பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
ShareChat
click to see wallet page
@baskar3883
baskar3883
பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
@baskar3883
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
ஸ்ரீ (969)படித்ததையே வாழ்வாக்கிக் கொண்டவர்! - சுதர்சன் மார்கழி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்த ஆழ்வார் தொண்டரடிப் பொடியாழ்வார். மார்கழி மாதத்தில் அதே கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தவர் பெரியநம்பிகள் என்ற வைணவ ஆச்சாரியர். ஆளவந்தாரின் முக்கியமான சீடர்களில் ஒருவர். ராமானுஜரின் ஐந்து ஆச்சாரியர்கள் பிரதானமானவர். அதாவது ராமானுஜருக்கு வைணவ தீட்சை எனப்படும் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்த நேரடி ஆசாரியர், பெரிய நம்பிகள். இன்றும் பெரியநம்பிகள் வம்சத்தவர்கள் திருவரங்கத்திலிருந்து கைங்கரியம் செய்து வருகின்றனர். பெரிய நம்பிகள் வாழ்க்கை வரலாறு சுவையானது, அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது. ஒரு ஆசாரியன் உத்தமமான ஞானத்தோடு வாழ வேண்டும். சாதுவாக இருக்கவேண்டும். குருநாதர் மீது அகலாத பக்தி இருக்க வேண்டும். சீடர்கள் மீது சாலச் சிறந்த அன்பு இருக்க வேண்டும். இத்தனையும் ஒரே இடத்தில் பரிபூரணமாக அமைந்தவர் பெரிய நம்பிகள். எந்தத் தத்துவத்தை நம்பினோமோ, அந்தத் தத்துவத்தை, விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வாழ்க்கையில் கடைபிடித்தவர் பெரிய நம்பிகள். சொல் வேறு; செயல் வேறு என்று வாழாதவர் பெரிய நம்பிகள். தனது ஆசாரியன் கட்டளைப்படி, தனது சீடனை வைணவக் குலத்தலைவராக்கி, அவருடைய நிர்வாகத்தின் கீழ் ஒரு வைணவத் தொண்டனாகப் பணியாற்றியவர் பெரியநம்பிகள். அப்போது ஒரு சம்பவம் நடந்தது. ஒருநாள் ராமானுஜர் அவருடைய சீடர்களுடன் நடந்து வரும் பொழுது பெரிய நம்பி அவரை அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார். எல்லோரும் வியந்தனர். சிலர் “இது என்ன மரியாதை? ஒரு சீடனை ஆசாரியன் விழுந்து வணங்குவதா?” என்றனர். ‘‘ஏன் உம் சீடனை சேவித்தீர், இது சரியா?’’ என்று பெரிய நம்பியிடம் கேட்டனர். “சீடனை சேவிக்கவில்லை. அடியேன் குருவைத்தான் சேவித்தேன்” என்றார் பெரிய நம்பி. அவர்களுக்குக் குழப்பம் அதிகமாகியது. “ராமானுஜர் நடந்து வரும்போது, ஆளவந்தார் தன்னுடைய சிஷ்யர்களுடன் வருவது போல் இருந்தது. அதனால் சேவித்தேன்’’ என்று கூறினார். சரி என்று ராமானுஜரிடம் போய்க் கேட்டனர். ‘‘நீர் வைணவர்களுக்குத் தலைவராக இருக்கலாம். ஆனால் பெரியநம்பி உமக்கு குரு அல்லவா. அவர் சாஷ்டாங்கமாக விழுந்து சேவிப்பதை நீர் ஏற்றுக்கொள்ளலாமா?’’ ராமானுஜர் சொன்னார். ‘‘அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் அடியேனை சேவிப்பதாக நினைக்கவில்லை. அவர் பாவனா கர்ஷத்தில் தனது ஆசாரியரை (ஆளவந்தாரை) சேவிக்கிறார். அந்த வணக்கம் அவருக்கு உரியது என்று நினைத்து கொண்டதால் தடுக்கவில்லை’’ இதன்படியே வாழ்ந்தவர் பெரியநம்பி. மாறநேரி நம்பி சீரிய ஸ்ரீவைஷ்ணவர், ஆளவந்தாருடைய சிஷ்யர். அவர் பரமபதித்த போது பெரியநம்பி அவருக்கு சரம (சரமஸ்லோகத்தை சொல்லுதல்) கைங்கர்யங்களை செய்தார். பிறந்த குல வேறுபாடுகளை காரணம் காட்டிய சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அதை ஒப்புக்கொள்ளாமல் ராமானுஜரிடம் சென்று குறை கூறினார்கள். ராமானுஜரும் எல்லா ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரியநம்பிகளின் உண்மை வைணவ உள்ளத்தை அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக பெரியநம்பியிடம் கேட்டார். ‘‘ஆழ்வார் திருவுள்ளத்தின் படியும், ஆழ்வார் திருவாய்மொழியில் பயிலும் சுடரொளி (3.7) மற்றும் நெடுமாற்கடிமை (8.10) பதிகத்தில் அருளி செய்தபடியும் தான் செய்தேன். வைணவ அடியார்களில் வேறுபாடு இல்லை. எல்லோரும் பாகவதரே. ராமபிரான் ராமாயணத்தில் ஜடாயு என்ற பறவைக்கு அந்தக் கிரியைகளை முறையாக செய்தார். அந்த ஜடாயு என்ற பறவையை விட மாறனேரி நம்பி என்கின்ற வைணவ மகான் தாழ்ந்தவர் அல்ல. நானும் ஸ்ரீராமரை விட உயர்ந்தவன் அல்ல. ஸ்ரீ ராமாயணத்தில் ஸ்ரீ ராமபிரான் செய்து காட்டிய விஷயத்தைத்தான் நான் செய்தேன். மகாபாரதத்தில் பொதுமகளுக்குப் பிறந்தவராக துரியோதனன் முதலியவர்களால் இழிவாகப் பேசப்பட்ட விதுரனுக்கு தர்மபுத்திரர் அந்திமக் காரியங்கள் செய்தார். மாறனேரி நம்பி விதுரனை விட தாழ்ந்தவர் அல்ல. நானும் தர்மரை விட உயர்ந்தவன் அல்ல. சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விதிமுறைகளை நான் பின்பற்றினேன். ‘‘சாத்திரத்தை படித்துவிட்டு அதில் உள்ளவற்றை வாழ்க்கையில் பின்பற்றாமல் இருந்தால், அந்த சாஸ்திரங்கள் வெறும் கடலோசை போல யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்.’’ என்று விளக்கம் அளித்தார். பெரிய நம்பிகள் (மஹாபூர்ணர்) வாழ்க்கையில் தனது மதக்கருத்தை பரப்புவதைவிட அப்பட்டமாக வாழ்க்கையில் பின்பற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டார். சோழ அரசன் அல்லது அவர் ஆளுகைக்கு உட்பட்ட ஏதோ ஒரு சிற்றரசனால் கண்கள் பறிக்கப்பட்ட பெரிய நம்பிகள் வயோதிகத்தாலும் வேதனையாலும் உடல் தளர்ந்து கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து திருவரங்கம் திரும்பிக்கொண்டிருக்கிறார். துணைக்கு ராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வார். பெரிய நம்பிகள் மகள் அத்துழாய் வருகிறார்கள். தனக்கு மரணம் நெருங்குவதை உணர்கிறார் பெரியநம்பிகள். பூலோக வைகுண்டமாகிய திருவரங்கத்திலேயே காலமெல்லாம் வாழ்ந்தவர். எப்படியாவது திருவரங்கம் திரும்பிவிடலாம் என்று நடந்து வருகிறார்கள். கும்பகோணம் அய்யம்பேட்டை