
saravanan.
@60258885saravanan
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#Athaango nisam. பூவே உனக்காக படத்துல ரெண்டு குடும்பம் சண்ட போட்டுட்டு இருக்கும்
விஜய் அண்ணா உள்ள புகுந்து அவங்கள சேர்த்து வச்சுட்டு கடைசில தனியா கிளம்பிருவார்
*ஆனந்தம் ஆனந்தம் பாடும் 🎶*
#sree lalithaa sagasranaamam.
*ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 239*
*இன்று நாம் அறிந்து கொள்ளும் திருநாமம்*
*... சந்த்ரவித்யா.....*
*🔱🔱 ஓம் சக்தி பராசக்தி 🔱🔱*
சந்த்ரவித்யா
""""""""""""""""""”""""”🙏🙏
சந்திரனால் உபாசிக்கப்பெற்ற வித்தைகளின் வடிவானவள் அன்னை ..
*விளக்கம் 🙏*
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
🔱அன்னையையே சந்த்ரவித்தை என்று சித்பவானந்தரும், சந்திரனால் உபாசிக்கப்பட்ட வித்தைகளின் உருவென்று பாஸ்கரராயர் உரையும் கூறுகின்றன. சூரியன் வெப்பம், ஒளி இரண்டையும் தருகிறான்; வெப்பமோ சிறிதளவேனும் துன்பத்தைத் தருவது. சந்திரனோ ஒளியை மட்டுமே தருகிறான். அதில் இனிமை மட்டுமே உண்டு. ஆதலால் சந்திரவித்தை என்பது அனைத்துவிதமாகவும் இன்பமே தரும் கலையாக இருக்கிறது. அத்தகைய வித்தைகளின் மொத்தமாகவும் அன்னையிருக்கிறாள் என்றும் பொருள் கொள்ளலாம். சந்திரனும் அத்தகைய இன்பம் தரும் கலைகளை/வித்தைகளையே உபாசித்ததாகக் கொள்ளலாம்239 வது திருநாமம் ஆகும் .,..
🌹🌹 ஐயா சிவசிவ அரகர அரகரா 🌹🌹
*🙏🙏🙏 ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி 🙏🙏🙏*
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
🟩🟫🟩🟫🟩🟫🟩🟫🟩🟫🟩🟩🟫🟩🟫🟩🟫🟩🟫🟩🟫🟩
#oru kai paarppomaa குறிப்புகள்:*
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
*காராபாத் செய்வது எப்படி :*
கர்நாடக பாணி காராபாத் (Khara Bath) செய்ய, ரவாவை நெய்யில் வறுத்து, வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றுடன் Raks Kitchen மற்றும் Swasthi's Recipes பரிந்துரைக்கும் மசாலாப் பொடி (பாத் பவுடர்) சேர்த்து, தண்ணீர்/வெஜிடபிள் ஸ்டாக் ஊற்றி வேகவைக்க வேண்டும். இறுதித் தொடுதலாக நெய், முந்திரி மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி சூடாகப் பரிமாறவும்.
*தேவையான பொருட்கள்:*
ரவை - 1 கப்நெய்/எண்ணெய் - 3 மேசைக்கரண்டிகடுகு, கடலைப்பருப்பு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்முந்திரி - 10வெங்காயம் (நறுக்கியது) - 1காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி) - 1 கப்பச்சை மிளகாய், இஞ்சி - தேவையான அளவுதக்காளி (விருப்பப்பட்டால்) - 1பாத் பவுடர் / சாம்பார் பொடி - 1 முதல் 2 டீஸ்பூன்தண்ணீர் - 2.5 முதல் 3 கப்தேங்காய் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவுஉப்பு - தேவையான அளவு
*செய்முறை:*
வறுத்தல்:
ஒரு கடாயில் ரவாவை பொன்னிறமாகும் வரை (சுமார் 3-5 நிமிடம்) மிதமான தீயில் வறுத்து தனியே வைக்கவும்.
தாளிப்பு:
கடாயில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப்பருப்பு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.காய்கறி
வேகவைத்தல்:
நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் பாத் பவுடர் (சாம்பார் பொடி) சேர்த்து வதக்கவும்.
தண்ணீர்
சேர்த்தல்:
2.5 முதல் 3 கப் தண்ணீரை (1 கப் ரவைக்கு 2.5-3 கப் தண்ணீர்) ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
ரவை சேர்த்தல்:
தண்ணீர் கொதித்ததும், வறுத்த ரவையை மெதுவாகக் கொட்டிக் கட்டிகள் விழாதவாறு நன்கு கிளறவும்.
மூடி சமைத்தல்:
தீயைக் குறைத்து, மூடி போட்டு 5 நிமிடம் வேகவைக்கவும்.
முடிவு:
கடைசியாக தேங்காய் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.
🟥🔵🟥🔵🟥🔵🟥🔵🟥🔵🟥🟥🔵🟥🔵🟥🔵🟥🔵🟥🔵🟥
#vinaayagar anuppoothi. அனுபூதி💐...!*
*💐காசிப முனிவர் அருளியது💐..!*
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🔴🟢🔴🟢🔴🟢🔴🟢
*பாடல்:04...!*
முழு முதலை உணர
அத்தே வர்களும் அயன், மால் அரனும்
சுத்தாத் துவிதத் துறைநின் றவரும்
‘கத்தா கரிமா முகத்தான்’ எனவே
வித்தா ரமொடு விளம்பும் இறையே!
*பொழிப்புரை:*
தேவர்கள், திருமால், நான்முகன், சிவபெருமான், சைவ சித்தாந்திகள் போன்றவர்களால் “வழிபடுவதற்கு உரிய முழுமுதற் கடவுள் விநாயகனே ஆவான்” என்று புகழப்படும் விநாயகனே!
தொடரும்...
🟦🔻🟦🔻🟦🔻🟦🔻🟦🔻🟦🟦🔻🟦🔻🟦🔻🟦🔻🟦🔻🟦
*சின்னத்திரையில் இன்றைய சினிமா*
(Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam) #irav vanakkam
#innraya SINTHANAY சிந்தனை.*.( 07.05.2026)..
……………………………………………......
*கல்வி அழியாத செல்வம்..*
…………………………………………………………………..
மனிதன் தனது வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது கல்வி கற்பது ஒன்று தான். இளமை முதல் இறக்கும் வரை இடைவிடாது கற்றாலும் ஒருவனால் கல்வியில் முழுமை அடைய முடியாது.
எனவே தான் ‘கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு’ என்னும் தொடர் மக்கள் இடையே நிலவுகிறது.
கல்வியை ஒருவன் கற்கத் தொடங்கும் போது சிறிது துன்பமாகத் தான் இருக்கும். ஆனால் கற்கத் தொடங்கி விட்டால் அதுவே இன்பமாக மாறும்..
நம்மிடம் இருக்கும் அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்குகிறது கல்வி. நம்மிடம் இருந்த அறியாமை விலகி அறிவு விரிவானதால் கல்வியில் இன்பம் தோன்றுகிறது.
கல்வி கற்றவர்கள், தாம் கற்றவற்றை வாழ்வில் பயன்படுத்த வேண்டும். கல்வியின் வாயிலாகத் தாம் கற்றவற்றை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். கற்றவர்க்குக் கல்வியே ஒரு செல்வமாக உதவும் தன்மை கொண்டது.
கல்வி கற்ற ஒருவனால் தான் கற்றவற்றை விளக்கிக் கூற இயலவில்லை என்றால் அந்தக் கல்வியால் யாருக்கும் பயன் இல்லை..
ஒருவன் எவ்வளவு சிறந்த முறையில் கல்வியைக் கற்று இருந்தாலும் எந்த இடத்தில் எப்படிப் பேச வேண்டுமோ, அந்த இடத்தில் அப்படிப் பேசத் தெரியவில்லை என்றால் , அவன் கற்ற கல்வியால் எந்தப் பயனும் இல்லை.
கல்வி அறிவும் இடம் அறிந்து சிறப்பாகப் பேசும் ஆற்றலும் ஒருவனிடம் இருந்தால் அவனால் எளிதில் வெற்றி பெற முடியும். பொன்னால் செய்யப்பட்ட மலர் அழகாக இருக்கும்.
அழகுடைய அந்தப் பொன்மலரில் நறுமணமும் இணைந்து இருந்தால் எவ்வளவு உயர்வாகக் கருதப்படுமோ அதைப் போன்றே கல்வி அறிவுடன் சொல்லாற்றலும் பெற்றவன் மதிக்கப்படுவான்..
கற்றவற்றை அவையில், சிறந்த முறையில் எடுத்துக் கூற இயலாதவன் கல்வி அறிவு பெற்றவனாய் இருப்பது பயனற்றது..
