🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
ShareChat
click to see wallet page
@3454dsm
3454dsm
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
@3454dsm
புத்திசாலித்தனத்தை விட முட்டாள்தனமே சிறந்தது
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
கதை சொள்ளரோம் - ShareChat
00:14
#பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்#
பொழுது போக்கு - ShareChat
00:12
நல்லகண்ணு அவரது மனைவியை பற்றி கூறியது.* என் மனைவிக்கு உடல் சொகமில்லாம போச்சு. ஆஸ்பத்திரியில வெச்சி மருத்துவம் பாத்தோம். ஆனாலும் காப்பாத்த முடியல. மாசங்கள் உருண்டோடுனாலும் அவளோட இழப்பை என்னால ஜீரணிக்க முடியல. போராட்டம், பொதுக்கூட்டம்னு என் உடல் எங்கெங்கயோ அலஞ்சுட்டு இருந்தாலும், மனசு அவளை நினைச்சுட்டேதான் இருக்கு. அந்த வேதனையைச் சுமந்துட்டேதான் திரியுறேன். என்னை, என்னைவிட முழுசா புரிஞ்சிகிட்டவ என் மனைவி. என் வாழ்க்கையில எல்லா வகையிலும் அவளோட பங்களிப்பு இருந்துச்சு. அவ அப்பாவும் கம்யூனிஸ்ட் கட்சிகாரர்தான். அதனால என்னை ஏத்துக்கிறது அவளுக்கு சுலபமா இருந்திச்சி. டீச்சரா வேலை பாத்தா. காசி பாரதி, ஆண்டாள்னு எங்களோட ரெண்டு பொம்பளப் புள்ளைகள வளர்த்து படிக்க வெச்சது, ஆளாக்குனது அவங்களோட எல்லா தேவைகளையும் என்னை எதிர்பார்க்காம அவளே செஞ்சிருவா. அரசியல் வாழ்க்கை, போராட்டம், காசு பணம் சேர்க்கத் துடிக்காத மனசுனு என் போக்குக்கு என்னை விட்டவ என் மனைவி. கட்சி வேலைகள்ல திரிஞ்சிட்டு வீட்டுக்குப் போகும்போது, கூடடைஞ்ச திருப்தி கிடைக்குற விதமா அந்த வீட்டை எனக்கானதா வெச்சிருப்பா. இப்போ வீட்டுக்குப் போனா, அவ இல்லாத அந்த வெறுமையும் தனிமையும் ரொம்ப கொல்லுது. தாங்கவே முடியாம வருது. சுத்தி எத்தனையோ பேர் இருந்தாலும், எனக்குனு யாரும் இல்லைங்கிறதை உணரவெச்சிட்டே இருக்கு அவளோட பிரிவு. எந்த ராத்திரி வீட்டைக் விட்டுக் கிளம்புவேன், எந்த ராத்திரி வீடு திரும்புவேன்னு தெரியாத ஒரு வாழ்க்கை என்னோடது. உண்ணாவிரதம் இருக்கக் கெளம்புனாலும், ஜெயில்ல இருக்க வேண்டி வந்தாலும் ஒரு வார்த்தை வருத்தமாவோ, மறுப்பாவோ சொல்லாம அனுப்பிவைப்பா. என் புள்ளைங்க, 'அப்பா உங்களுக்கு வயசாயிருச்சு... அரசியல் வேலைகளையெல்லாம் கொஞ்சம் குறைச்சுக்கோங்கங்க'னு சொன்னப்போகூட, என் மனைவி அப்படி ஒருநாளும் எங்கிட்ட சொன்னதே கிடையாது. ஏன்னா, கட்சிப் பணிகள் இல்லாம என்னால இருக்க முடியாதுனு அவளுக்குத் தெரியும். ஆனா, 'நான் இல்லாமயும் உங்களால இருக்க முடியாது'ங்கிறதை இப்படிப் பிரிவுல உணர்த்திட்டுப் போயிட்டா. எங்க கிளம்பினாலும், 'போய் சேந்துட்டீங்களா?'னு ஒரு போன் பண்ணுவா. 'சாப்புட்டீங்களா?'னு கேட்பா. 'எங்க இருக்கீங்க?'னு ஒரு போன் வரும். இப்போ எதுவுமே இல்ல. கண்ண மூடுனா முழுக்க ரஞ்சிதம் நெனப்பாதான் இருக்கு. முன்னாடி நான் அசைவம் சாப்பிடுவேன். இப்ப அஞ்சு வருசமா சைவம்தான். அவ வைக்கிற மீன் குழம்புல சோத்தை ஒரு பிடி பிடிப்பேன். அவ வைக்கிற ரசம் ரொம்ப நல்லா இருக்கும். எனக்குப் பிடிக்கும்னு அடிக்கடி ரவா லட்டு செய்வா. 