
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
@3454dsm
புத்திசாலித்தனத்தை விட முட்டாள்தனமே சிறந்தது
நடந்து வரும் போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலால மிதிச்சுடுறோம். அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடுறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக் கூடப் போறோமே. சாமி, வேண்டாம்னு வெறட்டவா செய்றா? எல்லாம் மனசு தாண்டி.. மனசு சுத்தமா இருக்கணும்.
அக்கினி பிரவேசம் என்கிற கதையில் வரும் வரிகள் இவை...எனக்கு ஜெயகாந்தன் என்றாலே நினைவில் வரும் வரி இது தான்..இவரின் நாவல்களுக்குள் இன்னும் செல்லவில்லை.விகடன் வெளியிட்டு இருந்த முத்திரைக் கதைகள் தொகுப்பை மட்டும் வாசித்து இருக்கிறேன்...சில கதைகளில் முரண்பாடுகள் இருந்தாலும் அத்தனையும் கனமான விஷயங்களை பேசக்கூடியதாக இருந்தது .என்னுடைய வாசிப்பு அனுபவத்தை வைத்துச் சொன்னால் கதைகளுக்குள் குறிப்பாக பெண்களை நிறைய உரையாட வைத்து இருக்கிறார்.பெண் சுதந்திரம் குறித்து நிறைய கருத்துக்களை பெண்கள் வழியாகவே பேசி இருக்கிறார்.
சமூக சிக்கல்களை மட்டுமே தொடர்ந்து தன்னுடைய கதைகளில் அதிகம் பிராதனப்படுத்தி எழுதி இருக்கிற ஜெ கா வின் எழுத்துக்கள் பெரிதும் வாசிப்பதற்கு எளிமையான மொழி நடை கொண்டவை ....
இன்றைய நாளில் ஜெ.கா வை நினைவு கூறுவோம் ! 🌹🌹🌹 #உற்சாக பானம் #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்#
.
எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக மாறி விடுவதில்லை. ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப எண்ணப்படும் போது அது சக்தி பெற ஆரம்பிக்கிறது. அந்த சக்தி அதை செயல்படுத்தத் தூண்டுகிறது.
ஆயிரம் முறை சொன்னால் யானையும் சாகும்" என்பர் பெரியோர். அதனால் தான் ஆலயங்களில் லட்ச்சார்ச்சனை, கோடியர்ச்சனை போன்றவைகள் நிகழ்கின்றன.
எண்ணங்களின் சக்தி அதே எண்ணங்கள் கொண்டவர்களைத் தன் பக்கம் ஈர்க்கிறது. மேலும் வலுப்பெறுகிறது. அது அலைகளாகப் பலரையும் பாதிக்கிறது. பலரையும் செயலுக்குத் தூண்டுகிறது.
எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்துப் போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள்.
எனவே நம் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எவையோ, அவையே இன்று நம்மை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை.
நம்முடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் நம் எண்ணங்களை மாற்ற வேண்டும். எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும். இது மாறாத உண்மை.
