||श्री:||ஸ்ரீ 969)🏹🚩 #ராமாநுஜர்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்
உலகத்தில் வாழும் மனிதர்களே ! நீங்கள் மலைகளினிடையே நின்ற நிலையிலும், நீர் நிலைகளில் நீராடியும், ஐந்து வகைப்பட்ட தீயின் நடுவிலிருந்தவாறு தவங்கள் பலவற்றைச் செய்ய வேண்டிய அவசியமில்லை.
அஃது எவ்வாறு எனில் அனைத்து மக்களும் விரும்புகின்ற காஞ்சிபுரத்தில் உள்ள திருவெஃகா என்னும் திருத்தலத்தில் சயனித்தருள் புரியும் எம்பெருமான் சொன்ன வண்ணம் செய்த பெருமாளை எவ்விதப் பயனையும் எதிர்பாராமல் மலர்களை அவன் திருவடிகளில் இட்டு வணங்கினாலே போதும்.
உங்களிடமுள்ள பாவங்கள் யாவும், நாம் இருப்பதற்கான இடம் இது இல்லை என்று எண்ணியவாறு உங்களை விட்டு அகன்று ஓடிவிடும்.
பேயாழ்வார் திருவடிகளே ஶரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

