தனியார் பேருந்து விபத்து

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
642 views
4 months ago
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம்ஜிஆர் நகர் மேம்பாலத்தில் கொட்டுகாரம்பட்டியில் இருந்து 23 பேரை ஏற்றிக்கொண்டு காலையில் தனியார் ஷூ கம்பெனி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. பேருந்தை கல்லாவியைச் சேர்ந்த மாதேஸ்வரன் (51) ஓட்டினார். பேருந்து ஊத்தங்கரை நாட்டாண் கொட்டாய் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார் முந்த முயன்றது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் ஏரியத் தொடங்கியதும், பேருந்து மீதும் தீ பரவியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது. இதனையடுத்து பேருந்தில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியேறி உயிர் தப்பினர். உடனே இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் எரிந்து சாம்பலாகின. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இருசக்கர வாகனம் அதிவேகத்தில் ஓட்டி வந்தே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. அதிகாலையில் தினமும் ஊத்தங்கரை பகுதியில் பனிமூட்டம் நிலவுவதால் இங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ #பஸ் விபத்து பேருந்து விபத்து
Rekhas
9.9K views
5 months ago
தென்காசி மாவட்டம் இடைக்கால் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இதுவரை 5 பெண்கள் உட்பட 8 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. மேலும் இந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன். தமிழகத்தில் ஏழை, எளிய சாமானிய மக்கள் தான் பேருந்துகளில் அதிகம் பயணிக்கின்றனர் பேருந்துகளில் பயணிக்கின்ற பொதுமக்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது. எட்டு உயிர்களை பறித்துள்ள இரு தனியார் பேருந்துகளையும் அதிவேகமாக இயக்கியதால் தான் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே தனியார் பேருந்து நிறுவனங்கள் மிகுந்த பொறுப்புடனும் கவனமுடனும் பேருந்துகளை இயக்க வேண்டும் பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மனித உயிர்கள் விலைமதிப்பற்றது என்பதை மனதில் வைத்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை விரைந்து கண்டறிந்து மீண்டும் இதுபோல விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். தென்காசி கோர விபத்து - அஇஅதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் இரங்கல் 😢🙏🏻 #Puratchithaai #Chinnamma #AIADMK #JayaPlus #டாக்டர்நமதுஎம்ஜிஆர் ஒருங்கிணைந்த அஇஅதிமுக கழகப் பணியில்...... #புரட்சித்தாய்சின்னம்மாஆர்மி 🌾🖤🤍❤️🌱✌️🌾 #தென்காசி #பஸ் விபத்து# #📰தமிழக அப்டேட்🗞️ ##🖤🤍♥️அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித் தாய் திருமதி சின்னம்மா அவர்கள் #🌱அஇஅதிமுக