
saravanan.
@60258885saravanan
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#thiruppathigam. திருப்பதிகம்🌷...!
*🌷நான்காம் திருமுறை 11 வது திருப்பதிகம்🌷...!*
*🌷அருளிச்செய்தவர்: திருநாவுக்கரசு சுவாமிகள்...🌷*
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶
*பாடல் :05...!*
வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கெலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள்முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.
*விளக்கம்:*
விரதத்தை மேற்கொண்ட சான்றோர்களுக்குத் திருநீறு சிறந்த அணியாகும். நான்மறை ஆறங்கம் ஓதுதல் அந்தணர்களுக்குச் சிறந்த அணியாகும். பிறைக்குச் சிவபெருமானுடைய அழகிய சடை சிறந்த அணியாகும். எம்மைப் போன்ற அடியார்களுக்குச் சிறந்த அணி திருவைந்தெழுத்தேயாகும்.
*தொடரும்...*
🟪🟫🟪🟫🟪🟫🟪🟫🟪🟫🟪🟪🟫🟪🟫🟪🟫🟪🟫🟪🟫🟪
#kanthar anuboothi அனுபூதி🌷...!🦚*
🌷அருணகிரிநாதர் அருளியது🌷...!*
➿➿➿➿➿➿➿➿➿
🔴🟢🔴🟢🔴🟢🔴🟢🔴
*நூல் :06...!*
திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்பு மதோ
பணியா வென வள்ளி பதம் பணியுந்
தணியா வதிமோத தயா பரனே.
*விளக்கஉரை :*
எனக்கு இடும் கட்டளை எவை என வினவி, வள்ளி பிராட்டியின் திருவடிகளை வணங்குகின்ற, குன்றாத, மிகுந்த காதல் கொண்டுள்ள, கருணைக் கடவுளே, மிகவும் கடினமான மனமாகிய கல்லின் மீது, உனது திருவடியான, அழகு மிகுந்த தாமரை மலருவது என்ன ஆச்சரியம்? ..
*🌷ஓம் சுப்பிரமணியனே போற்றி🌷*
*🌷ஓம் சரவணபவா போற்றி🌷*
*🌷ஓம் சக்திவேலா போற்றி !🌷*
*🌷ஓம் கார்த்திகேயா போற்றி !🌷*
*🌷ஓம் செந்திலாண்டவா போற்றி !🌷*
*🌷ஓம் சிவபெருமானின் புதல்வா, போற்றி! போற்றி !🌷*
*தொடரும்...*
🟧🟢🟧🟢🟧🟢🟧🟢🟧🟢🟧🟧🟢🟧🟢🟧🟢🟧🟢🟧🟢🟧
#hmm hummy. குறிப்புகள் :*
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
*கர்நாடகா ஸ்டைல் தொன்னை பிரியாணி (Donne Biryani) செய்முறை விளக்கம்:*
கர்நாடகா ஸ்டைல் தொன்னை பிரியாணி (Donne Biryani) என்பது சீரக சம்பா அரிசி, பச்சைப் புதினா-கொத்தமல்லி மசாலா மற்றும் வாசனைப் பொருட்கள் சேர்த்து, தொன்னை (வாழை இலை கோப்பை) பாத்திரத்தில் பரிமாறப்படும் ஒரு தனித்துவமான சுவை கொண்ட பிரியாணியாகும்.
*தேவையான பொருட்கள்:*
சீரக சம்பா அரிசி - 2 கோப்பை (ஊறவைத்தது)சிக்கன்/மட்டன் - 500 கிராம்எண்ணெய்/நெய் - தேவையான அளவுபெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)தக்காளி - 1 (நறுக்கியது)இஞ்சி, பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்தயிர் - 1/2 கோப்பை.
*மசாலா அரைக்க:*
புதினா - 1 கட்டுகொத்தமல்லி இலை - 1 கட்டுபச்சை மிளகாய் - 4-5 (காரம் தேவைக்கேற்ப)பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி - சிறிதளவு
*செய்முறை:*
மசாலா அரைத்தல்:
புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் பட்டை, கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
தாளித்தல்:
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.மசாலா
வதக்குதல்:
இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கிய பின், அரைத்து வைத்துள்ள பச்சை மசாலா மற்றும் தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
இறைச்சி வேகவைத்தல்:
சிக்கன்/மட்டன் துண்டுகள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி, மூடி போட்டு இறைச்சி 80% வேகும் வரை வேகவைக்கவும்.
