துர்கா பூஜை நல்வாழ்த்துக்கள்

MUTHUPANDIAN RAMKUMAR
710 views
9 days ago
AI indicator
#வரலட்சுமி விரதம் 🙏🙏 #வரலட்சுமி ௮ம்மன் #வரலட்சுமி பூஜை தின நல்வாழ்த்துக்கள் 🌺🙏 #வரலட்சுமி பூஜை அலங்காரம் #எங்க வீட்டு வரலட்சுமி பூஜை அள்ளித்தருவாள் அலைமகள் - வரலட்சுமி விரதம் குறித்த சந்தேகங்களும் பதில்களும் நம் இல்லங்களில் லட்சுமி கடாட்சம் வேண்டும் என்று விரும்பாதவர்கள் யார்? செல்வ வளமும் சேர்ந்த உடன் சேர்ந்த நலமும் தரும் விரதங்களை நம் முன்னோர்கள் அருளியிருக் கிறார்கள். அவற்றில் தலையாயது வரலட்சுமி விரதம். தீர்க்க சுமங்கலி பாக்கியமும் பொன் பொருள் சேர்க்கையும் அருளும் இந்த விரதத்தைப் பெண்கள் மிகுந்த ஆர்வமுடன் கடைப்பிடிப்பது வழக்கம். அப்படிப்பட்ட விரதம் குறித்த சில கேள்விகளை ஜோதிடர் பாரதி தரிடம் கேட்டோம். “இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் எப்போது என்கிற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டது. சிராவண மாத பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை என்பதே பலரின் கருத்து. இது குறித்து பஞ்சாங்க பேதங்கள் இருந்தன. அவற்றை மனதில் கொண்டு காஞ்சி சங்கர மடத்திலிருந்து சமீபத்தில் ஒரு விளக்க அறிக்கை கொடுக்கப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் மாதம் 21 - ம் தேதியே வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று வழிகாட்டி உள்ளனர். இந்த நாளில் வீட்டில் மகாலட்சுமி தாயாரை வரலட்சுமியாக வழிபட வேண்டியது அவசியம். பொதுவாக வரலட்சுமிதேவியை கலசத்தில் ஆவாஹனம் செய்து வழிபடுவது ஒரு வழக்கம். கலசத்தில் அரிசி, பருப்பு, மஞ்சள், காசுகள் ஆகியன சேர்த்து மேலே மாவிலை, தேங்காய், ஆகியன வைத்துத் தயார் செய்ய வேண்டும். சிலர் ஜாதிக்காய், மாசிக்காய், பச்சைக் கற்பூரம் ஆகிய பொருள்களையும் சேர்ப்பார்கள். கண் மை டப்பியையும் போட்டு வைக்கும் வழக்கம் உண்டு. இவ்வாறு அம்மன் கலசங்களில் இட்டுவைத்த மையைப் பிறந்த குழந்தைகளுக்கு திலகமிட பயன்படுத்துவார்கள். அத்துடன் கட்டாயம் காதோலை கருகமணி சமர்ப்பிக்க கலசத்தின் இரு பக்கமும் தொங்கும்படி அதை மாட்டிவிட வேண்டும். வெள்ளிமுகம் இருப்பவர்கள் அதைக் கலசத்தில் பொருத்தலாம். இதில் பலரும் கேட்கும் கேள்வி ஒன்று உண்டு. வீட்டில் கலசம் வைத்து வழிபடும் வழக்கமே உள்ளது. இப்போது முகம் வாங்கி வைத்து வழிபடலாமா என்பதுதான். குடும்பத்தில் கலசம் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளவர்கள் அதையே செய்ய வேண்டும். பெண்கள் திருமணமாகி வரும்போது வெள்ளி முகம் சீதனாகக் கொண்டு வருவார்கள். அந்தப் புதிய முகத்தைக் கலசத்துக்கு அருகில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த கேள்வி, இதுவரை எங்கள் குடும்பங்களில் வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் பழக்கம் இல்லை. நாங்கள் புதிதாகத் தொடங்கலாமா என்பதுதான். நிச்சயமாகத் தொடங்கலாம். எந்தத் தவறும் இல்லை. ஆனால் தொடர்ந்து அதைக் கடைப்பிடிக்கும் மன உறுதி வேண்டும். ஆசைக்கு ஓர் ஆண்டு செய்துவிட்டு அதைக் கைவிட்டுவிடக் கூடாது. அம்மனை அழைப்பது என்பது வரலட்சுமி விரதத்தில் மிகவும் முக்கியமானது. விரத நாளுக்கு முன் தினம் மாலையே அம்மனை அலங்காரம் செய்துவிட வேண்டும். அந்த நாளில் இரவு அம்மனுக்கு புலகம் எனப்படும் துவரம்பருப்பு பொங்கல் செய்து நிவேதனம் செய்ய வேண்டும். மறுநாள் காலையே அம்மனை அழைக்க வேண்டும். வீட்டின் வாசலில் கோலமிட்டு அதில் மனைப் பலகை ஒன்றை அலங்கரித்து வைத்து அதில் அலங்கரித்த அம்மனின் கலசம் அல்லது முகத்தை அதில் எழுந்தருளச் செய்து பின் லட்சுமி வாராய் என் இல்லத்துக்கு என்று பாடி அழைக்க வேண்டும். வெள்ளிக் கிழமை காலை 8-9 மணிக்குள் அழைக்க வேண்டும். பிறகு அம்மனை மண்டபத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும். அம்மனைத் தனி ஒருவராக அழைத்துச் செல்லக் கூடாது. இருவர் அவசியம். இருவரும் சுமங்கலிக ளாக இருந்தால் சிறப்பு. உங்கள் வீட்டில் நீங்கள் ஒரு சுமங்கலி தான் என்றால் பக்கத்து வீடுகளிலுள்ளவர்கள் உதவிக்கு அழைத்துக் கொள்ளுங்கள். இதுகுறித்து முன்னரே அவர்களுக்குச் சொல்லி விட்டால் அவர்களும் குளித்து தயாராக இருப்பார்கள். பொதுவாக இந்த பண்டிகைகளே அனைவரோடு கூடியிருந்து குளிரத்தான் என்பதால் அக்கம்பக்கத்தில் நல்லுறவைப் பேண இவை உதவும். மண்டபம் அமைக்கும் வழக்கம் சில வீடுகளில் உண்டு. அதற்கு வீட்டில் இருக்கும் மர ஸ்டூல்களைப் பயன்படுத்துவார்கள். அப்படிப் பயன்படுத்தும்போது அதை முன் தினமே தூய்மை செய்து வைத்துவிட வேண்டும். அதற்கு வெள்ளை மற்றும் காவி வர்ணம் மாறி மாறிப் பூசி அலங்கரிக்க வேண்டும். முடிந்தவர்கள் புதிய ஸ்டூல் வாங்க முடிந்தால் நல்லது. வரலட்சுமியை ஆவாஹனம் செய்து பூஜையைத் தொடங்கலாம். வெள்ளிக் கிழமைகளில் 10.30.12 ராகு காலம் என்பதால் அதற்கு முன்பாகத் தொடங்கிவிடலாம். பூஜையைத் தொடங்கும் முன்பு கைகளில் கட்டிக்கொள்ளும் தோரணங்களை (மஞ்சள் சரடு) அம்மன் மீது அலங்காரமாக சாத்த வேண்டும். நம் வீட்டில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கையோடு ஒருசில சரடுகள் சேர்த்து வைக்க வேண்டும். இந்த சரடுகளில் ஒன்பது முடிச்சுகள் போட வேண்டும். பூஜையின் முடிவில் அந்த முடிச்சிகள் ஒவ்வொன்றுக்கும் பூஜை செய்து பின் கைகளில் கட்டிக்கொள்ள வேண்டும். முதலில் பிள்ளையார் பூஜையோடு தொடங்கி அவரவர் வழக்கப்படி நாமாவளிகள் சொல்லி நறுமண மலர்கள் சாத்தி வழிபடலாம். நிவேதனங்களும் அவரவர் வசதிப்படி செய்தால் போதுமானது. பூஜையில் வில்வம் இருப்பது சிறப்பு. திருமகளை ‘ பில்வ நிலயாயை நம:’ என்று போற்றித் துதிப்பார்கள் (பில்வம் -வில்வம் ). எனவே நமக்கு திருமகளின் கருணை கிடைத்து செல்வ வளம் சேரும். இந்த பூஜையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது சரடி கட்டிக்கொள்வதுதான். கட்டிக்கொள்ளும் சரடுகளுக்கு மலர் தூவி பூஜை செய்ய வேண்டும். ஒன்பது முடிச்சிகளையும் பின் வரும் மந்திரங்களைச் சொல்லி பூஜிக்க வேண்டும். ஓம் கமலாயை நம: ப்ரதம க்ரந்திம் பூஜயாமி ஓம் ரமாயை நம: த்வீதீய க்ரந்திம் பூஜயாமி ஓம் லோக மாத்ரே நம: த்ருதீய க்ரந்திம் பூஜயாமி ஓம் விச்வ ஜநந்யை நம: சத க்ரந்திம் பூஜயாமி ஓம் மகாலட்சுமியை நம: பஞ்சம க்ரந்திம் பூஜயாமி ஓம் க்ஷீராப்தி தநயாயை நம: ஷஷ்ட க்ரந்திம் பூஜயாமி ஓம் விவ்வஸாக்ஷிண்யை நம: ஸப்தம க்ரந்திம் பூஜயாமி ஓம் சந்த்ரஸோதர்யை நம: அஷ்டம க்ரந்திம் பூஜயாமி ஓம் ஹரிவல்லபாயை நம: நவம க்ரந்திம் பூஜயாமி என்று 9 முடிச்சையும் பூஜை செய்ய வேண்டும். அதாவது நவசக்திகளையும் அந்தக் கயிற்றில் எழுந்தருளச் சொல்லி பூஜிக்கிறோம். இதன் மூலம் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் தாயாரின் கருணை எப்போதும் நிறைந்திருக்கும்.✍🏼🌹
MUTHUPANDIAN RAMKUMAR
751 views
20 days ago
AI indicator
#துர்கா பூஜை #துர்கா பூஜை நவராத்திரி🪷 #நவராத்திரி துர்கா பூஜை #துர்கா பூஜை நல்வாழ்த்துக்கள் #துர்கா பூஜை தின நல்வாழ்த்துக்கள் . #ஸ்ரீ_துர்கா_தேவி_ஸ்லோகங்கள் – 20 ஸ்லோகங்களும் அவற்றின் அர்த்தங்களும் 🌺🙏 1. 🌺 சர்வமங்களா மங்கல்யே சிவ சர்வார்த்த சாதிகே. ஷரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே ॥ 📖 பொருள்: எல்லா மங்களங்களையும் அருளும் அன்னையே! சரணடைவோரைக் காக்கும் கௌரி தேவியே! உனக்கு நமஸ்காரங்கள். 2. 🪔 யா தேவி சர்வபூதேஷு சக்திருபேன சன்ஸ்திதா . நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ ॥ 📖 பொருள்: எல்லா உயிர்களிலும் சக்தியின் வடிவில் இருக்கும் அன்னைக்கு நமஸ்காரங்கள். 3. 🌼 யா தேவி சர்வபூதேஷு புத்திருபேன சன்ஸ்திதா . நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ ॥ 📖 பொருள்: ஒவ்வொரு உயிர்களிலும் அறிவின் வடிவில் இருக்கும் தேவிக்கு நமஸ்காரங்கள். 4. 🌸 யா தேவீ ஸர்வபூதேஷு லக்ஷ்மீரூபேண ஸன்ஸ்திதா । நமஸ்தே நமஸ்தே நமஸ்தே நமோ நமঃ ॥ 