'என்னை நீ எதிர்பார்த்து இருக்கக் கூடாது, உனக்கு பசிச்சா சாப்பிடு'னு என் கல்யாணத்தை ஒட்டியே சொல்லிட்டேன். அதனால நாங்க சேர்ந்து சாப்பிடுவதே குறைவுதான். ஆனாலும் நான் சாப்பிடும்போது கூட உட்கார்ந்து பேசிட்டு இருப்பா. ஒரு சுவாரசியம் என்னனா நான் ஜெயில்ல இருந்து வந்த பிறகுதான் எங்களுக்கு கல்யாணமே நடந்திச்சி. புதுமணத் தம்பதியா நாங்க பேசிக்கிட்ட விஷயங்கள்லாம், என்னோட ஜெயில் அனுபவங்களாதான் இருந்துச்சு. நிறைய கல்யாணத்தை தலைமை தாங்கி நடத்திருக்கேன். அப்போவெல்லாம், 'மனைவியை அதிகாரமா மிரட்டக் கூடாது. அன்பா இருக்கணும், சமமா நடத்தணும்'னு சொல்லித்தான் ஆசிர்வதிப்பேன். என் வாழ்க்கையில ரஞ்சிதத்துக்கு அப்படி ஒரு சமத்துவத்தை நான் கொடுத்தாலும், அவ எனக்காக ரொம்ப விட்டுக்கொடுத்து போயிருக்கா. என்னைத் தேடி வர்றவங்களைப் பத்தி அவளுக்குத் தெரியும். என் மனசு நினைக்கிற மாதிரியே அவங்களை உபசரிப்பா. ரஞ்சிதம் நிறைய புத்தகங்க படிப்பா, பேப்பர் படிப்பா. ஜெயகாந்தன் சிறுகதைகள் பத்தி பேசுவா. நான் எதையாவது படிக்காம விட்டுட்டாலும், 'இதப் படிக்கலையா நீங்க?'னு கேட்பா. திடீர்னு எதாவது செய்தியைக் காட்டி, 'இதப் பாத்தியளா?'னு கேட்பா. 'இல்லையே...'னு சொன்னா, 'இதக்கூடப் பாக்காம என்ன படிக்கிய?'னு கேட்பா. இப்போவெல்லாம் பேப்பர், புத்தகம் படிக்கும்போது, 'எதையாச்சும் படிக்காம விட்டுட்டா அதை எடுத்துக்காட்ட அவ இல்லையே'னு ரஞ்சிதத்தோட நினைவுகள் நான் படிக்கிற ஒவ்வொரு எழுத்துலயும் பின்னிக்குது. நான் சம்பாதிச்சுது என்னனு எல்லாருக்கும் தெரியும். வெளியே போகும்போது செலவுக்கு அவகிட்டதான் காசு வாங்கிட்டுப் போவேன். கொஞ்சம் நிலம் இருந்து அதுல அரிசி வரும். மத்தபடி 'அது இல்ல இது இல்ல'னு எதுவும் எங்கிட்ட சொல்லாம, அவளே சமாளிச்சு குடும்பத்தக் கொண்டு போனா. என் பிறந்தநாளுக்கு துணிமணி எடுத்துக் கொடுப்பா. அவளுக்கு, நான் வீட்டுல இருந்தாலே பரிசுதான்னு சொல்லுவா. எப்பவாச்சும் டெல்லிக்குப் போனா அவளுக்கு சேலை எடுத்துட்டு வருவேன். ரொம்ப சந்தோசப்படுவா. வெளிய போயிட்டு நேரடியா வீட்டுக்கு வர்றதா இருந்தா எதாவது பண்டம் வாங்கிட்டு வந்து கொடுப்பேன். எங்க அப்பா, என் கூடப் பொறந்தவங்களுக்கு எல்லாம் அவங்கவங்க பேருல வீட்டை எழுதிவெச்சாரு. என் பங்கு வீட்டை மட்டும் என் மனைவி பேருலதான் எழுதி வெச்சிருக்காரு. பொது வாழ்க்கையில இருக்கேன், வீட்டையும் வித்து செலவு பண்ணிடுவேனோனு பயம் அவருக்கு என்கிறார் நல்லக்கண்ணு. சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு தொடர்ந்தார். ரஞ்சிதம் கிறிஸ்டியன். அதனால பைபிள் கதைகளை அடிக்கடி சொல்லுவா. எல்லார்கிட்டயும் அன்பா இருக்கணும், எல்லாரையும் சமமா நடத்தணும்னு சொல்லுவா. 'நான் செத்துப் போயிட்டேன்னா, நம்ம சொந்த ஊருலதான் அடக்கம் பண்ணனும்னு'னு சொன்னா. அவ ஆசைப்படியே செய்தேன். அவ இறக்குறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே, அவ இனி நாள்கணக்குலதான் என்கூட இருக்கப்போறானு தெரிஞ்சுபோச்சு. அந்த நாட்கள்ல ஆஸ்பத்திரியும் வீடுமாதான் இருந்தேன். அவ இறந்த அன்னைக்கு, என்னுல இருந்து பாதி உசுரு கழண்டுபோன மாதிரி இருந்துச்சு. இப்பக்கூட அப்படியேதான் இருக்கேன். வயசான காலத்துல, பொண்டாட்டி போனதுக்கு அப்புறம் புருஷன் இருக்குறது கொடுமையினு சொல்லுவாங்க. இப்பதான் எனக்கும் புரியுது இந்தப் பிரிவு எவ்வளவு துயரமானதுனு. என் மனசு அவளுக்குத் தெரியும்னாலும், 'எனக்கு எல்லாமே நீதான்'ங்கிறதை இருக்கும்போது அவகிட்ட எத்தனை தடவை வார்த்தையில சொல்லியிருக்கேன்னு தெரியல. வருசா வருசம் காதலர் தினக் கொண்டாட்டங்களை செய்தியாதான் பேப்பர்ல படிப்பேன். இந்த வருஷம் படிக்கும்போது, ரஞ்சிதம் முகம்தான் வந்துபோகுது. அவ நெனப்பை என்ன செய்ய?"" *அவரின் நினைவுகளை போற்றுவோம்.✍🏼🌹* #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம்
கதை சொள்ளரோம் - உயர்ந்த மனிதன் உயர்ந்த மனிதன் - ShareChat
இருந்தா பின்னணி முக்கியமில்லை… மனசு பெரியதா இருந்தா போதும்! ✨ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 491 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார் செய்யார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி மோனிஷா. லட்சியம்: அவரைப் பாராட்டிய கந்தசாமி அவர்களிடம், “நான் படித்து உங்களைப் போல மாவட்ட ஆட்சியர் ஆகப் போகிறேன்” என்று தன்னம்பிக்கையோடு சொன்ன அந்த ஒரு வரி… அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மரியாதை: அந்த வார்த்தை கேட்ட உடனே நெகிழ்ந்த ஆட்சியர், மாணவியை தனது சைரன் பொருத்திய அரசு காரில் தன் இருக்கையிலேயே அமர வைத்தார். அது ஒரு சாதாரண காட்சி இல்லை… ஒரு கனவுக்கு கொடுத்த மரியாதை. உத்வேகம்: தானோ வெளியே கைகளை கட்டி நின்று, “இந்த புகைப்படத்தை நீ பார்க்கும் போதெல்லாம் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற உத்வேகம் இருக்கும்” என்று சொல்லிய அந்த தருணம்… உண்மையிலேயே மனதை நெகிழ வைக்கும்! .: “நானும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன்” என்று சொல்லி, மாணவர்களுக்கு முன்னால் ஒரு உயிருடன் நின்ற முன்மாதிரி ஆக திகழ்ந்தார் கந்தசாமி அவர்கள். ❤️👏 ஒரு மாணவியின் கனவுக்கு ஒரு ஆட்சியர் கொடுத்த மரியாதை… இது தான் உண்மையான ஊக்கம்! 💯 இந்த மாதிரி செய்தி #உற்சாக பானம்# #பொழுது போக்கு #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்
உற்சாக பானம்# - வெளியேகை கட்டி நிற்பது கலெக்டர்நடந்தது இதுதான் Vip Ponnu வெளியேகை கட்டி நிற்பது கலெக்டர்நடந்தது இதுதான் Vip Ponnu - ShareChat
காலமானார் 😭 சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மூத்த தலைவருமான ஆர். நல்லகண்ணு (101) அவர்கள் காலமானார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த 15 நாட்களாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது. தமிழக அரசியலில் எளிமை, நேர்மை மற்றும் பொதுவுடமையின் அடையாளமாக திகழ்ந்த அவர், தனது வாழ்நாளை முழுமையாக மக்கள் நலனுக்கும் சமூக நீதிக்கும் அர்ப்பணித்தவர். அவரது மறைவு தமிழக அரசியலுக்கும், சமூக நீதி இயக்கங்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவருக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #பொழுது போக்கு
உற்சாக பானம் - ShareChat
உணவின் உளவியல் 🫡 பயத்தின் ஆற்றலா அல்லது பேரின்பமா? 😇 🗓️ நாம் அனைவரும் சரியாக உண்போம் தினம் (Let’s All Eat Right Day). உணவு என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; அது நம் மனநிலையையும், நம் விழிப்புணர்வையும் தீர்மானிக்கும் ஒரு ஆற்றல் என்கிறார் ஓஷோ. 🍲 பாவ்லோவ் செய்த அந்த ஆச்சரியமான ஆய்வை ஓஷோ இங்கே விளக்குகிறார்: “ரஷ்யாவில் பாவ்லோவ் என்ற ஒரு சிறந்த உளவியலாளர் இருந்தார். அவர் விலங்குகளை வைத்து சில சோதனைகளைச் செய்து ஓர் அற்புதமான முடிவுக்கு வந்தார். அவர் ஒரு பூனைக்கு உணவளித்து, அதன் வயிற்றில் என்ன நடக்கிறது என்பதை எக்ஸ்-ரே கருவி மூலம் கவனித்தார். 🩻 பூனை உணவை உண்டதும், அதன் வயிற்றில் செரிமான நீர் உடனடியாகச் சுரக்க ஆரம்பித்தது. 🐈 அதே சமயம், ஜன்னல் வழியாக ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. பயத்தினால் பூனையின் வயிற்றில் செரிமான நீர் சுரப்பது நின்றது. 🐕🧪 அதன் வயிறு சுருங்கியது. பிறகு நாய் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது, ஆனால் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு அந்த வயிறு அதே நிலையில்தான் இருந்தது.📉 உணவு செரிக்கும் செயல்முறை மீண்டும் தொடங்கவே இல்லை; ஆறு மணி நேரமாக உணவு செரிக்காமல் அப்படியே இருந்தது.” ⏳ — ஒஷோ ✨ ஒரு சாதாரண பயமே பூனையின் செரிமானத்தை நிறுத்தும்போது, வன்முறை கலந்த உணவுகள் நம்மை என்ன செய்யும்? 🤔 வன்முறை உணவை ஓஷோ இவ்வாறு வரையறுக்கிறார்: “அசைவ உணவை உண்பது மட்டுமல்ல வன்முறை; கோபத்துடன் உணவை உணவதூம் ஒருவித வன்முறை உணவே. இவை இரண்டுமே வன்முறை உணவுகள் தான். 😡 கோபத்திலும், கவலையிலும் உணவை உண்ணும்போது மனிதன் வன்முறையையே உட்கொள்கிறான். இன்னொரு உயிரின் மாமிசத்தை உண்ணும்போது அவன் எப்படி வன்முறையாளனாக இருக்கிறானோ, அதேபோல கோபத்தினால் தன் சொந்த தசைகளே உள்ளுக்குள் எரியும்போது அங்கும் வன்முறை இருக்கிறது. 🔥 அப்படிப்பட்ட நிலையில் அவன் உண்ணும் உணவு அஹிம்சையானதாக இருக்க முடியாது.” நாயின் குரைப்பிற்கே பூனையின் வயிறு சுருங்கிப் போனது என்றால்; பயத்திலும் வலியிலும் கொல்லப்பட்ட ஒரு உயிரினத்தின் ரசாயனம் நம் உடலில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும்? 🧪 🌱 தாவர உணவைநாம் தேர்ந்தெடுக்கும்போது, நாம் அமைதியான ஆற்றலைத் தேர்ந்தெடுக்கிறோம். வன்முறை இல்லாத உணவை (நனிசைவம்) உண்பது, நம் உடலை ஒரு தியான கூடமாக மாற்றும் முதல் படி. 🧘‍♂️ நம் வாழ்வை ஒரு பிரார்த்தனையாக மாற்றுவோம். விழிப்புணர்வை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்போம். ✨ OshO #பொழுது போக்கு #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்#
பொழுது போக்கு - மனிதன் ஒரு சிறிய புரிதல் இருந்தால்  ஒரு சிறிய புத்திசாலித்தனத்துடன்,  ஒரு சிறிய சிந்தனையுடன் வாழத் தொடங்கினால்,  சிறிதளவு திறந்தால் கூட, கண்களைச் தன் ணவுமுறைக்கு மாறுவது சரியான உ ஓஷோ  ஒன்றும் கடினமல்ல. மனிதன் ஒரு சிறிய புரிதல் இருந்தால்  ஒரு சிறிய புத்திசாலித்தனத்துடன்,  ஒரு சிறிய சிந்தனையுடன் வாழத் தொடங்கினால்,  சிறிதளவு திறந்தால் கூட, கண்களைச் தன் ணவுமுறைக்கு மாறுவது சரியான உ ஓஷோ  ஒன்றும் கடினமல்ல. - ShareChat
🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை* (26.02.2026) ...................................... *''பொறாமை குணம்...!"* ..................................... மனிதர்களின் நிம்மதிக்கு வேட்டு வைக்கும் குணங்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை. இந்தப் பொறாமைக் குணம் யாரையும் விட்டு வைப்பது இல்லை... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர் இடையேயும் இந்த பொறாமைக் குணம் இருப்பதைக் காணலாம்... குழந்தைகளிடம் தங்களை அறியாமல் பொறாமைக் குணம் இருக்கும். பெரியவர்களிடம் அவர்கள் அறிந்தே இந்தக் குணம் காணப்படும்... இந்தப் பொறாமை குணம், ஒருவரது வாழ்க்கையில் துன்பங்களையும், துயரங்களையும் தந்து விடக் கூடும். எனவே!, அறிந்தும் அறியாமலும் இந்த பொறாமைக் குணம் நம்மை அணுகாமல் இருக்க புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்... ஒரு ஊரிலே ஒரு பரம ஏழை அன்றாடம் ஒருவேளை உணவுக்கே அல்லல்பட்டுக் கொண்டு இருப்பவர். ஒருநாள் அந்தக் கிராமத்திற்கு ஒரு புத்த பிச்சு ஒருவர் வருகின்றார்... அவரைப் பார்ப்பதற்குச் சென்ற அந்த ஏழைக் குடியானவர், அந்த புத்த பிச்சுவை சந்தித்து தனக்கு செல்வங்கள் கிடைத்துத் தான் நன்றாக வாழ வேண்டும் என்று அவரிடம் வேண்டினான்... அவனது கோரிக்கைக்கு இரக்கப்பட்ட அந்தப் பிச்சு அவனைப் பார்த்து உனக்கு நான் சகல செல்வங்களும் கிடைத்து வளமான வாழ்க்கை வாழ்வதற்காக நீ கேட்பதைத் தருவேன். ஆனால்!, ஒரு நிபந்தனையோடு தான் தருவேன் எனக் கூறுகின்றார்.அந்த நிபந்தனை என்னவென்றால், '' நீ உன்னுடைய செழிப்பான வாழ்க்கைக்கு எவ்வளவு செல்வங்களை கேட்கின்றாயோ, அதேபோல இரண்டு மடங்கு உன்னுடைய எதிர்வீட்டுக்காரன் பெறுவான் என்ற நிபந்தனையைப் போடுகின்றர்... அதற்கு அந்தக் ஏழைக் குடியானவன் கலவரமடைந்து ஆலோசிப்பதைப் பார்த்த அந்த புத்த பிக்கு,'' நீ இன்று வீடு சென்று நன்றாக சிந்தித்து உனக்கு என்ன வேண்டும் என நாளை நீ என்னிடம் வந்து கூறு''.. ஆனால்!, நீ கேட்பதைப் போல இருமடங்கு உன் எதிர்வீட்டுக்காரனுக்கு கிடைக்கும் என்று கூறி அனுப்பி வைக்கின்றார்... அதேபோல அடுத்த நாளும் அந்த ஏழைக்குடியானவன் அந்த பிக்குவை பார்ப்பதற்கு வருகின்றான். அவர் அவனைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் எனத் தீர்மானித்து விட்டாயா...? எனக் கேட்கின்றார்... அதற்கு அந்த ஏழைக் குடியானவர்,'' எனது ஒரு கண்ணை எடுத்து விடுங்கள். நான் மகிழ்ச்சியுடன் இருப்பேன் ''என்று கூறுகின்றான். இதைத் தான் பொறாமையின் உச்சக்கட்டம் என்று கூற முடியும்... தனக்குக் கிடைப்பதைப் போல இருமடங்கு எதிர்வீட்டுக்காரனுக்கு கிடைக்கும் என்று அறியும் போது அவனுடைய பொறாமையின் உச்ச வெளிப்பாடக தனது ஒரு கண்ணை எடுத்து விடும்படி கேட்கின்றான்... *ஆம் நண்பர்களே...!