ShareChat
click to see wallet page
ஸ்ரீ (969)🏹🚩அடையார் சீயமும்,வலி மிக்க சீயமும்!!--பாகம் 1/3. 🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁 நாளை மறு நாள் (04/12/2025), கார்த்திகையில் கார்த்திகை- திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திரம்.ஆழ்வார்களில் இளையவரான இவர் பயமறியாத இளங்கன்றாக பல ஆச்சர்ய மூட்டும் கைங்கர்யங்களைச் செய்துள்ளார். இவரே தம்மைப் பற்றி பல பட்டங்களைக் கட்டியங்களாகப் பாடியுள்ளார். அவற்றுள் ஒன்று, 'அடையார் சீயம்'--சத்ருக்களுக்கு சிம்மம் போன்றவர். அந்த 'அடையார் சீயம்' பாடிய பாசுரங்களை அனுபவித்து, நெஞ்சம் பூரிக்க, அதனால் வலி(மை) மிக்க சிம்மமாய் ஆனார் ராமாநுஜர், என்கிறார் அமுதனார். "கலிமிக்க செந்நெற் கழனிக் குறையல் கலைப் பெருமாள், ஒலிமிக்க பாடலையுண்டு, தன்னுள்ளம் தடித்து அதனால், வலிமிக்க சீயம் இராமானுசன் மறை வாதியராம், புலிமிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே!" அந்த அடையார் சீயத்துக்கும், இந்த வலிமிக்க சீயத்துக்கும் உள்ள உன்னதத் தொடர்பைப் பார்ப்போம். 1.வேந்தரைப் பாடிய வேந்தர்: ✡☸⚛⚛🕎🔱🔱✡☸ எதிகளின்(சாதுக்களின்) வேந்தரான (எதிராஜர்),குறையலூர் வேந்தரை (திருமங்கை மன்னன்)ப் போற்றிப் பாடிய தனியன்: "வாழி பரகாலன்,வாழி கலிகன்றி, வாழி குறையலூர் வாள் வேந்தன் -வாழியரோ மாயோனை வாள்வழியால் மந்திரங்கொள் மங்கையர்கோன் தூயோன் சுடர்மான் வேல்." இந்த வேந்தர், மேலும் இரண்டு வேந்தர்களுக்கு மட்டுமே பாடியுள்ளார். ஆழ்வார்களின் வேந்தர் நம்மாழ்வாருக்கும்,( 'முந்துற்ற நெஞ்சே')சேரநாட்டு வேந்தர், குலசேகரஆழ்வாருக்கும்('இன்னமுதம் ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே!'). 2.இமயத்தை வென்ற இன்னருளாளர்கள்: 🔔🔈🔉🔊📢📣🔔 86 திவ்ய தேசங்களைப் பாடிய திருமங்கை ஆழ்வார் முதலில் பாடியது இமயத்தில் உள்ள திருப்பிரிதி (1-1,2),திருவதரிபத்ரிநாத்(1-1-3,4), திருசாளக்கிராமம்(1-1-5)நைமிசாரண்யம்(1-1-6)திவ்ய தேசங்கள். ராமாநுஜர் இமயத்தில் இருக்கும் காஷ்மீரம் சென்று தம் சாஸ்திர ஞானத்தால் அங்குள்ள பண்டிதர்களை வென்றார். அவருடைய மேன்மையை ஸ்ரீசரஸ்வதி தேவியே அங்கீகரித்து "ஸ்ரீபாஷ்யகாரர்"என்று அழைத்தார்.அவர் இயற்றிய ஸ்ரீபாஷ்ய சாரம் சுவடிகளைத் தம் சிரசில் வைத்து மரியாதை செய்தார். 3.மாறன் அடிபணிந்து உய்ந்தவர்கள்: 🙏🙏🙏🙏🙏🙏 பரகாலன்,பராங்குசரின் நான்கு தமிழ் வேதங்களுக்கு ஆறு அங்கம் இயற்றினார். ஸ்ரீரங்கத்தில் பத்து நாட்கள் அத்யயன உற்சவம் ஆரம்பித்து நாளும் திருவாய்மொழி சேவிக்கச் செய்தார். ராமாநுஜர் "உறுபெருஞ் செல்வமும், தந்தையும்,தாயும்,உயர்குருவும்,வெறிதரு பூமகள் நாதனும், மாறன் விளங்கியசீர், நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந்நீணிலத்தோர் அறிதரநின்றார்" தம் காலட்சேபத்தில் திருவாய் மொழிக்கு பல அரிய அர்த்தங்கள் சாதித்தார். திருக்குருகைப் பிரான் பிள்ளான் மூலம் திருவாய் மொழிக்கு முதல் வ்யாக்யானம் -ஆறாயிரப்படி-இயற்றச் செய்தார். 