📖 பொருள்: செல்வம் மற்றும் செல்வத்தின் திருவுருவமான தேவிக்கு வணக்கம். 5. 🔱 দுர்கே ஸ்மৃதா ஹரஸி ভீதிமஶேஷஜம்தோঃ ॥ ஸ்வஸ்தைঃ ஸ்மৃதா மதிமதீவ ஶுভாம் দদாஸி ॥ 📖 பொருள்: துர்க்கை தேவியை நினைத்தால் பயம் நீங்கி சுப பலன்கள் கிடைக்கும். 6. 🌺 உன்னிடம் அடைக்கலம் புகுந்தவனுக்கு நமஸ்காரம். ஸர்வஸ்யார்தி ஹரே தேவி நாராயணி நமோஸ்துதே ॥ 📖 பொருள்: தன்னிடம் சரணடைபவர்களைக் காக்கும் கருணை தேவிக்கு நமஸ்காரங்கள். 7. 🪷 ஜெயந்தியின் பிறப்பு மங்கள காளி பத்ரகாளி கபாலி ॥ துர்கா க்ஷமா சிவ தாத்ரி ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே ॥ 📖 பொருள்: துர்கா தேவி தனது பல தெய்வீக வடிவங்களால் பக்தர்களைக் காக்கிறாள். 8. 🔥 ஓம் டும் துர்காயை நமஹ 📖 பொருள்: துர்கா தேவிக்கு நமஸ்காரங்கள்; இந்த மந்திரம் பாதுகாப்பையும் தைரியத்தையும் அளிக்கிறது. 9. 🌹 ஓம் ஐம் ஹ்ரீம் க்லிம் சாமுண்டாயை விச்சே 📖 பொருள்: சாமுண்டேஸ்வரியின் அருளையும் சக்தியையும் பெற உச்சரிக்க வேண்டிய ஒரு சிறந்த மந்திரம். 10. 🌻 நமோ தேவ்யை மஹாதேவியை ஷிவாயை சததம் நமஹ 📖 பொருள்: சிவனின் அவதாரமான பெரும் தேவிக்கு நமஸ்காரங்கள். 11. 🌷 ஓம் காத்யாயனை நமஹ 📖 பொருள்: காத்யாயன தேவி மங்களத்தை அருளுகிறாள். 12. 💐 ஓம் சண்டிகாயை நமஹ 📖 பொருள்: சண்டிகா தேவி தீய சக்திகளை அழிக்கிறாள். 13. 🌟 ஓம் பவந்யை நமஹ॥ 📖 பொருள்: பவானி அன்னை ஒரு தாயைப் போல எல்லா உலகங்களையும் காக்கிறாள். 14. 🕉️ ஓம் பார்வத்யை நமஹ॥ 📖 பொருள்: பார்வதி தேவி தனது பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் அருளுகிறாள். 15. 🌼 ஓம் ஜகதம்பாய் நமஹ॥ 📖 பொருள்: முழு உலகிற்கும் அன்னையானவளுக்கு நமஸ்காரம். 16. 🌺 ஓம் மஹாகௌர்யை நமஹ॥ 📖 பொருள்: மஹாகௌர் பாவங்களை நீக்கி தூய்மையை அருளுகிறார். 17. 🌸 ஓம் அன்னபூர்ணேஸ்வர்யை நமஹ॥ 📖 பொருள்: அன்னை அன்னபூர்ணா உணவையும் செல்வத்தையும் அருளுகிறார். 18. 🌹 ஓம் சைலபுத்ரியை நமஹ॥ 📖 பொருள்: ஹிமவானின் மகளான சைலபுத்ரி, தைரியத்தையும் நிலைத்தன்மையையும் அளிக்கிறார். 19. 🪔 ஓம் மஹிஷாசுரமர்தின்யை நமஹ॥ 📖 பொருள்: மஹிஷாசுரனைக் கொன்ற துர்கா, தர்மத்தைக் காக்கிறார். 20. 🙏 ஓம் ஸ்ரீ துர்கை நமஹ॥ 📖 பொருள்: ஸ்ரீ துர்காதேவியை பக்தியுடன் நினைப்பவர்களுக்கு ஆரோக்கியம், செல்வம், வெற்றிகள், அமைதி மற்றும் தெய்வீக அருள் கிடைக்கும். 🌺 பலஸ்ருதி 🙏 இந்த ஸ்லோகங்களை பக்தியுடன் பாராயணம் செய்யும் பக்தர்கள் துர்காதேவியின் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள், அச்சங்கள் நீங்கும், எதிரிகள் விரட்டப்படுவார்கள், மேலும் ஆரோக்கியம், செல்வம், தைரியம், வெற்றிகள் மற்றும் குடும்ப மகிழ்ச்சி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. 🌸🪔🙏