நம் தலைவர்கள் போராடிப் பெற்றுத் தந்தது இக்கல்வி. அன்றைக்குக் கட்டணம் செலுத்தி, உயர் சாதிக்காரர்கள் மட்டுமே கற்ற கல்வி, இன்றைக்கு கட்டாயமாக எல்லாக் குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி. சீருடை, செருப்பு, புத்தகம், நோட்டு எல்லாம் இலவசம். இவ்வளவு வசதி வாய்ப்புகள் தரப்பட்டு, கல்வி அளிக்கப்படுகின்ற போது அதைத் தவறாது பொறுப்போடு கற்று முன்னேற வேண்டும்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் கூட, கல்வி கற்பதற்கு எத்தடையும் இல்லை. இன்றைக்குப் பிள்ளைகள் கற்காமல் போனால்,அது பெற்றோர் குற்றம், பிள்ளையின் குற்றமேயாகும்.
கல்வி தான் இவ்வுலகில் வாழும் தகுதியை உங்களுக்குத் தருகிறது. உலக அறிவை, பல்வேறு செய்திகளை, பல்துறைக் கருத்துகளை உங்களுக்கு ஒரே இடத்தில் கொடுக்கிறது.
கல்வி தான் எது நல்லது? எது கெட்டது? எனப் பகுத்தறியக் கற்றுக் கொடுக்கும். ஒரு நாணயத்துக்கு இரு பக்கம் உண்டு என்பதையும் உணர வைக்கும். எந்த செயலையும் உற்று நோக்கக் கற்றுக் கொடுக்கும். சமயோகிதமாக நடந்து கொள்ளவும் கல்வியறிவே கை கொடுக்கிறது..
குறிப்பிட்ட நோக்கை அடைகின்ற வரை கல்வி கற்பதில் சலிப்போ, வெறுப்போ, அலுப்போ கொள்ளக் கூடாது.
கல்வியில் ஆர்வத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். கல்வி தான் பிறப்பால் வந்த பேதம், இழிவு, அடிமை நிலை அனைத்தையும் அகற்றும்.
சமுதாயத்தில் உயர்வையும், வருவாயையும், பாராட்டையும், திறமையையும் அளிக்கும் ஒரே கருவி கல்வி தான்.
ஆண்களே அன்றி பெண்களும் கற்க வேண்டும். அனைத்துப் பிள்ளைகளும் தவறாது கற்க வேண்டும். அனைவரும் சாதி பேதம் இல்லாமல் கற்க வேண்டும்,
இளமையில் கல்’ என்பதை உணர்ந்திருக்க வேண்டும். இளவயதில் படிப்பது நம் மனதில் அப்படியே பசு மரத்தாணி போல் பதிந்து விடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இல்லாதவர் வீட்டுப் பிள்ளைகளும் கற்க வேண்டும் என்பதற்காக நம் தலைவர்கள் உழைத்தது கொஞ்சமன்று.
சேரிப்புறத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களை யெல்லாம் நீதிபதிகளாக, அதிகாரிகளாக, வழக்குரைஞர்களாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக மாற்றியது கல்வி.
படிப்பில் விருப்பத்தை உண்டாக்கிக் கொண்டால் படிப்பு எளிதாக மாறும், சுகமாக மாறும். கல்வியை. கசப்பாக எண்ணாமல் பெருமையாக எண்ணிப் படிக்க வேண்டும்..
*ஆம்.,நண்பர்களே..,*
கல்வி தான் ஒருவனை அறிவாளி ஆக்குகிறது. அறியாமை எனும் இருட்டைக் கல்வி எனும் ஒளி தான் போக்குகிறது.
கல்வி ஒருவனை மட்டும் மேம்படுத்தாது. அவனைச் சார்ந்தவர்களையும், சமுதாயத்தையும், ஏன் நாட்டையுமே அது உயர்த்த உதவும்.
பெற்றோர்களுக்கு ஒரு வார்த்தை!
உங்கள் குழந்தைக்குக் கல்வியின் அவசியத்தைப் புரிய வையுங்கள்.
கற்பதில் விருப்பத்தை உங்கள் குழந்தைகளுக்கு உண்டாக்குங்கள்.
( ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி....)💐💐💐🌺🌹🌹🌹
#thannambikkay thulirgal எதிர்காலம் நீ ஆசைப்பட்டபடி இருக்க வேண்டும் என்றால் அதற்குத் தடையாக இருக்கும் விஷயங்களை தகர்த்து எரிந்து விட்டு தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.
நினைத்த வாழ்க்கை அமையும் வரை விடாமுயற்சி தொடரட்டும். வலியற்ற வெற்றியும் இல்லை, விழி திறவாத வரை விடியலும் இல்லை.