* 🟡 இது ஒரு கற்பனைக் கதையாக இருந்தாலும் பொறாமையின் உச்சக்கட்டத்தை கூறி நிற்கின்றது. பொறாமை என்பது ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இன்றி சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பரந்து பட்டு இருக்கின்றது...! 🟡 மற்றவர்கள் போல நாமும் வாழ்வில் முன்னேற முடியும் என்ற எண்ணம் தோன்றும் போது, யார் மீதும் நமக்கு பொறாமை ஏற்படாது. பொறாமைக் குணம் யாரையும் விட்டு வைப்பது இல்லை. மனிதர்கள் பொறாமையை விட்டு ஆரோக்கியமான போட்டியுடன் செயற்பட்டால் நல்ல ஒரு நிலையை அடைய முடியும்...! 🔴 ஒருவரின் மீது பொறாமை தோன்றுகிறது என்றால் அது ஏன் வருகிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவர் மீது ஏற்பட்ட பயமா...? அல்லது கோபமா...? அல்லது அவர் போல முன்னேற முடியவில்லை, நடந்து கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கமா...? இதில் எதன் காரணமாக பொறாமைக் குணம் தோன்றியது என்பதைக் கண்டு பிடியுங்கள்...!! 🔴 அதை ஆராய்ந்து அறிந்து அகற்றுவதன் மூலம் உங்கள் மனதில் உள்ள பொறாமைக் குணத்தை அகற்ற முடியும். மற்றவர்கள் மீது பொறாமைக் குணம் தோன்றினால் அதை வெளிப்படுத்தாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்...!! ⚫ மனம் விட்டுப் பேசினாலே பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்து விடும். பொறாமைக் குணம் உங்கள் மனதில் தோன்றும் போதெல்லாம் உங்கள் தன்னம்பிக்கை திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்...!!! ⚫ மற்றவர்கள் போல நாமும் வாழ்வில் முன்னேற முடியும் என்ற எண்ணம் தோன்றும் போது யார் மீதும் நமக்கு பொறாமை ஏற்படாது. பொறாமையை விட்டொழிப்போம், பெருந்தன்மையோடு வாழ்ந்து காட்டுவோம்...!!! - உடுமலை சு. தண்டபாணி✒️ 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 #உற்சாக பானம்# #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு
உற்சாக பானம்# - பொறாமையை 0608, நீங்கள் வெளியிட்டால் 9|606ل மீண்டும் வட்டியும் முதலுமாக உங்களிடமே திரும்பி வரும் பொறாமையை 0608, நீங்கள் வெளியிட்டால் 9|606ل மீண்டும் வட்டியும் முதலுமாக உங்களிடமே திரும்பி வரும் - ShareChat
இருள் வரும் என்று யாரும் காத்திருப்பதில்லை *"விடியலுக்காக"எல்லோருமே காத்திருக்கிறார்கள் ...* #பொழுது போக்கு #உற்சாக பானம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்
பொழுது போக்கு - ShareChat
ஒருவருக்கு புத்தி சொல்ல *நீ புத்தனுமில்லை.* உன் புத்திமதியைக் கேட்க *அவர்கள் பித்தனுமில்லை..!!* #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு #உற்சாக பானம்#
கதை சொள்ளரோம் - ShareChat
*ஒவ்வொருவருக்கும் மற்றவர்களின் குறைகள் பளிச்சென்று தெரிகிறது.* ஆனால் அவர்களின் குறைகள் அவர்களுக்கு மங்கலாகக் கூடத் தெரிவதில்லை ... #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
உற்சாக பானம்# - 1 @ 0 1 @ 0 - ShareChat