ShareChat
click to see wallet page
search
#நல்லதே பேசு நல்லதே நினை நாள் கையிருப்பு எங்கே? கேஸ் விலையேற்றத்தால் எரியும் மக்களின் வயிறு!” – மத்திய அரசுக்கு முனைவர் ச.சு. ஜைனுதீன் கடும் கண்டனம் விழுப்புரம் மார்ச் 12: முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் மத்திய அரசின் சமையல் எரிவாயு விலையேற்றத்தையும் தட்டுப்பாட்டையும் கடுமையாக கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் இந்தியாவில் 90 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒருபுறம் கேஸ் சிலிண்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. மற்றொருபுறம் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் குடும்பச் செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு விலை உயர்வால் பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அன்றாட உணவு சமைப்பதற்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 90 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாக கூறும் மத்திய அரசு,அதே எண்ணெயிலிருந்து சுத்திகரிக்கப்படும் எரிவாயு விநியோகத்தில் மட்டும் ஏன் தோல்வியடைந்தது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கையிருப்பு இருப்பதாக கூறும் அரசு, அதனை சரியான முறையில் மக்களுக்கு வழங்குவதில் ஏன் கோட்டை விட்டது என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் இந்த நிலை மிகுந்த கவலைக்கிடமானது எனவும் கூறினார். எரிவாயு விலை உயர்வால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலையேற்றம் காரணமாக குடும்பங்களின் பொருளாதார நிலை மேலும் சீர்குலைந்துள்ளது. இதனை மத்திய அரசு உடனடியாக கவனிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் சிலிண்டர் தட்டுப்பாட்டை நீக்கி, தடையின்றி விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு விரைவாக தீர்வு காண வேண்டும் என்றும் முனைவர் ச.சு. ஜைனுதீன் கேட்டுக் கொண்டார். இல்லையெனில் மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். பொதுமக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலை மத்திய அரசின் நிர்வாகத் தோல்வி என அவர் குற்றம்சாட்டினார். எனவே உடனடியாக விலையேற்றத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நல்லதே பேசு நல்லதே நினை - HP ( ( [ HP ( ( [ - ShareChat