வாழ்வில் விடியல் வேண்டும் என்றால் பிறரையே முழுவதும் நம்பாமல் எதையும் சுயபுத்தி எனும் உன் விழியால்(அகக்கண்) கொண்டு பார், உண்மை புலப்படும் வழி கிடைக்கும்,
#innraya SINTHANAY சிந்தனை*
🌷07.05.2026🌷
மிக எளிமையாக எந்தத் தத்துவ மேளமும் இல்லாமல்...
நாம் நல்லா இருக்க மற்றவர்களும் நல்லா இருக்க என்ன செய்யணும்?
சுவற்றில் எறிகின்ற பந்து மீண்டும் நம்மிடமே வருவது போலத்தான்,
நாம் பேசும் வார்த்தைகளும், நாம் செய்யும் செயல்களும் நமக்கே வரும் என்பது ஒரு பிரபஞ்ச ரகசியம்.
சுவர் பிரபஞ்சமாகவும், பந்து நமது வார்த்தைகள், மற்றும் செயல்களாவும் உள்ளதை , உணர்ந்து கொள்வோம்.
இப்ப, கவனிப்போம், "நல்லாயிருங்க"என நாம் ஒருவரை வாழ்த்தினால்,
அந்த வாழ்த்து யாருக்கு!! (சுவர்- பந்து நினைவில்) ஆமாம் நமக்குத் தான்.
நாம் ஒருத்தரை வாழ்த்தினால் சுவராகிய பிரபஞ்சம் நாம் வாழ்த்தின பந்தாகிய வாழ்த்தினை மீண்டும் நமக்கே தரும்.
அப்ப, நாம யாரையாவது நல்லா இருக்கக் கூடாதுன்னு சொன்னா(சுவர்+பந்து)
யாருங்க நல்லா இல்லாம போவாங்க ?
இங்க, நாம பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும், செய்யிற ஒவ்வொரு செயலுக்கும் பதில் சொல்லித் தான் ஆகணும்.
எல்லாவற்றையும் யாருக்கும் தெரியாது என மறைக்க இயலாது.
எல்லாமாய் நிற்கும் இறைப் பேராற்றலாகிய பிரபஞ்சம் எல்லாவற்றையும் உணரும் என்பதை உணர்ந்து பேசுவோம், செயல்படுவோம்.
ஆதலால், இன்றிலிருந்து எளிமையாக ஒரு மன முடிச்சு சங்கல்பம் செய்து கொள்வோமா?
அடுத்தவருக்கு நலம் தரும், மகிழ்ச்சி தரும் இனிமையான சொற்களை மட்டுமே மனப்பூர்வமாக நாம் பேச வேண்டும்.
மற்றவரை சந்தோஷப்படுத்த, பாராட்ட, ஆறுதல் கூற, உற்சாகப்படுத்த, வாழ்க்கை அழகானது வாழ்ந்து பார்த்திரலாம் வான்னு அழைக்க, மனப்பூர்வமாக
நல்லவைகளை மட்டுமே பேசுவது என நமக்கு நாமே ஒரு முயற்சி செய்து பார்க்கலாமா ?
நல்லதை மட்டுமே நாம் பேசுவோம்" என ஒரு சின்ன முயற்சி இன்று முதல்.
முயற்சி+ பயிற்சி+ தேர்ச்சி + இனிய விளைவு.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
#sitham siva mayam
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁உற்றாரும் புத்திரரும் உறுதுணையென் றெண்ணாத_
_🍁கற்றோர்கள் காவலெனக் கருதியடை கண்ணுதலாய்_
_🍁வற்றாத அருட்கடலே வளவயல்சூழ் ஆமாத்தூர்_
_🍁நற்றேவா என்றேத்தும் நாவுடையார் நல்லோரே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_உறவினர்களையும், புத்திரர்களையும் சிறந்த துணை என்று நினையாத கற்றவர்கள் தமக்குக் காவலாகக் கருதி அடையும் நெற்றிக்கண்ணனே !! என்றும் வற்றாத தயாசாகரமே !! வளமையான வயல்கள் சூழ்ந்த திருவாமாத்தூரில் உறைகின்ற நல்ல தேவனே என்று துதிக்கும் அன்பர்கள் நல்லவர்களே !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
#aalayam arivom. Ganapathy temple*
*_ஆசியாவிலேயே பிரம்மாண்டமான விநாயகர் கோவில் எங்குள்ளது தெரியுமா?_*
* 🛕🛕🛕பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை பல இடங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் விநாயகருக்கு என்று உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட ஆலயம், அதுவும் ஆசியாவிலேயே மிகப் பெரிய ஆலயம் எங்குள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த கோவிலின் அற்புதங்கள் பற்றி தெரிந்தால், இங்கு நிச்சயம் செல்லாம் இருக்க முடியாது. வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை இந்த கோவிலுக்கு சென்று விநாயகப் பெருமானை தரிசனம் செய்து, அவரது அருளை பெற்று வாருங்கள். வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என சொல்லப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள சைவ, வைணவ ஆலயங்களில் எதையும் எடுத்துக் கொண்டாலும், முதலில் வழிபடப்படுவது முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான் தான். எந்த நல்ல காரியத்தையும் தொடங்குவதற்கு முன் "பிள்ளையார் சுழி" போடும் அந்த ஆன்மீக மரபு, காலங்களாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆனால், விநாயகருக்கென தனியே அமைந்த ஆலயங்கள் பல இருந்தாலும், அவற்றில் அரிதான திருக்கோலம், அபூர்வ வரலாறு, பிரம்மாண்ட கட்டிட அமைப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்துக் கொண்ட ஒரு தலம் இருக்கிறது. அது தான் மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி ஆலயம்.