தாண்டி பசுபதி கோயில் என்று சொல்லப்படும் ஊருக்கு அருகில் வந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு கேட்டை கோயில் என்று அழைக்கப்படும் இச்சிறிய ஊரில் பெரியநம்பிகளின் திருவரசு (பெரிய நம்பிகள் அடக்கம் செய்யப்பட்ட இடம்) அமைந்திருக்கிறது. பெரிய நம்பிகளால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. மகள் அத்துழாய்க்கோ மனம் பொறுக்க முடியவில்லை. தளர்ந்துபோய் அப்படியே சாய்ந்து விடுகிறார். தலை கூரத்தாழ்வான் மடியிலும், திருவடிகள் மகள் அத்துழாய் மடியிலுமாக இருக்கிறார். இருவரும் பெரிய நம்பிகளை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அத்துழாய் பேசுகிறாள். ‘‘அப்பா.... அப்பா…’’ ‘’ம்...’’ “அப்பா.... கொஞ்சம் சமாளித்துக்கொள்ளுங்கள்... ஓரிரண்டு நாட்கள்... கொஞ்சம் முயன்றால் திருவரங்கம் போய்விடலாம்.... கிடைத்தற்கரிய திருவரங்கவாசம் கிடைக்கப் பெற்று காலமெல்லாம் அரங்கனே கதி என்று நினைத்திருந்த தங்களின் இன்றையநிலை எனக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது.” ‘‘அம்மா...’’ மெல்ல அழைக்கிறார் பெரிய நம்பிகள். மகள் சொன்னதைக் கேட்டு அந்தச் சூழ்நிலையிலும் அவர் இதற்கிடையில் புன்னகை விரிகிறது. ‘‘திருவரங்கத்தில் சென்று உயிரை விட்டால் மோட்சம் என்கிறாய்.... இல்லையா’’. ‘‘அப்படித்தானே சாத்திரங்கள் சொல்கின்றன. காவேரிதான் விரஜா நதி. வைகுண்டம்தான் ரங்கமந்திரம். ரங்கநாதன்தான் பரமபதநாதன். அங்கே பிறக்கத் கொடுத்து வைத்த தங்களின் அந்திம நாட்கள் அங்கேதான் கழியவேண்டும். வைகுந்த வான் போகத்தின் திறவுகோலும் முகவாசலும் அரங்கத்தில் இருப்பதாகத்தானே சொல்கிறார்கள்.’’ ‘‘அம்மா. சாத்திரங்கள் அப்படித்தான் சொல்கின்றன. நீ சொல்வதும் உண்மை. ஆனால், உண்மைகளுக்கு மேலே சில பேருண்மைகள் உண்டு.’’ ‘’அப்படியா...’’ ‘‘ஆம். அம்மா. அரங்கன் அந்தப் பேற்றினை இந்த எளியவனுக்குக் கொடுத்திருக்கிறான். அரங்கம்தான் சிறந்தது. அங்கே வாழ்ந்தால்தான் மோட்சம். என்பதை அப்படியே வரிக்கு வரி எடுத்துக் கொண்டு அத்தனை பேரும் அரங்கத்தில் குடியேறுவது சாத்தியமா...? அப்படி வார்த்தைகளை பிடித்துக்கொண்டு உள் அர்த்தத்தை கவனிக்காது போனால் அரங்கம் தான் தாங்குமா? அப்படி திருவரங்கத்தில் வாழாதவர்களுக்கும் திருவரங்கத்தில் சாகாதவர்களுக்கும் மோட்சம் கிடையாதா?’’ தட்டுத்தடுமாறி பேசினாலும் குரலில் நடுக்கமில்லை. ‘‘அப்படியானால்’’ என்று கேட்டுவிட்டு பெரிய நம்பி முகத்தை பார்த்தாள் அத்துழாய். பெரியநம்பி சொன்னார், ‘‘எல்லோரும் திருவரங்கத்திற்குப் போவது இருக்கட்டும் ... எல்லா ஊரும் திருவரங்கமாக வேண்டாமா….’’ ‘‘அப்பா. நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் திருவரங்கம்?’’ பெரியநம்பிகள் இப்போது ஓர் அற்புதமான வாக்கியத்தைச் சொல்கிறார். ‘‘அம்மா. இப்போது இந்த தளர்ந்த வயோதிக நிலையில் அந்திம நேரத்தை எண்ணிக் கொண்டிருக்கும் அடியேன் தலை சாய்த்திருக்கிறேனே - கூரத்தாழ்வான் என்கிற பரமபாகவதன் மடியில்... இந்த பாகவதன் மடியை விட உயர்ந்ததா திருவரங்கம்?’’ அத்துழாய் பேசவில்லை. நன்றி - தினகரன் 2022 #ராமாநுஜர்
