motivation story

Thangamani.S❄️ Rio🔥🏹🎗️⏳
742 views
1 months ago
#motivation story *"வாழ்க்கை இங்கு சில நேரங்களில் இப்படி தான் சோதிக்கும்* " மாலை சூரியன் மறைந்து கொண்டிருந்தது. அந்த ஒளியுடன் சேர்ந்து ஒரு இளைஞனின் நம்பிக்கையும் மங்கிக் கொண்டிருந்தது. அவன் கையில் ஒரு மடித்த காகிதம்… அது ஒரு வேலை இழப்பு கடிதம். அவன் அந்த வேலைக்காக மட்டும் வேலை செய்யவில்லை. அவன் குடும்பத்தின் நம்பிக்கைக்காக வேலை செய்தான். அம்மாவின் சிகிச்சைக்காக வேலை செய்தான். அவன் கனவுகளுக்காக வேலை செய்தான். “இந்த வேலையை நம்பி தான் வாழ்ந்தேன்… இப்போ என்ன செய்ய?” அவன் குரல் மெதுவாக இருந்தது. ஆனால் அவன் வலி மிகவும் ஆழமாக இருந்தது. அதே வேளையில் அங்கு ஒரு முதியவர் இந்த இளைஞனை பார்த்தவாறு அவன் அருகே வந்தார். அவன் அருகே வந்து தம்பி ஏன் இது சோகமாக இருப்பது போல் தெரிகிறது என்று கேட்கிறார். அதற்கு அந்த இளைஞன் அந்த முதியவரை பார்த்து கூறினார் நான் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தேன் என்று எதிர்பாராத விதமாக அந்த வேலையை வீட்டு என்னை நீக்கி விட்டார்கள். நான் என்ன செய்வது என்று தெரியவில்லை என்னை நம்பி தான் என் குடும்பம் இருக்கிறது இப்பொழுது திடீரென்று வேலை இல்லை என்பதால் எப்படி நான் வீட்டுக்கு செல்வது என்று தெரியவில்லை அதுதான் குழப்பமாக இருக்கிறது என்று இந்த கடற்கரையில் வந்து அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். அதற்கு அந்த பெரியவர் அந்த இளைஞனை பார்த்து தம்பி இது கடினமான நேரம் தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று வேலை இழப்பு இருக்கும்போது மனம் சற்று தடுமாறும் என்னதான் ஆறுதல் கூறினாலும் மனம் குழப்பம் அடையும். ஆனால் இது நிரந்தரம் அல்ல தற்காலிகம். சற்று வீட்டிற்கு சென்று ஓய்வெடு பின்பு நாளை காலையில் உன் மனது அமைதியில் இருக்கும் அப்பொழுது நீ சிந்தனையில் என்ன செய்யலாம் என்று சிந்தித்தால் தெளிவான முடிவு கிடைக்கும். இப்போது உனக்கு பயம் குழப்பம் மற்றும் என்ன செய்வதென்று குழப்பமான மனநிலையில் எது சிந்தித்தாலும் அது சரியான தீர்வாகாது. உனக்கு வேலை தான் போய்விட்டது இன்னும் வயது இருக்கிறது வாய்ப்பு இருக்கிறது அதனால் துவண்டு விடாதே. ஒரு கதவை மூடினால் உனக்கு வேறொரு கதவு திறக்கும் அதை நாம் தான் சிந்தித்து செயல்பட வேண்டும். அந்த முதியவர் அந்த இளைஞனிடம் இவ்வாறு கூறிவிட்டு “தம்பி… உன் கையில் இருந்தது வேலைதான். உன் உள்ளத்தில் இருக்கிறது திறமை.” “அது போதுமா?” — இளைஞன் almost கோபமாக கேட்டான். முதியவர் மெதுவாக சிரித்தார். “ஒரு வேலை போனால் வாழ்க்கை போய் விடாது. வாழ்க்கை நமக்கு சொல்றது — ‘நீ இன்னும் பெரியதுக்கு தயாராகு’ என்று.” “நான் பயப்படுறேன்…” “பயம் இருக்கும் இடத்தில்தான் புதிய தொடக்கம் இருக்கும். நீ இழந்தது உனது சம்பளம் மட்டுமே… விழுந்தது உன் வாழ்க்கை இல்லை.” இப்போது நான் எது கூறினாலும் சற்று கோபமாக தான் இருக்கும் ஆனால் நான் உனது வயதைக் கடந்து வந்தவன் என்ற முறையில் கூறுகிறேன் குழப்பத்தோடும் பயத்தோடும் எதையும் சிந்திக்க கூடாது அப்படி சிந்தித்தால் தவறாகத்தான் முடியும். எழுந்து வீட்டிற்கு செல் சற்று ஓய்வு எடு காலையில் எழுந்திரு அப்போது உன் மனம் சற்று தெளிவாக இருக்கும். அந்த வார்த்தைகள் அவன் மனதை உடைக்க வில்லை…... உருவாக்க ஆரம்பித்தது. அவன் மெதுவாக எழுந்தான். கையில் இருந்த கடிதத்தை மடித்து வைத்தான். அந்தப் பெரியவரை பார்த்து நான் தவறாக பேசியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் கூறுவது தான் சரி சற்று நான் பயம் மற்றும் குழப்பத்தில் தான் இருந்தேன். உங்கள் ஆறுதலுக்கு நன்றி என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினால் புதிய பாதையை நோக்கி..... அது தோல்வி அல்ல — ஒரு புதிய பாதையின் தொடக்கம். 🔥 முடிவு வரி: “வேலை போகலாம்… ஆனால் உன் மதிப்பு போகாது. நம்பிக்கை இருக்கிற வரை வாழ்க்கை முடிவடையாது.”
