#பெண்ணின் வீழ்ச்சி..! அரசின் எழுச்சியும்##
பெண்ணின் வீழ்ச்சி..! அரசின் எழுச்சியும்##
மனித சமூகம் ஆப்பிரிக்காவிலிருந்து மத்திய ஆசியாவைத் தொடுவதற்கு 60,000 ஆண்டுகளும், தென்கோடி கோண்டுவானாவிலிருந்து மத்திய ஆசியாவை தொடுவதற்கு 40.000 ஆண்டுகளும் எடுத்துக்கொண்டது.
மனித இனம் வாழிடங்களைத் தேடி, உணவைத் தேடி, பாதுகாப்பைத் தேடி என, பல்வேறு காரணிகளால் மனித சமூகம் இடம் பெயர்ந்து கொண்டே இருந்தது.
இனக்குழு என்று சொல்ல முடியா விட்டாலும், மனிதர்கள் குழுவாக, நிலை பெற்றச் சமூகமாக தனக்கான வாழிடங் களை அமைத்துக் கொண்டது வெறும் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு தான்.
வேட்டைச்சமூகம் நிலைபெற்ற சமூகமாக மாற்றம் அடையும்போது தங்களுக்கான உணவை உற்பத்தியின் மூலம் தேடிக் கொண்டார்கள், அதற்கு கருவியின் பயன்பாடும், விவசாயமும் வேட்டைச் சமூகத்தை வேறு ஒரு நவீன தளத்திற்கு நகர்த்தியது.
அங்கங்கே அந்தந்தக் குழுக்கள் ஒருங்கி ணைந்து தனக்குத் தேவையான தானியங்களை விளைவிக்கத் தொடங்கி னார்கள், அதை சமமாக அனைவரும் பங்கிட்டும் கொண்டார்கள்.
நிலத்தைக் கீறியது அதாவது இந்த உலகத்தின் முதல் விவசாயி பெண்ணாக த்தான் இருந்தாள், இதைத்தான் புராதான பொதுவுடமை சமூகம் என்று சொல்கின் றோம்.
ஒரு கிலோ மீட்டரிலிருந்து,10 கிலோ மீட்டர், 20 கிலோ மீட்டர் தூரம் வரை..! தூரம் தூரமாக, குழுக் குழுவாக மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள்,எல்லாக் குழுவிலும் பெண்களே தலைமைத் தாங்கினார்கள்.
வறட்சியின் காரணமாகவும், உற்பத்திப் போதாமையின் காரணமாகவும் ஒரு குழு இன்னொரு குழுவின் உற்பத்தியை கொள்ளை அடிக்கத் தொடங்கினார்கள்..!
இந்தக் கொள்ளையை தடுப்பதற்காகவும் தவிர்ப்பதற்காகவும் உடல் திறன் உள்ள ஆண்களை விவசாய நிலத்தின் நாலா புறமும் நிறுத்தி காவல்க் காக்க வைக்கி றார்கள்..!
அந்தக் காவலர்களுக்கு ஆளுக்குக் கொஞ்சமாக உற்பத்திப் பொருளை சம்பளமாக கொடுத்தும் வருகிறார்கள்..!
விவசாய பரப்பு அதிகரிக்கும்போது, காவலுக்கான ஆட்களும் அங்கே அதிகரிக்கிறார்கள், அப்போது காவலர்கள் தங்களுக்கான சம்பளத்தை கூடுதலாக நியமிக்கும்காவலர்களுக்கும் பங்கிட்டு தர வேண்டியதேவை இருந்தது
மேலும் அவர்களுக்குப்போதுமான ஆயுதங்களும் தேவைப்பட்டது.
அப்போது ஆயுதங்கள்உருவாக்கப்பட்டது, காவலர்கள் எண்ணிக்கை கூடும்போது இயல்பாகவே அங்கே ஒரு நிர்வாகம் வந்துவிடுகிறது, அந்த நிர்வாகத்திற்கு தலைமை காவலரும் தேவைப்படுகிறது..!