வாழ்க வளமுடன். 😊😊😊 #👪 cute family members 👪 #உற்சாக பானம் #💪ஊக்குவிக்கும் கதைகள் #😍குட்டி கதை📜 #⏱ஒரு நிமிட கதை📜
#💪ஊக்குவிக்கும் கதைகள் #😍குட்டி கதை📜 #⏱ஒரு நிமிட கதை📜 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் .யு.போப் பிறந்த தினம் இன்று!*
*'இந்தக் கல்லறையில் தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்று தனது கல்லறையில் பொறிக்கப்பட வேண்டும் என்று தன் ஆசையை வெளிப்படுத்திய ஜி.யு.போப் பிறந்த தினம் இன்று.*
♦ *1839இல் பைபிள் நூல் கழகத்தில் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக தமிழ்நாட்டுக்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார். தமிழ் தவிர தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.*
♦ *சென்னைக்கு வந்த போப் சாந்தோம் பகுதியில் தங்கினார். வெஸ்லியன் சங்கத்தால் சாயர்புரம் சிற்றூருக்கு சமயத்தொண்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவு பிள்ளை, இராமானுஜ கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.*
♦ *வேற்று மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய உயர்சாதியினர் தங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென அடம்பிடித்தனர். போப் உறுதியாக தெளிவாக கூறினார், ‘இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம்’ என்றார். இவரது கருத்து ஏற்கப்படவில்லை.16 வருடம் உழைத்த நற்செய்தி தொண்டர் கழகத்திடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். பின்பு தஞ்சையிலிருந்து உதகமண்டலம் சென்றார்.*
♦ *உதகையில் இருக்கும்போது, சிறைத்தண்டனை பெற்றிருந்த குற்றவாளிகளை தேடிச்சென்று பேசி, அவர்களுக்கு உதவும் வகையில் ஆதரவாகப் பேசியவர். அங்குள்ள மாணவர்களுக்கு வகுப்பும் எடுத்தார் பின்னர் அங்கு சிறந்த பள்ளியையும் உருவாக்கிய பெருமை இவரைச்சாரும். உதகையில் அவரது பணிக்காக இங்கிலாந்தின் கந்தர் புரி அத்தியட்சர் ‘மறை நூற் புலவர்’எனும் பட்டம் அளித்தார்.*
♦ *1886ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களைப் பதிப்பித்தார். தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.*
♦ *‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு டாக்டர் ஜி.யு.போப். ஆங்கில நாட்டில் பிறந்தும், கிறிஸ்தவ மதப் பிரசாரத்துக்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்தும்கூட திருவாசகத்தாலும் தமிழாலும் ஈர்க்கப்பட்டு அதில் கரைந்தவர் போப்.*
♦ *தமிழ்ப் புலவர்கள், தமிழ்த் துறவிகள் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார். ஐக்கிய நாடுகள் சபையில் எழுதப்பட்டுள்ள வாசகமான கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’பாடலையும் இளம் பெருவழுதி எழுதிய ‘உண்டாலம்ம இவ்வுலகம்’பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.*
#💪ஊக்குவிக்கும் கதைகள் #😍குட்டி கதை📜 #⏱ஒரு நிமிட கதை📜 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் வாழ்க்கை அற்புதமான வரம்.
மனித வாழ்க்கை அற்புதமான வரம்.
இவ்வுலகத்தில் தடம் பதிக்க முடியுமா?
வாழ்க்கையை சில நபர்களால் தான் சிறப்பாக வாழ முடிகிறது.
மற்றவர்கள் எல்லாம் வாழ்க்கையை நகர்த்திக் கொள்ளப் பழகி விட்டோம்.
இந்த நிலை நிரந்தரமானதா? மாற்றிக் கொள்ள முடிந்ததா? என்று சற்று யோசித்தால், இதில் மறைந்திருக்கும் மாபெரும் உண்மை வெகுவாக எல்லோருக்கும் புலப்படும்.
ஒவ்வொருவரின் வாழ்க்கைத் தரம் என்பது அவர்களின் மனநிலையை பொறுத்தே அமைகிறது என்ற உண்மை தான். ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களது வாழ்க்கை பல்வேறு அர்த்தங்களை கொடுக்கும்.சிலருக்கு வாழ்க்கை சுவாரசியமாக அமையும். சிலருக்கு வாழ்க்கை விருப்பமற்ற நிலையில் அமையும்; உற்சாகமாக அமையும். இன்னும் சிலருக்கு வாழ்க்கை கேள்விக்குறியாகக் கூட அமையும்.
எந்த ஒரு மனிதனும் பிறக்கும் போதே அந்த வாழ்க்கை நிலைகளில் பிறந்து விடுவதில்லை. இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் அபாரமான சக்திகளைக் கொண்டும், ஆற்றலைக் கொண்டும் பிறக்கத் தான் செய்கின்றனர். ஆனால் அவர்களது வாழ்க்கை ஓட்டத்தை பலகாரணிகள் பல திசைகளில் இருந்து இழுக்கின்றன. இதுவே அவர்களது வாழ்க்கை முறையில் பிரதிபலித்து சமுதாயத்தில் அவர்களை பல வகையான மனிதர்களாக அடையாளம் காட்டுகிறது.
வாழ்க்கையை உற்சாகத்துடன் வாழக் கற்றுக் கொண்டால், அந்த உற்சாகத்தில் பிறக்கும் ஆனந்தமான மனநிலை, அவர்களின் அபூர்வ சக்தியை முழுமையாக வெளிப்படுத்தி மகிழ்ச்சி பொங்கும் வண்ணங்களுடன் பிரதிபலிக்கிறது.
