சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த அந்தப் பெண், வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி நான்காம் ஆண்டு படித்து வருகிறார். தனது பயிற்சிக்காகப் பெரம்பூரில் உள்ள ஒரு புனர்வாழ்வு மையத்தில் கடந்த 17-ஆம் தேதி தான் அவர் பணியில் சேர்ந்துள்ளார்.
நேற்று காலை அந்த மருத்துவமனையின் உரிமையாளரான பிசியோதெரபிஸ்ட் கார்த்திகேயன், மாணவிக்குத் தொலைபேசி வாயிலாக ஒரு நோயாளிக்கு அவசரமாகச் சிகிச்சை அளிக்க வேண்டும் என அழைத்துள்ளார். அதன்பேரில் அங்குச் சென்ற மாணவியைக் கார்த்திகேயன் தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்ற அவர், இறுதியாகக் கொளத்தூர் ஜெயந்தி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு மசாஜ் சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். அங்கே மாணவியிடம் குடிக்க ஏதேனும் வேண்டுமா எனக் கேட்டுள்ளார். தனக்கு டீ, காபி பழக்கம் இல்லை என மாணவி கூறவே, தனது காரில் இருந்த குளிர்பானத்தை அவருக்குக் கொடுத்துள்ளார்.
அந்தக் குளிர்பானத்தைக் குடித்த சில நிமிடங்களிலேயே மாணவிக்குத் தலைசுற்றலும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு தனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என மாணவி புகாரில் தெரிவித்துள்ளார். சிறிது நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்தபோது, கார்த்திகேயன் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அங்கிருந்து தப்பித்துச் சென்ற மாணவி, பயத்தில் முதலில் வீட்டில் சொல்லாமல் தனது அக்காவிடம் அழுது கொண்டே நடந்ததைக் கூறியுள்ளார். பின்னர் உறவினர்களுடன் சென்று மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, கார்த்திகேயனின் தரப்பில் இருந்து முறையான பதில் வரவில்லை.
பாதிக்கப்பட்ட மாணவி கொளத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பிஎன்எஸ் (BNS) பிரிவுகளான 123 (தீங்கு விளைவிக்கும் பொருளைக் கொடுத்தல்), 63 (பாலியல் வன்கொடுமை) மற்றும் 64 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இன்று காலை கார்த்திகேயனைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்படும் தீவிர விசாரணையில், இதுபோன்று வேறு ஏதேனும் மாணவிகளிடம் அவர் கைவரிசை காட்டியுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மருத்துவத் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வந்த ஒரு மாணவிக்கு, அந்தத் துறையைச் சேர்ந்த ஒருவராலேயே இத்தகைய கொடுமை நேர்ந்திருப்பது சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ##📰டிசம்பர் 22 முக்கிய தகவல்📺#தமிழ்நாட்டை உலுக்கிய பாலியல் பலாத்காரம்
வானூர் திமுக
ஒன்றிய செயலாளர்
விழுப்புரம்
எம்எல்ஏ லட்சுமணனின்
ஆதரவாளருமான பாஸ்கரன் என்பவர்
விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய திருவக்கரை ஊராட்சியை சேர்ந்த கணவரை இழந்து
இரண்டு குழந்தைகளுடன்
வாழ்ந்து வந்த 35 வயது இளம்பெண்ணை ஆறு மாதங்களாக உனக்கு அரசு
உதவி திட்டங்களில் உதவி செய்கிறேன் எனக்கூறி தனிமையில் அழைத்து
பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி உள்ளார்
திமுக ஒன்றிய செயலாளர் பாஸ்கரன்... 📌
#பாலியல் பலாத்காரம்#ஆபாச திமுக##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு##WomenSafetyMattersTN
அப்பகுதி வழியே வந்த 3 இளைஞர்கள் காரில் இருந்த இருவரையும் மிரட்டியுள்ளனர். அதோடு ஆண் நண்பரைக் கடுமையாகத் தாக்கி சுய நினைவிழக்கச் செய்துள்ளனர். இதனையடுத்து அப்பெண்ணை அப்பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காலியிடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர் மற்றும் பெண் அளித்த புகாரின் பெயரில் பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். பெண்ணின் ஆண் நண்பர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்திற்கு பிறகு மயக்க நிலையில் இருந்து மீண்ட ஆண் நண்பர், தனது தோழியைத் தேடியுள்ளார். அதோடு காவல் துறையினருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை இன்று (03.11.2025) அதிகாலை மீட்டுள்ளனர். சம்பவ இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத காரணத்தினால் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி, மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. #பாலியல் பலாத்காரம்#🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️#கோவை செய்திகள்