அரசுகளின் தோற்றம்இந்தஇடத்தில்தான் கருக்கொள்கிறது, ஆயுதம் அதிகாரத்தை கொடுக்கிறது, அதிகாரம் ஆட்சியை கொடுக்கிறது, ஆட்சி மேலும் சொத்துக் களை உருவாக்குகிறது.
இங்குதான் வேல் போன்ற வேட்டைக் கருவிகளை பயன்படுத்துவோரை வேலன் என்றும், காவலனை அரசன் என்றும் அழைக்கும் மரபு உருவாகிறது,
இந்த உருவாக்கம்தான் நிர்வாகத்திற்குத் தேவையான வரிவசூலை மக்களிடம் வசூலிப்பதும், அந்த நிர்வாகம் என்பது அரசாக தோற்றம்கொள்வதும்இங்குதான் தொடங்குகிறது.
அதுவரை பெண்களே நிர்வகித்து வந்தார்கள், அவர்கள்தான் விளைச்சலை சமமாக பங்கிட்டு வந்தார்கள் ,தனக்கான குழந்தைகள் கூட இன்னாருக்குத்தான் பிறக்க வேண்டும் என்கின்ற விழுமியங் களுக்குள் அடங்காதவர்களாக இருந்தார் கள்.
தனக்கான பாலியல் தேவையை அவர்கள் சுதந்திரமாக தேர்ந்தெடுப் பவர்களாகவும், தனது உடலை தானே சொந்தம் கொண்டாடுபவர்களாகவும் இருந்தார்கள்.
ஒரு குழுவிற்கு தலைமைத்துவம் ஆணின் கைக்கு மாறும் போது..! தனக்குப் பிறகு யார் என்கின்ற கேள்வியும், அதிகாரத்தின் மேல் அச்சமும் ஏற்படுகிறது.
அந்த அடிப்படையில்தான் தலைமை ஏற்று இருக்கின்ற ஆண் என்பவன்..! தனக்குப்பின் தனக்குப் பிறந்தவன் ஏன் ஆளக் கூடாது அல்லது நிர்வகிக்கக் கூடாது என்கின்ற கேள்வித் தோன்று கிறது.
பெண்களை நிரந்தரமாக வீட்டின் அடிமை களாக மாறுவதற்கான மையப்புள்ளியும் இந்தக் கேள்வியில்தான்தொடங்குகிறது.
ஒரு அரசு அல்லது தொடக்ககால நிர்வா கம் பாதுகாப்பாகவும்,பிறர்அச்சுறுத்தலை எதிர் கொள்ளவும், தன் நிர்வாகத்தின் கீழ் உள்ள மக்கள் எதிர்த்து விடாமல் இருக்கவும் அவர்களுக்கு ஒரு வழிகாட்டு நெறிமுறை தேவைப்பட்டது அல்லது ஒரு சட்டம் தேவைப்பட்டது.
சட்டங்கள் எப்போதுமேமக்களின் சுதந்திரத்திற்கு எதிரானது தான். மக்களை பண்படுத்தி சுய கட்டுப்பாடுடன் வாழ வைப்பதுதான் அரசின் தார்மீகக் கடமையாக இருக்க முடியும்.
ஆனால் அரசின் சுரண்டல் நோக்கமும், அரசின் பயங்கரவாத சிந்தனையும் ஆள்பவார்களை எப்பொழுதும் அச்சத்தி லேயே வைத்திருக்கும், அந்த அச்சமே அவர்களின் சட்டங்களாக வெளிப்படு கிறது.
அப்படி அவர்களின்பயமும்,தன் பதவி யின் மேல் இருக்கக் கூடிய பற்றும், தற்போது அனுபவித்து வரும் சுக போக வாழ்க்கையும் பறி போய் விடக்கூடாது என்பதற்காக சட்டங்களைக் காட்டி மக்களை ஒடுக்க நினைப்பார்கள் அல்லது ஒடுக்குகிறார்கள்.
இது இன்று மட்டும் அல்ல, வரலாறு வசப்படாத காலத்திற்கு முன்பே நிர்வாகம் என்கின்றப் பெயரில் ஒடுக்குமுறை சட்டங்களையும், கட்டமைப்பையும் இப்படி தான் உருவாக்கினார்கள்..!