வண்ணமயமான வாழ்க்கை முறையைப் பெறுவதற்கு அல்லது பிரதிபலிப்பதற்கு ஒவ்வொரு மனிதனும் அவர்களிடம் உள்ள ஆரோக்கிய எண்ணங்களின் தரத்தை பிரதானமாக பயன்படுத்திக் கொள்ள ஆளுமை பெற வேண்டும்.
எண்ணங்கள் தான் மனிதனுக்கு செயல் திறன்களை அளிக்கும் சக்தியாக அமைகிறது.
அடிப்படையாக, வெற்றிகரமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கு, வெற்றிகரமான செயல்களை ஒவ்வொரு மனிதனும் செய்வது இன்றியமையாததாக இருப்பது மட்டுமல்ல, அத்தியாவசியமாய் தேவைப்படும் வாழ்க்கை முறை.
வண்ணமயமான உற்சாகம் பொருந்திய வாழ்க்கையை சமூகத்திற்கு பிரதிபலிக்க, ஒவ்வொரு மனிதனும் தனக்கு தேவையான ஆரோக்கிய எண்ணங்களை வளர்த்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை அடைய வேண்டும்.
உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு தங்களது வாழ்க்கையை வெற்றிப் பாதையில் செலுத்த முற்படுபவர்களுக்கு என்றுமே வாழ்க்கை வண்ணமயமான வெற்றிகளை அள்ளித் தரும்.
எண்ணங்களின் அடிப்படையில் தான் மனித வாழ்க்கையின் செயல்பாடுகள் உதயமாகிறது.
எந்த ஒரு வாழ்க்கை சூழ்நிலையிலும் நம்மால் வாழ்ந்திட முடியும் என்றும் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள முடியும் என்றும், எந்த நிலையிலும் தமது செயல் திறன்களை நல்ல நோக்கத்திற்காக அளித்திட முடியும் என்னும் எண்ணங்களை பிரதிபலிக்க கூடியவர்கள் தான் ஆரோக்கிய சிந்தனையைக் கொண்டவர்கள்.
எண்ணம் போலத் தான் வாழ்க்கை' என்ற சொல்லுக்கு ஏற்ப ஒவ்வொரு மனிதனும் தனக்குள் உதயமாகி வெளிப்படும் எண்ணத்தின் அடிப்படையில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இத்தகைய வாழ்க்கை தனக்கு வேண்டும் என்று நிர்ணயித்து, அதற்குத் தேவையான வகையில் ஆரோக்கிய செயல்களை உருவாக்கும் எண்ணங்களை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
ஆரோக்கிய எண்ணங்களை பிரதானமாக தனக்குள் கொண்டு, தனது வாழ்க்கை நிலையில், அதை தனக்கு சாதகமாக வெளிப்படுத்தி செயல்படும் மனிதர்களுக்கே, வாழ்க்கை பெரிதும் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சி உடையதாகவும் அமையும்.
ஆரோக்கிய எண்ணங்களை தனது வாழ்க்கையில் பிரதான நிலைக்குக் கொண்டு வர, எந்த மனிதனும் தனக்குள் எழும் ஆரோக்கியமற்ற எண்ணங்கள் தோன்றுவதை குறைப்பதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.
எளிய பயிற்சி முறைகளில் தெளிவான சிந்தனையை பயன்படுத்தி இதை பழகிக் கொள்ளலாம்.ஆரோக்கிய எண்ணத்தை பிரதானமாக்கி கொள்வதற்கு ஒவ்வொரு மனிதனும் தனக்குள் ஆக்கபூர்வமான கனவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வகையான கனவுகள் உறக்கத்தில் வருவதல்ல. விழித்திருக்கும் போது பெரிய வெற்றியையோ, பெரிய சாதனையையோ தான் நிகழ்த்த போவதாக தனது மனதிற்குள் நம்பிக்கையை விதைப்பதன் மூலம், தனது மனத்திரையில் அந்த அனுபவத்தை காணும் பக்குவத்தை வளர்க்க வேண்டும்.
