இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.1K views
1 days ago
1990-ம் ஆண்டு வெளியான சிறையில் சில ராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாலா லட்சுமணன். அதன்பிறகு பல வெற்றிப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடியில் கலக்கியவர் பாலா லட்சுமணன். சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி படத்தில் மாயண்ண வந்திருக்காக, என்ற காமெடி பெரிதாக பேசப்பட்டது. அதேபோல் ஆனந்தம் படத்தில் மம்முட்டி வீட்டுக்கு திருட வந்து அதே வீட்டில் வேலைக்காரராக மாறி ஒரு குணச்சித்திர நடிகராகவும் அசத்தியிருப்பார். மேலும் அரசு, பாண்டி உள்ளிட்ட படங்களிலும் பாவா லட்சுமணன் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் சமீப காலமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கும் பாவா லட்சுமணனுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவதிப்பட்டு வரும் அவருக்கு நோயின் தீவிரம் அதிகரித்ததால் காலி இருந்து கட்டை விரல் அகற்றப்பட்டது. சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருக்கிறேன். ஆரம்பத்தில் புரொடக்‌ஷன் மேனேஜராக வேலை பார்த்தேன், அப்புறம் அதன்பிறகு நடிகரான மாறினேன். 'மாயி' படம் எனக்குப் பெரிய அடையாளம் தந்தது. ஆனால் சமீபகாலமாக எனக்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு இல்லை. கர்நாடக தேர்தல் பிரச்சாரத்திற்கு போனபோது ஜெனரேட்டரில் கால் வைத்துவிட்டுடேன். அப்போ வலி தெரியவில்லை. ஆனால், 10 நாள் கழித்து கால் பயங்கரமாக வீங்கிவிட்டது. இந்த வீக்கம் பெரிய பிரச்னையாக மாறி கால் விரல்களை எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இதனால் என்னால் நடக்கவே முடியாது என்று சினிமா வட்டாரத்தில் பரவியதால், பட வாய்ப்பு குறைந்துவிட்டது. இப்போது பிச்சை எடுக்கும் நிலையில் தான் இருக்கிறேன். நான் தங்கிய வீட்டையும் காலி செய்ய சொன்னதால் என் நண்பர் ஒரு வீடு தருவதாக கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில்,விஜய் டிவி பாலா, நடிகர் ஜீகா ஆகியோர் எனக்கு மருத்துவ செலவுக்கும் சாப்பாட்டுக்கும் உதவி செய்துகொண்டு இருக்கிறார்கள். முதல்வர் விஜய் எனக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வெண்டும் என்று நினைக்கிறேன். அப்படி உதவி செய்தால் நன்றாக இருக்கும். அவரை நேரில் பார்க்க முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. இருப்பதற்கு வீடு இல்லாமல் இருக்கிறேன். ஒரு வீடு கிடைத்தால் கடைசிகாலத்தில், நிம்மதியாக கழிப்பேன் என்று கண்ணீர்மல்க பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