sarvam siva mayam.

saravanan.
7.8K views
13 days ago
#sarvam siva mayam. 💐 🟥🟥 *சர்வம்* *சிவமயம்* *ஆன்மீக பயணம்* 🟨🟨 🙏 🟥🟥. *மனநோய் போக்கி நிம்மதி அளிக்கும் சுப்பிரமணிய புஜங்கம் (ஸ்லோகம் 24)* வாழ்க்கையில் மனிதனை அதிகம் வாட்டுவது உடல் பிணியை விட மனப் பிணியே. சொல்ல முடியாத துயரம், தீராத கவலை, மன அழுத்தம், மற்றும் மனக் குழப்பங்கள் நம்மைச் சூழ்ந்து கொள்ளும்போது, அதிலிருந்து மீள வழியின்றி தவிப்பது இயல்பு. இத்தகைய மனோ ரீதியான துன்பங்களில் இருந்து விடுதலை பெற, ஆதிசங்கரர் அருளிய சுப்பிரமணிய புஜங்கம் 24-வது ஸ்லோகம் ஒரு மிகச்சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. ஸ்லோகம்: அஹம் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ பவான் தீனபந்து ஸ்த்வதன்யம் நயாசே பவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம் மமாதிம் த்ருதம் நாசயோமா ஸுதத்வம் தமிழ்ப் பாடல் விளக்கம்: துன்பச் சுமையால் தவிக்கிறேன் சொல்ல முடியா தழுகின்றேன் அன்பைச் சொரியும் தீனருக் கிங் கருளும் கருணைப் பெருவாழ்வே உன்னை நாடித் தொழு வதால் ஊமை, நானோர் மாற்றறியேன் நின்னைத் தொழவுடு தடை செய்யும் நெஞ்சின் நோவைப் போக்கிடுவாய். பாடலின் ஆழமான பொருள்: "முருகப்பெருமானே! தாங்க முடியாத துன்பச் சுமையினால் நான் முற்றிலும் தளர்ந்து போயிருக்கிறேன். என் மனதிற்குள் இருக்கும் வேதனையை யாரிடமும் வெளிப்படுத்த முடியாமல் கண்ணீருடன் தவிக்கிறேன்." "சரண்புகுந்த அடியார்களைக் காக்கும் கருணைக்கடலே! எளியோர்க்கு அருளும் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் எதிர்பார்க்கவோ, உதவி கேட்கவோ இல்லை." "உன்னை முழு மனதோடு வழிபட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், என் மனதில் இருக்கும் கவலையும், பயமும், மனநோயும் உன்னை அமைதியாகத் தொழுவதற்குக்கூட எனக்குத் தடையாக இருக்கின்றன." "பார்வதி தேவியின் அன்புமகனே! என் பக்திக்குத் தடையாக இருக்கும் என் நெஞ்சின் நோவையும் (மன உளைச்சல், மன அழுத்தம், மனநோய்), கவலைகளையும் உடனடியாக வேரறுத்து எனக்கு மன அமைதியைத் தந்தருள வேண்டும்." ஆன்மீகச் செய்தி: நமக்கு ஒரு கஷ்டம் வரும்போது மனிதர்களிடம் போய் புலம்புவதை விட, எளியோரின் தோழனான முருகப்பெருமானிடம் மனமுருகி முறையிடுவதே உண்மையான அமைதியைத் தரும். மன அழுத்தம், பயம், அல்லது தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இந்த 24-வது ஸ்லோகத்தை மனதாரப் பாராயணம் செய்து வரும்போது, அவர்களின் மனதிலிருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, தெளிவும், தைரியமும், மன அமைதியும் உண்டாகும் என்பது நம்பிக்கை. "உன் கவலைகளை அவனிடம் இறக்கி வை; உனக்குள்ளே இருக்கும் மன பாரத்தைப் போக்கி, முருகன் உனக்கு வழி காட்டுவான்." 🟨🟨 💐 🟥🟥 *சர்வம்* *சிவமயம்* *ஆன்மீக பயணம்* 🟨🟨 🙏 🟥🟥.
saravanan.