ஆரோக்கிய எண்ணங்கள் தான், ஒரு மனிதனுக்கு சிறப்பான அடையாளத்தை பெற்றுத் தரும் .ஆரோக்கிய எண்ணங்கள் தான் சமுதாயத்தில், அளப்பரிய செயல்களின் மூலம், தடம் பதிக்க உதவும் மாபெரும் சக்தியாக இருக்கிறது.
ஆரோக்கிய எண்ணங்களை கொண்டவர்கள் என்றுமே வாழ்க்கையில் தோல்வியை தழுவியதில்லை. என்னால் முடியும்... என்னால் எப்போதும் முடியும் என்று முழக்கமிடுவோர்கள் ஆரோக்கிய எண்ணத்திற்கான விதைகளை விதைத்து வண்ணமயமான வெற்றியை அறுவடை செய்ய முடியும்.
வாழ்க்கை வாழ்வதற்கே. அதை சிறப்பாக வாழ்வதற்கு நேற்று இல்லை; நாளை இல்லை, இன்று தான் முக்கியம். இன்று முதல் ஒவ்வொரு மனிதனும், ஆரோக்கிய எண்ணத்தின் பலனை அறிந்து கொண்டு, வாழ்க்கையை தனக்கும், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமைத்துக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெற வேண்டும்.
சிந்தனை செய் மனமே... வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றும் சக்தி உன்னிடம் அல்லவா பிறக்கின்றது. சிந்தித்து செயல்படுங்கள்.
வாழ்க வளமுடன். 😊😊😊
உயிரும் சுதந்திரத் தன்மையைக் கொண்டது.
தனித்து இயங்கவே பரிணமித்திருக்கிறது
சுதந்திரத்தில் மட்டுமே சுயத்தை உணர முடியும்
அப்படி உயிரை உணர்ந்த பின்
உயிரின் உன்னதமான சுதந்திரத் தன்மையை உணர்ந்த நிலையே
எல்லைகளை கடந்த ஆனந்த நிலை
உயிரும் லேசானது
உயிர் உணர்வும் லேசானது
சுயமும் லேசானது
சுயத்தில் சூட்சுமமாக நிலை கொண்டிருக்கும் சுகமும் லேசானது
சுதந்திரத்தை உணர்ந்து கொண்டால்
சுமை இல்லா வாழ்வை
சுகமாகவே அனுபவிக்க முடியும்
அறிவோம் சுதந்திர உணர்வை
நிலைப்போம் சுயமான விளங்கும் சுதந்திரமான சுகத்தில்
அன்பான இனிய நற்காலைப் பொழுது வணக்கம் நட்பே.
வாழ்க வளமுடன். 😊😊😊 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம் #உற்சாக பானம்#
#உற்சாக பானம்# #உற்சாக பானம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் தண்ணீர்' அல்லது 'ஏலக்காய் எலுமிச்சை தண்ணீர்' ஆகும்.
இதன் செய்முறை, நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்த விரிவான விளக்கம் இதோ:
படத்தில் உள்ளவை:
ஒரு கண்ணாடி குவளையில் மிதமான சூட்டில் உள்ள தண்ணீர் (ஆவி பறப்பதிலிருந்து தெரியலாம்).
அருகில் முழுமையான பச்சை ஏலக்காய்கள் மற்றும் ஒரு எலுமிச்சை பழம்.
பின்னணியில் "தினமும் ஏலக்காய் தண்ணீர்" மற்றும் "ஆரோக்கியமான வாழ்விற்கு" என்ற தமிழ் வரிகள் உள்ளன. இது ஒரு ஆரோக்கிய பானம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
ஏலக்காய் தண்ணீரின் ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits):
ஏலக்காய் வெறும் நறுமணப் பொருள் மட்டுமல்ல, பல மருத்துவ குணங்கள் கொண்டது. இதை தண்ணீருடன் சேர்த்து குடிப்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரும்:
செரிமானத்திற்கு சிறந்தது (Digestion):
ஏலக்காய் வயிற்றில் ஏற்படும் உப்பசம், வாயுத் தொல்லை மற்றும் அஜீரணத்தை சரிசெய்ய உதவுகிறது. சாப்பிட்ட பிறகு குடிப்பது ஜீரணத்தை வேகப்படுத்தும்.
