ShareChat
click to see wallet page
search
#innraya SINTHANAY சிந்தனை."*.( 25.02.2026).. ............................ *" நேர்மறையாக சிந்தியுங்கள்..''* .............................. துன்பங்களும், துயரமும் உங்களைத் துரத்துகிறதா? அவற்றிற்கு எளிதாக தீர்வு காண முயல வேண்டுமே தவிர மன அழுத்தத்திற்கு ஆளாகக் கூடாது.. துன்பம் இல்லாத மனிதர்களே உலகில் யாரும் இல்லை.. அந்த நேரங்களில் கீழே உள்ள மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நமது பிரச்சினை எல்லாம் மிகமிக சாதாரணம்… அதனால் எந்த ஒரு செயலை செய்யும் போதும் நேர்மறையாகவே சிந்திக்க வேண்டும்.. லண்டன் நகரத்தில் ஒரு பெண் வாழ்ந்து வந்தார். அங்கு உள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளருவது போலவே அவை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் இந்தப் பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அலர்ஜி. ஒரு ரோஜாப்பூ அருகில் இருந்தாலே இவர் கண்களில் இருந்து கண்ணீர் வரும். தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப்படுவார். அதனால் இவர் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் இருந்து இருந்தார். இந்த சூழ்நிலையில் ஒரு நாள் அவருடைய அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார். அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளிலில் நூற்றுக் கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள். 'ஒரு பூ அருகில் இருந்தாலே இருக்க முடியாது. இப்போது இந்தக் கூட்டத்தில் இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி இறுதிவரை இருக்கப் போகின்றோம்' என்று பயந்தார். ஆனால் வேறு வழி இல்லாமல் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தார். பூக்களைப் பார்த்ததுமே அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்ததோடு தும்மலும் வந்தது. முகமெல்லாம் சிவந்து விட்டது. கூட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில், பின்னாலிருந்த ஒருவர் எழுந்து வெளியில் செல்கின்ற போது, ' 'இந்த பூக்களைப் பாருங்கள் நிஜமான பூக்கள் போலவே இருக்கின்றன' என்று வியந்தபடி கூறிக் கொண்டே சென்றார். அப்பொழுது தான் இவருக்குத் தெரிந்தது. அந்தப் பூக்கள் உண்மையான பூக்கள் அல்ல, காகிதத்தில் செய்யப்பட்ட செயற்கை மலர்கள் என்று. 'இந்தப் பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்' என இவர் நினைத்த விநாடியே அவருடைய அலர்ஜிக்கு உண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன. இது தான் நம் மனதின் சக்தி! "ஒன்றை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அது நம்மை பாதிக்கும். *ஆம்.,நண்பர்களே..* 'வாழ்க்கை ரொம்பத் துயரமாக,துன்பமாக இருக்கு' என்று நீங்கள் நினைத்தீர்களானால், உங்களுக்கு வாழ்க்கையிலுள்ள சின்னச் சின்ன மகிழ்ச்சியான தருணங்கள் கூட உங்கள் கண்ணில் தெரியாது. ஆனால், அதே நீங்கள் 'வாழ்க்கை ரொம்ப ஆனந்தமாகப் போகுது' அப்படியென்று நினைத்தீர்களானால், ''உங்களுக்கு அன்றாடம் நடக்கும் சின்னச் சின்ன நிகழ்வுகள் கூட ஆனந்தமாகத் தெரியும். அதனால் நீங்கள் கவலையான நேரங்களிலோ அல்லது மகிழ்ச்சியான நேரங்களிலோ எப்போதும் உங்கள் மனதை நேர்மறையாகவே வைத்திடுங்கள். அது தான் உங்களுக்குச் சிறந்தது. ஆம், மனதில் நீங்கள் சாதாரணமாக நினைக்கும் எண்ணங்கள் இவ்வளவு சக்தி வாய்ந்தவை அதனால் நீங்கள் எப்பொழுதும் நேர்மறையாக சிந்தித்து பழகுங்கள். உங்கள் வாழ்க்கை சுமூகமாக செல்லும். (ஆக்கம். உடுமலை சு.தண்டபாணி.)💐💐💐💐💐
innraya SINTHANAY - நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள் உடல்மன நல்ல ஆரோக்கியம் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள் உடல்மன நல்ல ஆரோக்கியம் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள் - ShareChat