நாள்: 26-01-2026
குடியரசு தினத்தை முன்னிட்டு சகாயநகர், மாதவலாயம் ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான ரூ. 25.57 இலட்சம் மதிப்பீட்டிலான குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் பக்கச்சுவர், காங்கீரிட் தளம் அமைக்கும் பணிகளை நிறைவேற்றித்தர கோரிக்கை வைத்தார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு (26-01-2026) சகாயநகர், மாதவலாயம் ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள், ஊராட்சி அலுவலங்கள் அருகே நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் மக்களின் அடிப்படை வசதிகள், தேவைகள், நிறைவேற்ற வேண்டிய பணிகள் மற்றும் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு இப்பகுதி மக்களுக்கு மனுவில் குறிப்பிட்டுள்ள மிக அவசியமான இப்பணிகளை நிறைவேற்றிட கேட்டுக் கொண்டார். அவர் தெரிவிக்கையில், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி, தோவாளை ஒன்றியம், சகாயநகர் ஊராட்சிப் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்கும் வகையில், ரூ.6.75 இலட்சம் மதிப்பீட்டில் திருமலைபுரத்தில் இருந்து தோப்பில் நகர் வரை பைப்லைன் நீட்டித்து குடிநீர் வழங்குதல் மற்றும் ரூ. 3.82 இலட்சத்தில் அனந்தபத்மநாபபுரம் பகுதி மக்களின் குடிநீர் வசதிக்காக, மாதவலாயம் - தாழக்குடி சாலையில் புளியவிளை பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார், மின் இணைப்பு மற்றும் பைப்லைன் நீட்டித்தல் போன்ற பணிகளை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார். இது தொடர்பான மனுவும் அளிக்கப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தோவாளை ஊராட்சி ஒன்றிய ஆணையர் கூறினார்.
இதைப்போன்று மாவதலாயம் ஊராட்சியில் ஊராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு தெரிவிக்கையில், மாதவலாயம் ஊராட்சி பகுதியில் செண்பை நகர் உள்ளது. இந்நகரின் அருகே தோவாளை சாணல் செல்கிறது. செண்பை நகர் பகுதியானது, சாணல் அருகே மிக தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. இதனால் சாணலில் தண்ணீர் செல்கின்ற போது அடிப்பகுதி வழியாக தண்ணீர் கசிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலை முழுவதும் தண்ணீர் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் இக்குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் நீர்கசிவு ஏற்பட்டு சேதமடைகின்ற நிலையும் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ரூ. 15 இலட்சம் மதிப்பீட்டில் தோவாளை சாணலில் செல்கின்ற தண்ணீர் செண்பை குடியிருப்பு பகுதிகளில் கசிவு ஏற்படாதவாறு பக்கச்சுவர் அமைத்திடவும், மேலும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் காங்கீரிட் தளம் அமைத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இது தொடர்பான மனுவும் அளிக்கப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சம்மந்தப்பட்ட அலுவலர் கூறினார்.
இக்கிராம சபைக் கூட்டங்களில் தோவாளை ஊராட்சி ஒன்றிய ஆணையர் தங்கராஜ், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார், மாவட்ட கழக துணைச் செயலாளர் சுகுமாரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வைகுண்டமணி, சகாயநகர் ஊராட்சி பொறுப்பாளர் தர்மர், மாதவலாயம் ஊராட்சி பொறுப்பாளர் ஷேக், கிராம நிர்வாக அலுவலர் திரவியம் பிள்ளை, அந்தந்த ஊராட்சி கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
டைம்ஸ் ஆப் கஜா டிவி
செய்தி விளம்பர தொடர்புக்கு 9659520537
#கஜா டிவி கன்னியாகுமாரி மாவட்ட முக்கிய செய்தி ##தோவளைடிஜிட்டல்மீடியாபிரஸ்கிளப்