ராமாநுஜர் - ShareChat
ஸ்ரீ (969)Today dharshan. Evening. Pandharpur. 4.2.26 #கிருஷ்ணன்
கிருஷ்ணன் - ShareChat
00:25
ஸ்ரீ (969) #💵மகாலக்ஷ்மி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தைமாதம் பூரம் நட்சத்திரம் நந்தவனம் எழுந்தருளல். Srivilliputtur. 4.2.26
💵மகாலக்ஷ்மி - ShareChat
ஸ்ரீ (969)Therazhandur Sri Sengamala Thayar Dhivya Sevai ❤️🙏❤️ தேரழுந்தூர் ஸ்ரீ ஆமருவியப்பன் திருக்கோவில் ஸ்ரீ செங்கமல தாயார் திவ்ய சேவை ❤️🙏❤️ #💵மகாலக்ஷ்மி
💵மகாலக்ஷ்மி - Shot on OhePlus Narayanan Nangur Shot on OhePlus Narayanan Nangur - ShareChat
ஸ்ரீ (969)பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு பின்னர் தாய்நாட்டிற்கு திரும்பிய ஒரு இந்திய ராணுவ வீரர் பகிர்ந்த அனுபவம், ஒவ்வொரு இந்தியரின் உடலிலும் நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. எதிரிகளின் காவலில் 21 நாட்கள் வரை கண்கட்டப்பட்ட நிலையில் பிடித்து வைத்து , தொடர்ந்து வார்த்தைகளால் அவமதித்து, மனதளவில் உடைத்தெடுக்க முயன்றுள்ளனர். பனிக்கட்டியின் மீது படுக்க வைத்து தாக்கிய அந்த தருணங்களை நினைத்தால்கூட இதயம் நடுங்குகிறது. உடல் ரீதியான சித்திரவதை எல்லைகளைத் தாண்டியபோது, அவருக்கு மின்சாரம் கொடுத்து வேதனை அளிக்கப்பட்டது. பயம், அவமானம், சகிக்க முடியாத வலி — அனைத்தையும் ஒரே நேரத்தில் அவர் அனுபவிக்க வேண்டியதாக இருந்தது. அப்படிப்பட்ட நிலையிலும், நாட்டின் மீது உள்ள பக்தியும் இந்திய மூவர்ணக் கொடியின் மீது உள்ள மரியாதையும் அசைக்க முடியாதவையாக இருந்தன. அந்த நரகச் சமமான தருணங்களில், “ஜெய் ஹிந்த்” என்ற முழக்கம் அவருக்கு வலிமையும் தைரியமும் தந்தது. இந்தக் கதை ஒருவரின் வேதனை மட்டுமல்ல; தினமும் இந்திய ராணுவ வீரர்கள் வெளிப்படுத்தும் தைரியம், பொறுமை, தியாகம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும். எதிரிகளின் சிறைவும் கொடூரமான சித்திரவதைகளும் கூட அவரது மனோபலத்தை உடைக்க முடியவில்லை. நாட்டின் பாதுகாப்பிற்காக ராணுவ வீரர்கள் செலுத்தும் மிகப் பெரிய விலையை இது நமக்கு நினைவூட்டுகிறது. இந்த அனுபவம் இந்திய ஆயுதப் படைகளின் அசைக்க முடியாத மனப்பான்மைக்கு ஒரு சான்றாகும். ஆபத்துகளுக்கிடையிலும் உறுதியாக நிற்கும் ஒவ்வொரு ராணுவ வீரரும் மரியாதைக்கும் கௌரவத்திற்கும் தகுதியானவர்களே. நாம் இயல்பாக அனுபவிக்கும் சுதந்திரமும் பாதுகாப்பும், அளவற்ற வேதனைகளை தாங்கி நாட்டைக் காக்கும் இந்த வீரர்களின் தியாகத்தின் பலனாகவே கிடைக்கின்றன. #⚔️இந்திய🇮🇳 இராணுவம்⚔️😎