Thangamani.S❄️ Rio🔥🏹🎗️⏳
768 views
1 months ago
*"வாழ்க்கை இங்கு சில நேரங்களில் இப்படி தான் சோதிக்கும்* " மாலை சூரியன் மறைந்து கொண்டிருந்தது. அந்த ஒளியுடன் சேர்ந்து ஒரு இளைஞனின் நம்பிக்கையும் மங்கிக் கொண்டிருந்தது. அவன் கையில் ஒரு மடித்த காகிதம்… அது ஒரு வேலை இழப்பு கடிதம். அவன் அந்த வேலைக்காக மட்டும் வேலை செய்யவில்லை. அவன் குடும்பத்தின் நம்பிக்கைக்காக வேலை செய்தான். அம்மாவின் சிகிச்சைக்காக வேலை செய்தான். அவன் கனவுகளுக்காக வேலை செய்தான். “இந்த வேலையை நம்பி தான் வாழ்ந்தேன்… இப்போ என்ன செய்ய?” அவன் குரல் மெதுவாக இருந்தது. ஆனால் அவன் வலி மிகவும் ஆழமாக இருந்தது. அதே வேளையில் அங்கு ஒரு முதியவர் இந்த இளைஞனை பார்த்தவாறு அவன் அருகே வந்தார். அவன் அருகே வந்து தம்பி ஏன் இது சோகமாக இருப்பது போல் தெரிகிறது என்று கேட்கிறார். அதற்கு அந்த இளைஞன் அந்த முதியவரை பார்த்து கூறினார் நான் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தேன் என்று எதிர்பாராத விதமாக அந்த வேலையை வீட்டு என்னை நீக்கி விட்டார்கள். நான் என்ன செய்வது என்று தெரியவில்லை என்னை நம்பி தான் என் குடும்பம் இருக்கிறது இப்பொழுது திடீரென்று வேலை இல்லை என்பதால் எப்படி நான் வீட்டுக்கு செல்வது என்று தெரியவில்லை அதுதான் குழப்பமாக இருக்கிறது என்று இந்த கடற்கரையில் வந்து அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். அதற்கு அந்த பெரியவர் அந்த இளைஞனை பார்த்து தம்பி இது கடினமான நேரம் தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று வேலை இழப்பு இருக்கும்போது மனம் சற்று தடுமாறும் என்னதான் ஆறுதல் கூறினாலும் மனம் குழப்பம் அடையும். ஆனால் இது நிரந்தரம் அல்ல தற்காலிகம். சற்று வீட்டிற்கு சென்று ஓய்வெடு பின்பு நாளை காலையில் உன் மனது அமைதியில் இருக்கும் அப்பொழுது நீ சிந்தனையில் என்ன செய்யலாம் என்று சிந்தித்தால் தெளிவான முடிவு கிடைக்கும். இப்போது உனக்கு பயம் குழப்பம் மற்றும் என்ன செய்வதென்று குழப்பமான மனநிலையில் எது சிந்தித்தாலும் அது சரியான தீர்வாகாது. உனக்கு வேலை தான் போய்விட்டது இன்னும் வயது இருக்கிறது வாய்ப்பு இருக்கிறது அதனால் துவண்டு விடாதே. ஒரு கதவை மூடினால் உனக்கு வேறொரு கதவு திறக்கும் அதை நாம் தான் சிந்தித்து செயல்பட வேண்டும். அந்த முதியவர் அந்த இளைஞனிடம் இவ்வாறு கூறிவிட்டு “தம்பி… உன் கையில் இருந்தது வேலைதான். உன் உள்ளத்தில் இருக்கிறது திறமை.” “அது போதுமா?” — இளைஞன் almost கோபமாக கேட்டான். முதியவர் மெதுவாக சிரித்தார். “ஒரு வேலை போனால் வாழ்க்கை போய் விடாது. வாழ்க்கை நமக்கு சொல்றது — ‘நீ இன்னும் பெரியதுக்கு தயாராகு’ என்று.” “நான் பயப்படுறேன்…” “பயம் இருக்கும் இடத்தில்தான் புதிய