மெல்ல மெல்ல காலச்சக்கரம் உருண்டு காவலர்கள் அரசர்களாகவும், நிர்வாகம் அரசாகவும், பிறகுழுக்களின் பொருட் களையும், விளைச்சலையும், ஆடு, மாடுக ளையும் கவர்ந்து வருவது பெருமையா கவும், இதற்காக இருநாட்டு மக்களும் அடித்துக்கொண்டு சாவதை வீரமாகவும், கவுரவமாகவும் நினைக்கும் காலம் வந்தது.
சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவரை மன்னன்உத்தரவுவிடுவது எல்லாம் சட்டமாக சொல்லி வரும் போது, போன மாதம் இந்த குற்றத்திற்கு என்ன தண்டனை கொடுத்தோம் என்று தெரியா மல்..!?
உத்தரவை மாற்றி சொல்லும்போது இந்த முட்டாள் அரசர்களுக்கு நிரந்தரமான, மாற்றப்படாத மனுதர்மம் என்கின்ற சட்டத்தை உருவாக்கி கொடுத்தவர்கள் பார்ப்பனர்கள்.
மறதியில் மாற்றி மாற்றி தண்டனை வழங்கி கொண்டிருந்த அரசனுக்கு மாற்றவே முடியாத நிரந்தரமான தண்டனை புத்தகம் கிடைத்தது ஒரு வரம் அல்லவா..!
குழு சமூகம் மெல்ல மெல்ல அரசு என் கின்ற நிறுவனமய மாக்கப்பட்ட, சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட, ஒரு நவீன வடிவம் பெற்றாலும் பெண்களின் நிலை மட்டும் மிக மோசமாகவே மாறிக்கொண் டிருந்தது..!?
ஒரு பெருநிலப்பரப்பையும், ஒரு பெருங் கூட்டத்தையும் நிர்வகித்து வந்த பெண் இன்று அடுப்பறையிலும்,படுக்கை அறை யிலும் மட்டும் அவளின் அதிகார வரம்பு சுருங்கிப்போனது.
மேலும் குடும்பங்களை முழுமையான நிறுவன மயமாதலுக்குள் கொண்டு வந்ததுதான் அரசின்மிகப்பெரிய வெற்றி அதிலும் ஆரியப்பார்ப்பனர் வருகை அரசுகளை மேலும் மேலும் இறுக்கம் கொள்ளச் செய்தது..!
அடிப்படையாக அவர்கள் செய்தது பெண் களுக்கான சட்ட திட்டத்தை கடுமையாக வகுத்தது தான், காரணம் குடும்பம் என்கி ன்ற நிறுவனங்கள் இருக்கும் வரைதான் அரசு இந்த மண்ணில் நிலை கொள்ள முடியும்.
குடும்பத்தை தகர்த்து விட்டாள் அரசுகள் தானே பட்டு உதிர்ந்துவிடும்.
சுரண்டல், லஞ்சம், ஊழல், திருட்டு,பொய், கற்பழிப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு இவை அனைத்தும் குடும்பங்களின் உற்பத்திதான்..!?
அரசிற்குக்கு வருவோர் இந்த ஜனநாயக மற்ற வன்முறையான நிறுவனமான குடும்பத்திலிருந்தே வருகிறார்கள், அறிவிற்கும் அறிவியலுக்கும் தொடர் பில்லாத...
தன் தாயாக இருந்தாலும், தன் தங்கை யாக இருந்தாலும், அடிமையாக இருப்பதை கண்ணார கண்டு ரசிக்கும், அதையே புனிதப்படுத்தும் குடும்ப ஆண்கள்தான் அரசியலுக்கு வருகிறார் கள்.
தன் வீட்டுப் பெண்களை அடிமையாக வைத்துக் கொண்டு, ஜனநாயகத்தின் வாடைக் கூட தெரியாத சூழலில் இருந்து வரும் ஆண்களுக்கு எந்த அளவிற்கு அறிவு இருக்குமோ..!
அந்த அளவிற்குத்தான் அரசின் நிர்வாக மும் இருக்கும்.
