
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
@3454dsm
புத்திசாலித்தனத்தை விட முட்டாள்தனமே சிறந்தது
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
#பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்#
🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
*இன்றைய சிந்தனை* (26.02.2026)
......................................
*''பொறாமை குணம்...!"*
.....................................
மனிதர்களின் நிம்மதிக்கு வேட்டு வைக்கும் குணங்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை. இந்தப் பொறாமைக் குணம் யாரையும் விட்டு வைப்பது இல்லை...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர் இடையேயும் இந்த பொறாமைக் குணம் இருப்பதைக் காணலாம்...
குழந்தைகளிடம் தங்களை அறியாமல் பொறாமைக் குணம் இருக்கும். பெரியவர்களிடம் அவர்கள் அறிந்தே இந்தக் குணம் காணப்படும்...
இந்தப் பொறாமை குணம், ஒருவரது வாழ்க்கையில் துன்பங்களையும், துயரங்களையும் தந்து விடக் கூடும். எனவே!, அறிந்தும் அறியாமலும் இந்த பொறாமைக் குணம் நம்மை அணுகாமல் இருக்க புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்...
ஒரு ஊரிலே ஒரு பரம ஏழை அன்றாடம் ஒருவேளை உணவுக்கே அல்லல்பட்டுக் கொண்டு இருப்பவர். ஒருநாள் அந்தக் கிராமத்திற்கு ஒரு புத்த பிச்சு ஒருவர் வருகின்றார்...
அவரைப் பார்ப்பதற்குச் சென்ற அந்த ஏழைக் குடியானவர், அந்த புத்த பிச்சுவை சந்தித்து தனக்கு செல்வங்கள் கிடைத்துத் தான் நன்றாக வாழ வேண்டும் என்று அவரிடம் வேண்டினான்...
அவனது கோரிக்கைக்கு இரக்கப்பட்ட அந்தப் பிச்சு அவனைப் பார்த்து உனக்கு நான் சகல செல்வங்களும் கிடைத்து வளமான வாழ்க்கை வாழ்வதற்காக நீ கேட்பதைத் தருவேன். ஆனால்!, ஒரு நிபந்தனையோடு தான் தருவேன் எனக் கூறுகின்றார்.அந்த நிபந்தனை என்னவென்றால், '' நீ உன்னுடைய செழிப்பான வாழ்க்கைக்கு எவ்வளவு செல்வங்களை கேட்கின்றாயோ, அதேபோல இரண்டு மடங்கு உன்னுடைய எதிர்வீட்டுக்காரன் பெறுவான் என்ற நிபந்தனையைப் போடுகின்றர்...
அதற்கு அந்தக் ஏழைக் குடியானவன் கலவரமடைந்து ஆலோசிப்பதைப் பார்த்த அந்த புத்த பிக்கு,'' நீ இன்று வீடு சென்று நன்றாக சிந்தித்து உனக்கு என்ன வேண்டும் என நாளை நீ என்னிடம் வந்து கூறு''.. ஆனால்!, நீ கேட்பதைப் போல இருமடங்கு உன் எதிர்வீட்டுக்காரனுக்கு கிடைக்கும் என்று கூறி அனுப்பி வைக்கின்றார்...
அதேபோல அடுத்த நாளும் அந்த ஏழைக்குடியானவன் அந்த பிக்குவை பார்ப்பதற்கு வருகின்றான். அவர் அவனைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் எனத் தீர்மானித்து விட்டாயா...? எனக் கேட்கின்றார்...
அதற்கு அந்த ஏழைக் குடியானவர்,'' எனது ஒரு கண்ணை எடுத்து விடுங்கள். நான் மகிழ்ச்சியுடன் இருப்பேன் ''என்று கூறுகின்றான். இதைத் தான் பொறாமையின் உச்சக்கட்டம் என்று கூற முடியும்...
தனக்குக் கிடைப்பதைப் போல இருமடங்கு எதிர்வீட்டுக்காரனுக்கு கிடைக்கும் என்று அறியும் போது அவனுடைய பொறாமையின் உச்ச வெளிப்பாடக தனது ஒரு கண்ணை எடுத்து விடும்படி கேட்கின்றான்...