4.ஸ்ரீரங்கத்தில் அத்யயன உற்சவம் நடத்தி, நம்மாழ்வார் புகழ்பாடிய புண்ணியர்கள்: 👏👌👏👌👏👌👏👌 ஒரு கார்த்திகையில் கார்த்திகை யன்று, நம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் எழுந்தருளியிருந்த போது, திருமங்கை ஆழ்வார் நம்பெருமாள் உகக்கும் வண்ணம் 'திருநெடுந் தாண்டகம்'என்னும் பிரபந்தம் பாடினார்.அவ்வமயம் திருமங்கையாழ்வார், பெருமாளிடம் 10 நாட்கள் திருவாய் மொழி உற்சவத்தை நடத்த வேண்டும் என்று விண்ணப்பித்தார். அரங்கரும் இசைந்து,உடனே ஆழ்வார் திருநகரியிலிருக்கும் நம்மாழ்வாருக்கு,ஸ்ரீரங்கம் வந்து அத்யயன உற்சவம் நடத்தித் தருமாறு ஒரு ஸ்ரீமுகம்(கடிதம்) அனுப்பச் செய்தார்.ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வார் ஒவ்வோர் ஆண்டும் ஸ்ரீரங்கம் எழுந்தருளி, வைகுண்ட ஏகாதசியிலிருந்து 10 நாட்கள் திருவாய்மொழி உற்சவம் நடத்தி வைத்தார்.திருமங்கை ஆழ்வார் கட்டிய நூற்றுக்கால் மண்டபத்தில் இந்த உற்சவம் நடந்தது. நாதமுனிகள் காலத்தில் பகல் பத்து, இராப்பத்து என்று நாலாயிரத்துக்கும் விமரிசையாக நடந்த இந்த உற்சவம் சில ஆண்டுகளுக்குப் பின் பல தடைகளைக் கண்டது. ராமாநுஜர் காலத்தில் மீண்டும் இந்த உற்சவம் சிறப்பாக-நாலாயிரத்து க்கும் ஆன முத்தமிழ் விழாவாக-இருபது நாட்கள் நடக்க ஏற்பாடு செய்தார்.ஆழ்வார்திருநகரியிலிருந்து,நம்மாழ்வாரை எழப்பண்ணுவதில் பல சிரமங்கள்/எதிர்ப்புக்களை எதிர் கொள்ள வேண்டியிருந்ததால், ஸ்ரீரங்கத்திலேயே நம்மாழ்வாருக்கு சந்நிதி அமைத்து,நம்மாழ்வார், மதுரகவியாழ்வார்,திருமங்கை ஆழ்வார் விக்ரகங்களை அந்த சந்நிதியில் பிரதிஷ்டை செய்வித்தார். பரமபத நாதர் சந்நிதிக்கு எதிரில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் இந்த உற்சவம் நடந்தது. ஸ்ரீரங்கத்தில் மட்டுமல்லாது மற்ற திவ்ய தேசங்களிலும் இந்த உற்சவம் நடக்க ஏற்பாடு செய்தார். 5.வேதத்தை விரித்துரைக்கும் கிரந்தங்களை இயற்றிய விற்பன்னர்கள்: 📖📃📓📔📖📃 தமிழ் வேதங்களாகிய நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்களை விரித்துரை க்கும் வண்ணம் ஆறு(6) அங்கங்களாக "பெரிய திருமொழி, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை" என்னும் ஆறு பிரபந்தங்களைப் பாடினார் மங்கைமன்னன். வேதங்களை(வடமொழி) விரித்துரை க்கும் வண்ணம் எம்பெருமானார் செய்த கிரந்தங்கள்: "ஸ்ரீபாஷ்யம் வேதார்த்த ஸங்ரஹம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், கீதாபாஷ்யம், நித்ய கிரந்தம்" என்னும் ஆறு கிரந்தங்களை இயற்றினார்('கத்யதிரயம்'இந்த வரிசையில் கொள்ளவில்லை.) 6.அரங்கருக்கு மதிள்கட்டிய மகான்கள்: 🏛🏛🏛🏛🏛🏛🏛🏛 திருமங்கை ஆழ்வார் அரங்கருக்கு நான்காம் சுற்று மதிளாக 'ஆலிநாடன் திருச்சுற்று' (கொட்டாரம்,களஞ்சியம்,மேல/கீழப்பட்டாபிராமர் சந்நிதி, உள்மணல்வெளியை அடக்கியது) கட்டினார். ராமாநுஜர் நியமனமாக அவர் சீடர், சிற்றரசர் 'அகளங்க நாட்டாழ்வான்' ஐந்தாம் சுற்று மதிளைக் கட்டினார் (ரங்கா, ரங்கா கோபுரம்,வடக்கு வாசல்,வெள்ளைகோபுரம் ஆகியவற்றை வாயில்களாகக் கொண்டது). 