இவைகள் இயல்பாக நடைபெறவில்லை, மிகத் துல்லியமாக திட்டமிட்டு எதிர்கால த்திலும் உடைப்போ, உணர்ச்சியோ வந்து விடக் கூடாது என்பதற்காக கட்டமைக்கப் பட்டது தான் இந்த குடும்பம்.
அதற்காகவே கடவுள், கற்பு, மோட்சம், பதிவிரதா தன்மை, பண்பாடு போன்ற ஒடுக்கு முறைகள் பெண்களின் மேல் ஏற்றப்பட்டது.
இதை நமது அரசர்களுக்கு, அரசைப் பாதுகாக்கும் உத்தியாக பயிற்றுவித்தது பார்ப்பனர்களேயாகும், மனுதர்ம சாஸ்தி ரத்தையே சாரும்,நமது நாட்டில்பெண்கள் விழிப்படையாதவாறு மிக கவனமாக பார்த்துக்கொண்டது ஆரியப் பார்ப்பனர் களே.
பார்ப்பனர்களுக்கு அரசின் தயவும், அரசர்களுக்கு பார்ப்பனர்களின் தயவும் தேவைப்பட்டது, இவர்கள் இருவரும் இரு தண்டவாளம் போன்றவர்கள்.
இந்தக் கள்ளக்கூட்டு அன்று முதல் இன்று வரை தொடர்கிறது. அரசுகள், பாதுகாப்பாகவும், பத்திரமாகவும், நிலை கொள்ளவும் அதன் மூலம்தன் சந்ததியை வளர்த்துக் கொள்ளவும் பார்ப்பனர்கள் பெரும் பங்காற்றி வருகிறார்கள்.
அவர்கள்தான் மக்களின் கோபத்தை மடைமாற்றம் செய்து, மக்களின் கோபத் தைத் திசைத் திருப்பி விடுபவர்கள்,
அதற்காக மக்களை கேளிக்கைகளிலும், மூடநம்பிக்கைகளிலும், ஆழ்த்துபவர்கள், இவர்கள் இல்லை என்றால்இந்தியாவில் எந்தஅரசும் நிம்மதியாகஇருக்க முடியாது
#உலக இருதய தினம் இன்று செப்டம்பர்-29
உலகம் முழூவதும் இன்று உலக இருதய தினம் கொண்டாடப்படுகிறது செப்டம்பர் -29
World Heart Day is celebrated all over the world today.
World Heart Day September-29 ❤
நடைப்பெயற்ச்சி..Walk.
தொடர்ந்து 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது உங்கள் இதயத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், நச்சுகளை வெளியேற்றவும் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
Walking for 30 minutes continuously not only helps your heart but also improves blood circulation, eliminates toxins, and improves metabolism.
யோகா பயிற்சியினால் சுவாசத்தை மேம்படுத்துதல், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், இதயத் துடிப்பை மேம்படுத்துதல், கெட்ட கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துதல் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது போன்றவற்றின் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது..
Yoga helps keep the heart healthy by improving breathing, controlling blood pressure, improving heart rate, controlling bad cholesterol levels, and increasing blood circulation
#உலக இருதய தினம் இன்று
உலகம் முழூவதும் இன்று உலக இருதய தினம் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 29
,உறக்கம்...Sleep
Today, World Heart Day is celebrated all over the world. September 29,
World Heart Day September-29 ❤
போதுமான உறக்கம்;
உடல் புத்துணர்ச்சி பெறுவதற்கு தூக்கம் அவசியம்.
Adequate sleep is essential for the body to rejuvenate.
தூக்கமின்மை இதய நோய், மாரடைப்பு, நீரிழிவு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
Lack of sleep increases the risk of heart disease, heart attack, diabetes, and stroke.
இத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற நல்ல தூக்கம் அவசியம்.
In such a situation, good sleep is essential to follow a healthy lifestyle.
#வாழை இலை
ஏன் தண்ணி தெளிக்கிறோம், உள்பக்கமா மடிக்கிறோம்... வாழை இலை நாகரிகம் தெரியுமா..?
இயற்கையோட சேர்ந்த வாழ்வுதான் நம்ம தமிழர் பண்பாடுன்னு பலர் சொல்லுவாங்க.
