||श्री:|| ஸ்ரீ (969) #ராமாநுஜர்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்
திருத்துழாய் மாலையைச் சுற்றியிருக்கும் நீண்ட பெருந் திருமுடியைக் கொண்டுள்ளவனும், நீண்ட நெடுங்காலமாகவே அடியேனிடத்து பேரன்பு கொண்டவனும் ஆகிய எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை,
எக்காலத்தும் உயர்வாக மதித்து அடியேனின் கைகள் கூப்பி ஒரு நொடிப்பொழுதும் இடைவிடாமல் தியானம் செய்து கொண்டிருப்பேன்.
மேலும் அந்த எம்பெருமானைத் தலைசாய்த்து வணங்கிக் குளிர்ச்சிமிக்க மலர்களைக் கொண்டு வழிபடுவீர்களாக !
உங்களுடைய வாய் அந்த எம்பெருமானின் திருநாமங்களை கூறித் துதிக்கட்டும்.
உங்களுடைய கண்கள் அவனையே கண்டு சேவித்துக் கொண்டிருக்க வேண்டும். உங்களுடைய காதுகளோ அந்த எம்பெருமானை பற்றிய புகழ்மிக்க வரலாறுகளையே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
திருமழிசைப்பிரான் திருவடிகளே ஶரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