செ.சாா்லஸ் செபஸ்டின்
ShareChat
click to see wallet page
@charlesrani2390
charlesrani2390
செ.சாா்லஸ் செபஸ்டின்
@charlesrani2390
♥அன்பு சகலத்தையும் வெவல்லும் ஆற்றல்உடையது♥
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை *தவறுகளை* *சரி செய்து விட்டீர்களா* புதிய எதிர்காலத்தை உருவாக்க உங்களால் நிச்சயமாக முடியும்.... ♥️⚡♥️⚡♥️⚡♥️⚡ ✍️✍️✍️✍️✍️✍️✍️
🤔புதிய சிந்தனைகள் - ShareChat
நிம்மதி என்பது போதுமென்ற மனம் இருந்தால் மட்டுமே சாத்தியம். *வரவுக்குள்ளே செலவும்* *வரம்பை மீறாத ஆசையும்,* #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் *மதியை மறைக்காத புகழும்,* தலைக்கனமில்லாத வெற்றியும், வஞ்சமில்லாத அன்பும் கள்ளமில்லாத நட்பும் *பொய்மையில்லாத வாய்மையும்* *அஞ்சி நடுங்காத ஆண்மையும்* *இன்முகம் கொண்ட பெண்மையும் நிம்மதியின் நேர்வழி.* எனவே இயல்பாக இருப்பதும், இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதுமே நிம்மதி. மத்தவங்க பொறாமை படுற அளவுக்கு வாழனும்னு அவசியம் இல்ல.பெத்தவங்க பெருமை படுற அளவுக்கு வாழ்ந்தாலே போதும் வெற்றி நிச்சயம். *இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.* கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள். *"விடியும் நாளைய பொழுதும் நமக்கு நன்மை பயக்கும்."* *இனிய இரவு வணக்கம்*
🚹உளவியல் சிந்தனை - ShareChat
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை சிந்தனை.*.( 25.04.2026) ......................................................... *"சொந்த உறவுகள் மேம்பட..’’* ........................................................ உறவுகள் குடும்பம் என்கிற மாளிகையைத் தாங்கிப் பிடிக்கிற தூண்கள். ஒவ்வொருவரையும் இணைக்கின்ற சங்கிலிப் பிணைப்புகள். சங்கிலியில் ஒரு கண்ணி அறுந்து போனாலும் அணிய முடியாது. அதுபோல குடும்ப வாழ்க்கையில் ஒரு உறவு பிரிந்தாலும் அது உன்னதமாக இருக்காது. உறவு முறைகள் என்போர் அன்பின் அடையாளங்கள். பாசத்தின் பிணைப்புகள். எல்லைகளைக் கடந்து எங்கோ இருக்கும் தன் மகனுக்கு உடல் நலம் இல்லாவிட்டால் தாய்க்கும் தந்தைக்கும் தடுமாற்றம் ஏற்படுகிறது. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதன் வெளிப்பாடு. வீட்டில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கிறார். சுற்றிலும் சுற்றங்கள் சூழ்ந்து இருக்க விழிகளைத் திறந்து பார்க்கும் அவருக்கு முகம் மலர்ச்சி,மகிழ்ச்சி, காரணம் இரத்த உறவுகள் சுற்றி இருக்கையில் இயல்பாகவே மனதில் ஏற்படும் பாதுகாப்பு உணர்வு தான். தாத்தா-பாட்டி, சித்தி- சித்தப்பா, அத்தை-மாமா, அண்ணன்-தம்பி, அக்காள்- தங்கை என்று இவர்களுக்கு மத்தியில் வளரும் குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் அதிகமாகக் கிடைக்கின்றது. அம்மா அடித்தால் பாட்டியிடம் ஓடுகிறது. அப்பா அடித்தால் தாத்தாவிடம் தஞ்சமடைகிறது. அரவணைக்கச் சுற்றிலும் உறவுகள் இருக்கும் போது குழந்தையின் மனதில் தன்னம்பிக்கை உணர்வுகள் தானாகவே துளிர் விடுகின்றன. சுற்றிலும் உறவுகள் கூடி இருக்கும் போது மன வலிமையும் கூடுகிறது. இதுதான் கூட்டுக் குடும்பத்தின் உன்னதம். உறவுகளின் உன்னதம். இன்றைய சூழலில் பரபரப்பாகும் பந்தய வாழ்க்கைச் சுழற்சியில் நாட்கள் நகர்கின்றன. வாரங்கள் விரைகின்றன. பழைய நண்பனின் முகம் பார்க்க முடியவில்லை. நேரம் இல்லை என்ற ஓர் ஒற்றை வார்த்தையில் சொல்லி விடுகிறோம். அர்த்தமில்லா விளையாட்டில் நேரத்தை விரயமாக்கி அயர்ந்து போகிறோம். என்ன காரணம்?வசதிகளும் வாய்ப்புகளும் பெருகப் பெருக தேடல்கள் எல்லையற்று நீண்டு கொண்டே போகின்றன. அதனால் சிந்தனைகளும் மாறுபடுகின்றன. வாழ்க்கைக்கான தேவைகள் என்ற நிலைமாறி தேவைகளுக்கான வாழ்க்கை என்ற நிலை உருவாகி வருகிறது. பிறரைப் பற்றிய சிந்தனையற்ற ஓட்டம் மனிதனைத் தொலைத்துக் கொண்டு இருக்கின்றது. சுயநலத் தேடல்களும் இயந்திர வாழ்க்கையின் வேகமும், ‘மனிதம்’ காணாமல் போய் விடும் அபாயத்தை உணர்த்துகின்றன. *ஆம்.,நண்பர்களே..,* உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடிகள் வைத்து இருந்தாலும் அனாதை தான் என்பதை மறந்து விடாதீர்கள். வயதான காலத்தில் நாதியற்றுப் போகவா பாடுபட்டு ஓடியோடி உழைக்கிறீர்கள். உறவுகளின் உன்னதத்தை உணருங்கள், உறவுமுறைகளை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். விடுமுறை நாளில் உறவினரோடு அவர்கள் வீடுகளுக்குச் சென்று உணவருந்தி, விளையாடி, ஓய்வெடுத்து கதைபேசி, களிப்பு அடையச் சொல்லுங்கள். (ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி...)💐💐💐💐💐💐*
🤔புதிய சிந்தனைகள் - ర్థి உறவுகளுக்கு எப்போதும் முதலிடம் கொடுங்கள் உறவுகளை நேசியுங்கள். உறவுகளுக்குள் மன வேறுபாடு ஏற்ப்பட்டால் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். ర్థి உறவுகளுக்கு எப்போதும் முதலிடம் கொடுங்கள் உறவுகளை நேசியுங்கள். உறவுகளுக்குள் மன வேறுபாடு ஏற்ப்பட்டால் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். - ShareChat
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை சிந்தனை🙏* 🌷25.04.2026🌷 தவறும் சரியாகத் தெரியும் அதை உணராத வரையில்... உணர்ந்தும் தன்னோட இருக்கும் அதைத் திருத்தாத வரையில்... சிலரின் கண்ணீர் கொண்டே இங்கே பலர் தாகம் தீர்க்கின்றனர். தொலைத்தப் பின்பு தேடாதீர்... மீண்டும் பழைய அன்பு கிடைக்காது... இருக்கும் பொழுது தொலைக்காதீர்... மீண்டும் தேடிப் பெற்றிட முடியாது நீங்கள் தொலைத்ததை அப்படியே... தன்னை மற்றவர் புகழ வேண்டும் என விரும்புவர்கள் பெரும்பாலும் அடுத்தவர்களைப் புகழ்வதில்லை. ஓர் உறவு ஆரம்பத்தில் கொடுக்கின்ற மரியாதையைக் கடைசி வரை தருமாயின், அதுவே மகத்தான உறவு... மன்னிக்கத் தெரிந்தவர்களை