⚔️இந்திய🇮🇳 இராணுவம்⚔️😎 - ShareChat
"வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடத்தும் நம் கூரத்தாழ்வான்" --(பதிவு 1/3) 🙏🙏🙏🙏🙏 நாளை மறு நாள்(06/02/26), தை ஹஸ்தம் ஶ்ரீகூரத்தாழ்வானின் 1017 ஆவது திருநட்சத்திரம்!! 🔔🍀🌹🌷🌺🌻🔔 "மொழியைக் கடக்கும் பெரும்புகழான்,வஞ்ச முக்குறும்பாம், குழியைக் கடக்கும்,நம் கூரத்தாழ்வான்,சரண் கூடிய பின் பழியைக்கடத்தும்,இராமானுசன் புகழ் பாடியல்லா, வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே" (இரா.நூற்.7) கூரத்தாழ்வான் தனியன் : "ஸ்ரீவத்ஸ சிந்ந மிச்ரேப்யோ நம உக்தி மதீமஹே: | யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்: ||" "வேத மாதாவுக்கு மங்கள சூத்திரமாக(திருமாங்கல் யம்) வி்ளங்கக்கூடிய, ஸ்ரீஸுக்திகளான பஞ்சஸ்தவங்களை,அருளிச்செய்த ஸ்ரீவத்ஸசிந்ஹர் என்னும் கூரத்தாழ்வானை நாம் வணங்குவோம்" பத்துடை அடியவர்--கூரத்தாழ்வான் பத்து(10) 👏👏👏👏👏👏👏👏 1.முக்குறும்பு அறுத்த மகான் 🙏🔔🌹🙏🔔🌹🙏 மொழிகளால் விவரிக்க முடியாத புகழுடைய, ஆழ்வான்-- i)பெரும்செல்வம்- பெருந்தேவித் தாயாரும்,தேவப்பெருமாளுமே வியக்கும் வண்ணம் பெருஞ் செல்வந்தராய்த் திகழ்ந்தார். நித்யமும்,அதிகாலையிலி ருந்து நள்ளிரவு வரையில், அவரது திருமாளிகையில் பாகவத ததீயாராதனை நடந்து கொண்டே இருக்கும்.இன்றும் கூரம் கிராமத்தைச் சுற்றியுள்ள பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்க ளின் பத்திரங்கள் கூரத்தாழ்வான் பெயரி லேயே உள்ளது.(அவற்றை உழுது பயிரிடும் மக்கள் ஆழ்வான் சந்நிதிக்கு, குத்தகையாக, விளை பொருட்களில் ஒரு பகுதியைச் சமர்ப்பிக்கி றார்கள்.) ii)உயர்ஞானம்-- பல சாஸ்திரங்களையும் சிறப்பாகக் கற்று, சிறந்த பண்டிதராக விளங்கினார்; ராமாநுஜருக்கே ஏதேனும் சந்தேகம் வந்தால் ஆழ்வானைக் கேட்பாராம்! iii)உயர்ந்த அந்தணர் குலம்-அதிலும் ஒரு பிரதேசத்தை ஆளும் சிற்றரசராக விளங்கியது இவை மூன்றும் மிக நிறைந்திருந்தும் இவற்றால் ஏற்படக்கூடிய மூன்று செருக்குகளும் அறவே அற்றவராக விளங்கினார் 2.கீதை காட்டிய பாதையில் ! 🙏🌷🌺🌻🙏 பகவத் கீதை,13 ஆம் அத்யாயம், ஸ்லோகம் 7---11ல்,ஸ்ரீகிருஷ்ணபிரான், ஒரு பகவானை உணர்ந்த, உயர்ந்த ஜீவாத்மாவின் 20 குணங்களை விளக்கு கிறார்.அந்த குணங்கள் அனைத்தும் பூரணமாக நிரம்பப் பெற்றவர் நம் கூரத்தாழ்வான்: "அமானித்வம்-- பணிவு; அதம்பித்வம்-- செருக்கின்மை: அஹிம்சை-- வன்முறையின்மை; ஷாந்திர்-- சகிப்புத்தன்மை; ஆர்ஜவம்- நேர்மை; ஆசார்ய உபாஸனம்--எப்போதும் ஆசார்யரையே சார்ந்திருப்பது; சௌஸம்-- தூய்மை(அகம்/புறம்); ஸ்தைர்யம்-- மன உறுதி; ஆத்மவினிக்ரஹ--வைராக்யம்/ சுயகட்டுப்பாடு; இந்த்ரிய அர்த்தேஷு--வைராக்யம்- புலன்களின் ஆசைகளைத் துறத்தல்; அனஹங்கார- தற்பெருமை கொள்ளாமல் இருத்தல்; ஜன்ம/ம்ருத்யு/ஜரா/வ்யாதி/துக்கா