தொடக்கம் இருக்கும். நீ இழந்தது உனது சம்பளம் மட்டுமே… விழுந்தது உன் வாழ்க்கை இல்லை.” இப்போது நான் எது கூறினாலும் சற்று கோபமாக தான் இருக்கும் ஆனால் நான் உனது வயதைக் கடந்து வந்தவன் என்ற முறையில் கூறுகிறேன் குழப்பத்தோடும் பயத்தோடும் எதையும் சிந்திக்க கூடாது அப்படி சிந்தித்தால் தவறாகத்தான் முடியும். எழுந்து வீட்டிற்கு செல் சற்று ஓய்வு எடு காலையில் எழுந்திரு அப்போது உன் மனம் சற்று தெளிவாக இருக்கும். அந்த வார்த்தைகள் அவன் மனதை உடைக்க வில்லை…... உருவாக்க ஆரம்பித்தது. அவன் மெதுவாக எழுந்தான். கையில் இருந்த கடிதத்தை மடித்து வைத்தான். அந்தப் பெரியவரை பார்த்து நான் தவறாக பேசியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் கூறுவது தான் சரி சற்று நான் பயம் மற்றும் குழப்பத்தில் தான் இருந்தேன். உங்கள் ஆறுதலுக்கு நன்றி என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினால் புதிய பாதையை நோக்கி..... அது தோல்வி அல்ல — ஒரு புதிய பாதையின் தொடக்கம். 🔥 முடிவு வரி: “வேலை போகலாம்… ஆனால் உன் மதிப்பு போகாது. நம்பிக்கை இருக்கிற வரை வாழ்க்கை முடிவடையாது.” #TamilnovelsandmotivationalStory #motivational story #motivation story
Thangamani.S❄️ Rio🔥🏹🎗️⏳
18.1K views
1 months ago
🔥 இவன் விழுந்தவன் இல்லை… மீண்டும் எழுந்தவன் 🔥 ஒரு இளைஞன் பல தோல்விகளை சந்தித்து மனம் உடைந்து ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தான். அவன் அருகில் இருந்த ஒரு முதியவரை பார்த்து புலம்பினான்: “தாத்தா… எனக்கு மட்டும் ஏன் இப்படி? எதை தொடங்கினாலும் நிலைக்கவில்லை. நான் முயற்சி செய்கிறேன்… ஆனா வெற்றி மட்டும் என்னை தவிர்க்கிறது.” முதியவர் மெதுவாக சிரித்தார். “தம்பி… இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வெற்றி. ஆனா எல்லாரும் ஒரே பாதையில் நடக்கிறார்கள். அதனால்தான் குழப்பம்.” இளைஞன் அமைதியாகக் கேட்டான். முதியவர் தொடர்ந்தார்: “எல்லாரும் செய்கிறார்கள் என்று நீயும் அந்த பாதையில் போகக்கூடாது. அது உனக்கான பாதை என்றால் — அதில் உன் முயற்சி, உழைப்பு, பயிற்சி அனைத்தையும் போடு. அது உனக்கான பாதை இல்லை என்றால் — உனக்கான ஒரு பாதையை உருவாக்கு. அங்கீகாரம் அங்கே தான் கிடைக்கும்.” இளைஞன் மெதுவாக கேட்டான்: “அப்படின்னா நான் இவ்வளவு நாள் தோல்வியடைந்ததுக்கு காரணம் என்ன தாத்தா?” முதியவர் சொன்னார்: “நீ பாதையை தேர்வு செய்யாமல் பயணம் தொடங்கிட்டாய். ஒரு ஊருக்கு போகணும் என்றால் முதலில் எந்த ஊர் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அப்போ தான் எப்படி போவது என்று திட்டமிட முடியும். எங்கு செல்ல வேண்டும் என்று தெரியாமல் பாதையில் நடந்தால் நீ நடக்கலாம்… ஆனால் எங்கும் சென்று சேர மாட்டாய்.” சிறிது