⛪ பைபிள் வசனம் ✝️

Angel Media Voice of God
1.2K views
7 hours ago
#✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝பிரார்த்தனை எத்தனை தேவ பக்தியுள்ளவர்களாக இருந்தாலும், அன்புள்ளவர்களாக இருந்தாலும், உங்களையும் வருத்தப்படுத்தும் விசாரங்கள் நிச்சயமாக உங்களுக்கு வரும். ஆனால் உங்களுக்கும் மற்ற ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டு! எப்படியெனில் உங்கள் இருதயத்தில் கர்த்தர் அருளுகின்ற ஆறுதல் காணப்படும். ஆம் நன்றாக நினைத்துப் பாருங்கள், யாரோ ஒருவர் உங்களை தேற்றி தைரியப்படுத்துவதுபோல ஒரு ஆறுதல் வரும், சரி ஙிடு என்பதுபோல. எனவே திரும்பத்திரும்ப பழையதையே நினைத்துப் புலம்பாமல் உங்களை ஆறுதல்படுத்தும் ஆண்டவருடைய நடத்துதலுக்கு உங்களை ஒப்புக்கொடுத்து சமாதானமாயிருங்கள்!
S.ANTHONY✝️YESUMARY
5.4K views
12 hours ago
*🙏🏻 பரிசுத்த பரலோகமாதாவை நோக்கி ஜெபம் மற்றும் புகழ்மாலை 🙏🏻* 👑🌹👑🌹👑🌹👑🌹👑🌹👑 *தேவமாதா மோட்சத்துக்கு அழைத்துக் கொள்ளப்பட்டதின் பேரில் செபம்.* மகா மகிமைப் பிரதாபத்தோடு பரலோகத்துக்கு எழுந்தருளின புனித தேவமாதாவே ! நீர் சரீரத்தோடு விண்ணேற்றமடைந்த மகிமை, உம்முடைய புனித வாழ்வுக்கு ஏற்ற பரிசு அல்லவா ! அது என்னவென்றால், மண்ணால் உண்டாக்கப்பட்ட உடல் மண்ணாய்ப் போகவேண்டுமென்று ஆதாம் செய்த பாவத்துக்கு கட்டளையிட்டிருந்தாலும் , உம்மிடத்தில் அப்படிப்பட்ட பாவத்தின் அடையாளம் காணவில்லையே, அதனால் ஆண்டவர் தாம் மரித்தோரிடத்தில் நின்று உயிர்த்தெழுந்தது போல் உம்மையும் உயிரோடு எழுந்தருளப் பண்ணினார். அவர் தாமே உடலோடு வானத்துக்கு ஏறினது போல, உம்மையும் அதுபோல ஆத்ம சரீரத்தோடு ஏறப்பண்ணினாரே, நீர் பரலோகத்துக்கு ஏறின போது சந்திரன் உம்முடைய பாதத்தை தாங்க , சூரியன் உம்முடைய உடலில் போர்வையாய்ப் படிய ,விண்மீன்கள் உமது தலையில் மகுடமாய் விளங்க , தூதர்கள் ஸ்துதியங்கள் பாட , விண்ணகத்தில் சேர்ந்தவுடனே பிதா சுதன் பரிசுத்த ஆவியால் நித்திய பரலோக இராக்கினியாக முடிசூட்டப்பட்டீரே . ஆ ! இவ்வித வெகுமான மகிமையோடு பரலோகத்துக்கெழுந்தருளிய உம்மைக் கண்ட அடியேன் இன்றுதானே உம்மோடே பறந்துவரத்தக்க ஆசையோடு இருக்கிறேன் . ஆனாலும் , இப்படிப்பட்ட நன்மைபெற நான் பாத்திரமாகாதபடியால் , இன்று உம்மோடு என்னுடைய நினைவைப் பரலோகத்துக்குயர்த்தி , இவ்வுகலகத்தை மறந்து நடக்கப் பண்ணியருளும் . அப்படியே சாகும்வரை உம்முடைய சலுகையால் நான் நடந்து உமக்குப் பணிசெய்து ,என் ஆத்துமம் பரலோகத்தில் சேர்ந்து எக்காலமும், உம்மை கண்டு ஸ்துதித்து மோட்ச ஆனந்தம் அனுபவிக்கும்படி கிருபை பண்ணியருளும் . *🙏🏻ஆமென்.🙏🏻* 🌹👑🌹👑🌹👑🌹👑🌹👑🌹 *பரிசுத்த பரலோக மாதா புகழ்மாலை* 👑🌹👑🌹👑🌹👑🌹👑🌹👑 சுவாமி, கிருபையாயிரும் கிறிஸ்துவே, கிருபையாயிரும் சுவாமி, கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும். கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும். பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி மோட்ச இராக்கினியாகிய புனித மரியாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் நித்திய காலமாய்ச் சர்வத்துக்கும் ஆண்டவளாகத் தேவ சித்தத்தால் நியமிக்கப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் பரலோக பூலோக இராக்கினியாக மாசில்லாமல் உற்பவித்த புனித மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆதிமுதல் நிகரற்ற பரிசுத்தத் தனமாய்ப் பிறந்த பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் எப்போதும் மாசில்லாதவளாய் விளங்கிய பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் விடியற்கால நட்சத்திரமாக உலகத்தில் உதித்த பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் பெண்ணால் அழிந்த உலகைப் பெண்ணாலே மீட்கக் கருதின தேவபிதாவினால் இரட்சகருக்கு மாதாவாக நியமிக்கப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் பரம நாயகியாகிய மரியென்னும் தயை நிறைந்த நாமதேயம் சூட்டப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் வயதில் வளர மென்மேலும் சகல புண்ணியங்களாலும் அதிகரித்து விளங்கின பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மனிதரெல்லார்க்கும் புண்ணிய