
saravanan.
@60258885saravanan
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#innraya SINTHANAY சிந்தனை.*.( 08.05.2026)..
……………………………………………...................
*தீர விசாரிக்காமல் எதையும் நம்பாதீர்கள்..''*
......................................................
ஒரு நிகழ்வை நாம் நம்புகின்றோம் என்பதற்க்காகவும், விரும்புகின்றோம் என்பதற்க்காகவும், அப்படி நடக்க வேண்டும் என்று நம் எதிர்பார்ப்பு என்பதற்க்காக, மட்டும் அது உண்மையாகி விடாது.
எதையும் கேள்வி கேட்கின்ற,தீர விசாரித்து பரிசோதனை செய்து தெரிந்து கொள்கின்ற அறிவு நமக்கு அவசியம் இருக்க வேண்டும்..
யார் எதைச் சொன்னாலும் அது உண்மை தானா? என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அறிவார்ந்த மனிதனாக வளர அதுவே வழி.
நம் அய்யன் திருவள்ளுவர் கூட மிக அழகாகச் சொல்லி உள்ளார்.
எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப் பொருள்மெய்ப் பொருள் காண்பதறிவு என்று..
அதாவது.,
எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல், உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவது தான் அறிவுடைமையாகும்..
‘இவ்வளவு ஏன்? புத்தரே ’என் போதனைகளை யாரும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். ஒவ்வொரு வார்த்தையையும் கடுமையாச் சோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று தான் அவரே சொல்லி இருக்கிறார்.
வேட்டையாடச் சென்ற ஒருவரின் கையில், பறவை ஒன்று சிக்கியது. அந்தப் பறவை, அவரிடம், உனக்கு நான் மூன்று அறிவுரைகள் தருகிறேன், என்னை விட்டு விடு என்று கெஞ்சியது.
சரி, அந்த அறிவுரைகளைச் சொல் என்று கேட்டார் அவர்.
அதற்கு அந்தப் பறவை, உன் கையிலிருந்து என்னை விட்டு விட்டதற்குப் பிறகு முதல் அறிவுரை சொல்கிறேன் என்றது.
நான் மரத்தில் போய் உட்கார்ந்த பிறகு, இரண்டாவது அறிவுரையையும், நான் அதிலிருந்து பறந்ததற்குப் பிறகு மூன்றாவது அறிவுரையையும் சொல்கிறேன் என்று சொன்னது பறவை.
அவரும் அந்தப் பறவையை, தனது பிடியிலிருந்து விட்டார்.
அப்போது அந்தப் பறவை, முதலில் உன் கடந்தகாலத் தவறுகளையும், நீ இழந்தவைகளையும் எண்ணி சுமைகளாக்கி, உன் வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளாதே என்று சொன்னது.
பின்னர்,அருகில் இருந்த மரத்திற்குச் சென்று உட்கார்ந்த பின், யார் எதைச் சொன்னாலும், அதை உன் அறிவு கொண்டு சிந்தித்துப் பார், அதை அப்படியே நம்பி விடாதே. உன் அறிவு கொண்டு நீ சிந்தனை செய்தால் தான், எதையும் நீ சரியாகச் செய்ய முடியும் என்று தனது இரண்டாவது அறிவுரையைச் சொன்னது பறவை.
இவ்வாறு சொன்ன அந்தப் பறவை, வேடரைப் பார்த்து, ''பைத்தியக்காரா, என் உடலுக்குள் இரண்டு அற்புதமான பெரிய வைரங்கள் இருக்கின்றன, என்னை கொலை செய்திருந்தால் அவற்றை நீ அடைந்து இருக்கலாம்.உன் பிடியிலிருந்து என்னை விட்டு விட்டாயே என்று சொன்னது.
அதற்கு அந்த மனிதர், ''சரி இப்ப என்ன, விட்டு விட்டேன், வேதனை தான், பெரிய இழப்பு தான், பெரிய தவறு தான் என்று சிறிது நேரம் புலம்பி விட்டு, அந்த மூன்றாவது அறிவுரையைச் சொல் என்றார்.
அதற்கு அந்தப் பறவை,உன் கடந்த காலத் தவறுகளையும்
நீ இழந்தவற்றையும் எண்ணி நொந்து போகாதே என்று, நான் உனக்கு முதலில் சொன்னது நினைவு இருக்கிறதா, ?