ஒருவகையில உண்மைதான். நம்மளைச் சுத்தியிருக்கிற பசுமைகள் இன்னும் பசுமையா நிலைச்சிருக்கிற மாதிரிதான் நாம வாழ்ந்தோம்.
அது நமக்கு நிறைய கத்துக் கொடுத்தது.
அதுக்கு நாமும் நன்றியோட இருந்தோம்.
அந்த நன்றிக்குப் பரிசா கெடச்சதுதான் நம்ம தாத்தன் பாட்டிக்கு இருந்த ஆரோக்கியம்.
எதையும் அதுகிட்ட இருந்து நேரடியா எடுத்துக்கிட்டு, அதுக்குத் தேவையானதை நேரடியாக் கொடுத்திடணும். இதுதான் நம்ம பழைய வாழ்க்கை.
வாழை இலை... நாம நினைச்சாலும் நம்மகிட்ட இருந்து விலக்க முடியாத சொல்தானேங்க இது!
என்னதான் எவர்சில்வர், பீங்கான் தட்டுகள், பேப்பர் பிளேட்டுகள் வந்து கடந்துபோய் பிளாஸ்டிக் இலைகள்ன்னுலாம் விநோதமா முயற்சி செஞ்சாலும் அம்புட்டையும் வாழை இலைகள் `அடிச்சுத் தூக்கிருதுல'?
பொது நிகழ்ச்சி, வீட்டு விழாக்கள், உணவகம்ன்னு எங்கும் `இலைகள்'மயம்!
தோப்பில் இருந்து வருவதால் இலையில் அழுக்கு பூச்சி இருக்கும் என்று தண்ணீர் தெளித்து துடைத்து விடுகிறோம்..
சரி, வாழை இலையிலயும் அந்தச் சாப்பாட்டு முறையிலயும் அப்பிடி என்ன இருக்கு? இலைச் சாப்பாட்டுல நாம என்னவெல்லாம் கூத்துகள் பண்றோம்?
சைவமோ அசைவமோ, எதுவா இருந்தாலும் இலைபோட்டுச் சாப்பிட்டா அது எப்பேர்ப்பட்ட செரிமானக் கோளாற்றையும் சரிபண்ணிடும்.
அகண்ட பக்கம் வலது கைக்கு வசதி. சோறு வகையெல்லாம் இங்கதான் வைக்கணும்.
இலையோட மேல் பக்கம், `தொடு கறி'ங்க. இடப்பக்கம், அப்பளம். மொதல்ல, இலையை எப்பிடிப் போடுறது?
குறுகின பக்கம் இடது கைக்கு வரணும். சோத்தைத் தானே நிறைய வைக்கச் சொல்லுவோம்? அதுக்குத்தாங்க இந்த அமைப்பு!
இலையை உள்பக்கமா மடிச்சா உறவு நீடிக்கும்... வெளிப்பக்கமா மடிச்சா, முறியும்ன்னு சொல்றது, பழையகால நம்பிக்கை.
பந்திகள்ல எதிரெதிர்ப்பக்கமா உக்காந்திருப்போம்.
வெளிப்பக்கமா மடிக்கும்போது நாம சாப்பிட்ட எச்சில் அடுத்தவங்க இலையில பட்டிரும்ங்கிற சுகாதாரத்தைச் சொல்லுற `பொதுவெளி நாகரிகம்' தான்ங்க அது!
நம்மைச் சப்பணம் போட்டு உட்கார வச்சிக் கத்துக்குடுக்கிற இந்த இலைகூட நமக்கு வாத்தியாருதான்!!
#உலக இருதய தினம் இன்று செப்டம்பர்-29
உலகம் முழூவதும் இன்று உலக இருதய தினம் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 29,
இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புடன் இருக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். மாறிவரும் காலங்களில், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. உலகளாவிய மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணமாகி வருகிறது. கரோனரி தமனிகளில் கொழுப்பு மற்றும் கால்சிபைட் பிளேக் குவிவதால் மாரடைப்பு ஏற்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் பருமன், நீரிழிவு, உணவு பழக்கம் மற்றும் புகைத்தல்,மது போன்ற பல்வேறு காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகின்றது. தற்போதைய காலத்தில் குறைந்த வயதினருக்கு கூட மாரடைப்பு வருவதை காண முடிகிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க
#வாழ்க்கை பயணத்தில்...