வாய் ஆரோக்கியம் (Oral Health):
இது வாய் துர்நாற்றத்தை போக்கி, வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நச்சுக்களை நீக்குதல் (Detoxification):
உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்ற ஏலக்காய் தண்ணீர் உதவுகிறது. இது சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இரத்த அழுத்தக் கட்டுப்பாடு (Blood Pressure):
ஏலக்காயில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகின்றன.
சளி மற்றும் இருமல் (Cold & Cough):
தொண்டை கரகரப்பு, சளி மற்றும் இருமலின் போது வெது வெதுப்பான ஏலக்காய் தண்ணீர் குடிப்பது நல்ல நிவாரணத்தைத் தரும். சுவாசப் பிரச்சனைகளையும் குறைக்க உதவும்.
மன அழுத்தத்தைக் குறைத்தல் (Stress Relief):
ஏலக்காயின் நறுமணம் மனதிற்கு அமைதியைத் தரும் (Aromatherapy), இது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
பசியைத் தூண்டுதல்:
பசியின்மையால் அவதிப்படுபவர்கள் இதை குடிக்கலாம்.
வயிற்றுப் புண் (Ulcer): ஏலக்காய் சாறு குடிப்பது வயிற்றுப் புண்ணை குணப்படுத்த உதவும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
செய்முறை (How to Make):
மிகவும் எளிமையான இரண்டு முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
முறை 1:
ஊறவைத்தல் (குளிர்ந்த முறை)
இரண்டு அல்லது மூன்று ஏலக்காய்களை எடுத்து லேசாக நசுக்கிக் கொள்ளவும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் அதை போட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
காலை எழுந்ததும் தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
முறை 2:
கொதிக்க வைத்தல் (சூடான முறை - படத்தில் உள்ளபடி)
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
அதில் நசுக்கிய ஏலக்காய்களைப் போடவும்.
2-3 நிமிடங்கள் மிதமான தீயில் கொதித்ததும், அடுப்பை அணைத்து வடிகட்டவும்.
மிதமான சூட்டில் குடிக்கலாம்.
படத்தில் உள்ள கூடுதல்
பொருட்கள்:
இந்த தண்ணீரில் விருப்பப்பட்டால் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பது கூடுதல் சுவையையும், சி-வைட்டமின் நன்மையையும் தரும்.
எப்போது குடிக்க வேண்டும்? (Best Time to Drink):
காலை வெறும் வயிற்றில்:
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், செரிமான மண்டலத்தை தயார் செய்யவும் இது மிகச் சிறந்த நேரம்.
உணவுக்குப் பிறகு: கனமான உணவைச் சாப்பிட்ட பிறகு ஏற்படும் அஜீரணத்தை தவிர்க்க குடிக்கலாம்.
குறிப்பு:
ஏலக்காய் தண்ணீர் பொதுவாக பாதுகாப்பானது என்றாலும், அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது சிலருக்கு அசிடிட்டியை ஏற்படுத்தலாம். உங்களுக்கு பித்தப்பை கற்கள் (Gallstones) இருந்தால், மருத்துவரை ஆலோசித்த பிறகு குடிப்பது நல்லது.