தாமிரபரணி கரையில் விநாயகர் ஆலயம் :
புனிதமான தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம், சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.
80 மீட்டர் நீளம்
40 மீட்டர் அகலம்
5 நிலை ராஜகோபுரம்
3 பிரகாரங்கள்
8 மண்டபங்கள்
என்று விரிந்த பரப்பில் அமைந்துள்ளதால், ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் ஆலயங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.
"மணி" ஒலித்த அதிசய மரபு :
இந்த ஊரின் பெயர் "மணிமூர்த்தீஸ்வரம்" என வந்ததற்கும் ஒரு அழகான வரலாறு உள்ளது. ஒருகாலத்தில், நெல்லையப்பர் கோயில் ஆலயத்தில் பூஜை நடக்கும் போது அங்குள்ள பெரிய மணி ஒலிக்கும். அந்த ஓசையை கேட்டவுடன், இங்கும் மணி அடித்து விநாயகரை வழிபடும் மரபு இருந்தது. அந்த "மணி ஒலி வழிபாடு" காரணமாக "மூர்த்தீஸ்வரம்" - "மணிமூர்த்தீஸ்வரம்" என்று பெயர் மாறியது. அந்த நாளிலிருந்து இங்கு உள்ள விநாயகர் "மூர்த்தி விநாயகர்" என்றும் அழைக்கப்படுகிறார்.
உச்சிஷ்ட கணபதி - அரிய திருக்கோலம் :
விநாயகரின் 32 வடிவங்களில் எட்டாவது வடிவம் தான் உச்சிஷ்ட கணபதி. இங்கு அவர் ஒரு மிக அரிய திருக்கோலத்தில் காட்சி தருகிறார். தனது தேவியான ஸ்ரீ வல்லபையை இடது தொடையில் அமர வைத்தபடி, 6 கைகள் உடன் கைகளில் நீலோற்பலம், மாதுளம் பழம், வீணை, நெற்கதிர், அட்சமாலை ஒரு கையால் தேவியை அணைத்தபடி இந்த திருக்கோலம் இணைவு, செழிப்பு, குடும்ப அமைதி ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது
சூரியன் தரிசிக்கும் அற்புதம் :
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 1, 2, 3 தேதிகளில் காலை நேரத்தில் சூரிய பகவானின் கதிர்கள் நேராக விநாயகரைத் தொட்டு வழிபடும் அரிய நிகழ்வு நடைபெறுகிறது. அந்த நேரத்தில் விநாயகர் தங்கம் போல ஜொலிப்பார். இந்த தரிசனம் கிடைத்தால் துன்பங்கள் நீங்கும். வாழ்க்கையில் ஒளி பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை
வேண்டுதல் நிறைவேறும் தலம் :
இந்த ஆலயத்தில் வழிபட்டால் புத்திரபேறு கிடைக்கும். கணவன்-மனைவி ஒற்றுமை வளரும். திருமணத் தடைகள் நீங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்று பக்தர்கள் அனுபவமாக பகிர்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு 10 நாட்கள் பெரிய திருவிழா நடைபெறும். இந்த காலத்தில் உச்சிஷ்ட கணபதியை வழிபட்டால் செல்வம், வளம், வெற்றி அனைத்தும் சேரும் என்று நம்பப்படுகிறது.
🍁🍁🍁