*ஆம் நண்பர்களே...!*
🟡 இது ஒரு கற்பனைக் கதையாக இருந்தாலும் பொறாமையின் உச்சக்கட்டத்தை கூறி நிற்கின்றது. பொறாமை என்பது ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இன்றி சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பரந்து பட்டு இருக்கின்றது...!
🟡 மற்றவர்கள் போல நாமும் வாழ்வில் முன்னேற முடியும் என்ற எண்ணம் தோன்றும் போது, யார் மீதும் நமக்கு பொறாமை ஏற்படாது. பொறாமைக் குணம் யாரையும் விட்டு வைப்பது இல்லை. மனிதர்கள் பொறாமையை விட்டு ஆரோக்கியமான போட்டியுடன் செயற்பட்டால் நல்ல ஒரு நிலையை அடைய முடியும்...!
🔴 ஒருவரின் மீது பொறாமை தோன்றுகிறது என்றால் அது ஏன் வருகிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவர் மீது ஏற்பட்ட பயமா...? அல்லது கோபமா...? அல்லது அவர் போல முன்னேற முடியவில்லை, நடந்து கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கமா...? இதில் எதன் காரணமாக பொறாமைக் குணம் தோன்றியது என்பதைக் கண்டு பிடியுங்கள்...!!
🔴 அதை ஆராய்ந்து அறிந்து அகற்றுவதன் மூலம் உங்கள் மனதில் உள்ள பொறாமைக் குணத்தை அகற்ற முடியும். மற்றவர்கள் மீது பொறாமைக் குணம் தோன்றினால் அதை வெளிப்படுத்தாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்...!!
⚫ மனம் விட்டுப் பேசினாலே பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்து விடும். பொறாமைக் குணம் உங்கள் மனதில் தோன்றும் போதெல்லாம் உங்கள் தன்னம்பிக்கை திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்...!!!
⚫ மற்றவர்கள் போல நாமும் வாழ்வில் முன்னேற முடியும் என்ற எண்ணம் தோன்றும் போது யார் மீதும் நமக்கு பொறாமை ஏற்படாது. பொறாமையை விட்டொழிப்போம், பெருந்தன்மையோடு வாழ்ந்து காட்டுவோம்...!!!
- உடுமலை சு. தண்டபாணி✒️
🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 #உற்சாக பானம்# #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு
இருள் வரும் என்று யாரும் காத்திருப்பதில்லை
*"விடியலுக்காக"எல்லோருமே காத்திருக்கிறார்கள் ...*
#பொழுது போக்கு #உற்சாக பானம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்
ஒருவருக்கு புத்தி சொல்ல
*நீ புத்தனுமில்லை.*
உன் புத்திமதியைக் கேட்க *அவர்கள் பித்தனுமில்லை..!!*
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு #உற்சாக பானம்#
*ஒவ்வொருவருக்கும் மற்றவர்களின் குறைகள் பளிச்சென்று தெரிகிறது.*
ஆனால் அவர்களின் குறைகள்
அவர்களுக்கு மங்கலாகக் கூடத்
தெரிவதில்லை ...
#உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
*பல சமயம்* இசை
ஆறுதல் கூறினாலும்,
*சில சமயம்* வரிகள் கொல்கிறது...
#பொழுது போக்கு #உற்சாக பானம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்
*படித்தல் என்பது ஒரு சிறந்த*
வாழ்க்கையை வாழ்வதற்கான
அடிப்படைக் கருவியாகும்..
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #உற்சாக பானம்# #பொழுது போக்கு #👪 cute family members 👪
பார்த்த மாத்திரத்திலேயே அனைத்தையும் எடுத்து விடாதீர்கள்..
*அனைவற்றையும் ஆதாரத்துடன் எடுத்துக் கொள்ளுங்கள்..!!
#👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்#
பிழைத்திருக்க வேண்டுமென்ற வைராக்கியமிருந்தால்,
*தழைத்திருக்க வழி சொல்லும்*
*ஆழப் பாய்த்திடும் வேரும்...
#உற்சாக பானம்# #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு










