#😎வரலாற்றில் இன்று📰 #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 கும்பிடும் பொழுது கண்ணீர் வருகிறதா? வீட்டில் பூஜை அறையில் கண்ணீர் விடுவது நல்லதா? கெட்டதா?*🌹
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
மனம் உருகி இறைவனை நாம் பிரார்த்திக்கும் பொழுது கண்டிப்பாக எல்லோருடைய கண்களிலும் கண்ணீர் சிறிதளவு பெருக்கெடுக்க துவங்கும். இப்படி சாமி கும்பிடும் பொழுது கண்ணீர் விடுவது என்பது சரியான செயலா? கடவுளை கும்பிடும் பொழுது ஏன் கண்களில் கண்ணீர் வருகிறது? வீட்டின் பூஜை அறையில் அமர்ந்து கொண்டு கண்ணீர் விடுவது என்பது நல்லதா? கெட்டதா? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் ஆன்மிகத் தகவல்களாக தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
வீட்டின் பூஜை அறையில் அமர்ந்து கொண்டு இருக்கும் பொழுது பூஜை செய்து விட்டு பார்த்தால் நம்முடைய மனம் கலங்கி கண்ணீர் ஆனது வெளியில் வரும். இது எப்பொழுதும் நடக்கா விட்டாலும், எப்பொழுதாவது நிச்சயம் நடந்திருக்கும். அதே போல வீட்டில் மட்டும் அல்லாமல் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்கும் பொழுது நம்மை அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இப்படி கோவிலில் நின்று கொண்டு அழுவது என்பது நல்ல செயல் தானா? என்று கேட்டால் நிச்சயம் நன்மை தான்.
வெள்ளிக்கிழமையில் அழுகை சத்தம் வீட்டில் கேட்டால் துரதிர்ஷ்டம் வரும் என்று கூறுவார்கள். ஆனால் அது துக்கத்திற்காக வரும் அழுகை, வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு வரக்கூடிய அழுகையே அன்றி நாம் இறைவனை நினைத்து மனமுருகி தியானிக்கும் பொழுது அழுவது என்பது ரொம்பவே நல்ல விஷயம் தான். வெள்ளிக்கிழமையில் பூஜை செய்யும் பொழுது வீட்டில் பெண்கள் கண்டிப்பாக ஆழ கூடாது. எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் இறைவனை நினைக்கும் பொழுது தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டுமே தவிர, துக்கத்திற்கு இடம் தரக்கூடாது.
உங்களுடைய பிரார்த்தனைகளை இறைவன் நிறைவேற்றுவார் என்கிற தன்னம்பிக்கையுடன் நீங்கள் பூஜை செய்ய வேண்டுமே தவிர இப்படி எல்லாம் இருக்கிறது என்று அழுது கொண்டே ஒருபொழுதும் பூஜை செய்யக்கூடாது. இதனால் உங்களுக்கு வரக்கூடிய நன்மைகளும் வராமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு.
வீட்டில் பூஜை செய்யும் பொழுது இறைவனை நினைத்து மனமுருகி அந்த இறைவனை நீங்கள் மனக் கண்களால் காணும் பொழுது உங்களை அறியாமல் நீங்கள் அழுது விடுவீர்கள். வீட்டில் மட்டுமல்ல கோவிலிலும் இதே தான் நிகழ்கிறது. மனமுருகி இறைவனை மனக்கண்ணால் நாம் கண்டு விடுகிறோம், அதனால் தான் நம்மை அறியாமல் நம் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🙏கோவில்