மாதிரிகையாகவும் ஞான தீபமாகவும் ஒளிர்ந்த பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அருள் நிறைந்த மரியே வாழ்க என்று தேவதூதனால் மங்களம் சொல்லப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் நிகரற்ற அற்புதமாய் இஸ்பிரித்து சாந்துவின் வரப்பிரசாதத்தினாலே கன்னிமையோடு கர்ப்பந்தரித்து அவதரித்த இரட்சகரைப் பெற்ற பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தேவகுமாரனாகிய கர்த்தாவைப் பெறும் முன்னும், பெற்ற போதும் , பெற்ற பின்னும், கன்னி மகிமை கெடாத பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அப்படியே சர்வேசுரனுடைய புனித மாதாவாகிய பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தேவ பிதாவின் குமாரத்தியுமாய், சுதனின் தாயாருமாய், பரிசுத்த ஆவியின் நேச பத்தினியுமாய் இருக்கிற பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் சர்வேசுரனுடைய உத்தம சாயலுமாய்த் தேவாலயமுமாய் விளங்கிய பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் எங்கள் இரட்சணியத்தின் நிமித்தம் இயேசு நாதருடைய திருப்பாடுகளுக்குப் பங்காளியான பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அவர் உயிர்த்த போதும் மோட்சத்திற்கு எழுந்தருளின போதும் அளவிறந்த ஆனந்தம் அனுபவித்த பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் சுவாமி மோட்சத்துக்கு ஆரோகணமான பின்பு திருச்சபைக்கு ஆறுதலும் ஆதரவுமாக இவ்வுலகத்தில் நின்று போன பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் பூவுலகில் சஞ்சரித்த அளவும் நினைவினாலும் ஆசையினாலும் பரலோகத்தில் தங்கின பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தேவ சித்தத்தினால் உமக்குக் குறிக்கப்பட்ட சீவிய காலமளவும் இப்பரதேச துன்பங்களை அத்தியந்த தைரியம், பக்தி, பொறுமை முதலிய சற்குணங்களோடு அனுபவித்த பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் இவ்வுலகில் இருந்த நாளளவும் அதிகமதிகமாய் எல்லா வரங்களிலும் அதிசயித்து நிகரற்ற புண்ணிய சம்பாவனை அடைந்த பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் உமது திரு மரண சமயத்தில் தூர தேசங்களில் இருந்த அப்போஸ்தலர்களை முதலாய் அற்புதமாக வரும்படி செய்தருளிய பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் இப்பிரபஞ்சம் விடுவதற்கு முன் தாயின் அன்போடே சீஷர்களை ஆசீர்வதித்துத் தேற்றிய பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அச்சமயத்தில் தரிசனையான சம்மனசுக்களால் பேரின்ப சந்தோஷமடைந்த பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தேவ சிநேக மிகுதியால் ஆத்துமம் பிரிந்து பரலோகத்தில் சேர்ந்த பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் சொல்லில் அடங்காத ஆனந்தத்துடன் உம்முடைய திருக்குமாரன் சமூகத்தில் சேர்ந்த பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் சம்மனசுக்களும் அப்போஸ்தலர்களும் திருச்சங்கீதங்களைத் தொனிக்க மிகுந்த பக்தி வணக்கத்தோடே சீஷர்களால் திருமேனி அடக்கம் செய்யப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மூன்று நாள் பரியந்தம் உமது திருக்கல்லறையில் கேட்கப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் சம்மனசுக்களுடைய இன்பமுள்ள சங்கீதங்களால் ஸ்துதிக்கப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மூன்றாம் நாள் ஆத்தும சரீரத்தோடு உயிர்த்துப் பேரின்ப இராச்சியத்துக்கு எழுந்தருளின பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அத்தியந்த மகிமை ஒட்டலோகமாய்ப் பரலோகத்தில் சேர்ந்த பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் சம்மனசுக்களின் சேனைகளால் சொல்லில் அடங்காத இன்ப சங்கீதங்களைக் கொண்டு ஸ்தித்துக் கொண்டாடப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் உம்முடைய திருக்குமாரனால் நிகரற்ற சுத்த நேசத்துடனே அரவணைக்கப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் பிதாப் பிதாக்கள் முதலிய சகல மோட்சவாசிகளினாலும் வணங்கிக் கொண்டாடப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் சர்வலோகத்துக்கும் இராக்கினியாய்த் தேவ பிதாவினால் மகிமைக் கிரீடம் சூட்டப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் உம்முடைய திருக்குமாரனின் அண்டையில் மகிமைச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிற பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் உமது திருப்பாதத்தால் சந்திரனை மிதிக்கும் பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அழகினால் பூரண சந்திரனை வென்று மகிமை ஆடையாகச் சூரியனை அணிந்த பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் பன்னிரண்டு நட்சத்திரங்களை முடியாகத் தரித்திருக்கும் பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் சத்துருக்களுக்குப் பயங்கரம் வருவிக்கும் அணிவகுப்பான பணிவிடைக்காரருள்ள வல்லபமுடைத்தான பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் சர்வலோகத்திலும் அளவிறந்த வல்லமை பெற்றிருக்கிற பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் நரகசர்ப்பமாகிய பசாசின் தலையை நசுக்கிப் பேய்களை எல்லாம் நடுங்கச் செய்து துரத்தும் பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தேவ இஷ்டப் பிரசாத பொக்கிஷங்களை உமது வசமாகக் கொண்டிருக்கிற பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் கிருபை தயாபம் நிறைந்த இராக்கினியாகிய பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் எண்ணிறந்த நன்மை அற்புதங்களால் உமது வல்லமையை விளங்கச் செய்தருளின பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் பல முறை இராச்சியங்களையும் , பட்டணங்களையும் , குடும்பங்களையும் ஆபத்தினின்று இரட்சித்து நிலை நிறுத்திய பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் சொல்லில் அடங்காத வேறு புதுமை உபகார சகாயங்களால் உமது தயாளத்தைக் காட்டியருளிய பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் எண்ணில் அடங்காத பேர்களை பேரின்ப இராச்சியத்தில் சேர்ப்பித்த பாவிகளுக்கு அடைக்கலமாகிய பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் இப் பிரதேசத்தில் சஞ்சரிக்கிற உமது நேச பிள்ளைகளை மறவாத பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் உமது பேரில் மெய்யான பக்தியுள்ளவர்களை ஒரு போதும் கைவிடா பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் சீவிய நாளிலும் மரண நேரத்திலும் எங்களுக்கு அடைக்கலமும் ஆதரவும் தேற்றரவுமாகிய பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் சகல புனிதர்களையும் விட புண்ணியத்தினாலும் மகிமையினாலும் விளங்குகிற பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் சர்வலோகத்திலும் ஸ்துதி வணக்கக் கொண்டாட்டம் பெற்றிருக்கிற பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் படைப்புண்ட சகல வஸ்துக்களாலும் ஸ்துதிக்கவும் மன்றாடவும் வணங்கவும் படுவதற்குப் பாத்திரமான பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் கன்னியர்களுக்கு மாதிரிகையும் இராக்கினியுமாகிய பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் சம்மனசுக்களுக்கும் மற்ற சகல புனிதர்களுக்கும் இராக்கினியான பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, - எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, - எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. *🙏🏻செபிப்போமாக🙏🏻* சர்வத்துக்கும் அதிபதி கர்த்தாவாகிய நித்திய சர்வேசுரா! அவதரித்த உம்முடைய திருக்குமாரனுக்கு மாதாவான புனித கன்னி மரியம்மாளை எங்களுக்குத் தாயாராகவும் இராக்கினியாகவும் தந்தருளினீரே / உம்முடைய கிருபை வரப்பிரசாதத்தால் மோட்ச அலங்காரியான இந்தப் பரமநாயகியின் உத்தம புண்ணியங்களை அடியோர்கள் இப் பரதேசத்தில் சஞ்சரிக்கிற வரைக்கும் முத்திரையாய் அனுசரித்து உமது பேரின்ப தரிசனையில் அவருடைய ஆனந்த பாக்கியத்துக்குப் பங்காளியாகும்படிக்கு எங்கள் மன்றாட்டுக்களையும், எங்கள் அன்புள்ள மாதா எங்களுக்காகச் செய்யும் மன்றாட்டுக்களையும் கேட்டு எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும். இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி *ஆமென்.* #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு