#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை - 989*
💥💥💥💥💥💥💥💥
பால்: பொருட்பால் அதிகாரம்: சான்றாண்மை
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்.
*பொருள் :*
சால்பாகிய கடலுக்கு கரையானவர், அழிவு காலம் உண்டானாலும் ஒழுக்கம் தவறார்.
*பழமொழி :*
Known is a drop unknown is an ocean
கற்றது கைமண் அளவு கல்லாதது கடலளவு
*பொன்மொழி :*
பெரிதாக யோசி, சிறிதாக தொடங்கு, ஒரே நாளில் உயர்ந்து விட முடியாது. ஆனால் நிச்சயம் உயரலாம்.
*பொது அறிவு :*
1. இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் எது?
விடை: வைரம்.
2. கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு எது?
விடை: கார்பன் டை ஆக்சைடு
*English words & meanings :*
Engineer - பொறியாளர்
Farmer - விவசாயி
*அறிவியல் களஞ்சியம்*
*சேவல் கூவுவது ஏன்*
அதிகாலை நேரத்தை குறிப்பிடும் விதமாக தான், சேவல் கூவுகிறது என்பது தவறானது.
சேவலின் உடலில் இயல்பாக இருக்கும் 'உயிர்க் கடிகாரம்' தான், புறச்சூழல் எப்படி இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் கூவச் செய்கிறது. அதற்கு பகல், இரவு என்ற நேரமில்லை.
இரவு முழுவதும் வெளிச்சத்தில் வைத்திருந்தாலும், அதற்குரிய நேரத்தில் அது கூவுகிறது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தன் எல்லையை குறிப்பிட, இனப்பெருக்கம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக சேவல் கூவுகிறது. சேவல் கூவும் ஒலி அளவு 100 -140 டெசிபல் இருக்கலாம் என ஆய்வு தெரிவிக்கிறது.
💥💥💥💥💥💥💥💥
By Covai women ICT_போதிமரம்


