கருடபுராணம்

MUTHUPANDIAN RAMKUMAR
657 views
29 days ago
#🕉️விஷ்ணு புராணம்🦅கருடபுராணம்🏹 பகவத்கீதை.. மகாபாரத போர்..!!🐄 #கருடபுராணம்,இறந்த பிறகு ஆத்மா #கருடபுராணம் #கருடபுராணம் பின் ஆன்மா எங்கே செல்கிறது? கருட புராணம் கூறும் உண்மைகள்* .... 💀💀💀💀💀 -யாக இருங்கள்.... கருட புராணம் நமக்குக் கற்றுத்தரும் வாழ்வியல் பாடங்கள் : – உண்மையாக வாழுங்கள். பிறருக்கு உதவுங்கள். பெற்றோர்களை மதியுங்கள். தான தர்மங்களைச் செய்யுங்கள். பேராசையை விடுங்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். உயிர்களுக்கு தீங்கு செய்யாதீர்கள். இறைவனை நினைத்து வாழுங்கள். நல்ல கர்மங்களைச் சேமியுங்கள். இந்தப் பண்புகளே மனிதனை அமைதியான வாழ்க்கைக்கும், ஆன்மீக முன்னேற்றத்திற்கும் வழி நடத்தும் என்று கருட புராணம் வலியுறுத்துகிறது. 😯😟😯😟😯 மனித வாழ்க்கையில் அனைவரும் அறிய விரும்பும் மிகப் பெரிய கேள்வி ஒன்று உண்டு. “மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது?” உடல் அழிந்த பிறகும் ஆன்மா இருக்கிறதா? அது எங்கு செல்கிறது? சொர்க்கம், நரகம், மறுபிறவி உண்மையா? மனிதன் செய்த பாவமும் புண்ணியமும் உண்மையில் அவனைத் தொடருமா? இத்தகைய ஆழமான கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் மிக முக்கியமான இந்து சமய நூல்களில் ஒன்றுதான் கருட புராணம். இது வெறும் மரணத்தைப் பற்றிய நூல் மட்டுமல்ல; மனிதன் எப்படி வாழ வேண்டும், எவ்வாறு அறநெறியில் நிலைத்து நிற்க வேண்டும், வாழ்க்கையின் உண்மையான நோக்கம் என்ன என்பதை எடுத்துரைக்கும் அரிய ஆன்மீகப் பொக்கிஷமாகும். கருட புராணம் என்றால் என்ன? கருட புராணம், இந்து சமயத்தின் 18 மகாபுராணங்களில் ஒன்றாகும். இது ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கும் அவரது வாகனமான கருட பகவானுக்கும் இடையே நடைபெறும் ஆன்மீக உரையாடலாக அமைந்துள்ளது. மரணம், ஆன்மா, கர்ம விதி, மறுபிறவி, முக்தி, தர்மம், பாவம், புண்ணியம் போன்ற மனித வாழ்க்கையின் மிக ஆழமான ரகசியங்களை கருடன் கேள்விகளாகக் கேட்க, அதற்கு மகாவிஷ்ணு பதிலளிப்பதாக இந்த புராணம் விவரிக்கிறது. கருட புராணம் இரண்டு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1. பூர்வ காண்டம் : இந்த பகுதியில் தர்மம், அறநெறிகள், தானத்தின் மகிமை, மனித வாழ்வின் நோக்கம், பிறப்பு மற்றும் இறப்பு, பக்தியின் சிறப்பு, வேத சாஸ்திர நெறிகள் நல்லொழுக்க வாழ்க்கை, ஆயுர்வேதம், மருத்துவம், யோகம், ஜோதிடம், நவரத்தினங்கள், தந்திர முறைகள் போன்ற பல்வேறு அறிவியல் மற்றும் ஆன்மீக தகவல்களும் இடம்பெற்றுள்ளன. 2. பிரேத காண்டம் (உத்தர காண்டம்) : பெரும்பாலானோர் அறிந்திருப்பது இந்தப் பகுதிதான். இதில் மரணத்திற்குப் பின் ஆன்மாவின் பயணம், யமதர்மராஜனின் நீதித்தீர்ப்பு, பாவங்களுக்கேற்ப கிடைக்கும் தண்டனைகள், புண்ணியங்களுக்கேற்ப கிடைக்கும் பலன்கள், சொர்க்கம், நரகம், மறுபிறவி, முக்தி, ஈமச்சடங்குகளின் முக்கியத்துவம் இவை அனைத்தும் மனிதன் தன் வாழ்நாளிலேயே தர்ம வழியில் வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் நோக்கத்துடன் கூறப்படுகின்றன. கருட புராணம் மரணத்தை எப்படி விளக்குகிறது? கருட புராணத்தின் படி, மனிதனின் உடல் அழிகிறது. ஆனால் ஆன்மா அழிவதில்லை. உடல் என்பது ஒரு ஆடை போன்றது. ஆன்மா அதனை விட்டு வெளியேறி, தனது கர்மங்களின் அடிப்படையில் அடுத்த நிலைக்குச் செல்கிறது என்று இந்து சமய தத்துவம் கூறுகிறது. ஒருவர் வாழ்நாளில் செய்த ஒவ்வொரு செயலும், நல்லதோ கெட்டதோ, அவரது ஆன்மாவின் அடுத்த பயணத்தை நிர்ணயிக்கும் என கருட புராணம் எடுத்துரைக்கிறது. பாவமும் புண்ணியமும் ஏன் முக்கியம்? ஒரு மனிதன் உண்மை பேசினால், தானம் செய்தால், பெற்றோர்களை மதித்தால், பிறருக்கு உதவினால், இறைவனை நினைத்து வாழ்ந்தால், அன்புடன் நடந்து கொண்டால் அவரது ஆன்மா உயர்ந்த நிலையை அடையும் என்று கூறப்படுகிறது. மாறாக பொய், ஏமாற்றுதல், கொடுமை, பேராசை, பிறருக்கு தீங்கு செய்தல், அநீதி போன்ற செயல்கள் ஆன்மாவை துன்பகரமான அனுபவங்களுக்கு இட்டுச் செல்லும் என கருட புராணம் எடுத்துரைக்கிறது. கருட புராணத்தின் நோக்கம் பயமுறுத்துவது அல்ல. மாறாக, தவறான செயல்களின் விளைவுகளை உணர்த்தி, நல்ல வாழ்க்கை வாழ வழிகாட்டுவதே அதன் உண்மையான நோக்கமாகும். 