பிரியாணி தயாரித்தல்:
ஊறவைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி (1:2 என்ற விகிதத்தில்) உப்பு சரிபார்த்து, அரிசி மற்றும் இறைச்சி நன்கு வேகும் வரை (சிறிய தீயில்) சமைக்கவும்.
பரிமாறுதல்:
தயார் செய்த பிரியாணியை வாழை இலையில் செய்த தொன்னையில் பரிமாறினால், சுவையான, மணக்க மணக்க கர்நாடகா ஸ்டைல் தொன்னை பிரியாணி தயார்.
🔲💚🔲💚🔲💚🔲💚🔲💚🔲🔲💚🔲💚🔲💚🔲💚🔲💚🔲
https://www.instagram.com/reel/DVYJ_JhjJQs/?igsh=MW9iYjBuc2hwbmU5aw==
(Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam) #irav vanakkam
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்"*
*காலை சூரிய உதயத்தில்...*
*கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||*
*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.*
*இன்றைய கோபுர தரிசனம்.*
*அருள்மிகு யோக ஹயக்ரீவர் திருக்கோயில் (தேவநாதப் பெருமாள்),*
*மூலவர் : வரதராஜப்பெருமாள்.*
*உற்சவர் : தேவநாதப்பெருமாள், யோக ஹயக்ரீவர்.*
*செட்டிபுண்ணியம் 603 204.*
*செங்கல்பட்டு,*
*காஞ்சிபுரம் மாவட்டம்.*
*காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*
*+91 8675127999.*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗*
*★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★*
*சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052*
*╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝*
*!!♤♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤♤!!*
*சிறப்பு : வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அத்துடன் புதன், வியாழன், சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது.யோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருப்பது சிறப்பு.*
*நேரில் வரமுடியாத பக்தர்களுக்காக யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஹயக்ரீவர் படம் பிரசாதம் மற்றும் பேனாக்கள் கொண்ட பாக்கெட்டை தபாலில் அனுப்பிவைப்பதும் நடைபெறுகிறது.*
*கல்வியில் சிறந்து விளங்கவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும் திருமணத்தடை நீங்கவும், வியாபாரம் செழிக்கவும், வழிபாடு செய்யப்படுகிறது.*
*யோக ஹயக்கிரீவருக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும், துளசி அர்ச்சனை செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.*
*கல்வியும் செல்வமும் பெருக இங்குள்ள ஹயக்ரீவரை வணங்குகிறார்கள். இங்கு புதன் கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இவருக்கு ஏலக்காய் மாலை சார்த்தி வழிபடுகிறார்கள். இவரை வணங்கினால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும், ஞாபக சக்திகூடும் என்பதுடன் தேர்வு எழுதும்போது துணை நிற்பார் என்பதால் பள்ளி கல்லூரி மாணவ,மாணவியர் ஹால் டிக்கெட் வாங்கிய கையோடு தேர்வு எழுதப்போகும் பேனாவுடன் இங்கு வந்து ஹயக்ரீவரின் பாதத்தில் வைத்து அவரது ஆசீர்வாதத்துடன் எடுத்து செல்கின்றனர். பல ஆண்டுகளாக இது தொடர்வதாலும் வந்து சென்ற மாணவ, மாணவியர் பலன் பெற்றதாலும் தேர்வு நேரத்தில் அதுவும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக செட்டி புண்ணியம் ஹயக்ரீவர் கோவில் என்றே இது பெயர் பெற்றுவிட்டது.*