MUTHUPANDIAN RAMKUMAR
895 views
21 days ago
#சரஸ்வதி #ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் ஜம்மு காஷ்மீரில் சரஸ்வதி தேவி சக்தி பீடம் உள்ளது. 18 சக்தி பீடங்களில் முக்கியமான கோவில் இதுவாகும். தெலுங்கானாவில் ஞான சரஸ்வதி கோவில் உள்ளது. வர்கல் என்ற கிராமத்தில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. நிறைய பேர் தங்களின் குழந்தைகளின் வித்யாரம்பத்தை அங்கு செய்வார்கள். பாசர் வித்யா சரஸ்வதி கோவில் இது அடிலாபாத் ஜில்லாவில் உள்ளது. நிஜாம்பாத் செல்லும் அனைத்து இரயில்களும் இங்கு நிற்கும் ஸ்ரீ வித்யா சரஸ்வதி கோவில் வாரங்கால் மாவட்டத்தில் உள்ளது. காளீஸ்வரம் மகா சரஸ்வதி கோவில் சிறப்பு வாய்ந்த கோவில். கர்நாடகா சிரிங்கேரி சாரதாதேவி பீடம் உள்ளது. சாரதா தேவி கோவில் துங்கபத்ரா நதிக்கரையில் உள்ளது. ஆதி சங்கரர் உருவாக்கிய இந்த பீடத்தில் அன்னை சரஸ்வதிக்கு கோவில் உள்ளது. கேரளா கோட்டையம் அருகே பனச்சிக்காடு சரஸ்வதி கோவில் உள்ளது. கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் தட்சிண மூகாம்பிகா கோவில் உள்ளது. இது பிரபல சரஸ்வதி கோவில். கூத்தனூர் சரஸ்வதி கோவில் சரஸ்வதிக்கான பிரத்யேகமான தலங்களில் இது முக்கியமானது. இரண்டாம் ராஜராஜசோழனால் ஒட்டக் கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்ட கோயில். அதனால் கூத்தனூர் என்று பெயர். கருவறையில் வெண்ணிற ஆடை தரித்து வெண் தாமரையில் பேரெழிலோடு வீற்றிருக்கிறாள், சரஸ்வதி. வலது கீழ் கரத்தில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல் கரத்தில் அட்சர மாலையும், இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கியிருக் கிறாள். ஜடா முடியுடன், ஞானச்சஸ் என்கிற மூன்றாவது கண்ணும் கொண்டு, கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். முதன் முதலாக அட்சராப்பியாசம் என்கிற கல்வியைத் தொடங்கும் குழந்தைகள் இங்கு வந்து ஆரம்பிக்கிறார்கள். கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜிக்க நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார். ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர். கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் சரஸ்வதி பூஜை அன்று அம்பிகையின் பாதங்களில் பக்தர்கள் மலரிட்டு அர்ச்சனை செய்யலாம். விஜயதசமியன்று காலை ருத்ராபிஷேகம் நடைபெறும். மாதந்தோறும் கலைமகளுக்கு பவுர்ணமி அன்று மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், மூல நட்சத்திரம் அன்று சிறப்பு அபிஷேகம் உண்டு.