#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
நவம்பர் 17,
*சி.இலக்குவனார்*
சிறந்த தமிழ் அறிஞரும், படைப்பாளியுமான பேராசிரியர் சி.இலக்குவனார் 1909ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி, நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில், வாய்மேடு கிராமத்தில் பிறந்தார்.
இவர் தமிழ் வளர்ச்சிக்காக 1962ம் ஆண்டு தமிழ் காப்புக்கழகத்தை தொடங்கினார். தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் தமிழ் மன்றங்களை நிறுவினார்.
முத்தமிழ் காவலர், செந்தமிழ் மாமணி, தமிழர் தளபதி, இலக்கணச் செம்மல் போன்ற ஏராளமான பட்டங்களை பெற்றுள்ளார். வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட இலக்குவனார் 63வது வயதில் (1973) மறைந்தார்.

