
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
@3454dsm
புத்திசாலித்தனத்தை விட முட்டாள்தனமே சிறந்தது
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
#பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்#
https://sharechat.com/post/6al8JO0x?d=n&ui=qPkMxjA #பொழுது போக்கு #💞Feel My Love💖 #💘Love Quotes & Videos #👪 cute family members 👪 #உற்சாக பானம்#
பிப்ரவரி 20
*பொப்பிலி அரசர்: நீதிக்கட்சியின் தூண்.. சென்னை மாகாணத்தின் சீர்திருத்த முதல்வர் பிறந்த நாளின்று* 💐
வரலாற்றுப் பக்கங்களில் ஒரு மன்னராக மட்டுமல்லாமல், சிறந்த நிர்வாகியாகவும், மக்கள் நலன் காக்கும் அரசியல் தலைவராகவும் அறியப்படுபவர் பொப்பிலி அரசர். இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் பொப்பிலி சமஸ்தானத்தின் மன்னராக இருந்த இவர், சென்னை மாகாணத்தின் அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்.
1901-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி பிறந்த இவருடைய இயற்பெயர் ராமகிருஷ்ண ரங்கா ராவ். இளம் வயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய இவர், தனது சமஸ்தானத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டதோடு நின்றுவிடாமல், பொதுவாழ்விலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
1930-களில் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நீதிக்கட்சியின் (Justice Party) தலைவராகப் பொறுப்பேற்றார். பனகல் அரசருக்குப் பிறகு நீதிக்கட்சியை வழிநடத்திய முக்கியத் தலைவர்களில் இவரும் ஒருவர். 1932 முதல் 1937 வரை சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பணியாற்றி, பல முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தினார்.
பொப்பிலி அரசர் முதல்வராக இருந்த காலத்தில், நிர்வாக ரீதியாகப் பல அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்தார்:
சென்னை மாகாணம் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, அரசாங்கச் செலவுகளைக் குறைத்து திறம்பட நிர்வாகம் செய்தார்.
பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்வி கிடைப்பதை உறுதி செய்தார்.
பின்னாளில் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் (Constituent Assembly) உறுப்பினராகவும் பணியாற்றி, தேசத்தின் சட்ட உருவாக்கத்தில் பங்களித்தார்.
மன்னர், முதலமைச்சர் என்பதைத் தாண்டி சிறந்த விளையாட்டு ஆர்வலராகவும் இவர் திகழ்ந்தார். குதிரைப் பந்தயம் மற்றும் போலோ விளையாட்டில் இவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஆந்திர சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி மக்கள் சேவையைத் தொடர்ந்தார்.
சுயமரியாதை மற்றும் சமூக நீதிக்கு அடித்தளமிட்ட நீதிக்கட்சியின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்ந்த பொப்பிலி அரசர் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். #உற்சாக பானம்# #பொழுது போக்கு #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்
பேச்சிலும் சாதனைகள் படைத்து, தமிழ்த் திரையுலகிற்கும் இலக்கிய உலகிற்கும் ஒரு பெண்மணியால் எவ்வளவு பங்களிக்க முடியும் என்பதை வாழ்ந்து காட்டிய வை.மு. கோதைநாயகி அம்மாள் நினைவு நாள்😢
*வை.மு. கோதைநாயகி: பள்ளி செல்லாமல் நாவல் ராணியாக உயர்ந்த சாதனைப் பெண்மணி!*
தமிழ் இலக்கிய உலகம் இவரைப் போற்றும் விதம் தனித்துவமானது. முறையான பள்ளிப் படிப்பறிவு இல்லாமலேயே 115-க்கும் மேற்பட்ட நாவல்களைப் படைத்து, 'நாவல் ராணி' என்று மக்களால் கொண்டாடப்பட்டவர் வை.மு. கோதைநாயகி அம்மாள். இன்று (பிப்ரவரி 20) அவரது நினைவு நாளில் அந்தப் பன்முகத் திறமையாளரின் வாழ்வைத் திரும்பிப் பார்ப்போமா?.