நேரம் அமைதி. “தம்பி… நீ தோல்வியடைந்தவன் இல்லை. நீ இன்னும் உனக்கான திசையை தேர்வு செய்யாதவன். திசை தெளிவானால்.... உனக்கான வெற்றி கண்டிப்பாக வந்து தீரும் . இப்பொழுது இளைஞனின் கண்களில் ஒரு நம்பிக்கை பிறந்தது. ஆனால் இந்த முறை அது சோர்வின் மனநிலை இல்லை அது உற்சாகத்தின் மனநிலை. அது ஒரு தெளிவான சிந்தனையில் அவன் எழுந்தான். அவன் தோல்வியால் விழுந்தவன் அல்ல. அவன் உணர்வால் மீண்டும் எழுந்தவன். 🎯 கதையின் முடிவு: விழுவது பிரச்சனை இல்லை. இங்கு விழுந்து கிடப்பது தான்பிரச்சனை. எங்கு செல்ல வேண்டும் என்று தெரிந்தால் தான் நமது பயணம் மெதுவாக இருந்தாலும இலக்கை நோக்கி பயணிக்க முடியும். #motivational #motivation #Motivition dialogue 🔥 இவன் விழுந்தவன் இல்லை… திசை தெரிந்து மீண்டும் எழுந்தவன். #motivation story #life motivatio status
Thangamani.S❄️ Rio🔥🏹🎗️⏳
604 views
1 months ago
🌄 ஒரு காலை, ஒரு கேள்வி 🌄 (தன்னம்பிக்கை சிறுகதை) அந்த மனிதன் ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் ஒரே கேள்வியோடு இருந்தான்: “இன்னைக்கு என்ன செய்யப் போகிறேன்?” பதில் இல்லை. மனம் சோர்வு. உடல் சோர்வு. வாழ்க்கை சோர்வு. ஒருநாள் அவன் வீட்டின் முன் ஒரு முதியவர் உட்கார்ந்திருந்தார். கையில் ஒரு பழைய செருப்பு. மனிதன் கேட்டான்: “இப்படி உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்?” முதியவர் சிரித்தார். “பழைய செருப்பு தைத்துக் கொண்டிருக்கிறேன்.” “இதெல்லாம் இன்றைக்கு யாருக்கு பயன்படும்?” என்று மனிதன் கேட்டான். முதியவர் மெதுவாகச் சொன்னார்: “பயன்படுமா தெரியாது. ஆனா… இன்று நான் எழுந்து ஏதோ ஒன்று செய்தேன்.” அந்த ஒரு வாக்கியம் மனிதனை உலுக்கியது. அவன் புரிந்துகொண்டான்: வெற்றி இன்று வேண்டாம் பாதை இன்று வேண்டாம் இலக்கு இன்றே வேண்டாம் 👉 எழுதல் மட்டும் போதும். செயல் ஒன்று மட்டும் போதும். அடுத்த நாள் அவன் பெரிய முடிவெடுக்கவில்லை. புதிய வாழ்க்கை தொடங்கவில்லை. அவன் செய்தது ஒன்றே ஒன்று: வீட்டை சுத்தம் செய்தான் ஒரு மணி நேரம் நடந்தான் அவ்வளவுதான். ஆனால் அந்த நாள் இரவு அவன் தூங்கும்போது மனம் சற்று அமைதியாக இருந்தது. அவன் தன்னைத்தானே சொன்னான்: “நான் இன்னும் முடிந்தவன் இல்லை.” 🌱 கதை சொல்லும் உண்மை வாழ்க்கை உடைந்தபோது 👉 பெரிய தீர்வு வேண்டாம் தளர்ந்த மனத்திற்கு 👉 பெரிய அறிவுரை வேண்டாம் ஒரு சிறிய செயல் மனிதனை மீண்டும் மனிதனாக்கும். 🌼 ஒரு வரி முடிவு எழத் தெரியவில்லை என்றால், ஓட முயலாதே… முதலில் உட்கார்ந்த இடத்திலிருந்து எழு. அதுவே தொடக்கம்......💯🌞🌞🌞👌👌👌 #தன்னம்பிக்கை ஸ்டேட்டஸ் #motivation #motivation story #sad quotes my life ##😫சோக ஸ்டேட்டஸ் #😢Sad Feelings💔 #😔தனிமை வாழ்க்கை 😓 #😞Sad Quotes #😒தனிமை Quotes