வாழ்க்கை பயணத்தில்...
In the journey of life...
எந்த எதிர்பார்ப்பும் இன்றி...
எதார்த்தமாக வாழப்பழகி கொள்ளுங்கள்...!
Without any expectations...
Live realistically...!
அனைத்து சூழ்நிலைகளையும்...
எளிதில் கடந்து விடலாம்...!!!
All situations...
Can pass easily...!!!
மற்றவர்களின் வார்த்தைகளை விட...
அனுபவமே உண்மையான, சிறந்த வழிகாட்டியாகும்.!
More than other people's words...
Experience is the true and best guide!
நமது செயல்களில் நாம் செய்யும் தவறுகளுக்கு
நாம் கொடுத்துள்ள பெயரே அனுபவம் என்பதாகும்.
For the mistakes we make in our actions
The name we have given is experience.
இனிய இரவு வணக்கம்...Good Night
#பிறப்பு
மீண்டும் பிறப்போம் என்பது உறுதி இல்லை...!*
*உயிர் உள்ள வரைதான் நட்பு பந்தம் - பாசம் எல்லாம்....!*
*மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே...!*
*வாழும் வரை சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வோம்...!*
*நல்ல உள்ளங்களை சேகரிப்போம்..
#ஆணவம் வேண்டாம்
நான்தான் பெரிய ஆள்,
எனது கட்டளைக்கு அனைவரும்
கட்டு பட வேண்டும் தற்பெருமை
எண்ணத்தை கைவிடுங்ககள்
இல்லையேல்உங்கள் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், வேலை ஆட்கள்
உங்களுடன் போலியாகதான் பழகுவார்கள்
🍂வங்கியில் பணத்தை சேர்ப்பதை
தவித்து முடிந்த அளவு தானம்,தர்மம் செய்து புண்ணியத்தை
சேர்த்து மறுமை வாழ்க்கையை அழகாக மாற்றி மறுமை வீட்டை அழகாக்கிக் கொள்ளுங்கள்
🍂உங்கள் குழந்தைகளுக்கு
அல்குர்ஆன் அல் ஹதீஸ்களை கற்றுக் கொடுங்கள்
🍂உயிரினங்கள் மீது கருணை காட்ட கற்றுக் கொடுங்கள்
🍂உங்களுக்கு உள்ளேயே ஒரு வட்டம் போட்டு வாழ்க்கையை வாழாதீர்கள்
🍂இன்னும் சில நொடி, சில நிமிடம், சில நாட்கள், சில மாதம்,சில ஆண்டுகளில்
இந்த பூமியை விட்டு போய்விடுவோம் என்ற எண்ணத்தில் வாழ பழகுங்கள்
🍂இந்த வீடு, சொத்து, கார், தொழில், பணம், செல்வாக்கு, உடன் பிறந்தவர்கள்,
சொந்தங்கள், வேலையாட்கள், அதிகாரம்,பதவி இவை அனைத்தும் மறுமை வரை உங்களுடன் வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
🍂உடற்பயிற்சி, தியானம் செய்து உடலை பாதுகாப்பாவும் ஆரோக்கியமாகவும் வைக்க முயற்சியுங்கள்
🍂வாழ்க்கையில் ஓர் நோக்கம் வேண்டும் அது இல்லாமலேயே ஏனோதானோ என்று இருந்து விடாதீர்கள்
🍂குறைந்தது 4 பேருக்காவது
நன்மைகள் செய்யுங்கள்
🍂ஏழைகள் அனாதைகள்
ஊனமுற்றவர்கள் வயோதிபர்கள்
மற்றும் முடியாதவர்கள் இவர்களுக்கு முடிந்த வரை உதவி செய்யுங்கள்
🍂இந்த ஆன்மா பூமிக்கு வந்த நோக்கம் என்ன என்பதை தெரிந்து சிந்தித்து செயல் படுங்கள்
🍂பெண்,மண்,பணம், காசு,துட்டு,
மணி குடி போதை போன்ற வற்றின் பின்னால் அலையாமல் நல்ல மனிதனாக வாழ பழகிகொள்ளுங்கள்!