தோஷானுதர்சனம்--எப்போதும் இந்த சமுதாயத்தில் உள்ள கஷ்டத்தையே பார்ப்பது; அஸக்திர்-- பற்றின்மை; புத்ரதாரக்ருஹாதி ஷு அன்பிஷ்வங்க-- மனைவி, மக்கள்,வீடு முதலியவற்றில் பற்றின்மை; இஷ்ட,அனிஷ்ட உபபத்திஷு நித்யம் ஸ சமசித்தத்வம்-விருப்பு/வெறுப்பற்று சம நிலையுடன் இருத்தல்; மயிசாநந்ய யோகேன பக்தர் அவ்யபிசாரணி-என்(கண்ணபிரான்) மேல் மட்டுமே நிலையான பக்தி; விவிக்ததேச சேவித்வம்- தனிமையான இடத்தில் வசித்தல். அரதிர்ஜனஸம்ஸதி- பொதுமக்களிடம் பற்றில்லாமல் இருத்தல்; அத்யாத்ம ஞான நித்யத்வம்- நித்யமான ஆத்ம ஞானம். தத்வ ஞான அர்த்த சிந்தனம்- உண்மையான அறிவைப் பற்றிய சிந்தனை. 3.பிறர் துயரை, தம் துயராக ஏற்ற, சுத்தசத்வ ஸ்ரீவைஷ்ணவர் 🙏🙏🙏🙏🙏🙏 கூரம் பிரதேச ராஜாவான அவர்,ஒரு நாள் இரவு,நகர சோதனைக்காகத் தனியே சென்ற போது,ஒரு ஏழையின் வீட்டில் இருந்து அழுகுரல் கேட்டது.விவரம் கேட்ட போது,அந்த வீட்டார், திருமண வயதடைந்த தம் மகள்,ஜாதகப்படி, கணவனோடு கூடினால், கணவன் மரணம் அடைவார்,என்பதால்,திருமணம் செய்ய முடியாத கவலை என்றனர். ஆழ்வான்,அந்தப்பெண்ணைத் தானே மணம் செய்து கொண்டு அவர்கள் துயர் தீர்த்தார். இறுதிவரை ஆழ்வானும்.அவர் மனைவி ஆண்டாளும்,தேக சம்பந்தம் இல்லாமல் வாழ்ந்தனர். 4 பொருட்செல்வம் துறந்து அருட்செல்வம் பெற்ற அருளாளர்!! 👋👋👐👐🙏👌🙏👌🙏 அவருடைய திருமாளிகை யில்,காலையிலிருந்து, இரவு வரை,தொடர்ந்து, நாளும்,அன்னதானம் நடைபெற்றது. இரவில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் நடை சாற்றிய பின் தான் இவர் மாளிகைக் கதவுகள் மூடப்படும்.ஒருநாள், கோயிலில் சற்று தாமத மாகிவிட்டது.ஆனால் ஆழ்வான் மாளிகைக் காவலாளிகள் எப்போதும் போல குறித்த நேரத்தில் கதவுகளை மூடினர்.பெரிய மணிகள் பொருத்தப்பட்ட கதவாதலால்,கதவின் சப்தம் வரதராஜப் பெருமாளுக்கும் கேட்டது. பெருந்தேவித்தாயார் பெருமாளிடம்,"என்ன கோயில் கதவு சப்தம் போல் இருக்கிறதே"என்று கேட்க, பெருமாள் அவை கூரத்தாழ்வான் வீட்டுக் கதவுகள் அடைக்கும் சப்தம் என்றார். 'ஆழ்வான் அவ்வளவு செல்வம் படைத்தவரோ?" என்று வியந்தார் தாயார்.இந்த தெய்வீக உரையாடலைச் செவியுற்ற திருக்கச்சி நம்பிகள் (பெருமாளுக்கு ஆலவட்டம்-விசிறிவீசும் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தவர்) மறுநாள்ஆழ்வானிடம், இதைப்பற்றி உகந்து கூற, ஆழ்வான் மிகத் துக்கமடை ந்தார்!! (அவருடைய கைங்கர்யம் பேசப்பட வேண்டியிருக்க, அழியும் செல்வம் போற்றப் பட்டதே என்று). செல்வம் இறைவனை அறிய/அடைய தடையாக இருப்ப தால் உடனே தம் செல்வம் அனைத்தும் துறந்து, உடுத்திய உடைகளுடன், சென்று இராமாநுஜரைத் தஞ்சம்அடைந்தார். ஆழ்வானுடன் புறப்பட்ட ஆண்டாள் நடந்து செல்லும் காட்டு வழியில்,மடியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே வந்தார்.