ShareChat
click to see wallet page
search
சிந்தனை - நம் நன்மைகள். மருந்து உண்பதால் நோய் தீருமே தவிர மகிழ்ச்சி வந்து விடாது. படிப்பதால் அறிவு வளருமே ஒழிய ஒழுக்கம் வந்து விடாது. ஒரு ஆசிரியர் அடுத்தத் தேர்வைப் பற்றி எண்ணுகிறார். ஒரு அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றி எண்ணுகிறார். ஒரு ஆன்மீகவாதி அடுத்த பிறப்பைப் பற்றி எண்ணுகிறார். ஆசைகள் குறையும் பொழுது அமைதி பெருகுகிறது. உயர்ந்தோர் நட்பு பழகப் பழக இன்பம் தரும். அன்பான வரவேற்பு பாதி விருந்திற்குச் சமம். கருணை உடையவர்க்கு துன்பம் உலகு (நரகம்) இல்லையாகும். பிறர் நமக்கு செய்த நன்மையை மறக்கக் கூடாது. நாம் பிறருக்கு செய்த நன்மையை மறந்து விட வேண்டும். தீய செயல்களை செய்பவனிடத்தில் வறுமை வந்து சேரும். நல்ல வழியில் வந்த செல்வம் தான் சந்ததிகட்குப் பயன்படும். ஒருவனுடைய அறிவு அவன் செய்யும் செயல்களால் அளவிட வேண்டும், பேச்சால் அல்ல. தற்பெருமை, பேராசை, கஞ்சத்தனம் ஆகிய இம்மூன்றும் மனிதனை கீழ் நிலைக்கு கொண்டு செல்லும். இறப்பு நம்மை நெருங்கும் முன்பே நல்ல செயல்களைச் செய்து விட வேண்டும். வாழ்க வளமுடன். 😊😊😊 #innraya SINTHANAY
innraya SINTHANAY - உலகில் நிலையானது பணமோ பொருளோ அல்ல. 003 நம்பிக்கை நிறைந்த அன்பு மட்டுமே! உலகில் நிலையானது பணமோ பொருளோ அல்ல. 003 நம்பிக்கை நிறைந்த அன்பு மட்டுமே! - ShareChat