1.6K views
21 days ago
#sarvam siva mayam. 💐 🟥🟥 *சர்வம்* *சிவமயம்* *ஆன்மீக பயணம்* 🟨🟨 🙏 🟥🟥. *என்ன_புண்ணியம்_செய்தேன்* !!?? புண்ணியம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிய என்ன புண்ணியம் செய்தேன் ?? புண்ணியம் என்று ஏதோ !! யாரோ ?? நினைத்ததை , எல்லாம் செய்ய எண்ணி என்ன புண்ணியம் செய்தேன் ?? புண்ணியம் செய்ய ஏதும் கொண்டுவராத நான் !! என்ன புண்ணியம் செய்தேன் ?? புண்ணியம் செய்தால் பலன் என்று பலர் சொல்ல , அதை செய்யவும் !! கேட்கவும் ?? இந்த உடலை அதில் இயங்கும் புலன்களோடு பெற , என்ன புண்ணியம் செய்தேன் ?? புண்ணியன் என்று ஒருவனே உண்டு !! இறைவனே என்று .. அவன் செய்த புண்ணியமே இப்பிரபஞ்சம் , அதில் நான் என்ற ஒன்றும் .. அவனே செய்த புண்ணியமே யாவும் !! அதில் இடம்பெற்று இருப்பது என்ன புண்ணியம் செய்துவிட முடியும் ?? அது நமக்கும் புண்ணியத்தில் , பாவம் இருக்க ?? குறை இருக்க ?? என்று குற்றம் காணுதலில் உள்ள ஆர்வம் !! புண்ணியமே நடைபெறுகிறது என்ற புண்ணியனை உணரும் ஆர்வம் அற்றவனாக இருக்கின்றதே ?? புண்ணியமே புண்ணியனாகிய இறைவனால் !! இடையறாது எப்போதும் புண்ணியமே நிகழ்க்கின்றது .. என்ற மெய்யை உணரும் புண்ணியமே பிறப்பின் புண்ணியம் ஆகும் .. அப்புண்ணியம் உணர ... பாவ / புண்ணிய கணக்குக்கு ஏற்ப பிறப்பு என்ற எண்ணம் அழியும் .. அவ்வெண்ண அழித்தல் சொர்க்கம் / நரகம் போன்ற பொய்யான தன்மையால் பிறப்பு என்ற ஒன்றை அனுபவித்தே ஆக பிறக்க வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்து விடுதலை தரும் .. எப்படி பிறந்தாலும் பிறப்பில் அனுபவிக்க இருப்பதை உணர்ந்தவர்கள் தானே நாம் , என்ற மெய்ஞானத்தை மிளிர செய்யும் .. அந்த மெய்ஞான மிளிரல் ஏன் என்னை கொண்டு, என்னை கொண்டவன் செய்வதற்க்கு எல்லாம் !! " நான் செய்தேன் " என்று திறமையாக என்னை நானே ஏமாற்றி கொள்வதை விட வேறு பாவமும் உண்டோ ?? " நான் செய்தேன் " என்ற மாயை தந்த பலனை புண்ணியம் தேட அருளிய பிறவி இது என்றும் உணர்ந்து .. புண்ணியனே எதையும் செய்கிறான் !! அவன் என்னையும் தன்னுளே கொண்டே செய்கிறான் !! இதில் என்னை " நான் செய்தேன் " என்றும் நம்பும்படி அவனே செய்கிறான் என்று உணரும் புண்ணியம் உணர்ந்துவிட்டால் .. மற்று ஓர் புண்ணியம் தேடும் பிறவியில் இருந்து விடுபடலாமே என்று உணரும்படி உணர்த்தி அருளியதை உணர " என்ன புண்ணியம் செய்தேனோ ??!! என் புண்ணியனே ... " திருச்சிற்றம்பலம் அன்பே சிவம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நன்றியுடன் 🟨🟨 💐 🟥🟥 *சர்வம்* *சிவமயம்* *ஆன்மீக பயணம்* 🟨🟨 🙏 🟥🟥.
saravanan.
1.8K views
1 months ago
#sarvam siva mayam. முகில்பொழிக ! தேசமெலாம்‌ பயிர்விளைக ! செல்வம்‌ ஓங்க ! மாதர்குழாம்‌ மக்கள்குழாம்‌ மனை அறங்கள்‌ உடன்பொலிந்து மலிந்து வாழ்க! மேதகுசீர்ச்‌ சைவநெறி வேதநெறி தழைத்துஓங்க ! மேலும்‌ மேலும்‌ பூதலமேல்‌ சிவபெருமான்‌ ஆலயங்கள்‌ பூசனைகள்‌ பொலிக மாதோ ! _ திரிகூடராசப்பக்‌ கவிராயர் 🟨🟨 💐 🟥🟥 *சர்வம்* *சிவமயம்* *ஆன்மீக பயணம்* 🟨🟨 🙏 🟥🟥.