அன்னை வேளாங்கண்ணி ⛪

தமிழ்சீயான்43
35.6K views
3 days ago
மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க 🫅✝️🛐🙏👑 #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #வேளாங்கண்ணி மாதா #✝️வேளாங்கண்ணி சர்ச்⛪ #சகாய மாதா
தமிழ்சீயான்43
2.3K views
6 days ago
🌿 இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள். 09.08.2026 (ஞாயிறு) மகிமை நிறை மறையுண்மைகள். முதலாவது. ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, இன்றைய ஞாயிறு திருப்பலி நற்செய்தி வாசகத்தில் நமதாண்டவர் இயேசு கடலில் மூழ்கிய பேதுருவிடம், "நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” எனக் கேட்கிறார். நாம் நமது வாழ்வில் நமக்கு துன்பங்கள் வரும் நேரங்களில் இறைவன் நம் அருகில் இருப்பதை மறந்து நம்பிக்கை குன்றி ஐயம் கொண்ட தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பினை நாடி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம். இரண்டாவது. ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து, "தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்." என்று திருப்பாடல் (145:18) கூறுகிறது. நாம் வேண்டும்போது நம் அருகிலிருந்து நமது வேண்டுதல்களை ஆண்டவர் செவிமடுக்கிறார் என்பதை நாம் முழுமையாக உணர்ந்து கொள்ள இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். மூன்றாவது. தூய ஆவியின் வருகையைத் தியானித்து இந்த வாரம் முழுவதும் நமக்குத் தூய ஆவியானவரின் வழி நடத்துதல் கிடைக்கப் பெறவேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். நான்காவது. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து, ஹிட்லரின் நாஜி படைகளினால் சித்திரவதைகளுக்கு உள்ளாகி மறைசாட்சியாக மரித்தவரும், இன்றைய புனிதருமான சிலுவையின் புனிதர் தெரெசா பெனடிக்டாவிடமிருந்து நாம் துணிவினைக் கற்றுக் கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். ஐந்தாவது. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து, இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். ஆமென். #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #வேளாங்கண்ணி மாதா #✝️வேளாங்கண்ணி சர்ச்⛪ #சகாய மாதா