ShareChat
click to see wallet page
search
யாருக்கு நாற்பது பேர் இறுதித் தொழுகை தொழுகின்றார்களோ அவருக்காக அவர்கள் செய்யும் பரிந்துரை ஏற்கப்படும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய புதல்வர் ஒருவர் “குதைத்” அல்லது “உஸ்ஃபான்” எனுமிடத்தில் இறந்துவிட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “குறைப்! மக்கள் ஒன்றுகூடிவிட்டனரா எனப் பார்” என்று கூறினார்கள். நான் சென்று பார்த்தபோது அங்கு மக்களில் சிலர் குழுமியிருந்தனர். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைச் சொன்னபோது “அவர்கள் நாற்பது பேர் இருப்பார்களா, சொல்” என்றார்கள். நான் “ஆம்” என்றேன். “அதை (மய்யித்தை) எடுத்துக்கொண்டு புறப்படுங்கள்” என்று கூறிவிட்டு, “ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக இறுதித் தொழுகை தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 1730) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - முஹம்மது நபி ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இறந்தவுடன் (IF அல்லாஹ்விற்கு எதையும் ஊவாகபநமுேக் ணைவைக்காத Gurj அவருக்காக இறுதித் தொழுதால் பரிந்துரையை அல்லாஹ் ருப்பதில்லை" 6mBTu6u அறிவிப்பாளர் :  இப்னு அப்பாஸ் (லி) முஸ்லிம் 1730 முஹம்மது நபி ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இறந்தவுடன் (IF அல்லாஹ்விற்கு எதையும் ஊவாகபநமுேக் ணைவைக்காத Gurj அவருக்காக இறுதித் தொழுதால் பரிந்துரையை அல்லாஹ் ருப்பதில்லை" 6mBTu6u அறிவிப்பாளர் :  இப்னு அப்பாஸ் (லி) முஸ்லிம் 1730 - ShareChat