84 லட்சம் உயிரினங்கள் பற்றிய கருட புராணம் : கருட புராணத்திலும், பல்வேறு புராணங்களிலும் மற்றும் பாரம்பரிய இந்து சமய நூல்களிலும் 84 லட்சம் (8.4 மில்லியன்) உயிரின வகைகள் குறித்து குறிப்பிடப்படுகிறது. அவற்றில் மனிதப் பிறவி மிகவும் அரிதானதும் உயர்ந்ததுமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் மனிதனுக்கு மட்டுமே நல்லதைத் தேர்வு செய்யும் அறிவு, தர்மத்தைப் பின்பற்றும் திறன், இறைவனை உணரும் பக்தி, முக்தியை அடையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மனிதப் பிறவி ஏன் சிறந்தது? கருட புராணம் கூறுவது, மனிதனுக்கே தனது வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. மனிதன், பாவத்தை விட்டு விலகலாம். புண்ணியத்தைச் சேர்க்கலாம். இறைவனை அடையலாம். முக்தியை அடையலாம். இந்த அரிய வாய்ப்பே மனிதப் பிறவியை எல்லா பிறவிகளிலும் உயர்ந்ததாக ஆக்குகிறது. தாங்கள் முற்பிறவியில் செய்த பாவங்களையும், கர்மவினைகளையும் இந்த பிறவியில் மனிதனரால் குறைக்க முடியும். முக்தியை அடைவதற்கான வழியை கண்டறிந்து, இறைவனை அடைய முடியும். தெரிந்து கொள்ளுங்கள்..... 🥹🥹🥹🥹🥹
MUTHUPANDIAN RAMKUMAR
802 views
2 months ago
கருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்... 📖📖📓📓📒📒 இந்து புராணங்களில் முக்கிய ஒன்றாக கருதப்படும் கருட புராணத்தில் மரணத்திற்கு பின்னான வாழ்வு, மறு ஜென்மம், சொர்க்கம் நரகம் போன்றவற்றை பற்றி பல்வேறு விளக்கங்கள் இருக்கிறது. 18 இந்து சமய புராணங்களில் ஒன்றான இதில் வாழ்வின் மேன்மைகளை பற்றி 19,000 ஸ்லோகங்களும் மனித வாழ்வில் செய்யும் தவறுகளுக்கு 28 விதமான கொடூர தண்டணைகளை பற்றி விஷ்ணு கருடனுக்கு(பறவைகளின் அரசன்) விவரிப்பது போல எழுதப்பட்டிருக்கும். வாழும் போது மனிதர்கள் செய்யும் அவசெயல்களுக்காக மிருகத்தனமான தண்டணைகளை அவர்கள் அடைவார்கள். கருட புராணத்தை படிப்பவர்கள் தவறு செய்ய அஞ்சும் படியாக இருக்கும். விஷ்ணு இதனை ‘எமனின் சித்திரவதைகள்’ என்பார். இனி உங்கள் தண்டணைகளை அறிய துவங்குவோம். 🦇🦇 தாமிஸிர நரகம்: பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள். . அநித்தாமிஸ்ர நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும். . ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள். . மகா ரெளரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும். . கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள். . காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி. . அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும். . பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள். . அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும். . அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள். . வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள். . கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும். . சான்மலி: நன்மை, தீமை, பாவம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள். .. வைதரணி: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள். . பூபோதம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும். .. பிராணி ரோதம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள். . விசஸனம்: பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள். . லாலா பக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும். . சாரமேயாதனம்: வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும். . அவீசி: பொய்சாட்சி சொன்னால் நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள். 🧜‍♂️🧛‍♂️ பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின் கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும். ● குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் பிடுங்கப்படும். ● விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் கொள்ளச் செய்யப்படுவர். ● அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் கால்கள் வெட்டப்படும். ● தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும். ● தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர் மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால் திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி அவதிப்படுபவனாகவும் பிறப்பர். ● இப்படி புராணக் கதைகளில் அறிந்தே செய்யும் வெவ்வேறான தவறுகளுக்கு தண்டனைகள் இருப்பினும் வாழ்வுக்கு பின் என்ன இருக்கிறது என்பதை மரணித்து தான் அறிய வேண்டிருக்கிறது. ஆனால் வாழும் போது செய்யும் தவறுகளுக்கு தண்டனை கிடைத்தால் தான் அவை மற்றவரை சிந்திக்க வைக்கும், இன்னமும் கருட புராணத்தை படிப்பவர் எவருமில்லை. #🕉️விஷ்ணு புராணம்🦅கருடபுராணம்🏹 பகவத்கீதை.. மகாபாரத போர்..!!🐄 #கருடபுராணம் #கருடபுராணம் #நரகத்தில் 👿கொடுக்கக்கூடிய தண்டனைகள் #கருடபுராணம் தண்டனைகள் #கருடபுராணம்