நீ அதைத்தான் இப்போது செய்கிறாய் என்று சொன்னது.
அடுத்து, இரண்டாவது அறிவுரையாக, யார் எதைச் சொன்னாலும், அதை உன் பகுத்தறிவு கொண்டு சிந்தித்துப் பார், அதை அப்படியே நம்பி விடாதே என்று சொன்னேன்.
இவ்வளவு சிறிய பறவையாகிய என் வயிற்றில் இவ்வளவு பெரிய இரண்டு வைரங்கள் இருக்கின்றன என்று, நான் சொன்னால் அதை நீ நம்பிய உனது அறிவற்றதனத்தை என்ன சொல்வது?
எனவே உனக்கு எது சொன்னாலும் பயன்படாது என்பதே மூன்றாவது அறிவுரை என்று சொல்லி விட்டுப் பறந்தது, அந்த அறிவாளிப் பறவை.
*ஆம்.,நண்பர்களே !*
தீர விசாரிக்காமல் எல்லாவற்றையும் நாம் கண்ணை மூடிக் கொண்டு நம்பிக் கொண்டு இருக்கிறோம். எதையும் அறிவு கொண்டு சிந்திப்போம்..
தீர விசாரித்து எது உண்மை,எது பொய் என்று அறிந்து வாழ்க்கைப் பாதையிலே நடைபோட்டு முன்னேறுவோம்.. வெற்றி பெறுவோம்.
(ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி.....)💐💐💐🙏🏻🌹🌹🌹
#sirappaana Eduthurayppu. எல்லோரும் மோசமானவர்கள் இல்லை.
சற்று வித்தியாசமாக உள்ளார்கள்.
இதைப் புரிந்து கொண்டால் மனிதர்களுக்குள் விரோதம் வராது.
உங்களை நீங்களே நேசியுங்கள்.
தன்னை நேசிக்காத மனிதனால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியாது.
குழப்பமான இடத்தில் தெளிவாகப் பேசுங்கள். பிரச்சினையான நேரத்தில் தீர்வு பற்றிம் பேசுங்கள்.
வருத்தமான சூழலில் ஆறுதலாய்ப் பேசுங்கள். மன அழுத்தம் உள்ளவர்களிடம் உற்சாகப்படுத்திப் பேசுங்கள்.
உங்கள் வாழ்வில் எதைச் சரி செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களோ அதைப் பொறுத்துக் கொள்ளப் பழகி விடுங்கள்.
அடுத்தவர்கள் வாழ்வதைப் பார்க்காதீர்கள். நாம் எப்படி வாழ வேண்டும் என்று பாருங்கள்...!!!
வாழ்க வளமுடன்....!!!
#sinthanay kalam. களம்
இன்றைய சுறு சுறுப்பான, வேலை பளுமிக்க, நம் வாழ்க்கை முறையில், மனஅழுத்தம் என்பது தவிர்க்க இயலாத ஒரு அங்கமாக மாறித்தான் போய் விட்டது.. நமக்கு ஏற்படும் மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்த, மனதை அழுத்தத்தில் இருந்து வேறு ஏதாவது சிந்தனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நாம் செய்யும் செயல்களை நமக்கு பிடித்த விதமாக மட்டுமில்லாமல், அது நம் கவலைகளையும் மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும்.
அது சிறிது நேரத்திற்கு மட்டுமே உண்டான செயலானாலும் கூட, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் பொருட்டு ஒரு ஆறு பொழுது போக்குகளைப் பின்பற்றி மன அழுத்தத்தைக் குறைத்து சந்தோஷமாக வாழுங்கள்.
புத்தகம் படிப்பது:
புத்தகம் படிப்பது என்பது மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு புகழ் பெற்ற வழி. பிடித்த நல்ல புத்தகங்களை வைத்திருந்தால், அவைகளை படிக்க ஆரம்பிக்க வேண்டும். இதனால் அறிவை வளர்ப்பதோடு, மனமும் நல்ல புத்துணர்ச்சியோடு இருக்கும்.
