்தோடு இறைவன் அருளும் தலம் திருவாதவூர். அங்கே இறைவனின் திருவருளால் சைவம் தழைக்கவும், வேத சிவாகம நெறிகள் விளங்கவும் மாணிக்கவாசகர் அவதரித்தார்.*
*🙏சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் எழுதிய இரு பெரும் நூல்கள் — திருவாசகம் (51 பதிகங்கள், 658 பாடல்கள்) மற்றும் திருக்கோவையார். இவை இரண்டும் சிவபெருமானைப் பற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பாகும்.*
*📜 சிவபுராணம் தோன்றிய வரலாறு*
*🙏ஈசனைத் திருப்பெருந்துறையில் குரு வடிவில் கண்டவுடனேயே, மாணிக்கவாசகர் கதறி அழுதுப் பாடிய பாடல் இது என்பதை படிக்கும்போதே உணர்ந்து கொள்ளலாம்.* *இந்தப் பாடலை அழாமல் பாடவோ, கேட்கவோ முடியாது என்பது சத்தியம்.*
*🙏🕉️சிவபெருமானே எழுதிய திருவாசகம்:🕉️🙏*
*🙏ஒரு ஆனி மாதத்தில், ஆயில்யம் நட்சத்திர நாளில், தில்லையில் சிவபெருமான் அந்தணர் தோற்றமெடுத்து மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். “தாங்கள் எழுதிய திருவாசகத்தை நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன்” என்றார்.🕉️🙏*
*🙏மாணிக்கவாசகர் 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்லச் சொல்ல, சிவபெருமானே எழுதிக் கொண்டார்.* *எழுதிய ஓலைச்சுவடிகளை நடராசர் சன்னதி முன்பாக வைத்துவிட்டு மறைந்துவிட்டார்.*
*🙏மறுநாள் தில்லை வாழ் அந்தணர்கள் கடைசி ஓலையில், “மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது” என்ற கையொப்பத்தைக் கண்டனர்.* *மாணிக்கவாசகர், புன்னகையுடன் நடராசப் பெருமானைக் காட்டி* *"இப்பாடல்கள்* *அனைத்துக்கும்* *இவர் தான் பொருள்” என்றார்.* *அப்போது தோன்றிய ஒளியை நோக்கிச் சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்துவிட்டார்.🕉️🙏*
*🎯 சிவபுராணத்தின் நோக்கம்*
*🙏வாழ்க்கையில் முன்செய்த பாவ புண்ணியங்கள் அனைத்தும் தீர்வதற்காக, உள்ளம் மகிழக்கூடிய வகையில் சிவபுராணத்தைக் கூறுகிறேன் என மாணிக்கவாசகரே 19-ஆம், 20-ஆம் அடிகளில் விளக்கியுள்ளார்.🕉️🙏*
*🙏சைவ சித்தாந்தத்தின்படி, உயிர்கள் செய்யும் நன்மை தீமை ஆகிய இரு வினைகளும் மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு காரணமாக அமைகின்றன. இந்த முந்தைய வினைகள் யாவும் ஓய இறைவன் அருள் தேவை என்பதே சிவபுராணத்தின் மையக் கருத்து.🕉️🙏*
*🌟 சிவபுராணம் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்*🙏
*🔸 பிறவித் துன்பம் நீங்கும் — மீண்டும் மீண்டும் பிறக்கும் சுழற்சியிலிருந்து விடுதலை கிடைக்கும்.*
*🔸 மனக்கவலை நீங்கும் — காலையிலும் மாலையிலும் பக்தியுடன் பாராயணம் செய்தால் மனதில் அமைதி பிறக்கும்.*
*🔸 பாவங்கள் தீரும் — முன்செய்த பாவ புண்ணியங்கள் அனைத்தும் தீர்ந்து, இறைவன் அருள் கிடைக்கும்.*
*🔸 ஞானம் பெறலாம் — மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரை உணரலாம்.*
*🔸 சிவபுரம் அடையலாம் — பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபெருமானின் திருவடிகளை அடைவார்கள் என்பது சிவபுராணத்தின் இறுதி அடிகளின் வாக்குறுதி.*
*🔸 மோட்சம் பெறலாம் — பிறப்பற்ற பேரின்ப நிலையை வேண்டுவதே சிவபுராணத்தின் முழுப் பயன்.*
*📿 சிவபுராணம் – முழு பாடல் வரிகள்🕉️🙏*
*🙏திரு மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்தது
சிவனது அனாதி முறைமையான பழமை
(திருப்பெருந்துறையில் அருளியது)
கலிவெண்பா🕉️🙏*
*🙏 🕉️🙇♂️பாயிரம் (திருச்சிற்றம்பலம்)*
*🙏🕉️🙇♂️தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி*
*அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே –* *எல்லை*
*மருவா நெறி* *அளிக்கும் வாதவூர் எங்கோன்*
*திருவாசகம் என்னும் தேன்..🙇♂️🤲🕉️🙏*
*🙏🕉️ சிவபுராணம் பாடல் வரிகள்*
*திருச்சிற்றம்பலம்🕉️🙏*
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க — 5
வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க — 10
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி — 15
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான் — 20
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் — 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் — 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே — 35
வெய்யாய், தணியாய், இயமானன் ஆம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே — 40
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே — 45
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை — 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, — 55
விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் — 60
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் — 65
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே — 70
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் — 75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் — 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று — 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே — 90
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து — 95
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
திருச்சிற்றம்பலம்
📖 சிவபுராணம் – முக்கிய அடிகளின் விளக்கம்
“நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க” (அடி 1)
நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் வாழ்க! நாதனான சிவபெருமானின் திருவடிகள் வாழ்க! — இது சிவபுராணத்தின் தொடக்கமே சிவனின் திருவடிகளைப் போற்றுவதாக அமைகிறது.