*இன்று மக்களிடம் ஒரு தவறான கெட்ட பழக்கம் பரவியுள்ளது.*
*அதாவது நாம் நல்ல வார்த்தைகளைப் பேசினால் நல்லதே நடக்கும், நேர்மறையான எண்ணங்கள் சிந்தனைகள் இருக்க வேண்டும். நாம் என்ன செய்கின்றோமோ அதுதான் நடக்கும் என்கின்றார்கள்.*
*சரி... நான் தெரியாமல்தான் கேட்கின்றேன்...?*
*குழந்தைகளுக்கு உள்ளாடை அணிவிப்பதற்குப் பதிலாக ஒருமுறை பயன்படுத்தும் டயாப்பர் பயன்படுத்துகிறீர்கள்...?*
*அப்படியென்றால்.... அந்த டயாப்பரைத் தூக்கி எறிவது போன்று அந்தக் குழந்தையையும் தூக்கி எறிகிறீர்கள் என்றுதானே பொருள்...?*
*சரி அதையெல்லாம் விடுங்கள்....*
*அந்த டயாப்பரில் என்ன வேதிப்பொருட்கள் இருக்கின்றன? என்கின்ற விடையாமாவது தெரியுமா?*
*ஒரு மண்ணும் தெரியாது.*
*விளம்பரதில் பார்த்தேன். பெரிய பணக்காரர்கள் இதைத்தான் பயன்படுத்துவார்கள். அதனால் வறட்டு கவுரவத்திக்காக நாங்களும் இதைத்தான் எங்கள் குழந்தைகளுக்குப் பயன்படுத்துகின்றோம். அப்புறம் இப்போதெல்லாம் யாருங்க வீட்டில் துணி துவைக்கின்றார்கள்? துணி துவைத்தால் நல்ல குடும்பம் கிடையாது. கவுரவக் குறைச்சல் ஆமாம்...!*
*அப்போதுதானே பார்ப்பவர்கள் எங்களை educated பேமுழி ன்னு நெனச்சு மதிப்பாங்க.?*
*எங்களுடைய பேமுழிக்குன்னு ஒரு கவுரவம் அந்தஸ்து இருக்கிறதா? இல்லையா?*
*ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.... நோய்க்கும், மரணத்திற்கும் காசு பணம் கவுரவம் அந்தஸ்து எதுவுமே பார்த்து வாராது மகனே....!*
*அடிச்சா ஒரே அடி...! தூக்கி வீசிட்டுப் போயிக்கிட்டே இருக்கும்.*
*காசு பணம் இருக்கிறது என்பதற்காக இன்று குழந்தைகளின் அப்பனும் ஆத்தாளும் என்ன ஆட்டம் ஆடுறாங்க?*
*குழந்தைகளை வெளிநபர்கள் யாருமே பார்க்கவே கூடாது, வெளிநபர்களின் மூச்சுக் காற்று நிழல் குழந்தையின் மீது விழவே கூடாது.*
*அய்யயையோ.....*
*சூரிய ஒளி குழந்தையின்மீது விழக்கூடாது....*
*பூமியில் இந்த மண்ணில் குழந்தையின் கை கால் படவே கூடாது....*
*மழை நீர் பனி குழந்தையின் மீது விழவே கூடாது.*
*அட.... அந்த வீட்டில் இருக்கின்ற கிழடுகள் இருக்கின்றார்கள் பாருங்கள்.... அவர்கள் பெயரன் பெயர்தியை ஏதோ வேற்று உலகத்தில் இருந்து வந்த திருட்டுப் பொருள் போன்று யாருக்குமே தெரியாமல் பாத்துக்கொள்கின்றேன் என்ற பெயரில்.... அய்யய்யோ....*
*இப்படி பொத்திப் பொத்தி வளர்த்து கடைசியில் என்ன நடக்கும் தெரியுமா?*
*இவர்களே குழந்தைகளுக்கு விசத்தைக் கொடுப்பார்கள். அதுவும் தெரிந்தேதான் கொடுப்பார்கள்.*
*எப்படி?*
*கைசீனிக் என்ற பெயரில் ஹார்லிக்ஸ் போர்ன்விட்டா பீடியாசுயர் மால்டோவா சத்துமாவு லொட்டு லொசுக்குன்னு வாங்கிக் கொடுப்பாங்க.*
*சரி... நாளைக்கு அந்தப் பிள்ளைங்க பெரியவர்கள் ஆனதும் எங்கு வாழ்வார்கள்?*
*கண்ணாடிக் கூண்டிற்குள்ளா?*
*அல்லது வேற்று கிரகத்திலா?*
*கடைசியில் இந்த மண்ணில்தானே?*
*இங்கதான் டுவிஸ்ட்டே ஆரம்பம்.*
*குழந்தைகளுக்கு தங்க பஸ்பம் எல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்து கடைசியில் இந்த பூமியில் இந்த மண்ணில் (அது எந்த நாடாகவும் இருக்கட்டும்) இங்கு வாழ விடுகிறீர்கள்...?*
*அந்தக் குழந்தை மண்ணில் விளையாடியிருந்தால்தானே அந்த மண்ணிலுள்ள கிருமிகளை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகியிருக்கும்?*
*அந்தக் குழந்தையின் உடலிலுள்ள தோலில் சூரிய ஒளி பட்டிருந்தால்தானே உடல் நலமாக வளமாக இருந்திருக்கும்?*
*டேய் சோணை முத்தான்....!?*
*போச்சா....? என்ற கதையாக ஆகிவிட்டபின்....*
*அழுது புலம்பி என்ன பயன்?*
*அடுத்த மக்களின் மூச்சுக்காற்று நிழல் வாசம் படாமல் வளர்த்தபின் அந்த மக்களின் மத்தியில் உங்கள் பிள்ளைகளை வாழவிட்டால்...? அப்போது பிற மனிதர்களின் இருமல் காற்றுக் கிருமிகளை எதிர்கொள்ள உங்களின் குழந்தைகளின் உடலில் எதிர்ப்பு சக்தி இருக்காதே?* #💪ஊக்குவிக்கும் கதைகள் #😍குட்டி கதை📜 #⏱ஒரு நிமிட கதை📜 #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம்
ஒரு குட்டிக்கதை*
புகழ்பெற்ற அந்தப் பள்ளிக்கூட வாசலில் கல்லூரி மாணவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
பள்ளி முடிந்த மணி அடித்ததால் மாணவர்கள் பேசிச் சிரித்தபடியே வெளியே வந்தார்கள். அப்படித்தான் பிளஸ் 2 படிக்கும் அந்த மாணவியும் வெளியே வந்தாள். அவள் வந்ததும், கல்லூரி மாணவர்கள் சுறுசுறுப்பானார்கள்.
ஏனென்றால் அப்பள்ளியிலும் சரி, அந்த பகுதியிலும் சரி, அவளையே மிக அழகான பெண்ணாக அவர்கள் நினைத்தார்கள். எப்படியாவது அவளை ஈர்த்து தன்னைக் காதலிக்க வைக்க வேண்டும் என்று பெரும் கூட்டமே காத்திருந்தது. ஒவ்வொரு நாளும் அவள் பள்ளிக்குள் செல்லும்போது அவள் பெயரை சொல்லி அழைப்பதும், பின்னால் சென்று சிரிப்பதும், சைக்கிள் வித்தை, பைக் வித்தை காட்டுவதுமாக அவளை ஈர்க்க முயற்சி செய்தனர்.
இரண்டு பேர் ரத்தத்தில் கடிதம் எழுதிக் கொடுத்தார்கள். சிலர் கோயிலுக்குச் சென்று பிரசாதம் எடுத்து வந்தனர். இப்படி ரகம் ரகமாய், விதம் விதமாய் அவளை ஈர்க்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். அம்மாணவியோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள். அவள் அமைதியாய் இருக்க இருக்க, தொல்லைகளும் அதிகமாகின.
அன்றும் அப்படித்தான் அவள் வரவை எதிர்பார்த்து இளைஞர்கள் காத்திருந்தார்கள். வழக்கமாக கண்டுகொள்ளாமல் செல்லும் அந்த மாணவி, அன்று அவர்களை நோக்கி வந்தாள். அவ்வளவு அழகான பெண் தங்களை நோக்கி வருவதால் மாணவர்கள் பரபரப்பானார்கள்.
அவள் அருகில் வந்து, ‘‘பேசலாங்களா?’’ என்றாள்.
மாணவர்கள் திணறி, ‘‘சொல்லுங்க’’ என்றனர்.
‘‘நான் வந்தது உங்க கிட்ட ரெண்டு ஆல்பம் காட்டுறதுக்குத்தான்!’’
‘‘என்ன ஆல்பம்?’’
அவள் அங்கே இருந்த மரத்தடி நிழலில் நடுவில் அமர்ந்து கொண்டு, கல்லூரி மாணவர்களை வட்டமாக அமரச்செய்தாள். அவர்களால் அதை நம்பவே முடியவில்லை.
முதலில் அவள் பாட்டியின் கல்யாண ஆல்பம் காட்டினாள். மொத்தம் ஆறு போட்டோக்கள் உள்ள கல்யாண ஆல்பம். அனைவரும் பார்த்தார்கள். அடுத்து அவள் அம்மா அப்பாவின் கல்யாண ஆல்பம் காட்டினாள். அதில் மொத்தம் 25 போட்டோக்கள் இருந்தன. அதையும் அனைவரும் பார்த்தார்கள்.
கல்லூரி மாணவர்களுக்கு ஏன் இந்தப் பெண் அவளாக வந்து பேசி, அவள் பாட்டி மற்றும் பெற்றோரின் கல்யாண ஆல்பங்களைக் காட்டுகிறாள் என்று குழப்பம். இப்போது அவள் பேச ஆரம்பித்தாள்.