யோகாசனம் :
தினசரி யோகாசனம் பயிற்சி செய்வதால் உடம்பிலுள்ள தசைகள் நன்கு விரிவடைந்து ஒய்வு பெரும். இதனால் மன அழுத்தம் கண்டிப்பாகக் குறையும். யோகாசனத்தால் உடம்பு விரிவடையும் பொழுது மனமானது சாந்தமாகி பின்னர் அமைதி அடையும்.
இசையை கேட்பது:
கூடுதலான மன அழுத்தம் அடையும் நேரத்தில் முதலில் செய்ய வேண்டியது. நல்ல இசையை கேட்டு மகிழ்வதே. இசை நம் மனதுக்கு இதமானதாக இருக்கும். மேலும் நமக்கிருக்கும் துன்பங்களை மறக்கச் செய்யும். எனவே துன்பம் தரும் விஷயங்களால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க இசை பெரிதும் உதவி புரிகிறது.
தோட்டக்கலை :
தோட்டக்கலையில் ஈடுபடும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அது இயற்கைக்கு மிக அருகில் அழைத்துச் செல்லும். திறந்த வெளிக்குச் சென்று செடிகள் நட்டு, அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி, பூக்கள் மற்றும் கனிகளின் அழகை ரசித்தோமானால் அன்றாடம் அனுபவிக்கும் மன அழுத்தம் குறையும். மேலும் மனமும் இயற்கையாகவே அமைதியடையும்.
சமைப்பது:
சமைக்கத் தெரியுமா? ஆமெனில், மன அழுத்தத்தை குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும். சமையல் செய்வதினால் சிந்தனையானது தயார் செய்து கொணடிருக்கும் உணவின் மீதும், அதை எப்படி சுவையாகச் செய்யலாம், என்பதிலும் தான் இருக்கும். மேலும் அது ஆக்கத்திறனையும், கற்பனை வளத்தையும் தூண்டி விடுவதால், கவலைகளை மறக்கச் செய்து மன அழுத்தத்திற்கு மருந்தாக விளங்குகிறது.
எழுதுவது :
மன அழுத்தத்தில் இருந்து விடுபட மற்றொரு வழி எழுதுவது. அது ஒரு சொந்த நினைவேடாகவும் இருக்கலாம், அல்லது சிறு கதைகளாகவும் இருக்கலாம். எது எப்படியோ, அது மனதில் உள்ளவையை காகிதம் அல்லது கணினி மூலம் ஒரு படிவம் தருவதாக இருக்கும் இந்த எழுத்து அனுபவம், நம் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை சுலபமாக தீர்க்கவும், நம் கற்பனைகளை வளர்க்கவும் துணையாக நிற்கும்.😊😊😊
#👍உன்னால் முடியும் கடவுள் தந்த பரிசு.
பிறரிடம் ஒரு கடும் சொல்லை சொல்லு முன் வாய் பேச முடியாதவர்களை நினைத்துப் பாருங்கள்.
உங்கள் சாப்பாட்டைக் குறை கூறும் முன் சாப்பிடவே வழி இல்லாதவர்களை நினைத்துப் பாருங்கள்.
உங்கள் கணவரையோ அல்லது மனைவியையோ குறை கூறும் முன் வாழ்க்கை துணை வேண்டி வருந்துபவர்களை நினைத்துப் பாருங்கள்.
உங்கள் குழந்தைகளை குறை கூறும் முன் பிள்ளை வரம் வேண்டுபவர்களை நினைத்துப் பாருங்கள்.
உங்களுடைய வீட்டைக் குறை கூறும் முன் வீடில்லாமல் வீதிகளில் வசிப்பவர்களை எண்ணிப் பாருங்கள்.
உங்களுடைய வேலையைக் குறை கூறும் முன் வேலையில்லாமல் வாடுபவர்களை எண்ணிப் பாருங்கள்.
சோகத்தில் உங்கள் முகம் வாடும் பொழுது கடவுள் தந்த வாழ்க்கை என்ற பரிசுக்கு நன்றி சொல்லி முகத்தில் புன்னகை தவழ விடுங்கள்.
#innraya SINTHANAY சிந்தனை*
🌷08.05.2026🌷
******************
மகிழ்ச்சி ..புரிதல்..
