சன் டிவி எதிர்நீச்சல் சீரியல்

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
713 காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
இன்றைய ப்ரோமோ இந்நிலையில் தற்போது எதிர்நீச்சல் தொடர்ந்து இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரன் தான் கட்டி வைத்த வீட்டில் பெண்கள் ஜாலியாக பாயை விரித்து செட்டில் ஆகிவிட்டார்கள் என கத்துகிறார். கைதுக்கு பயந்து ஊர் ஊராக தலைமறைவாக சுற்றிக்கொண்டிருக்கும் அவர் இப்படி கோபத்தில் கத்தி இருக்கிறார். அதன் பின் அறிவுக்கரசியை வெளியில் அனுப்ப கூடாது இங்கேயே இருக்க வேண்டும் என ஜனனி சொல்கிறார். அதற்கு மாமியார் வேறொரு திட்டத்தை போடுகிறார். என்னவாக இருக்கும்? #📺எனக்கு பிடித்த சீரியல் #சன் டிவி எதிர்நீச்சல் சீரியல்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
896 காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஜனனி சக்தியை காப்பாற்றிய கையோடு, ஆதி குணசேகரனுக்கு எதிரான நடவடிக்கையிலும் இறங்கி, அவரைப் பற்றிய உண்மைகளை ஜட்ஜ் ஒருவரிடம் புட்டு புட்டு வைத்தார். இதையடுத்து ஆதி குணசேகரனை பிடிக்க தனிப்படை ஒன்றையும் அமைத்தது அய்யாதுரை பாண்டியன் தலைமையிலான போலீஸ், மேலும் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இந்த கைது நடவடிக்கைக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் குணசேகரன். இதையடுத்து வீட்டுக்குள் மாஸ் எண்ட்ரி கொடுக்கிறார் ஜனனி. அதன் பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். அரிவாளை எடுத்துக் கொண்டு ஜனனியை தாக்க வந்த அறிவுக்கரசியை கீழே தள்ளிவிட்டு அடிவெளுக்கிறார் ஜனனி. இதனால் அவர் ஒருபுறம் வலியில் கத்துகிறார். மறுபுறம் முல்லையை தர்ஷன் மற்றும் தர்ஷினி இருவரும் அடிக்கிறார்கள். பின்னர் அனைவரும் சேர்ந்து அறிவுக்கரசியை வீட்டை விட்டே துரத்திவிடுகிறார்கள். அதேபோல் தலைமறைவாக உள்ள ஆதி குணசேகரனுக்கு போன் போடு வழக்கறிஞர், இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியாக உங்க பரம எதிரி சாருபாலாவை போட்டிருக்கிறார்கள் என கூறுகிறார். இதைக்கேட்டு கதிர், ஞானம் இருவரும் ஷாக் ஆகிறார்கள். அறிவுக்கரசியை ஓடவிட்ட பின்னர் வீட்டுக்குள் செல்லும் ஜனனி, விசாலாட்சியிடம் பேசுகிறார். இதுக்குமேல உங்ககிட்ட மறைக்க எதுவுமில்லை என கூறிவிட்டு, இந்த சொத்துக்களை வளர்த்தது மட்டும் தான் உங்க மகன், அதோட வேர் தேவகி என சொல்கிறார். உங்க புருஷன் ஆதி முத்துவுக்கு உங்களை தாண்டி இன்னொரு வாழ்க்கை இருந்ததாக ஜனனி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார் விசாலாட்சி. அந்தப் பெண்ணை ஏமாற்றி அவர் சொத்தையெல்லாம் எழுதி வாங்கிவிட்டு தான் ஆதி முத்து அவரை கல்யாணம் பண்ணிக்கொண்டதாகவும், இந்த சொத்துக்கள் எல்லாம் தேவகிக்கு சொந்தமானது எனவும் ஜனனி, விசாலாட்சியிடம் கூறுகிறார் #📺எனக்கு பிடித்த சீரியல் #சன் டிவி எதிர்நீச்சல் சீரியல்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1K காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
வீட்டில் உள்ள தர்ஷனின் மனைவி பார்கவியை வீட்டை விட்டு வெளியேற்ற ஆதி குணசேகரனும் அறிவுக்கரசியும் திட்டமிட்டு வருகிறார்கள். தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் திருமணம் ஆகிவிட்டது போல் பதிவு செய்து அவர்களை சட்டப்படி தம்பதி ஆக்கி இருக்கிறார் குணசேகரன். ஆனால், என்ன நடந்தாலும் வீட்டிலிருந்து வெளியே செல்லாமல் மனஉறுதியுடன் இருக்கிறார் பார்கவி. இப்படி ஒரு சூழலில் எதிர்நீச்சல் 2 சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்ததாக தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் திருமணம் செய்ய ஆதி குணசேகரன், அறிவுக்கரசி முடிவு செய்துள்ளனர். இதுதான் அடுத்து நடக்கப்போகிறது. இந்த சூழ்ச்சியில் இருந்து தர்ஷனும் பார்கவியும் எப்படி தப்பிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். #📺எனக்கு பிடித்த சீரியல் #சன் டிவி எதிர்நீச்சல் சீரியல்