*இத்தலத்து ராமர் சிலையின் கணுக்காலில் ஒரு ரட்சை காணப்படுகிறது. இதுபோல் வேறெந்த ராமர் சிலையும் அமையவில்லை. தாடகைவதத்தின்போது ராமருக்குத் திருஷ்டி படாமலிருக்க விஸ்வாமித்திர முனிவர் இந்த ரட்சையைக் கட்டினார் என்று கூறுகிறார்கள்.*
*செட்டி புண்ணியம் தலத்துக்குச் சென்று ஸ்ரீயோக ஹயக்ரீவரையும், ஸ்ரீதேவநாத சுவாமியையும், தாயாரையும், சீதா ராமரையும் வழிபட குடும்பத்தில் அறிவும் ஞானமும் பெருகும் ஸ்வாமி ஸ்ரீதேசிகனுக்கு ஸ்ரீஹயக்ரீவர் பிரத்தியட்சமாகக் காட்சியளித்து, சகல கலையிலும் கல்வியிலும் மேன்மையடைய அருள்புரிந்தார்.*
*சுமார் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவநாத பெருமாள் கோவிலில் வரதராஜப்பெருமாள் மூலவராக இருந்து சேவை சாதித்து வருகிறார். கடந்த 1848-ம் வருடம் திருவஹிந்தபுரத்தில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்ட தேவநாத பெருமாளும் ஹயக்ரீவரும், மற்றும் தஞ்சாவூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ராமரும் பக்தர்களுக்கு உற்சவர்களாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர் இதில் குதிரை முகம் கொண்ட யோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருக்கிறார்.*
*யோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருப்பது சிறப்பு.*
*இனிய காலை வணக்கம்.🙏💐*
*🌹அன்புடன்🌹*
*சோழ.அர.வானவரம்பன்.* *+918072055052.*
🌻🌹🌻🌹🌻🌹🌻
#athaanango sari. ஆமையாக இருந்தாலும் என் வீட்டிலும் 3 அணில் குஞ்சுக இருக்கு*
*அதுங்க படம் பார்த்து அல்ல...இந்த பாட்ட கேட்டும்( ராவணன் மகண்டா),இந்த வசனத்த கேட்டும்,(ஓம் சக்தி பராசக்கி,னு) அரசியல் ரிவ்யூ யூடிப்ல பார்த்து அனிலாக மாருச்சுங்க...*
*அதுல மூத்த அனில் கேக்குது ,என்ன தீயசக்தியும்,தூயசக்தியும் ஒன்னா நிக்குதுனு...*
*2 வது அனில் சொல்லுச்சு சண்டைக்கு கூப்டுவாங்க யாரு ஜெயிப்போம்னு...*
*இது ல ஒரு கொடுமை என்னனு கேட்டா..?*
*என் மகன் 3 வது அனில் கேட்டுச்சு ,எம்மா இதுல யாருமா வி(ச)ஜய் ,னு...*
*சரி ஆமையாக ஒன்று சொல்கிறேன்....*
*நம்ம ~அனில்~ கடைசியா எல்லாரும் பனையூருக்கு வாங்கன்னு சொல்லாம*
*ஒரு வழியா வீடு தேடி போயிட்டாரு cm*
*இனி தேறிடுவார்*
*கொஞ்சம் கொஞ்சமா எதிர் பாருங்க*
*வந்த 2 நாள் லையே 2000 (ம்,₹) கேள்வி கேட்டா என்ன பன்னுவார்...*
*அதுவும் அவருக்கு ஓட்டு போடாதவன் தான் கேக்குறான் அது என்னாச்சி ..? இது என்னவாச்சினு..🤦🏼♂*
*முடிந்த அளவு மீடியாகாரர்களை நிராகரிப்பதே நல்லது..*
*ஒரு விஜயகாந்துடன் போதும்*
*ஆமையும் சரி அனிலும் சரி யாருக்கும் தொந்தரவு கொடுக்காது*
*ஒரு சில நரிகள் தான்*
*இதுல எதுக்கு ஆமை அனில் நரி னு சொல்றேனா...*
*இது அரசியல் பதிவு இல்ல*😁🤷🏼♂️
#innraya SINTHANAY சிந்தனை.*.( 12.05.2026)..
……………………………………………..........
*’சோம்பலை விரட்டுவோம்..'*
.......................................................
நம் முன் பரந்து கிடக்கும் வாய்ப்புகளையும், வசதிகளையும் மிகச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறச் செய்யாமல் சோம்பேறியாக நமக்கு கிடைத்தது அவ்வளவு தான் என எண்ணி மூலையில் முடங்கிப் போய் விடுகினறோம்.
சோம்பேறியை அழைத்து “என்னப்பா, படித்து விட்டாயே! இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டால் சும்மா தான் இருக்கிறேன்” என்பான்.