ஏமாற்றிக் கொண்டே இருப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் துரோகம்... முகத்தில் இருக்கும் காயத்தையும், உள்ளத்தில் இருக்கும் சோகத்தையும் காட்டாமல் இருப்பதில்லை கண்ணாடி... உண்மையான உறவுகள் உங்களிடம் நேசத்தையும் அன்பையும் தவிர.... வேறெதையும் எதிர்பார்ப்பதில்லை... செல்வந்தராக வாழ நம் அனைவருக்குமே ஆசை தான். ஆனால் எப்படி என்பது தான் மிக முக்கியக் கேள்வி... நம் கையில் உள்ள பணத்தை எப்படி செலவழிக்கிறோம் என்பதில் இருக்கிறது சூட்சுமம்... நம் செலவினம் எப்படி மேற்கொள்கிறோம் என்பதை சற்றுக் கூர்ந்து அலசிப் பார்ப்போமே. அவசிய செலவுகள் அனைத்துமே செய்து தான் ஆக வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒவ்வொரு செலவையுமே இது அவசியம் தானா என ஒரு நொடி யோசித்தப் பின் அதனை செய்தால் போதும். நம் செலவினங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடலாம்... கோடி கோடியாய் செலவழிக்க நமக்குத் தகுதி இருக்கலாம்... ஆனால் தேவையற்ற செலவுகளை செய்ய பழக்கப்பட்டு விட்டோமானால் அனைத்து செல்வமும் சில காலத்தில் காணாமல் போய் விடும் என்பதை உணர்ந்து நம் வரவு செலவு வழக்கங்களை ஒரு வரையறைக்குள் வைக்கப் பழகுவோம். இனிதாக வாழ்வோம். வாழ்த்துகள்... வாழ்க வளமுடன். 😊😊😊
🤔புதிய சிந்தனைகள் - சில நேரங்களில் நாம் மன்னிப்பு கேட்பது பண்ணிய தப்புக்காக அல்ல. நம் ஈகோவை விடஅந்த உறவு முக்கியம் என்பதால்தான்! WWWAppGLITS com சில நேரங்களில் நாம் மன்னிப்பு கேட்பது பண்ணிய தப்புக்காக அல்ல. நம் ஈகோவை விடஅந்த உறவு முக்கியம் என்பதால்தான்! WWWAppGLITS com - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் பற்றி பிறருக்குத் தெரியுமா? தெரியாதா? தன்னைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்கள்? என்பதைப் பற்றிக் கவலைப்படாதவன். தன்னை தனக்கு மட்டும் பிடித்தால் போதுமென்று, போலியாக இல்லாமல், உண்மையாக வாழ்பவன்... அடுத்தவர்களை திருப்திபடுத்த நினைக்காதவன்.. முதுகுக்குப் பின்னால் பேசுபவர்களைப் பற்றி கவலைப்படாதவன்.. பொய்களைப் பேசாமல் , மற்றவர்களை ஏமாற்றாமல், தீயசெயல்களை செய்யாமல் இருப்பவன்.. எல்லோரிடமும் பாரபட்சமின்றி, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி.. விருப்பு வெறுப்பின்றி, எல்லோரிடமும் அன்பு கருணை கொண்டவன்.. அடுத்தவர்களுக்குப் பிடிக்கவில்லை, என்பதற்காக தன் சுயத்தை இழக்காதவன்.. அடுத்தவர்களுக்கு பயப்படாமல், படைத்தவனுக்கு மட்டுமே பயந்து வாழ்பவன்.. போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் கலங்காதவன்.. அற்ப விஷயங்களில் மயங்காதவன்.. எண்ணம் சொல் செயல் மூன்றாலும்,அன்பு கருணை நேர்மையுடன்,மகிழ்ச்சியான மனதை உடையவன்.. அவன் தான், தன்னை உணர்ந்து கடவுளை உணர்ந்து ஆனந்தமாக வாழ்கிறான்.. உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள் சொல்லும் சொல் உயிர் பெற்று விடும். அது உண்மையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும். சந்தோஷம் எப்பொழுதும் நம்மை சார்ந்ததாக இருக்க வேண்டும். மாறாக, பிறரைச் சார்ந்து இருக்கும் போது தான் நாம் அவர்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவோ அடிமையாகவோ இருக்க வேண்டி வரும். துன்பம் யாரையும் துரத்துவது இல்லை. துன்பத்தை நாம் தான் ஏற்படுத்திக் கொள்கின்றோம். வாழ்வில் மகிழ்ச்சிக்காக எதையும் தேடிப் போகணும்னு அவசியமே இல்லை. தேவையற்றதை விலக்கி வைத்தாலே போதுமானது. அடைந்ததெல்லாம் வெற்றியும் இல்லை, இழந்ததெல்லாம் தோல்வியும் இல்லை. நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருந்தால் இழந்த எல்லாம் காலடி தேடி வரும். நல்எண்ணங்களுடன் இனிதே ஆரம்பமாகட்டும் இந்த நாள். நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் 😊😊😊
🚹உளவியல் சிந்தனை - மசந்தோஷம் மற்றும் துக்கம் இவை இரண்டும் கலந்த நினைவுகளோடும் கூடியது வாழ்க்கை . தான் பதேடியும் தேடாமலுமாய்" நம்முடன் பயணிப்பவைகள் !! மசந்தோஷம் மற்றும் துக்கம் இவை இரண்டும் கலந்த நினைவுகளோடும் கூடியது வாழ்க்கை . தான் பதேடியும் தேடாமலுமாய்" நம்முடன் பயணிப்பவைகள் !! - ShareChat
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை எண்ணம் எது? அதை எப்படிக் கண்டுபிடிப்பது? அதே போல எதிர்மறை எண்ணம் வருகிறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? மிக எளிய வழி ஒன்று உள்ளது. எண்ணத்தைக் கண்காணிப்பதை விட உணர்ச்சியைக் கண்காணிப்பது சுலபம். நேர்மறை உணர்வுகள் நேர்மறை எண்ணங்களின் விளைவு. எதிர்மறை உணர்வுகள் எதிர்மறை எண்ணங்களின் விளைவு. பதற்றமும் உற்சாகமும் மேடைப் பேச்சுக்குத் தயார் செய்கிறார் ஓர் இளைஞர். அவர் மனம் படபடப்பாக இருக்கிறது. “என்னால் மேடையில் பேச முடியுமா? சொதப்பினா கேவலமாயிடும்” என்ற எண்ணம் பின்னணியில் படபடப்பை இயக்குகிறது. அதே மேடைப் பேச்சுக்கு இன்னோர் இளைஞரும் தயார் செய்கிறார். அவர் மனம் உற்சாகமாக இருக்கிறது. “கடைசியில் அந்த ஜோக்கைச் சொல்லி ஒரு பெரிய அப்ளாஸ் வாங்கணும்” என்று எண்ணுகிறார். அந்த எண்ணம் அவருக்கு உற்சாகம் தருகிறது. “ஏற்கெனவே ஒரு தோல்வியை அடைந்திருந்தால் எதிர்மறை எண்ணம் தானே வரும்? நிறைய ஜெயித்தால் நேர்மறை எண்ணம் தானாக வரும்” என்று நீங்கள் வாதிடலாம். அப்படியானால் எண்ணங்களும் உணர்வுகளும் நம் செயல்களின் விளைவுகளா? இது பாதி நிஜம். எண்ணம் - உணர்வு - செயல் எண்ணம் - உணர்வு - செயல் மூன்றும் ஒன்றை ஒன்று பாதிக்கக் கூடியவை. “என்னால் முடியாது” என்ற எண்ணம் பதற்றம் என்ற உணர்வைக் கொடுக்கிறது. பதற்றம் என்ற உணர்வு வாய் குழறுதல் என்ற செயலை நிகழ்த்துகிறது. அதே போல வாய் குழறும் போது பதற்றம் வரும். பதற்றம் வந்தால் ‘நம்மால் முடியாது’ என்ற எண்ணம் வருகிறது. இதே போல நேர்மறையாகவும் நடக்கலாம். “என்னால் முடியும்” என்ற எண்ணம் நிதானம் என்ற உணர்வைக் கொடுக்கிறது. நிதானம் கணீரென்ற குரலில் பேச வைக்கும். அதே போலக் கணீரென்று பேசும் போது நிதானம் வரும். நிதானம் நம்மால் முடியும் என்ற எண்ணத்தைக் கொடுக்கும். இந்த எண்ணம் - உணர்வு - செயல் என ஒரு வளையம் போலச் சுற்றிச் சுற்றி வருவது தான் நம் வாழ்க்கையில் அனைத்தையும் நிகழ்த்துகிறது. உங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் இந்த மூன்று விஷயங்களையும் அலசுங்கள். எது அதிகம் பாதித்தது என்று யோசியுங்கள். பெரும்பாலும் எண்ணம் தான் பிரதானக் காரணமாக இருக்கும். எண்ணத்தின் உருவாக்கமே உலகில் உருவாக்கப்பட்டுள்ள ஒவ்வொன்றும் முதலில் யாரோ ஒருவர் தன் உள்ளத்தில் உருவாக்கியதே. நாடுகள், எல்லைகள், கட்சிகள், கட்டிடங்கள், கொள்கைகள், பதவிகள், சாதிகள், குற்றங்கள் என அனைத்தும் யார் எண்ணத்திலோ தோன்றியவை தான். நம் செயல்கள் அனைத்துக்கும் நம் எண்ணங்கள் தான் காரணம் என்று ஒப்புக்கொள்வதில் நம்மில் பலருக்குச் சிக்கல் இருக்கிறது. நம் முடிவுகளும் செயல்களும் தானே வாழ்க்கை? அப்படியானால் நம் வாழ்க்கையைப் பெரிதும் நிர்ணயிப்பது நம் எண்ணங்கள் தானே? “என் வாழ்க்கை இப்படி இருக்க என் எண்ணங்கள் தான் காரணமா?” என்று நம்ப முடியாமல் கேட்பவர்களுக்கு என் பதில்....ஆம். எண்ணம் போலத் தான் எல்லாம் நடக்கும் என்று பெரியவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையே. அப்படி என்றால் தோல்வி அடைபவர்கள் தோல்வி வேண்டும் என்றா எண்ணுகிறார்கள்? அவர்கள் தோல்வி வேண்டும் என்று எண்ணுவதில்லை. ஆனால் தோற்கக் கூடாது என்ற எண்ணத்தில் தோல்வியின் விளைவுகள் பற்றி அதிகம் யோசித்திருப்பார்கள். வெற்றி பற்றி யோசிப்பதை விடத் தோல்வி அடையக் கூடாது என்று அதிகம் யோசித்திருப்பார்கள். நம் மனம் எந்த மன நிலையில் இருக்கிறதோ அதற்கேற்ற நிகழ்வுகள் தான் நம்மைத் தொடரும். 😊😊😊
🤔புதிய சிந்தனைகள் - கரையில் நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவனால கடலை கடக்கவே முடியாது இரவீந்திரநாத் தாகூர் கரையில் நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவனால கடலை கடக்கவே முடியாது இரவீந்திரநாத் தாகூர் - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் நிறைவான வாழ்க்கை..!! நமக்குத் தேவையானவற்றை அடைய அலையாய் அலைகிறோம்.. கடுமையாக உழைக்கின்றோம்.. அங்கே,இங்கே என்று ஓடுகின்றோம்.. ஆனால் நம்மிடம் இருப்பதை எல்லாம் அனுபவிக்க மறந்து போகின்றோம். இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்க முயலுகின்றோம்.. நம் உழைப்பின் பயனையே அனுபவிக்காமல் விட்டு விடுகின்றோம்... இயற்கை ஏராளமான வாய்ப்புகளை நமக்குத் தந்து உள்ளது.. நாம் தான் அவைகளைக் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றோம். நமக்கு வருங்காலம் பற்றிய கவலை தேவை தான்.. உழைப்பும், முயற்சியும் தேவை தான்.. அதைவிட நம்மிடம் என்ன இருக்கின்றதோ, அதை வைத்து மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும்,. கடலில் ஒரு முறையாவது நீண்ட பயனம் மேற்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒருவர், தான் நெடுநாள் உழைத்து,சேமித்த பணத்தைக் கொண்டு கடல் பயணத்துக்கான டிக்கெட் ஒன்றை வாங்கினார்.. பத்து நாட்கள் உணவுக்கு என்ன செய்வது என்கிற கவலை அவருக்கு வந்தது..ஆகவே நிறைய ரொட்டிகளை வாங்கினார்.. மற்றவர்கள் எல்லாம் கப்பலில் உள்ள உணவகம் சென்று உண்டு மகிழ்ந்தார்கள்.. ஆனால் இவர் மட்டும் கப்பலின் மேல்தளத்திற்குச் சென்று இயற்கையை ரசித்தபடியே ரொட்டி சாப்பிட்டார். நாட்கள் நகர்ந்தன. ரொட்டிகளும் காய்ந்து கொண்டே இருந்தது.. கடைசி நாள் இவரிடம் நெருங்கிப் பழகிய ஒருவர் இவரிடம்,'' ஏன் நீங்கள் உணவகத்திற்கே வருவது இல்லை? என்று கேட்டார்.. இவர் தன் நிலைமையை சொன்னார். அதைக் கேட்ட நண்பர் சில நிமிடங்கள் வாய் விட்டுச் சிரித்தார்.. பின்பு சொன்னார். நண்பரே, உங்கள் பயணச்சீட்டை நன்றாகப் பாருங்கள்.. நீங்கள் சம்பாதித்துக் கொடுத்த பணம், பத்து நாள் உணவுக்கும் சேர்த்துத் தான் என்பது தெரியவில்லையா? உங்களுக்கு என்றார்.. வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்... உங்களிடம் இருப்பதைக் கொண்டு சிறப்பாகவும்,மன நிறைவுடன் வாழ்வதற்கு பழகிக் கொள்வோம்...!!! 😊😊😊
🚹உளவியல் சிந்தனை - போராடும் மனிதர்களிடத்தில் தோல்வியும் ஒருநாள் தோற்றுப்போகும் போராடும் மனிதர்களிடத்தில் தோல்வியும் ஒருநாள் தோற்றுப்போகும் - ShareChat
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை போதிக்கும் தடம் மாறாத அறவாழ்வு : நான் தனியாக இருந்தாலும் தன்னம்பிக்கை தளர்ந்து போவதில்லை.. நான் குனிந்தேன், வளைந்தேன் ஆனால் உடைந்து போகவில்லை. நான் திடமானவன், சுயமாக சிந்திப்பவன்.. நான் தினமும் மெதுவாக வளர்ந்து கொண்டே முன்னேறிச் செல்கிறேன். இது எனது ஆற்றல் உள்ள வரை தடையின்றி நடக்கிறது.. நான் உயரமாக வளர்ந்தாலும், நான் என்றும் வேர் இருக்கும் இடத்தை விட்டுப் போவதில்லை.. பழையனவற்றை மறப்பதில்லை.. எங்களில் பல வண்ணப் பூக்கள், காய்கனிகள் என்று பல வகைகள் இருந்தாலும், நாங்கள் இனம்,மதம், சாதி, பொறாமை என்று பார்ப்பதில்லை.. இம்மண்ணின் மைந்தர்கள் யாவரும் சமமே... எவரும் யாருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லையே !!! என் தண்டு, கிளைகள், இலைகளின்றி பட்ட மரமானாலும், எனது நேரம் வரை கார்த்திருந்து துளிர் விட்டு பூத்துக் குலுங்குவேன்.. வாழ்க்கையில் உன்னைத் தனியாகத் தவிக்கவிட்டு யார் போனாலும், உன் மேல் நம்பிக்கை வைத்து உன் நேரம் வரும் வரை பொறுத்திருந்து வெற்றியைக் காட்டி விடு..