🍂இறைவன் உங்களுக்கு வழங்கியுள்ள இந்த அழகிய வாழ்வுக்கு எப்போதும்
நன்றி சொல்லுங்கள்
#அல்ஹம்துலில்லாஹ்
🤲எமது வாழ்க்கை நலமாகவும்
வளமாகவும் ஆரோக்கியமாகவும்
அமைய ஏக இறைவன் எம் அனைவருக்கும் நல்லருள்புரிவானாக
🤲யா அல்லாஹ்!
இன்றைய நாளுக்கான அனைத்து பாக்கியங்களையும் உனது அருளையும்
நிஃமத்துக்களையும் எங்கள் அனைவருக்கும் தந்தருள்வாயாக
ஆமீன் ஆமீன் ஆமீன்.✍🏼🌹
#லதா மங்கேசுக்கர் பிறந்தநாள் இன்று
லதா மங்கேசுக்கர் (Lata Mangeshkar; 28 செப்டம்பர் 1929* – 6 பெப்ரவரி 2022) இந்தியப் பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், தயாரிப்பாளரும் ஆவார்.
இவர் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க பாடகர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார்.
எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இந்திய இசைத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பானது இந்தியாவின் இசைக்குயில், மிலேனியத்தின் குரல், இன்னிசை இராணி போன்ற கௌரவப் பட்டங்களைப் பெற்றது.
குறிப்பாக இந்தி, வங்காள, மராத்தி மொழிகள் உட்பட முப்பத்தாறுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும் சில வெளிநாட்டு மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் தனது வாழ்நாள் முழுவதும் பல பாராட்டுகளையும் மரியாதைகளையும் பெற்றார்.
1987-இல் இந்திய அரசால் தாதாசாகெப் பால்கே விருது வழங்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டில், நாட்டிற்கு இவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்தியாவின் உயரிய குடிமக்களுக்கான விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது, இது எம். எஸ். சுப்புலட்சுமிக்குப் பிறகு இந்தப் பெருமையைப் பெறும் இரண்டாவது பெண் பாடகி ஆவார். 2007 ஆம் ஆண்டில், பிரான்ஸ் தனது உயரிய குடிமக்கள் விருதான, செவாலியே விருதை அவருக்கு வழங்கியது.
லதா மங்கேசுக்கர் மூன்று தேசியத் திரைப்பட விருதுகள், 15 வங்காளத் திரைப்படப் பத்திரிகையாளர் சங்க விருதுகள், நான்கு பிலிம்பேர் விருதுகள், இரண்டு பிலிம்பேர் சிறப்பு விருதுகள், பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1974 இல், இலண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் மண்டபத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
முதன் முதலாக 1942 இல் கிதி ஹசால் என்ற மராத்திப் பாடலைப் பாடினார். 1948 இல் இவர் பாடிய மஜ்பூர் என்ற திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வந்த படங்களான பர்சாத், அந்தாஸ், துலாரி, மகால் போன்ற படங்கள் இவருக்குப் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தன. இவரது பாடல்கள் அந்தக் காலத்தில் தொடங்கி இன்றுவரை தனித்துவமான கவர்ச்சியோடு பலரையும் கவர்ந்து கொண்டிருக்கின்றன.
1942 ஆம் ஆண்டு சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலைப் பாடினார்.
அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்து விடவே, குடும்பம் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளானது. அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் “மஜ்பூர்” என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார். இது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். இதனை தொடர்ந்து வந்த ‘மகால்’, ‘அந்தாஸ்’, ‘பர்சாத்’, ‘துலாரி’ போன்ற படங்கள் இவருக்கு பெரும் புகழை ஈட்டிக்கொடுத்தது.