“சும்மா” என்ற வார்த்தை தமிழ் இல்லை. சோம்பேறிகள் தோற்றுவித்த மொழி இது அவர்களுக்கு மட்டுமே சொந்தம்.
உற்சாகமுடையவர்கள் இவ்வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்கள்.
சோம்பேறித்தனத்திற்கு சிலர் வறுமையைக் காரணம் காட்டுவார்கள்.
அப்படிக் காரணம் காட்டுபவர்களும் சிந்திக்கத் தெரியாத சோம்பேறிகளே..
சோம்பல் தான் சுறுசுறுப்பின் எதிரி !சோம்பல் மிக்கவர்கள் படுக்கையை விட்டு மட்டுமல்லாமல், உட்கார்ந்து விட்டால் இருக்கையை விட்டும் எளிதாக எழுந்திருக்க மாட்டார்கள்.
சோம்பல் மிக்கவர்கள் தானும் சலித்துக் கொள்வார்கள்; மற்றவர்களையும் சலிப்பூட்டுவார்கள். இவ்வாறு இந்த சோம்பலைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்.
இவர்கள் சிரங்குகளை சொறிந்து புண்களை உண்டாக்குபவர்கள்.
வாழ்வின் பாதையில் முள் வேலியாய் நிற்பது சோம்பலே.,முதலில் சோம்பலை விரட்டுங்கள்.
சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒரு மகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.
அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார்..
ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது.
அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டு இருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்.
அதற்கு அந்தப் பறவை,
""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது.
அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.
தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு,
அந்த மனிதனைப் பார்த்து,"மனிதனே, நீயும் தேடு...
மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு.உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது. கதையைச் சொல்லி முடித்த மகான்,
"நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்.
சோம்பேறியாக இருந்தால் வறுமை தான் கிட்டும்'' என்றார்.
''சோர்வு'' என்பதிலுள்ள முதல் எழுத்தை மாற்றினாலேயே நமக்கு பிறந்து விடும் ''தீர்வு''.
சோம்பல் மிக்கவர்கள் வாழ்க்கையில் இழப்பது எத்தனையோ! சுறுசுறுப்பானவர்கள் பெறுவது எவ்வளவோ!
*ஆம்,நண்பர்களே.,*
ஒருவன் அடையும் முன்னேற்றத்தைக் கெடுக்கும் முக்கியமான குணம் சோம்பல் தான். சோம்பலாலால் கால தாமதம் நேர்கிறது.கால தாமதத்தோடு மறதியும் சேர்ந்து கொள்கிறது.
எனவே.,சோம்பலை விரட்டி நாமும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக அடைய வைப்போம்...
(ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி...)🌹🌹🌹🙏🏻💐💐💐*
#innraya SINTHANAY சிந்தனை*
🌷12.05.2026🌷
சூது வாது.
ஒரே மாதிரி இருக்காதீர்கள்.
வாடிக்கையாக
வாலாயமாக,
ஒரே மாதிரி தான் உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது.
நீங்களும் அதே மாதிரி இருந்தால் யாரும் உங்களைக் கவனிக்க மாட்டார்கள்.
மர்மமாக இருந்தால் உடனே கவனிப்பார்கள்.
எனவே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதையோ,
என்ன செய்யப் போகிறார்கள் ? என்பதையோ பிறர் தெரிந்து கொள்ளும்படி தெளிவாக நடந்து கொள்ளாதீர்கள்.
கையில் இருக்கும் சீட்டு மொத்தத்தையும் காட்டாதீர்கள்.
உங்கள் நடவடிக்கையில்
ஒரு புதிர் இருக்கட்டும்.
அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் ? என்பதை ஆர்வத்துடன் மக்கள் கவனிக்கட்டும்.
😊😊😊









![athaanango sari. - [TPULHINIhAI] PLUS JAY/ Polimer' THANTHI TV [TPULHINIhAI] PLUS JAY/ Polimer' THANTHI TV - ShareChat athaanango sari. - [TPULHINIhAI] PLUS JAY/ Polimer' THANTHI TV [TPULHINIhAI] PLUS JAY/ Polimer' THANTHI TV - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_653696_c98cf61_1778569652240_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=240_sc.jpg)