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி” (அடி 26-31)
புல்லாகவும், செடியாகவும், புழுவாகவும், மரமாகவும், பல விலங்குகளாகவும், பறவையாகவும், பாம்பாகவும், கல்லாகவும், மனிதராகவும், பேயாகவும், கணங்களாகவும், அசுரராகவும், முனிவராகவும், தேவராகவும் — இத்தனை பிறவிகளிலும் பிறந்து பிறந்து இளைத்தேன் என்கிறார் மாணிக்கவாசகர். இது 84 லட்சம் பிறவிகளின் சுழற்சியை விளக்குகிறது.
“நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே” (அடி 60-61)
நாயை விடக் கடையாய்க் கிடந்த அடியேனுக்கு, தாயை விடச் சிறந்த தயாவுள்ளம் காட்டும் தத்துவமே என்று சிவனின் கருணையை வியக்கிறார். இது சிவபுராணத்தின் மிகவும் உருக்கமான அடி.
“சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார்” (அடி 93-94)
இப்பாடலின் பொருளை உணர்ந்து சொல்பவர்கள், சிவபுரத்தில் (வீடுபேறில்) செல்வர்களாக வாழ்வார்கள் — இதுவே சிவபுராணத்தின் முடிவான வாக்குறுதி.
🙏 சிவபுராணம் பாராயணம் செய்யும் முறை
🔹 எப்போது படிக்கலாம்? — காலை மற்றும் மாலை வேளைகளில் பாராயணம் செய்வது மிகச் சிறந்தது. குறிப்பாக பிரம்ம முகூர்த்தத்தில் (அதிகாலை 4-6 மணி) படிப்பது மிகவும் பலன் தரும்.
🔹 எங்கே படிக்கலாம்? — வீட்டில் பூஜையறையில், சிவன் கோயிலில், அல்லது தூய்மையான இடத்தில் படிக்கலாம்.
🔹 எப்படி படிக்கலாம்? — குளித்து, சிவனை மனதில் நினைத்து, பக்தியுடன் பொருள் உணர்ந்து படிக்க வேண்டும். திருநீறு அணிந்து படிப்பது சிறப்பு.
🔹 சிறப்பு நாட்கள்: — பிரதோஷம், சிவராத்திரி, சோமவாரம் (திங்கள்கிழமை), திருவாதிரை நட்சத்திர நாள் ஆகிய நாட்களில் படிப்பது மிகச் சிறப்பு.
❓ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
கே: சிவபுராணம் யார் எழுதியது?
ப: சிவபுராணம் மாணிக்கவாசகர் (திருவாதவூரார்) அருளியது. இது திருவாசகத்தின் முதல் பதிகம்.
கே: சிவபுராணத்தில் எத்தனை அடிகள் உள்ளன?
ப: சிவபுராணத்தில் 95 அடிகள் உள்ளன. கலிவெண்பா பாடல் வடிவில் அமைந்துள்ளது.
கே: சிவபுராணம் எந்த திருமுறையில் வருகிறது?
ப: சிவபுராணம் 8-ஆம் திருமுறையான திருவாசகத்தின் முதல் பதிகம் (பதிகம் 8.101).
கே: சிவபுராணம் படிப்பதால் என்ன பலன்?
ப: மனக்கவலை நீங்கும், பாவங்கள் தீரும், பிறவா நிலை அடையலாம், மெய் ஞானம் பெறலாம், சிவபுரம் (வீடுபேறு) அடையலாம்.
கே: சிவபுராணம் எப்போது படிக்க வேண்டும்?
ப: காலை மற்றும் மாலை வேளைகளில் படிக்கலாம். பிரதோஷம், சிவராத்திரி, திங்கள்கிழமை, திருவாதிரை நாட்களில் படிப்பது சிறப்பு.
கே: சிவபுராணம் எந்த தலத்தில் அருளப்பட்டது?
ப: திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) என்ற தலத்தில் மாணிக்கவாசகர் அருளியது.
*🙏கே: “புல்லாகிப் பூடாய்” என்ற அடியின் பொருள் என்ன?*
*ப: 84 லட்சம் பிறவிகளின் சுழற்சியை விளக்கும் அடி. புல், செடி, புழு, மரம், விலங்கு, பறவை, பாம்பு, கல், மனிதன், பேய், அசுரர், முனிவர், தேவர் என எல்லா பிறவிகளிலும் பிறந்து இளைத்தேன் என்கிறார் மாணிக்கவாசகர்.🙇♂️🤲🕉️🙏*
*🙏 🕉️🙇♂️தென்னாடுடைய சிவனே போற்றி!🙇♂️🤲🕉️🙏*
*🙏எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!🙇♂️🤲🕉️🙏*
*🙏🕉️சிவபுராணம் பாடல் வரிகளை படித்து, பொருள் உணர்ந்து, சிவபெருமானின் திருவடிகளில் சரணடைவோம்!🙇♂️🤲🕉️🙏*
*🙏🕉️ஓம் நமசிவாய 🕉️🙏*
#பிரதோஷம் #பிரதோஷம் ஸ்டேட்டஸ் #சனி மகா பிரதோஷம் #🙏நந்தி பகவான் 🙏 #ஓம் நந்தி பகவான் நமஹ