பிறரை நாடாதே!!! புயல்,மழை,இடி மற்றும் வறட்சிக் காலங்களைத் தாண்டியும் என்னால் வாழ முடிகிறது.. மனிதர்களே உங்களால் எதையும் சாதிக்க முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.. நான் தனியாக அல்லது கூட்டமாக இருந்தாலும், என்னை நானே பல்வேறு தட்பவெப்ப நிலைக்கேட்ப, மாற்றிக் கொள்கிறேன், மீளுருவாக்கம் செய்து என்னையே நான் குணப்படுத்திக் கொள்கிறேன்.என் உடலை நன்கு அறிந்து கொண்டுள்ளேன். மருத்துவர் வருவார் என்று யாரையும் எதிர்பார்ப்பதில்லை... சூறாவளி வந்தாலும் அதையும் எதிர்கொண்டு என்னுடைய வேர் மேலும் ஆழத்திற்குச் சென்று என்னைப் பலப்படுத்திக் கொள்கிறது.. என் இலைகளை நீங்கள் பார்த்தால் உனது கண்ணில் மலர்ச்சியும், மனது பாரமின்றி புது உத்வேகத்தையும் பெரும்.. என்னிடம் பேசிப் பார், இல்லையேல் நான் கூறுவதைக் கேட்டுப் பார், உன் பிரச்சினைகளுக்கு உடனே விடை கிடைக்கும். உன் சந்தோசத்தை காண நானும் இங்கு தான் இருக்கிறேன் என்பதை நினைவில் iகொள்.. அதனதன் நேரம் வரும் வரை காத்திருக்கவும்.. எனது உயிரிழந்த இலைகளை நானே இலையுதிர் காலம் வரும் முன்பே கீழே தள்ளி விடுகிறேன்.. அது போல் உன் தேவைக்குப் பிறகு உன்னுடன் கடைசி வரை அனைத்தும் உன்னுடன் இருக்கணும் என்று எண்ணி உன்னையே நீ பலவீனப்படுத்திக் கொள்ளாதே.. உன் அறிவை விட்டு விட்டு, உன் இதயத்தைக் கொஞ்சம் கேட்டுப் பார், அது உனக்கு அமைதியை அடைகின்ற வழியைக் காட்டும்.. வெற்றி என்ற கலையில் மட்டும் தான் தோல்வி என்பது கட்டாயம் கற்றுக் கொடுக்கப்படுகிறது... என் வாழ்க்கையே போராட்டமானது. இருப்பினும் பூ, காய், கனியை சுற்றாருக்கு கொடுப்பதைத் தவறியதில்லை.. வாழ்வில் மிகச் சிறந்த மனிதர்களிடம் அமர்ந்து பேசுவதைக் காட்டிலும் வாழ்வில் மனம் உடைந்து தோற்றவர்களிடம் கூட நடந்து செல்வது மேலானது என்பேன். மூங்கில் கூட திடமாக இருந்தாலும் புயலில் வளைந்து ஆடி தன்னை உடையாதவாறு பார்த்துக் கொள்ளும்.. அதே போன்று நீயும் உன்னை அத்தகைய எதிர்வினையை நெருங்கும் போது கவனமாக, கோபப்படாமல் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டுகிறேன்.. வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து பிறகு வருத்தப்பட்டுக் கொண்டிருப்பது மேலும் இருக்கிற நேரத்தை வீணாக்குவதாகும்.. வாழ்வில் உயர வேண்டுமென்றால், சில நேரங்களில் நீங்கள் விருப்பப்பட்டு விழுவதால் தவறொன்றும் இல்லை.. என் இனத்தை அழித்துக் கொண்டே சென்றாலும், நாங்கள் என்னைத் தேடி வருபவர்களுக்கு நிழல் தந்து குளிர்விக்கிறோம். பறவைகளின் அரண்மனையே நான் தான்.. பிறரை வாழ வைத்துத் தான் பழக்கமே தவிர அழிப்பது அல்ல.. அந்த ஈன செயல் மரங்களின் அகராதியிலே கிடையாது.. நான் உயர்ந்து வளர வளர, என் கொடையின் பெருமையும் உயர்வதாகவே கருதுகிறோம்.. நான் எதையும் எனக்காக வைத்துக் கொள்வதில்லை, என் இலை வீழ்வது கூட எனது நேர்மையை பறைசாற்றும்... எழு மனிதா, உன் வாழ்க்கை அடுத்தவருக்கு எடுத்துக்காட்டாக மாற என் கண் முன்னே வாழ்ந்து காட்டு பார்ப்போம்.. நீ பட்டாம்பூச்சியை நோக்கிப் பின் செல்லாதே!!! ஒரு தோட்டத்தை உருவாக்கி அதில் எண்ணற்ற பட்டாம்பூச்சிகளை வர வைத்து, அதனுடன் மகிழ்ந்து வாழப் பழகிக் கொள்வாயாக!!! 😊😊😊
