
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
@3454dsm
புத்திசாலித்தனத்தை விட முட்டாள்தனமே சிறந்தது
#👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #பொழுது போக்கு
#பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம் #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்
#கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #பொழுது போக்கு #உற்சாக பானம்
ஒரு 8 வயதுள்ள சிறுமி தயங்கி தயங்கி அந்த மருந்துக் கடையை நெருங்கினாள்.
கடைக்காரர் வேறு ஒருவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார்.
அங்கிள்... அங்கிள்....
என்னம்மா????? கடைக்காரர் பரிவுடன் கேட்டார்....
அண்ணனுக்கு உடம்பு சரியில்லை.... மருந்து வேணும்.... திக்கி...திக்கிய படியே கண்களில் கண்ணீருடன் சொன்னாள்
prescription கொண்டுவந்தாயா குழந்தை????
அந்த குழந்தை ஒன்றும் தெரியாமல் முழித்தது.... அப்படின்னா????
எங்கிட்ட காசு இருக்கு.... என்றபடியே தன் பைக்குள் கையை விட்டு அந்த மண் உண்டியலை எடுத்து டேபிள் மேல் வைத்தாள்.
"காசு பத்தலைன்னா நான் வீட்டுக்கு போய் வேற காசும் கொண்டு வர்ரேன் அங்கிள், மருந்து குடுங்க அங்கிள். இந்த மருந்து குடுத்தா என்னோட அண்ணனுக்கு உடம்பு சரியாயிரும்.... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகைக்கு தயார் ஆனது.
சரிமா அழாதே.... மருந்து பேர் என்ன?????
குழந்தை மென்று விழுங்கி சொன்னது
" மெரிக்கள்"
கடைக்காரர்க்கு ஒன்றும் புரியவில்லை... மீண்டும் கேட்டார்.
நல்லா ஞாபக படுத்தி சொல்லுமா... என்ன மருந்து பேரு?????
மெரிக்கள் அங்கிள்...
அப்படி ஒரு மருந்தே இல்லையேம்ம்மா... ஆமா உனக்கு யார் இந்த மருந்து பேரை சொன்னது?????
குழந்தை கண்ணீருடன் சொன்னது....
டாக்டர் அம்மா அப்பா கிட்ட பேசிட்டு இருக்கும் போது நான் கேட்டேன். இந்த மருந்து இருந்தா தான் அண்ணன் பிழைக்க முடியுமாமா அங்கிள்... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகை ஆரம்பித்தது.
அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்த அவரது நண்பர் அக் குழந்தையிடம் வந்தார்.
அழுவாதே செல்லம். உங்க அண்ணனுக்கு வேண்டிய மருந்தை நான் வாங்கி தர்ரேன். முதலில் உங்க வீட்டுக்கு போய் உங்க அண்ணனை பார்க்கலாம். அப்புறம் நானே மருந்து கொண்டு வருகிறேன்.... என்று அந்த பெண்ணை கையை பிடித்து அவள் வீட்டுக்கு கூட்டி சென்றார்.
வீட்டில் அவளது அண்ணனை பரிசோதித்த அவர்... அவர்களது பெற்றோர்களிடம் அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அந்த நோயாளி குழந்தையுடன் அதே மருத்துவமனைக்கு சென்று, அக்குழந்தைக்கு சிகிச்சை செய்த டாக்டர்ரிடம் விவரத்தை கேட்டு அறிந்தார்.
அக் குழந்தைக்கு இருதயத்தில் 5 இடங்களில் block இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு 5 லட்சம் மேல் செலவாகும் என்று டாக்டர் சொல்ல, அதற்க்கு அந்த நண்பர்.....
டாக்டர்.... நானும் ஒரு டாக்டர் தான் இருதய சிகிச்சை நிபுணர். அமெரிக்காவில் ஒரு பிரபல மருத்துவமனையில் தலைமை மருத்துவராக வேலை செய்கிறேன். விடுப்பில் வந்துள்ளேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் இந்த குழந்தையின் அறுவை சிகிச்சையை நான் உங்கள் உதவியுடன் செய்யலாமா???? மருத்துவ செலவை முழுவதும் நானே ஏற்றுக்கொள்கிரேன்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
பெற்றவர்கள் கண்ணீர் மல்க ஆண்டவர் தான் உங்கள் ருபத்தில் வந்து என் குழந்தையை காப்பாற்றினார். என்று கூற
அதற்க்கு மருத்துவர்
இதற்க்கு மூல காரணமே உங்கள் பெண் குழந்தையின் தூய்மையான அன்பு தான் காரணம். டாக்டர் உங்களிடம் ஏதாவது MIRACLE நடந்தால் தான் உண்டு என்று சொன்னதை, குழந்தை அந்த miracle என்ற வார்த்தையை மருந்து தான் என்று நினைத்து என் நண்பனின் மருந்து கடைக்கு வந்தது தான் மூல காரணம்.
எல்லாம் வல்ல இறைவனுக்கு தெரியும், யார்யாருக்கு, எந்தெந்த நேரத்தில், எதை கொடுக்க வேண்டும் என்று. அதை இப்பொழுது உங்கள் பெண் மூலமாக கொடுத்துள்ளார்.
9976222529
#உற்சாக பானம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்#
சீக்கிரம் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பாதங்களை வெதுவெதுப்பாக வைத்திருப்பது ஒரு எளிய தீர்வாக அமையும் என்று தூக்கவியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். நமது பாதங்கள் சூடாகும்போது அங்கிருக்கும் ரத்த நாளங்கள் விரிவடைந்து, உடலின் உட்புற வெப்பத்தைக் குறைக்கிறது; இந்தச் சிறு வெப்ப மாற்றமானது "உடல் உறங்குவதற்குத் தயாராகிவிட்டது" என்ற ரகசிய சமிக்ஞையை மூளைக்குத் தெரிவிக்கிறது. ஒருவேளை பாதங்கள் குளிர்ச்சியாக இருந்தால், இந்தச் சமிக்ஞை மூளைக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டு உடல் விழிப்பு நிலையிலேயே இருக்கும். தூக்க மாத்திரைகளோ அல்லது கடினமான முறைகளோ தேவையில்லாமல், இரவில் தூங்குவதற்கு முன் வெறும் காலுறைகளை (Socks) அணிந்துகொள்வது அல்லது பாதங்களை வெதுவெதுப்பான நீரில் கழுவுவது உங்களை மிக வேகமாகவும் ஆழ்ந்தும் உறங்க வைக்கும். ஆரோக்கியமான தூக்கத்திற்கு இந்த எளிய 'வெப்பநிலை மாற்றம்' ஒரு மேஜிக் போலச் செயல்படும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. #உற்சாக பானம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
அறிவிப்பு*
✨✨✨✨✨✨✨✨
கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்து இருப்பவர்கள் அந்தக் காரின் காப்பீட்டு பாலிசியைப் படித்துப் பாருங்கள். அதில் விபத்துகள் ஏற்பட்டு கிளைம் எதுவும் வாங்கப்படாமல் இருக்கும் பட்சத்தில்
No claim bonus கூடிக்கொண்டே வந்து 50% வந்தவுடன் நின்று விடும்.
அவ்வாறு விபத்து கிளைம் ஏதும் வாங்காமல் இருக்கும் நிலையில் உங்கள் காரை நீங்கள் விற்று விட்டு வேறு கார் வாங்க முடிவு செய்தால், நீங்கள் விற்கப் போகும் காரின் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அனுகி No Claim Bonus Certificate வேண்டும் என்று எழுத்துப் பூர்வமாகக் கேளுங்கள், அவர்கள் தரும் அந்த Certificate ஐ பெற்று புதிய கார் வாங்கும் ஏஜென்சியிடம் கொடுத்துப் புதிதாக எடுக்கும் வாகன பிரிமியத்தில் உங்கள் பழைய காரின் No claim bonus எவ்வளவு இருக்கிறதோ அதே அளவு Discount பெற்றுக் கொள்ளுங்கள் . அது உங்கள் உரிமை மேலும் உங்களின் பழைய கார் வாங்குபவர் அவர் பெயரில் இன்ஸுரன்ஸை மாற்றும் போது, உங்கள் நோ கிளைம் போனஸை அவர் பயன்படுத்த முடியாது, வித்தியாச பிரிமியத்தை அவர் கட்டியே ஆக வேண்டும் .
எனவே நீங்களும் பயன்படுத்தாவிட்டால் அந்த நோ கிளைம் போனஸ் யாருக்கும் பயன் இல்லாமல் போய் விடும்.
No claim bonus என்பது காருக்கு அல்ல. விபத்தில் சிக்காமல்
காரை இயக்கி வந்தாரே அந்தக் காரின் உரிமையாளருக்குத் தான் சொந்தம் அந்த No claim bonus ஐ புதிய வாகனம் எடுக்கும்போது மறக்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள், இது போன்ற தகவல்களை எந்தக் காப்பீட்டு நிறுவனமும் ஏஜென்டும் விளம்பரம் செய்வதில்லை நமக்கு தெரிவிப்பதுமில்லை..
P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
சிறப்பு அரசு பொது வழக்கறிஞர்
மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் திருப்பத்தூர். #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம் #உற்சாக பானம்#
அறிவு என்பது புதையல் பெட்டகம் என்றால்…
பயிற்சியே அதன் திறவுகோல்..!!
அறிவு எல்லோரிடமும் இருக்கலாம்.
புத்தகங்களில் இருக்கலாம்.
பாடங்களில் இருக்கலாம்.
அனுபவங்களில் இருக்கலாம்.
ஆனால் அந்த அறிவு வாழ்க்கையை மாற்ற வேண்டுமெனில்
அதை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
புதையல் பெட்டகம் இருக்கலாம்.
ஆனால் திறவுகோல் இல்லையெனில் அது பயனற்றது.
அறிவு ஒரு சக்தி.
பயிற்சி தான் அந்த சக்தியை வெளிக்கொணரும் திறவுகோல்.
---
🔟 10 விரிவான விளக்கங்கள்
---
1️⃣ அறிவு சேமிப்பு; பயிற்சி செயலாக்கம்
அறிவு மனதில் சேமிக்கப்படுகிறது. ஆனால் பயிற்சி அதை செயலில் மாற்றுகிறது. தெரிந்தது மட்டுமே போதாது; செய்தது தான் பலன் தரும்.
---
2️⃣ பயிற்சி திறமையை உருவாக்கும்
ஒரு விஷயத்தை ஒருமுறை தெரிந்தால் அது அறிவு. அதே விஷயத்தை பலமுறை செய்தால் அது திறமை. திறமை தான் வெற்றியை உருவாக்கும்.
---
3️⃣ தவறுகள் பயிற்சியின் பகுதி
பயிற்சி செய்யும் போது தவறுகள் வரும். ஆனால் அந்த தவறுகளே மேம்பாட்டின் அடித்தளம். முயற்சி இல்லாத இடத்தில் முன்னேற்றம் இல்லை.
---
4️⃣ தொடர்ச்சி தான் மாற்றத்தை தரும்
ஒரு நாள் பயிற்சி போதாது. தினசரி சிறிய முயற்சி தான் பெரிய திறனை உருவாக்கும்.
---
5️⃣ பயிற்சி தன்னம்பிக்கையை வளர்க்கும்
ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்யும் போது பயம் குறையும். நம்பிக்கை உயரும். அந்த நம்பிக்கை தான் மேடையில் நிற்கும் தைரியம் தரும்.
---
6️⃣ அறிவு பயன்பாட்டில் தான் மதிப்பு
புத்தகத்தில் இருக்கும் அறிவு யாருக்கும் உதவாது. அதை பயன்படுத்தும் போது தான் அது வாழ்க்கையை மாற்றும்.
---
7️⃣ ஒழுக்கம் பயிற்சியின் அடிப்படை
பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க வேண்டும். ஒழுக்கம் இல்லாமல் பயிற்சி தொடராது. ஒழுக்கம் தான் திறமையை நிலைநிறுத்தும்.
---
8️⃣ சிறிய பயிற்சி பெரிய பலன்
ஒவ்வொரு நாளும் சிறிய முன்னேற்றம் செய்தால் அது வருடங்களுக்குப் பிறகு பெரிய வெற்றியாக மாறும்.
---
9️⃣ பயிற்சி திறனை ஆழப்படுத்தும்
அறிவு மேற்பரப்பு. பயிற்சி ஆழம். ஆழமான திறன் கொண்ட மனிதன் எந்த சூழ்நிலையிலும் நிலைத்து நிற்பான்.
---
🔟 திறவுகோல் உன் கையில்
அறிவு அனைவருக்கும் கிடைக்கலாம். ஆனால் பயிற்சி செய்வது உன் தேர்வு. திறவுகோல் உன் கையில் உள்ளது. திறந்தால் புதையல் உன்னுடையது.
---
🌄 முடிவுரை
அறிவு இருந்தால் பெருமை இல்லை.
அதை பயன்படுத்தினால் தான் மதிப்பு.
அறிவு என்பது புதையல் பெட்டகம் என்றால்,
பயிற்சியே அதன் திறவுகோல்.
இன்று கற்றதை இன்று பயிற்சி செய்.
தொடர்ந்து செய்.
ஒருநாள் உன் திறமை
உன் வாழ்க்கையின் புதையலை திறக்கும். 🔐✨🔥
🌹🌹🌹 #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #பொழுது போக்கு #உற்சாக பானம்#
#உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
#பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்#