இதைக் கவனித்த ஆழ்வான், "மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம், ஏதாவது வைத்திருக்கி றாயா?" என்று, வினவ, அவர் "தேவரீர் உணவருந்து வதற்காக (பயன்படுத்தும்),பொன் வட்டிலை எடுத்து வந்தேன்" என்றார்.ஆழ்வான் உடனே பொன் வட்டிலை வாங்கி, காட்டில் வீசிவிட்டு, இப்பொழுது பயமின்றி நடக்கலாம் என்றார் !! 5.திரேதாயுக நன்றிக் கடனைக் கலியுகத்தில் தீர்த்த,தீர்த்தன் !! 👏👏👏👏👏👏 .இவரின் இயற்பெயர் "ஶ்ரீவத்சாங்கமிஶ்ரர்",தமிழில் "திருமறு மார்பன்"(இவர் மார்பிலும் திருமறு இருந்தது.ராமாவதாரத்தில்,ஆதிசேஷனாகிய லக்ஷ்மணன்பகவானுக்குத் தொண்டு புரிந்தமைக் காக,இந்த அவதாரத்தில் ஆதிசேஷ அவதாரமாகிய இராமாநுஜருக்குத் தொண்டு புரிய,ராமபிரானி ன் அம்சமாகக் கூரத்தாழ் வான் அவதரித்தார். 6.ஆழ்வாரில் ஆழ்ந்த ஆழ்வான்!! 🔔🔔🔔🔔🔔🔔 இவர் திருவாய் மொழிக்கு, அதி அற்புத வ்யாக்யானம் செய்யும் போது,அதன் மேன்மையில், உருகிக் கரைந்து, மூர்ச்சித்து விடுவாராம். இதைச் செவியுற்ற ராமாநுஜர் "கூரேசர் பாவம்/நிஷ்டை அடியேனுக்கு இல்லாமல் போயிற்றே"என்றாராம். அவர் திருவாய் மொழியில் ஆழ்ந்து திளைப்பதால் ராமாநுஜர்,அவரை 'ஆழ்வான்'என்றுகொண்டாடினார்.அப்போதிருந்து அவர் "கூரத்தாழ்வான்" என்றழைக்கப் பட்டார். 7.தர்சனத்துக்காக, தர்சனம் இழந்த தகைமையாளர் !! 👁👁👁👁👁👁👁 முதலாம் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில், சைவம் மேலோங்கி யிருந்தது.வைணவத்தை அழிக்க நினைத்தமன்னன், இராமாநுஜரை சைவமே பெரிது,என்று ஒத்துக் கொள்ள வைத்து விட்டால் அனைவரும் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று எண்ணி,அவரை அழைத்து வர படை வீரர்களை அனுப்பினான்.இதை அறிந்த கூரத்தாழ்வான், ராமாநுஜரின் காஷாய உடைகளைத் தாம் அணிந்து, அரசவைக்குச் சென்று,தாமே ராமாநுஜர் என்று கூறி வைணவத் தின் உயர்வை பலவாறு எடுத்துரைத்து,ஸ்ரீமந் நாராயணனே பரமாத்மா !வைணவமே உயர்ந்தது என்று வாதிட்டார். அரசவையில் இருந்த, நாலூரான் என்பவன் அரசனிடம்,வந்திருப்பவர் ராமாநுஜர் அல்ல; ஆழ்வானே ராமாநுஜர் வேடத்தில் வந்திருக்கிறார் என்றான். பெரிதும் சினமடைந்த அரசன் ஆழ்வான் கண்களைப் பிடுங்குமாறு ஆணை இட்டான்.'உன்னுடைய ஆட்கள் என்ன என்னை தொடுவது?என் சம்பிரதாயத்தை நிலை நாட்டுவதற்காக,நானே என் கண்களைப் பிடுங்கி விடுகிறேன்' என்ற, ஆழ்வான் தன் கண்களைத் தானே பிடுங்கி எறிந்தார். (இராமாநுஜரை ஆழ்வானது வெள்ளை உடைகளை உடுத்தச் செய்து,மேல்கோட்டைக்கு, அனுப்பி விட்டார்,ஆழ்வான்) 8.ஆசார்ய சம்பந்தம் வேண்டாமல், ஆதிமூலமே வேண்டாம் என்றவர்! 👌🙏👌🙏👌🙏🙏 ஶ்ரீரங்கம் வந்தடைந்த ஆழ்வான்,பெரிய பெருமாளைச் சேவிக்கச் சந்நிதிக்குச் செல்ல, அங்கு காவலாளிகள் இராமாநுஜ சம்பந்தமுடைய யாரையும் சந்நிதிக்குள் விடக்கூடாது, என்பது மன்னனின் கட்டளை என்று மறுத்தனர். அதில் ஒரு காவலாளி இவர் பெரிய ஸ்வாமி; இவரை விடலாம் என்று கூறி,ஆழ்வானைப் பெரியபெருமாளைச் சேவிக்க அனுமதித்தான். தம் ஆச்சார்யர் "எம்பெருமானாருக்கு மரியாதை இல்லாத இடத்தில்,எம்பெருமான் சேவை அருளினாலும் வேண்டாம்" என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்று விட்டார்! 