*******************
நம் வாழ்நாள் முழுவதும் தேடிக் கொண்டே இருப்பது மகிழ்ச்சி மட்டுமே...
ஆனால் ,
மனிதன் உள்ளடக்கி
மனதில் வைத்து இருப்பது எல்லாம்
குழப்பமும்.. கேள்வியும்...
அறிவு என்ற பெயரில்
அகப்பட்டது எல்லாவற்றையும் மனதிற்குள் அடைத்து வைத்து,
அறிவுப் போர்வையை போர்த்திக் கொண்டு..,,
மேலும் மேலும்
விவரங்களையும்,
விளக்கங்களையும்,
தேடித்தேடி.....
வாழ்நாளைத் தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதன்..
இறுதியில் முரண்பாடுகளின் மொத்த உருவமாக போகின்றான்....
இதற்கெல்லாம்
விடை என்ன ...
தீர்வு என்ன ...
முடிவு என்ன....
"புரிதல்" தான்...
எல்லா செய்திகளையும், தகவல்களையும்
கிளை விட்டுப்
பரப்பி இருக்கும் மனதை பற்றிய எளிய "புரிதல் மட்டுமே"
இந்தப் புரிதல் இல்லாததே
எல்லா குழப்பங்களுக்கும், முரண்பாடுகளுக்கும், முட்டுக்கட்டைகளுக்கும், காரணமாகின்றது....
நம் வாழ்வில் எதைத் தேர்ந்தெடுக்கும் போதும்,
செயல்படுத்தும் போதும்,
இது நமக்கு மகிழ்ச்சியைத் தருமா?
நிம்மதியைத் தருமா?
கொண்டாட்டத்திற்கான வழியா?
குதூகலத்திற்கான சாவியா?
உற்சாக ஊற்று எடுத்து ,
உவகை பொங்க,
உள்ளமெல்லாம் பூரிப்படையும் செயலா?
செயலுக்கான வழியா?
என்ற
எளிய கேள்வியை
ஆழமான புரிதலுடன்
கேட்டுக் கொள்வது ஒன்று தான்
புரிதலை நோக்கி பயணப்படுவதற்கும்...
புரிந்து கொள்வதற்கான
மகிழ்ச்சியாக வாழ்வதற்கான
சிறந்த வழி...
😊😊😊
#vaalkkay malargal மலர்கள்: மே 8
இனி, சினம் இல்லை
ஒருவரிடம் ஒருவாரம் எடுத்துக் கொண்டு அவரிடம் மட்டும் சினம் தவிர்த்தல் பயிற்சியை ஒருமுகப்படுத்திக் கொள்ள வேண்டும், “அவருக்கும் நமக்கும் என்ன உறவு? எத்தகைய உறவு? அவர் நமக்காக, நம் நலனுக்காக எவ்வளவு நல்ல காரியங்கள் செய்திருக்கிறார்?” என்று எண்ணிப் பார்க்க வேண்டும். பலமுறை, பல நாட்கள் நமது மகிழ்ச்சிக்காக அவர் ஆற்றிய தொண்டினை உற்று நோக்கினால் இத்தகைய அன்பு உருவத்தின் மீது, அன்பு கொண்ட நண்பர்மீது, உறவினர்மீது சினம் கொள்ளவது தகாது; எனவே, இன்று முதற்கொண்டு அவர்மீது சினம் கொள்ளமாட்டேன் என்ற எண்ணம் உண்டாகும். இந்த எண்ணத்தோடு அவரது உருவத்தை மனதில் நினைத்து இம்முடிவை எடுத்துக் கொள்வோம். இன்று முதற்கொண்டு ஏழு நாட்கள் இந்தப் பயிற்சிக்கு ஒதுக்கி கொண்டு காலையிலே எழுந்தவுடன் “இன்று இவரோடு தொடர்பு கொண்டு பேசப் போகிறேன். இன்னின்ன வேளையில் செயலில் ஈடுபடப் போகிறேன், அவர் இன்னது சொன்னால் எனக்குச் சினம் எழுவது இயல்பாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், இன்று அவர் என்ன சொன்னாலும் சரி, சினம் எழாது காப்பேன், சினம் வருமேயானால், அந்த இடத்திலே விழிப்பு நிலை கொண்டு என்னைத் தடுத்துக் கொள்வேன், என்று உறுதி கொண்டு, அவர் என்ன சொல்வார் என்று தெரிந்து கொண்டு அதற்கும் நாமே அமைதியாகப் பதில் சொல்ல வேண்டும், அல்லது பதில் பேசாமல் இருக்க வேண்டும்” என ஒரு மானசீக நாடகமே தயார் செய்து கொள்ள வேண்டும் ”மீண்டும் அந்த நாளிலே அவரோடு பல முறை சந்தித்துப் பேச, செயலாற்ற வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் விழிப்போடு இருந்து இவரோடு சினம் கொள்ளாது நாம் இந்த நாளைக் கழிக்க வேண்டும்” எனவும் பழகிக் கொள்ள வேண்டும்.