🤔புதிய சிந்தனைகள் - உலகத்தின் பார்வையை நம்மால் மாற்ற முடியாது. பார்வையிலும் நம் பாதையிலும் நாம் தெளிவாக @ిULGuITuD உலகத்தின் பார்வையை நம்மால் மாற்ற முடியாது. பார்வையிலும் நம் பாதையிலும் நாம் தெளிவாக @ిULGuITuD - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் அன்பர்களின் கேள்விகளும் அருள்தந்தையின் பதில்களும் கேள்வி: ஐயா! மாணவர்களுக்கு நீங்கள் சொல்லக் கூடிய அறிவுரை என்ன? பதில்: மாணவர்கள் தங்கள் கவனம் முழுவதையும் படிப்பிலேயே செலுத்த வேண்டும். வேறு விஷயங்களில் சிதறவிடக் கூடாது. மாணவப் பருவம்தான் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், குணத்தை வகுத்துக் கொள்வதற்கும் உரிய பருவம். இந்த வகையில் நமது மனவளக்கலை அவர்களுக்குப் பேருதவியாய் இருக்கும். வாழ்க வளமுடன்! அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி (நாளையும் தொடரும்) 🌹🌹🌹
🚹உளவியல் சிந்தனை - ShareChat
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை மலர்கள்: ஏப்ரல் 25 தெய்வீகத் திருநிதி பிறப்புக்கும், வாழ்வுக்கும், இறப்புக்கும் இயக்க நிலையமாக உள்ளது கருமையம். காந்தச் சுழலின் மைய ஈர்ப்பு, உயிரியக்கமான சூக்கும உடலின் இயக்க மையம், விந்து நாதக் குழம்பின் இருப்பு மையம், மூன்றும் ஒன்றுகூடிய வியக்கத்தக்க ஒர் உயிரின மறைபொருள் புதையல் தான் எந்த உயிரினத்திற்கும் மையப் பகுதியில் அமைந்துள்ள கருமையம். இந்தக் கருமையம் தான் (Soul) ஆன்மா, சீவன், அகம், உள்ளம், உயிரினக் கருவூலம், நெஞ்சம் என்ற சொற்களால் வழங்கப் பெறுகின்றது. கருமையத்தில் அடங்கியுள்ள ஆற்றலையும் அதன் மதிப்பையும் எவராலும் மொழியைக் கொண்டு உணர்த்தி விட முடியாது. உதாரணம் மனிதனுடைய கருமையத்தில், இறை நிலையின் பரிணாமம், இயல்பூக்கம் எனும் முறையான நிகழ்ச்சிகளால் இறைநிலையிலிருந்து தொடங்கி இன்றுவரையில் நிகழ்ந்த அத்தனையும் தன்மை வாய்ந்த காந்த அலைத் திவலைகளாகச் சுருங்கி அமைந்துள்ளன. தக்க காலத்தில் தேவையாலும், மன இயக்க நிலையாலும், சூழ்நிலைகளாலும் கருமையத்தில் சுருங்கியிருக்கும் அனைத்தும் ஒவ்வொன்றாக எண்ணங்களாகவும், செயல்களாகவும், உருவங்களாகவும் வெளிப்படும். இத்தகைய பேராற்றல் அமைந்த தெய்வீகத் திருவிளையாட்டின் சூட்சும அரங்கமே கருமையம் ஆகும். இத்தகைய கருமையத்தில், காலம், தூரம், பருமன், இயக்கம் என்ற நான்கு கணங்களுக்கும் எட்டாத இறை நிலையிலிருந்து, இன்று நாம் காணும் விரிந்த பேரியக்க மண்டலத்தில் நிகழும் கோடானு கோடி இயக்கங்களையும் பிரதிபலிக்கும் காந்தக் கண்ணாடியாகவும் விளங்கும் தெய்வீகத் திருநிதியே கருமையம் ஆகும். - அருட்தந்தை வேதாத்திரி மகரிசி 🌹🌹🌹
🤔புதிய சிந்தனைகள் - ShareChat