1901-இல் பிறந்த கோதைநாயகிக்கு, அக்கால வழக்கப்படி பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐந்து வயதிலேயே திருமணமும் நடந்தது. ஆனால், கேட்டவற்றை அப்படியே நினைவில் கொள்ளும் அபாரமான நினைவாற்றல் அவருக்கு வாய்த்திருந்தது. சிறு வயதிலேயே நாலடியார், தேவாரம், திருவாசகம் எனத் தமிழ் இலக்கியங்களைச் செவிவழியாகக் கேட்டுத் தன்பால் இருத்திக் கொண்டார்.
எழுதத் தெரியாத நிலையில், தான் சொல்லச் சொல்ல மற்றவர்களை எழுத வைத்துத் தனது படைப்புகளை உருவாக்கினார். 1925-இல் வெளியான 'வைதேகி' தொடங்கி, 'பத்மசுந்தரன்', 'காதலின் கனி', 'நிர்மல நீரோடை' என இவரது நாவல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவரது பல நாவல்கள் திரைப்படங்களாகவும் உருப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர், அந்நியத் துணி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றுச் சிறை சென்றவர். பெண்களுக்கான 'ஜகன்மோகினி' என்ற பத்திரிகையைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். பத்திரிகையாளர், இசை வல்லுநர், நாடக ஆசிரியர், இயக்குநர் என அவர் தொடாத துறைகளே இல்லை எனலாம்.
தன்னுடைய ஒரே மகனின் திடீர் மறைவு கோதைநாயகி அம்மாளை நிலை குலையச் செய்தது. அந்தத் துயரத்திலிருந்தே மீள முடியாமல் உணவு, உறக்கமின்றித் தன்னை வருத்திக் கொண்டவர், கொடிய காச நோய்க்கு ஆளானார். பல சிகிச்சைகள் கைகொடுக்காத நிலையில், 1960-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி இயற்கை எய்தினார்.
ஒரு சாதாரணப் பெண், தன் விடாமுயற்சியால் எத்தகைய சிகரங்களையும் தொட முடியும் என்பதற்கு வை.மு. கோதைநாயகி அம்மாளின் வாழ்க்கை இன்றும் ஒரு பெரும் பாடம். #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்
பிப்ரவரி 20
உலக சமூக நீதி நாள் ⚖️
சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக மக்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
வறுமை ஒழிப்பு, வேலையின்மைப் பிரச்சினைக்குத் தீர்வு, பாலினச் சமத்துவம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் போன்றவற்றில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என ஐநா சபை இந்நாளில் அறைகூவல் விடுக்கிறது.
சாதி, மதம், இனம் மற்றும் பாலினப் பாகுபாடற்ற ஒரு சமத்துவமான உலகத்தைப் படைக்க நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டிய தருணம் இது. #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம் #உற்சாக பானம்#
பிப்ரவரி 20
'மிஸ்ஸிங் டே' (Missing Day) 💔
பிப்ரவரி 14 காதலர் தினத்திற்குப் பிறகு வரும் 'ஆன்டி-வலென்டைன்' வாரத்தின் ஒரு முக்கிய நாளாக மிஸ்ஸிங் டே இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பிரிந்து சென்ற காதலர்களையோ, தற்காலிகமாகத் தள்ளி இருக்கும் அன்புக்குரியவர்களையோ நினைத்துப் பார்க்கும் நாளாக இது அமைகிறது.
ஒரு காலத்தில் கசப்பான உணர்வுகளுடன் கடந்த இந்த நாளை, இப்போதுள்ள இளைஞர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு பாசிட்டிவான வாய்ப்பாக மாற்றிவிட்டார்கள்.
சமூக வலைதளங்களில் தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பதிவிட்டு, "உங்களை மிஸ் செய்கிறேன்" எனத் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வெறும் சோகமாக மட்டும் இல்லாமல், பழைய நல்ல நினைவுகளை அசைபோடும் நாளாக இது பார்க்கப்படுகிறது.