இடையிடையே, அப்போதைக்கப்போது சங்கற்பமியற்றி மனவலிவைக் கூட்டிக் கொள்ள வேண்டும். தவங்களில் அவர்கள் உருவத்தை நன்றாக நிறுத்திக் கனிவோடு வாழ்த்த வேண்டும். சினத்திலிருந்து திருந்தவும் சங்கற்பம் செய்ய வேண்டும். இந்தச் சினமொழிப்புப் பயிற்சி நமது குடும்ப உறுப்பினர்களுக்கும் வெற்றியாக முடிய வேண்டும் என்றும் சங்கற்பம் செய்து கொள்ள வேண்டும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி
🌹🌹🌹
#kelvi
அன்பர்களின் கேள்விகளும் அருள்தந்தையின் பதில்களும்
கேள்வி: சுவாமிஜி! ஒரு தாய் தந்தையருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன; அம்மூன்று குழந்தைகளும் மூன்று விதமாக இருக்கக் காரணம் என்ன?
பதில்: இதில் ஒரு பெரிய விஞ்ஞான உண்மை புதைந்து இருக்கிறது. முதல் குழந்தை உருவாகும் பொழுது தாய், தந்தையரின் மனநிலை, வயது, உடல்நிலை, செல்வம், அறிவு இவைகளைப் பொறுத்தும், இப்பிரபஞ்சத்தில் அக்காலகட்டத்தில் கோள்களின் சஞ்சாரநிலை, பஞ்ச பூதங்களில் ஏற்படுகின்ற இரசாயனமாற்றம் இவற்றைப் பொறுத்தும் அக்குழந்தையின் உருவ அமைப்பு, குணம் முதலியன ஏற்படுகின்றன.
பின் மூன்று அல்லது நான்கு வருடம் கழித்த பின்பு, தாய் தந்தையரின் மனம், உடல், கோள்கள், பஞ்ச பூதங்கள் இவற்றின் நிலையில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கும். இந்நிலைக்கேற்றவாறு அடுத்த குழந்தையின் உருவ அமைப்பு, குணம் முதலியன வேறுபடும். எனவே, இந்நிலையில் முதல் குழந்தைக்கும், அடுத்த குழந்தைக்கும் மாறுதல்கள் இருக்கத்தான் செய்யும். ஒரு மனிதன் வேறொரு மனிதனிடமிருந்து கருவமைப்பு முதலிய 16 காரணங்களினால் வேறுபடுகிறான். அவை:-
1. கருவமைப்பு
2. உணவு வகை
3. காலம்
4. தேசம்
5. கல்வி
6. தொழில்
7. அரசாங்கம்
8. கலை
9. முயற்சி
10. பருவம்
11. நட்பு
12. சந்தர்ப்பம்
13. ஆராய்ச்சி
14. பழக்கம்
15. வழக்கம்
16. ஒழுக்கம்
முதலியன. இவற்றிற்கேற்ப,
1. உருவ அமைப்பும்
2. குணம்
3. அறிவின் உயர்வு
4. கீர்த்தி
5. உடல்வலிவு
6. உடல் நலம்
7. செல்வம் மனிதர்க்கு உண்டாகும்.
மேற்கண்ட பதினாறு காரணங்களால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அவ்வப்போது மேலே சொன்ன உருவமைப்பு முதலிய வேறுபாடுகள் வருகின்றன.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
(நாளையும் தொடரும்)
🌹🌹🌹
#👉வாழ்க்கை பாடங்கள் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்












