செய்திகளின் உலகம்

Murugan
561 views
3 days ago
ஊழலை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காவல்துறையினர் தங்கள் பணிகளைச் செய்ய லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் 78717 23000 என்ற கைப்பேசி எண்ணில் நேரடியாகத் தொடர்புகொண்டோ அல்லது வாட்ஸ்அப் (WhatsApp) மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #செய்திகளின் உலகம் #🎥Trending வீடியோஸ்📺
Murugan
573 views
4 days ago
#⚡ஷேர்சாட் அப்டேட் #📺வைரல் தகவல்🤩 #செய்திகளின் உலகம் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰தமிழக அப்டேட்🗞️ எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா நாடான காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்நிலையில், காங்கோவில் 4 ஆயிரத்து 381 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், எபோலா வைரஸ் பாதிப்பால் 2 ஆயிரத்து 11 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 704 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத்துறை திணறி வருகிறது. காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2011 ஆக அதிகரிப்பு
Murugan
545 views
4 days ago
*தினமும் 1 டிஎம்சி வீதம் 15 நாள்களுக்கு நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை* காவிரியில் தினமும் 1 டிஎம்சி வீதம் 15 நாள்களுக்கு நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது. #⚡ஷேர்சாட் அப்டேட் #📺வைரல் தகவல்🤩 #📰தமிழக அப்டேட்🗞️ #📺உள்ளூர் தகவல்கள்📰 #செய்திகளின் உலகம்
Murugan
545 views
4 days ago
ஜார்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) மற்றும் பணியாளர் தேர்வு வாரியம் (JSSC) நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அம்மாநில மாணவர்கள் ராஞ்சியில் உள்ள சட்டமன்றத்தை நோக்கிப் பிரம்மாண்ட முற்றுகைப் பேரணியை (Vidhan Sabha March) தொடங்கினர். 14-வது JPSC சிவில் சர்வீசஸ் தேர்வு உட்பட 3 தேர்வுகளை ரத்து செய்ய அரசு ஒப்புக்கொண்ட போதிலும், JSSC-CGL தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ (CBI) விசாரணை அமைக்க வேண்டும் என்பதில் மாணவர் கள் உறுதியாக உள்ளதால் இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும் தண்ணீரை பீய்ச்சியடித்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தினர். இருப்பினும், போராட்டக்காரர் கள் கலைந்து செல்லாமல், பல தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேறினர். முன்னதாக ஜேபிஎஸ்சி அமைப்பின் மூன்று உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரன் மாணவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும், அரசியல் கட்சிகளின் தூண்டுதலுக்குப் பலியாக வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அசம்பாவிதங்களைத் தடுக்க ராஞ்சி சட்டமன்ற வளாகத்தைச் சுற்றி 163-வது தடை உத்தரவு (Prohibitory orders) பிறப்பிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #செய்திகளின் உலகம்
Murugan
589 views
5 days ago
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை நெல் ஊக்கத்தொகை போதாது: நடப்பாண்டில் ரூ.3000, அடுத்த ஆண்டில் ரூ.3500 வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும்! தமிழ்நாட்டில் நடப்பாண்டில் அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகை சன்ன ரக நெல்லுக்கு ரூ.289, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.159 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல், கடந்த ஆண்டில் கரும்புக்கான ஊக்கத்தொகை ரூ.709.50 ஆக உயர்த்தப்பட்டு டன்னுக்கு ரூ.4000 ஆக வழங்கப்படும் என்று தவெக அரசு அறிவித்திருக்கிறது. உண்மையில் சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை ரூ.28 மட்டும் தான் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது போதுமானதல்ல. நெல்லுக்கான ஊக்கத்தொகையை தமிழ்நாடு அரசு பெரிய அளவில் உயர்த்தவில்லை. நடப்பாண்டில் சாதாரண வகை நெல்குக்கு குவிண்டாலுக்கு ரூ.2,441, சன்ன வகை நெல்லுக்கு ரூ.2,461 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அத்துடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையாக சன்னரக நெல்லுக்கு