8.பஞ்சஸ்தவம் பாடிய பாங்கு! 🔊🔉📖📚📙📘📙📚 ஶ்ரீரங்கத்தை விட்டுத் திருமாலிருஞ்சோலை சென்றார்,அங்கு அழகர் மீது"ஸுந்தர பாஹுஸ்தவம்"என்னும் பாமாலை பாடினார். அவர் இயற்றிய பிற கிரந்தங்கள்: ஶ்ரீவைகுண்ட ஸ்தவம், அதிமானுஷ ஸ்தவம், ஶ்ரீவரதராஜ ஸ்தவம், ஶ்ரீஸ்தவம், என்னும் கிரந்தங்கள். "லக்ஷ்மிநாத ஸமாரம்பாம்" "யோநித்யம் அச்யுத பதாம்புஜ"என்னும் தனியன்கள் 10.அவன் பணியைத் தன் பணியென ஏற்று கைங்கர்யம் செய்தால்,உன் பணியை அவன் சிறப்பாகச் செய்வான்.!!! 🙏🏵🌾☘🥀🌹🍎🙏 அரங்கனின் பேரருள் பெற்ற அரவணைப் பிரசாதத்தை, உட்கொண்ட தால்,இவர் தேவியார், ஆண்டாள்,பிள்ளைப் பேறு அடைந்து,ஶ்ரீ பராசர பட்டர், ஶ்ரீ வேத வியாஸ பட்டர் என்ற பெரும் ஆசார்யார் களை,திருக்குமாரர்களாகப் பெற்றார்.இந்த இரண்டு குழந்தைகளையும், பெரியபெருமாளும்,பெரிய பிராட்டியாரும், பெரிய கோயில் திருமணத் தூண்களில் தொட்டில் கட்டி வளர்த்தார்கள். அவர்களுக்குத் திருமண வயது வந்ததும், ஆண்டாள், ஆழ்வானிடம் "பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வேண்டுமே" என்றார். ஆழ்வான் "அதை என்னிடம் எதற்குச் சொல்கிறாய்?" என்று கேட்டார்! கொஞ்ச நேரம் கழித்து,"மாலை பெருமாளைச் சேவிக்கச் செல்லும் போது, பிள்ளை களை வரச்சொல்" என்று கூறிவிட்டுச் சென்றார். மாலையில் பெருமாளைச் சேவித்துவிட்டு,தீர்த்தம்,சடாரி பெற்றுக் கொண்டு, --செல்லாமல் நின்று கொண்டிருந்தார். பெருமாள், அவர் தயங்கி நிற்பதைப் பார்த்து, "ஆழ்வான்!ஏதோ சொல்ல நினைப்பது போல் தெரிகிறதே; என்ன?" என்று கேட்டார்.ஆழ்வான் மிகத் தயங்கி, "ஆண்டாள், பிள்ளைகளு க்கு வயதாகி விட்டது; திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறாள்"என்றார். பெருமாள் "நீர் வீட்டுக்குப் போம்; நாம் பார்த்துக் கொள்கிறோம்"என்றார். மறுநாள் காலை பெரிய நம்பிகளின் திருமாளிகை யிலிருந்து,பெரியோர்கள் அனைவரும் சீர்வரிசை களுடன் ஆழ்வான் திருமாளிகைக்கு வந்து "எங்கள் குமாரத்திகளை தேவரீர் திருக்குமாரர்க ளுக்கு திருமணம் செய்து ஏற்றுக் கொள்ள வேண்டும்; இது பெரியபெருமாள் நியமனம்" என்று கூறி சேவித்தார்கள். (பெருமாள் அவர்கள் கனவில் தோன்றி அவ்வாறு நியமித்தாராம்.!!) (அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்) படங்கள்: 1.கூரத்தாழ்வான் 2கூரத்தாழ்வான் திருமாளிகை/சந்நிதி, கூரம் 3 அலங்காரக் கூரத்தாழ்வான்-கூரம். 4--7இன்று காலை பரமபத நாதன் திருக்கோலத்தில் ஆழ்வான் புறப்பாடு. 8--11: கூரத்தாழ்வான் திருமஞ்சனம். #பெருமாள்
பெருமாள் - ఎమసి Iu Karayumila ఎమసి Iu Karayumila - ShareChat