ShareChat
click to see wallet page
search
சிந்தனை - பேச்சும் வெற்றியும். எப்படிபட்டவர்களையும் பேச்சின் மூலம் வெற்றி கொள்ள முடியும் எப்படிப்பட்ட காரியங்களையும் சாதித்து விட முடியும்... கொஞ்சம் திறமை தான் நிதானம், நல்யோசனை, இருந்தால். ஆனால் சிலர் என்ன பேசுகின்றோம்.. ஏது பேசுகின்றோம்..? இதனால் எதிராளியின் மனநிலை என்ன ஆகிறது.. என்ன பின் விளைவுகள் உண்டாகும் என்பதைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் சிலர் பேசிக் கொண்டே இருப்பதனால் தான் தோல்விகளையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. மன உளைச்சலும் உண்டாகிறது... அறியாமையினாலும் சில சமயங்களில் தெரிந்தே அல்லது அகங்காரம் பிடிவாதம் ஈகோ போன்ற காரணங்களாலும் வறட்டு கௌரவத்தாலும் வீண் தம்பட்டங்களாலும் தேவையற்ற வார்த்தைகளைப் பேசி எல்லாவற்றையுமே கெடுத்துக் கொள்வோம். இதுவே எல்லாவகையான பாதிப்புகளுக்கும் அடிப்படையாக அமைந்து விடுகின்றது. "திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல்." சொல்ல வேண்டியதை சொல்லும் போது தம் நிலமையையும் கேட்போரின் நிலமையையும் கூறும் செய்தியின் நிலமையையும் அறிந்து அதற்கேற்றாற் போல சொல்ல வேண்டும். அப்படி சீர்தூக்கி சொற்களைச் சொல்வோமாயின் அதைப் போல சிறந்த அறவினையும் பொருள்வினையும் இல்லை. எனத் திருக்குறள்(644ல்) எடுத்தியம்புகிறது. எனவே பேசுவது ஒரு கலை ஒரு அழகு, சில சமயங்களில் வெற்றிக்கான முதலீடும் அதுவே பெரும்பாலான காரியங்களை சாதித்து விடவும் முடியும்...! நம்மிடம் இருக்கும் திறமையை ஆக்க வழியிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.. அழிவு வழியிலும் கொண்டு சென்று விடலாம். இந்த அருமையான பேச்சுக்கலையின் மூலம் எவருக்கும் எதற்கும் தீங்கில்லாமல், யாருக்கும் கெடுதல் நினைக்காமல், நியாயமாக நமக்கு ஆகவேண்டியதை சாதித்துக் கொள்வதில் தவறில்லை.. வாழ்க வளமுடன். 😊😊😊 #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
உற்சாக பானம்# - GOOD MORNING GOOD MORNING - ShareChat