ரூ.156, சாதாரண ரக நெல்லுக்கு 131 வீதம் கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இப்போது தவெக அரசு சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை குவிண்டாலுக்கு ரூ.28, சன்னரக நெல்லுக்கு ரூ.133 உயர்த்தியிருக்கிறது. இதன் காரணமாக நெல்லுக்கான கொள்முதல் விலை சன்னரக நெல்லுக்கு ரூ.2750, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.2600 ஆக உயர்ந்திருக்கிறது. இது போதுமானதல்ல. சாதாரண நெல்லுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தியுள்ளது. ஆனால், தமிழக அரசு அதன் ஊக்கத்தொகையை, மத்திய அரசால் உயர்த்தப்பட்டதை விட பாதிக்கும் குறைவாகவே உயர்த்தியுள்ளது. சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகை ரூ.289 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல் வகைகளில் 95 விழுக்காட்டுக்கும் கூடுதலான நெல் சாதாரண ரகங்களைச் சேர்ந்தவை ஆகும். அதனால் சாதாரண ரக நெல்லுக்கான கொள்முதல் விலை தான் கூடுதலாக உயர்த்தப்பட வேண்டும். அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை வெறும் ரூ.28 மட்டும் உயர்த்தி விட்டு, மிகக் குறைந்த அளவில் கொள்முதல் செய்யப்படும் சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை ரூ.133 உயர்த்துவதால் யாருக்கும் பயனில்லை. ஊக்கத்தொகையை உயர்த்தி விட்டோம் என்று கணக்கு காட்டி பெருமிதம் பேசுவதற்காக மட்டும் தான் தமிழக அரசின் இந்த அறிவிப்பு பயன்படும். ஒதிஷாவில் கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.800 வீதமும், கேரளத்தில் ரூ.650 வீதமும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நடப்பாண்டில் அந்த மாநிலங்களில் ஊக்கத்தொகை இன்னும் கூடுதலாக உயர்த்தப்படலாம். அவற்றுடன் ஒப்பிடும் போது தமிழக அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை போதுமானதல்ல. தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.2300 முதல் ரூ.2400 வரை செலவாகிறது. அத்துடன் கூடுதலாக ரூ.200 மட்டும் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிப்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல. எனவே, நடப்பாண்டில் சாதாரண வகை நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3000 கிடைக்கும் வகையில் ஊக்கத் தொகையை ரூ.559 ஆக உயர்த்த வேண்டும். அதேபோல், அடுத்த ஆண்டில் தவெகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு நெல்லுக்கான கொள்முதல் விலையை ரூ.3500 ஆக உயர்த்த வேண்டும். கரும்புக்கான கொள்முதல் விலையை பொறுத்தவரை 2025 &- 26 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து வழங்கப்பட்ட கரும்புக்கு மத்திய அரசால் டன் ஒன்றுக்கு ரூ. 3290.50 கொள்முதல் விலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் சார்பில் ஊக்கத்தொகை எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முன் 2024&-25ஆம் ஆண்டில் கரும்புக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகையான ரூ.349 -யுடன் கூடுதலாக ரூ.360.50 சேர்த்து ரூ.709.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டில் கரும்புக்கு டன்னுக்கு ரூ.4000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த ஊக்கத் தொகை அறிவிப்பு விவசாயிகளுக்கு முழுமையான மகிழ்ச்சியை அளிக்காது என்றாலும், மனநிறைவு அளிக்கும். 2026-&27 ஆம் ஆண்டுக்கான அரவைப் பருவம் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. வரும் பருவத்தில் கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு மத்திய அரசின் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ..3383 அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கடந்த ஆண்டுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத் தொகையை சேர்த்தால் டன்னுக்கு ரூ.4092 கிடைக்கும். கடந்த ஆண்டுக்கான ஊக்கத்தொகையுடன் நடப்பாண்டில் ரூ.408 உயர்த்தி வழங்கினால் கரும்புக்கு கொள்முதல் விலையாக ரூ.4500 கிடைக்கும். எனவே வரும் அரவைப் பருவத்தில் கரும்புக்கான கொள்முதல் விலையுடன் மாநில அரசின் ஊக்கத் தொகையாக ரூ. 1117 சேர்த்து வழங்க வேண்டும். அதற்கான அறிவிப்பை இப்போதே வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #📺உள்ளூர் தகவல்கள்📰 #செய்திகளின் உலகம்