1942 முதல் சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நவ்ஷத், எஸ்.டி. பர்மன், சி. ராம்சந்த்ரா, ஹேமந்த் குமார், சலீம் சவ்திரி, கய்யாம், ரவி, சஜ்ஜத் ஹூசைன், ரோஷன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் தேசாய், சுதிர் பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், மற்றும் உஷா கன்னா, ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனு மாலிக், ஆனந்த் மிலிந்த், ஷிவ் ஹரி, ராம் லட்சுமண், ஏ.ஆர் ரகுமான், இளையராஜா என கிட்டத்தட்ட எல்லா இசையமைப்பளர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.
கொரோனா தொற்றுக் காரணமாக, மும்பை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த லதா மங்கேஷ்கர், 2022 பெப்ரவரி 6 அன்று சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
வரலாற்றில் இன்று செப்டம்பர் 28
1889 - ஃபிரான்சில் நடைபெற்ற, எடைகளுக்கும், அளவீடுகளுக்குமான பொது மாநாட்டில், மீட்டர், கிலோகிராம் ஆகியவற்றின் அளவுகளும், இவற்றை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்பட்ட சமன்பாடுகளுக்காக, ஹைட்ரஜன் வெப்பமானி செண்ட்டிகிரேட் அளவையும் உருவாக்கப்பட்ட நாள்
இவற்றிற்கான மூல முன்மாதிரிகள் (ப்ரோட்டோடைப்), பிளாட்டினம்-இரிடியத்தால் உருவாக்கப்பட்டதுடன், அவற்றின் நகல்கள் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
1668இலேயே ஜான் வில்க்கின்ஸ் என்ற ஆங்கிலேயே மெய்யிலாளர், பதின்ம அடிப்படையிலான நீள அளவையை முன்மொழிந்திருந்தார். ஃப்ரெஞ்சுப் புரட்சிக்குப்பின், அறிவியல் முன்னேற்றங்களின் கணக்கீடுகளுக்கு உதவியாக இல்லாத பழைய அளவீடுகளை மாறற விரும்பிய ஃப்ரெஞ்சு அறிவியல் கழகம் ஓர் ஆணையத்தை அமைத்தது.
இந்த ஆணையமே 1791இல் பதின்ம அடிப்படையிலான நீள அளவையையும், மீட்டர் என்ற சொல்லையும் கொண்டுவந்தது. கிரேக்க மொழியில் அளவிடுதல், எண்ணுதல், ஒப்பிடுதல் என்ற பொருள்தரும் வினைச் சொல்லான மீட்ரியோ, அளவீடு என்ற பொருள்தரும் பெயர்ச்சொல்லான மீட்ரான் ஆகியவற்றிலிருந்து இந்த மீட்டர் வந்தது.
இதற்கான அளவு பலவாறு நிர்ணயிக்கப்பட்டு, பொதுத்தன்மை இல்லாமலிருந்த நிலையில்தான், 1875 மே 20 அன்று 17 நாடுகள் கையெழுத்திட்ட மீட்டர் ஒப்பந்தத்தின்படி, இந்த முதல் மாநாடு இவற்றுக்கான பொது அளவை நிர்ணயித்தது.
இந்த மாநாடு நான்காண்டுகளுக்கு ஒருமுறை கூடி பல்வேறு அளவைகளையும் நிர்ணயம் செய்கிறது. எடைகளுக்கும், அளவீடுகளுக்குமான பன்னாட்டு அமைப்பு, இதற்கான குழுவின்மூலம் இதனை நடைமுறைப்படுத்துகிறது. மூன்றாவது (1901) மாநாட்டில் லிட்டர், நான்காவது (1907) மாநாட்டில் காரட், ஒன்பதாவது (1948) மாநாட்டில் ஆம்பியர், வாட் முதலான அளவைகள் வரையறுக்கப்பட்டன.
1948 மாநாட்டில்தான் வெப்ப அளவைக்கு பாகை செல்சியஸ் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. மீட்டர், கிலோகிராம், நொடி ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட இது எம்கேஎஸ் முறை என்றழைக்கப்படுகிறது.
இதை அடிப்படையாகக் கொண்டு, 1960இல் நடைபெற்ற 11ஆவது மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அலகுகளுக்கான பன்னாட்டு (எஸ்ஐ) முறையை, அமெரிக்கா, லைபீரியா, மியான்மர் தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு பின்பற்றுகின்றன.
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்