7 அரசர்கள் ஆஸ்ரயித்த ஆழ்வார்/ஆசார்யர்: 👍👍👍👍👍👍👍 திருவாலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர், திருமங்கை மன்னர் சோழப்பேரரசுக்குக் கட்ட வேண்டிய கப்பத்தொகையைக் கட்டாமல், அதை பகவத், பாகவத கைங்கர்யங்க ளுக்குச் செலவிட்டார்.அரசு ஊழியர்கள் கப்பம் வசூலிக்க வந்த போது,அவர்களோடு போரிட்டு விரட்டி அனுப்பி விட்டார். அரசன் திருமங்கை மன்னரை சிறையில் அடைத்து விட்டான். அப்போது தேவப்பெருமாள் திருமங்கையார் கனவில் தோன்றி காஞ்சியில் வேகவதி நதிக்கரையில் செல்வம் இருப்பதாகவும் அதை எடுத்து அரசனுக்குக் கொடுக்கு மாறும் சொன்னார்.அரசனின் படை வீரர்களைத் தம்முடன் கூட்டிச் சென்ற பரகாலன், வேகவதிக் கரையில் ஆற்று மண்ணை அளந்து கொடுத்தார். முதலில் கோபித்த அவர்கள்,அளந்து கொடுத்த மண் நெல்லானது கண்டு வியந்தார்கள். அரசனிடம் சென்று நடந்ததைச் சொன்னார்கள்.ஆழ்வாரின் பெருமையறிந்த அரசன் அவருக்கு தண்டம் சமர்ப்பித்து, அவருக்கு மேலும் பல தனங்களைக் கொடுத்ததோடு, தானும் பலதான,தர்மங்களைச் செய்தான். ராமாநுஜரை பல பேரரசர்கள்-சோழ மன்னர்கள்,பல்லவராயன்,(ஆந்திரா) பிட்டிதேவராயன்(விஷ்ணுவர்த்தன்-கர்நாடகா),சோடகங்கதேவன் (கலிங்கம்-ஒரிஸ்ஸா), காஷ்மீரமன்னன்,அகளங்கன் முதலானோர் ஆஸ்ரயித்து அவருடைய கைங்கர்யங்களுக்கு பெரும்தனம் கொடுத்து உதவினர். சிலர் அவரிடம் சீடர்களாகி ஸ்ரீவைஷ்ணவர்களாக மாறினர். 8.காஞ்சி வரதர் அருளிய காருண்யம்: 🤚🤚🤚🤚🤚🤚🤚🤚 ராஜ தண்டனையிலிருந்து திருமங்கை ஆழ்வாரைக் காப்பாற்றுவதற்காக வரதர் மண்ணை நெல்லாக்கிய வைபவத்தை மேலே பார்த்தோம்.ராமாநுஜருக்கு,பல கட்டங்களில் வரதர் கருணை பொழிந்தார்.ஆறுவார்த்தை அருளியது, துறவறம் தந்தது, எதிராஜர் நாமம் சாற்றியது, ஸ்ரீவைஷ்ணவ சாம்ராஜ்யத்தின் தலைமைப் பொறுப்பேற்க ஸ்ரீரங்கம் அனுப்பி வைத்தது, திருவாராதனைப் பெருமாளாக வழி காட்டியது, யக்ஞமூர்த்தியை வாதத்தில் வெல்ல உதவியது, ஆழ்வானுக்குக் கண் பார்வை அருளியது எனப்பல!! ......தொடரும். (அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்) படங்கள்: 1.பரகாலன். 2.திருமங்கை ஆழ்வார் வெண்ணெய்க்கு ஆடும் கண்ணனாக திரோவாலி திருநகரி 3,4:திருமங்கை ஆழ்வார் கட்டிய ஆலிநாடன் திருச்சுற்றில் உள்ள தானியக் களஞ்சியங்கள் (ஸ்ரீரங்கம்). 5.திருமங்கை ஆழ்வார் நான்காம் சுற்று மதிள் கட்டும் போது,தொண்டரடிப் பொடியாழ்வார் மாலை கட்டும் இடத்தை விட்டு வளைத்துக் கட்டியது(கோதண்டராமர் சந்நிதிக்குப் பின்புறம்). 6.பகல்பத்து உற்சவத்துக்கு எழுந்தருளும் நம்பெருமாள். 7,8:நம்பெருமாளை வரவேற்கக் காத்திருக்கும் நம்மாழ்வார்,திருமங்கையாழ்வார்,ராமாநுஜர்;பெருமாள் புறப்பாட்டைத் தொடர்ந்து மூவரும். 9,10,11,12.அத்யயன உற்சவம்-அர்ச்சுன மண்டபத்தில் நம்பெருமாள்,நம்மாழ்வார் திருமங்கையாழ்வார்,உடையவர். #பெருமாள்
பெருமாள் - ShareChat

More like this