‘‘என் பாட்டி கல்யாண ஆல்பம் பாத்தீங்க. எவ்ளோ சின்ன குழந்தையா பாட்டி இருக்கிறாங்க பாத்தீங்களா? என் பாட்டிக்கு படித்து முன்னேறனும்னு ரொம்ப ஆசை. வீட்ல அழுது புரண்டு ஆறாம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்காங்க. அப்போ பக்கத்து பள்ளிக்கூடத்துல படிச்ச பெரிய பையன், பாட்டி நடந்து போகும்போது ஒரு ரோஜாப்பூவை மேல வீசி இருக்கான். அதை பாட்டி வந்து வீட்ல சொல்லி இருக்காங்க. உடனே வீட்ல இருந்தவங்க, ‘நீ படிச்சது போதும்’னு சொல்லி நிச்சயதார்த்தம் செய்துட்டாங்க. அப்புறம் சில வருஷம் கழிச்சி கல்யாணம் செய்து வச்சாங்க.’’
‘‘கல்யாணம் செய்யும்போது உன் பாட்டிக்கு என்ன வயசு?’’ மாணவர்கள் கேட்டார்கள்.
‘‘15 வயசு. 17 வயசுல எங்க அம்மா பிறந்தாங்க. அம்மாவுக்கும் படிக்கணும்னு ரொம்ப ஆசை. பாட்டிக்கும் அம்மாவ படிக்க வைக்கணும்னு ஆசை. அம்மா ஒன்பதாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கும்போது, ஊர் சுவத்துல அம்மாவையும் கூட படிக்கிற இன்னொரு பையனையும் இணைச்சி வைச்சி யாரோ எழுதி வச்சிட்டாங்க. அதைப் பார்த்த தாத்தா, அம்மா எவ்வளவோ கெஞ்சியும் பொருட்படுத்தாம அம்மாவோட படிப்ப நிறுத்தி அம்மாவுக்கு பதினேழு வயசுல கல்யாணம் செய்து வைச்சிட்டாங்க. அம்மாவோட 19 வயசுல நான் பிறந்தேன்.’’
கல்லூரி மாணவர்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
‘‘15 வயசுல கல்யாணம் ஆன பாட்டி, 17 வயசுல கல்யாணமான அம்மா, அவங்க வழியில எனக்கும் அப்படி ஆகிடக் கூடாது. எனக்கு 15 வயசு நடக்குது. எனக்கு நிறைய படிக்கணும். அப்துல் கலாம் மாதிரி விஞ்ஞானி ஆகனும்னு ரொம்ப ஆசை. என் பாட்டியை ஒரு ஆண் கிண்டல் செய்தார். அதனால அவங்க படிப்பு நின்னுது. என் அம்மாவை ஒரு ஆண் கிண்டல் செய்தார். குடும்பத்துல இருக்கற ஆண்கள் சேர்ந்து அவங்க படிப்பையும் நிறுத்தினாங்க.
இப்படிப் பெண்களுக்கு பாதுகாப்பு கேடு கொடுக்கிறதும் ஆண்கள்தான். அவங்களை பாதுகாக்குறேன்னு படிப்பை நிறுத்துற கேட்டைச் செய்றதும் ஆண்கள்தான். தலைமுறை தலைமுறையா இப்படி டீஸ் பண்ற ஆண்களால எங்கள் படிப்பு, எதிர்காலம் எல்லாமே நாசமாத்தான் போகணுமா? இந்த சூழ்நிலையில நான் மேலும் மேலும் படிக்க ஆசைப்படுறேன். நான் மேல படிக்கலாமா வேண்டாமான்னு நீங்கதான் யோசிச்சி சொல்லணும். சரியா? உங்க முடிவு எதுனாலும் நான் ஏத்துக்கிறேன்’’ என்று சொல்லி அவள் விடைபெற்றாள்.
மறுநாள் அவள் பள்ளிக்கு வரும்போது, ரோஜாக்களோடு ஒரு கல்லூரி மாணவன் கூட அங்கே நிற்கவில்லை. #உற்சாக பானம் #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #😍குட்டி கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள்
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
#பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்#