தூரத்தில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் எனப் பாசத்திற்குரிய அனைவரிடமும் இன்று பலரும் தங்கள் அன்பை மெசேஜ்கள் வழியாகப் பரிமாறி வருகிறார்கள்.i #உற்சாக பானம்# #பொழுது போக்கு #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்
என்பது போதுமென்ற*_
_*மனம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.*_
_வரவுக்குள்ளே செலவும், வரம்பை மீறாத ஆசையும், மதியை மறைக்காத புகழும், தலைக்கனமில்லாத வெற்றியும்_
_*வஞ்சமில்லாத அன்பும்*_
_*கள்ளமில்லாத நட்பும்*_
_*பொய்மையில்லாத வாய்மையும்*_
_*அஞ்சி நடுங்காத ஆண்மையும்*_
_இன்முகம் கொண்ட பெண்மையும்_
_நிம்மதியின் நேர்வழி. எனவே இயல்பாக இருப்பதும்_ _இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதுமே_ _நிம்மதி._
_*மத்தவங்க*_ _*பொறாமை படுற அளவுக்கு*_ _*வாழனும்னு*_
_*அவசியம்*_ _*இல்ல,*_ _*பெத்தவங்க*_ _*பெருமை படுற*_ _*அளவுக்கு*_
_*வாழ்ந்தாலே போதும் வெற்றி நிச்சயம்.*_
_எல்லோருக்கும்_ _எல்லா நன்மைகளும் கிடைக்க அருள்_ _தருவாய் இறைவா._ #உற்சாக பானம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்
_*வந்தாலும் வெற்றியை நோக்கி ஓடுவதே அற்புதம்*_
_*ஏனெனில் தேங்கி நிற்கும் குளம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதில் அழுக்கு தான் இருக்கும்.*_
_சின்ன ஒடையாக_
_இருந்தாலும் அந்த தண்ணீர் கண்ணாடி போல் இருக்கும்._
_*வாழ்க்கையில்*_
_*தோல்வி*_ _*வந்தாலும் எந்த இடத்திலும் இதுதான் என் இடம் என நின்றுவிடக்கூடாது.*_
_பலமுறை தோல்வி கண்டாலும் மனப்பதட்டம் வரும்_
_ஆனால் அப்போது எடுக்கிற ஓய்வு கூட ஒரு நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருப்பது போல் தான் இருக்கவேண்டும்_
_*எந்த ஓய்வும்*_
_*நம்முடைய*_ _*அடுத்த பயணத்திற்கான ஆயத்தம் தான்*_
_பணம், புகழ், காதல்,_ _கல்யாணம், குழந்தைகள் என எல்லாமே_
_இந்த பயணம் மூலமாகத் தானே கிடைத்தது வெற்றியும்_ _கிடைக்கும்_
_*எல்லோரும் ஒரு சேரக் கைவிட்டாலும்,*_
_*இல்லை எனச் சொல்லி கை கழுவி விட்டாலும்,*_ _*நீங்கள் வழிபடும் இறைவன்*_ _*கைகள் உங்களைக் கைப்பற்றும்.*_
_*கடைசி வரை உங்களைக் காப்பாற்றும்.*_
_படைக்கும்_ _போதே உங்களை_
_அறிந்தவர் இறைவன்._ _அவருக்கு தெரியும்_ _உங்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும்_ _என்பது._ _இழந்தது எதுவாயினும் அதை விடச் சிறந்தது உங்களுக்கு கிடைக்கும் கவலையை விட்டொழியுங்கள்._
_*அன்பை அகத்தில் வையுங்கள்.*_ _*ஆசையைப் புறத்தில் வையுங்கள்.*_ _*உண்மையை உள்ளத்தில் வையுங்கள்.*_ _*கருணையைக் கண்களில் வையுங்கள்.*_ _*சிந்தையில் இறைவனை வையுங்கள். அனைத்தும் வெற்றியாகும்.*_
_உலகப் புகழ் பெற்ற_
