
saravanan.
@60258885saravanan
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#sinthanay thuligal. *சிந்தனை துளிகள்* 🤔
*சிறந்த மேற்கோள் & ஊக்கம்*
நீங்கள் _பொறுப்பேற்கும்_ அந்த நொடியில் உங்கள் வாழ்க்கை மாறுகிறது.
சூழ்நிலைகளையோ, மனிதர்களையோ, அதிர்ஷ்டத்தையோ குறை கூறுவதை நீங்கள் நிறுத்தும் நாள்தான், உங்கள் சக்தி உங்களிடம் திரும்பும் நாள்.
பொறுப்பேற்பது என்பது உங்கள் _தேர்வுகள்_, உங்கள் செயல்கள், மற்றும் உங்கள் _வளர்ச்சி_ ஆகியவற்றை _உரிமையாக்கிக் கொள்வது_ என்று பொருள்.
அது உங்களை புகார் செய்வதற்குப் பதிலாக _செயல்படவும்_, காத்திருப்பதற்குப் பதிலாக _மேம்படவும்_ தூண்டுகிறது.
அப்போதுதான் உண்மையான மாற்றம் தொடங்குகிறது. ஏனென்றால் உங்கள் வாழ்க்கை இப்போது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
🍁🪻🍁🪻🍁🪻🍁🪻
. "கடன்காரன் " ஆவதை விட பிழைக்கத் தெரியாதவன் "எவ்வளவோ மேல் .
2. "டை" கட்டிய பணக்காரனை விட "கை" கட்டாத ஏழை எவ்வளவோ மேல் .
3. "கெட்டவன்" ஆவதை விட "கையாலாகாதவன்" எவ்வளவோ மேல் .
4. "வல்லவன்" ஆவதை விட " நல்லவன்" எவ்வளவோ மேல் .
5. குற்றம் புரியும் "அதிபுத்திசாலி"யை விட ஒன்றுமறியாத "முட்டாள்" எவ்வளவோ மேல் .
6. "காதலி" க்காக உயிரை விடுபவனை விட "கட்டியவளை " காதலிப்பவன் எவ்வளவோ மேல் .
7. புறத்தில் அழகாய் அகத்தில் அழுக்காய் இருக்கும் "ஹீரோ"வை விட புறத்தில் அழுக்கும் அகத்தில் அழகும் நிறைந்த "காமெடியன்" எவ்வளவோ மேல் .
8. மாதர் தம்மை இழிவு செய்யும்" மதயானைகளை"விட நெறி தவறாத "எறும்பு" எவ்வளவோ மேல் .
9. வெற்றிகளின் "கர்வங்களை" விட தோல்வியிலும் "நம்பிக்கை" எவ்வளவோ மேல்.
10. பொய்யான "புரட்சி" களை விட அமைதியான "அன்பு" எவ்வளவோ மேல்.
வாழ்க வளமுடன் #vaalkkay poraattam.
#arumayaana vaakkiyam. சிந்தனைகள்!!
பகைவரையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். யாரையும் பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் வேண்டாம். அன்பே பகையை வெல்லத் தக்க ஒரே ஆயுதம்.
நல்லதையே கண்களால் காணுங்கள். காதால் கேளுங்கள். மனதால் சிந்தியுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும் அங்கு தெய்வீகச் சூழ்நிலை உருவாகும்...
தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழுங்கள்...
வாழ்க்கையில் எளிமையும், குறிக்கோளில் உயர்ந்த சிந்தனையும் கொண்டவராக இருங்கள். கடமையைச் செய்வதில் ஒருபோதும் பின்வாங்காதீர்கள்..
நல்லதே நினை.
நல்லதே நடக்கும்.
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
#annaiyar thina Nall vaalthugal. தின வாழ்த்துக்கள்..
காலம் முழுவதும்
உன்னை வயிற்றிலும்
மடியிலும் தோளிலும்
மார்பிலும் சுமப்பவள்
தாய் மட்டுமே
அவளை என்றும்
மனதில் சுமப்போம்
ஆயிரம் விடுமுறை
வந்தாலும் அவள்
அலுவலகத்திற்கு மட்டும்
விடுமுறையில்லை
அம்மா சமயலறை
இன்பம் துன்பம்
எது வந்தபோதிலும்
தன் அருகில்
வைத்து அணைத்துக்
கொள்கிறது தாய்மை
வயது
வித்தியாசம்
பார்ப்பதில்லை
அம்மாவின்
கொஞ்சலில்
மட்டும்
இன்னும் குழந்தையாக
அம்மாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத் தான்
தெரிந்தது
வலி நிறைந்தது
என்பதற்காக
யாரும் விட்டு விடுவதில்லை
தாய்மை
அன்பு கலந்த
அக்கறையோடு சமைப்பதால்
தான் எப்போதும்
அம்மாவின் சமையலில்
சுவை அதிகம்
நான் முதல்முறை
பார்த்த அழகிய
பெண்ணின் முக தரிசனம்
அம்மா
இன்று என்னை
இவ்வுலகுக்கு
அறிமுகம் செய்த
என் அன்பு அம்மாவுக்கு
ஆயிரம் ஆயிரம் முத்தங்கள்
நான் உன்னுடன்
இருக்கும் பொழுது
என் பிரச்சனை
எப்போதும் மறந்து
விடுகிறேன் செல்லமே
அம்மா
எதுவும்
அறியா புரியா வயதில்
எந்த சுமைகளும்
கவலைகளுமின்றி
அன்னையின் கரங்களில்
தவழும் காலம் சொர்க்கமே
உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தைப் பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தைத் தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை
கடல் நீரை
கடன் வாங்கி
கண்கொண்டு அழுதாலும்
நான் சொல்லும்
நன்றிக்கு போதாதம்மா
அன்னையர் தின வாழ்த்துக்கள்
ஒவ்வொரு நாளும்
கவலைப்படுவாள்
ஆனால் ஒரு நாளும்
தன்னைப் பற்றிக்
கவலைப்பட மாட்டாள்
அம்மா
ஆழ்ந்த உறக்கத்தின்
அஸ்திவாரம்
அம்மாவின் தாலாட்டு
ஆயிரம் உணவுகள்
விதவிதமாக சாப்பிட்டாலும்
அன்னை சமைத்த
உணவுக்கு ஈடாகாது
உலகின் நிகழ்வுகளையும்
அழகினையும் எடுத்துக்
கூறும் முதல்
குருவாக இருப்பவர்
அம்மா மட்டுமே
ஆயிரம் உறவுகள்
உன் மீது அன்பாக
இருந்தாலும்
அன்னையின் அன்புக்கும்
அவள் அரவணைப்பிற்கும்
எதுவும் ஈடாகாது
தாய் மடியைக்
காட்டிலும்
ஒரு சிறந்த தலையணை
இந்த உலகில்
வேறெதுவும் இல்லை
அம்மா
இந்த நேரத்திலும்
தன்னைப் பற்றி
கவலை கொள்ளாமல்
நமது ஆரோக்கியத்தில்
அக்கறை கொள்ளும்
அந்த உணர்வு
பாசம் தான்
தாய்மை
உன்னை அணைத்துப்
பிடிக்கும் போதெல்லாம்
உணர்கிறேன் உலகம்
என் கையில் என்று.