_நாடகமேதையான ஷா அவர்கள் ஒரு குறுகலான பாதையில் நடந்து கொண்டிருந்தார்._ _எதிரே வந்தவர் ஷாவுக்கு வேண்டாதவர் போலும். எனவே யாருக்கு யார் வழிவிடுவது யார் செல்வது என்ற பிரச்னை மூண்டது._
_*அப்போது எதிரே வந்தவர்,*_
_*"நான் முட்டாள்களுக்கு வழிவிட்டு ஒதுங்குவதில்லை" என்றார் கோபமாக.*_
_உடனே ஷா சற்று புன்முறுவல் பூத்தவராய்_
_"நான் வழிவிட்டு ஒதுங்குவேன்”_
_என்று சொல்லி விலகி நின்றார்._
_எதிரே வந்தவருக்கு_ _நெற்றியடி._
_*இதில் ஷா அவர்களின் சாமர்த்தியம் மட்டும் சம்மந்தப் படவில்லை.*_
_*பிறருக்கு விட்டுக் கொடுப்பதில் ஒருபோதும் நாம் குறைந்து போகமாட்டோம்"*_ _*என்ற உண்மையும் சம்மந்தப்பட்டிருக்கிறது.*_
_அறிஞர் ஷாவே விட்டுக் கொடுக்க தயங்கியவராகத் தெரியவில்லை நாம் என்ன ஷாவை விட சாமானியரா அப்படி இருந்தாலும் பரவாயில்லை விட்டுக் கொடுப்பதால் வீண் போகமாட்டோம்._
_*இதைத் தான்*_
_*“விட்டுக்*_ _*கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.*_ _*கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை” என்கின்றனர்.*_
_நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்...._
_*பிறருக்கு விட்டுக்*_ _*கொடுப்பதால் உங்களுடைய*_
_*நற்பெயரை விடமாட்டீர்கள்,*_
_*சுயமதிப்பை விடமாடீர்கள்,*_
_*அறிவை விடமாட்டீர்கள்,*_
_*ஆனந்தத்தை விடமாட்டீர்கள்.*_
_*மாறாக*_
_*அவற்றையெல்லாம் அதிகரித்துக் கொள்வீர்கள்.*_ #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம் #உற்சாக பானம்#
ஒரு மூலதனம்..''*_
_*‘அவமானங்களே* ஒரு மனிதனை வெற்றியின் அரியாசனத்தில் அமர்த்தும்’. அவமானம் என்பது ஒரு மனிதனுக்கு தூண்டுகோல் தான்._
_*மனிதனின்* மனம் அவமானங்களைக் கண்டால் முதலில் துவண்டாலும், வைராக்கியம் மனதில் உருவாகும்._
_*அதுவே* முயற்சியில் வேகத்தைக் கொடுத்து வெற்றிக்கு வழி வகுக்கும்._
_*ஒருவனது* அவமானங்கள் தான் அவனைக் கடினமாக உழைக்க வைக்கிறது._
_*ஒருவனது* அவமானங்கள் தான் தக முன்னேற வேண்டும் என்கின்ற வெறியைத் தூண்டுகிறது._
_*ஒருவனது* அவமானம் தான் வாழ்கையில் மிகப்பெரிய வெற்றியாக உருமாற்றுகிறது. ஒரு சின்ன அவமானம் கூட இல்லாமல் யாரும் உயர்ந்து விட முடியாது._
_*அவமானங்கள் தான்* வாழ்க்கையின் ஆசான். அவமானம் கத்துக் கொடுப்பது மாதிரியான பாடத்தை எந்த மகத்தான புத்தகமும் கற்றுக் கொடுக்காது_
_*“உங்களுக்கு* இழைக்கப்பட்ட_ *_அவமானங்கள்_* _எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்._
_*பழி வாங்கிட அல்ல...*_ _தப்பித் தவறிக் கூட அதே தவறை நாம் இன்னொருவருக்கு செய்து விடக் கூடாது....._
🌹 #உற்சாக பானம்# #பொழுது போக்கு #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்










