#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை போதிக்கும் தடம் மாறாத அறவாழ்வு :
நான் தனியாக இருந்தாலும் தன்னம்பிக்கை தளர்ந்து போவதில்லை..
நான் குனிந்தேன், வளைந்தேன் ஆனால் உடைந்து போகவில்லை. நான் திடமானவன், சுயமாக சிந்திப்பவன்..
நான் தினமும் மெதுவாக வளர்ந்து கொண்டே முன்னேறிச் செல்கிறேன். இது எனது ஆற்றல் உள்ள வரை தடையின்றி நடக்கிறது..
நான் உயரமாக வளர்ந்தாலும், நான் என்றும் வேர் இருக்கும் இடத்தை விட்டுப் போவதில்லை.. பழையனவற்றை மறப்பதில்லை..
எங்களில் பல வண்ணப் பூக்கள், காய்கனிகள் என்று பல வகைகள் இருந்தாலும், நாங்கள் இனம்,மதம், சாதி, பொறாமை என்று பார்ப்பதில்லை.. இம்மண்ணின் மைந்தர்கள் யாவரும் சமமே... எவரும் யாருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லையே !!!
என் தண்டு, கிளைகள், இலைகளின்றி பட்ட மரமானாலும், எனது நேரம் வரை கார்த்திருந்து துளிர் விட்டு பூத்துக் குலுங்குவேன்.. வாழ்க்கையில் உன்னைத் தனியாகத் தவிக்கவிட்டு யார் போனாலும், உன் மேல் நம்பிக்கை வைத்து உன் நேரம் வரும் வரை பொறுத்திருந்து வெற்றியைக் காட்டி விடு..பிறரை நாடாதே!!!
புயல்,மழை,இடி மற்றும் வறட்சிக் காலங்களைத் தாண்டியும் என்னால் வாழ முடிகிறது.. மனிதர்களே உங்களால் எதையும் சாதிக்க முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு..
நான் தனியாக அல்லது கூட்டமாக இருந்தாலும், என்னை நானே பல்வேறு தட்பவெப்ப நிலைக்கேட்ப, மாற்றிக் கொள்கிறேன், மீளுருவாக்கம் செய்து என்னையே நான் குணப்படுத்திக் கொள்கிறேன்.என் உடலை நன்கு அறிந்து கொண்டுள்ளேன். மருத்துவர் வருவார் என்று யாரையும் எதிர்பார்ப்பதில்லை...
சூறாவளி வந்தாலும் அதையும் எதிர்கொண்டு என்னுடைய வேர் மேலும் ஆழத்திற்குச் சென்று என்னைப் பலப்படுத்திக் கொள்கிறது..
என் இலைகளை நீங்கள் பார்த்தால் உனது கண்ணில் மலர்ச்சியும், மனது பாரமின்றி புது உத்வேகத்தையும் பெரும்.. என்னிடம் பேசிப் பார், இல்லையேல் நான் கூறுவதைக் கேட்டுப் பார், உன் பிரச்சினைகளுக்கு உடனே விடை கிடைக்கும்.
உன் சந்தோசத்தை காண நானும் இங்கு தான் இருக்கிறேன் என்பதை நினைவில் iகொள்..
அதனதன் நேரம் வரும் வரை காத்திருக்கவும்.. எனது உயிரிழந்த இலைகளை நானே இலையுதிர் காலம் வரும் முன்பே கீழே தள்ளி விடுகிறேன்.. அது போல் உன் தேவைக்குப் பிறகு உன்னுடன் கடைசி வரை அனைத்தும் உன்னுடன் இருக்கணும் என்று எண்ணி உன்னையே நீ பலவீனப்படுத்திக் கொள்ளாதே..
உன் அறிவை விட்டு விட்டு, உன் இதயத்தைக் கொஞ்சம் கேட்டுப் பார்,
அது உனக்கு அமைதியை அடைகின்ற வழியைக் காட்டும்..
வெற்றி என்ற கலையில் மட்டும் தான் தோல்வி என்பது கட்டாயம் கற்றுக் கொடுக்கப்படுகிறது...
என் வாழ்க்கையே போராட்டமானது. இருப்பினும் பூ, காய், கனியை சுற்றாருக்கு கொடுப்பதைத் தவறியதில்லை..
வாழ்வில் மிகச் சிறந்த மனிதர்களிடம் அமர்ந்து பேசுவதைக் காட்டிலும் வாழ்வில் மனம் உடைந்து தோற்றவர்களிடம் கூட நடந்து செல்வது மேலானது என்பேன். மூங்கில் கூட திடமாக இருந்தாலும் புயலில் வளைந்து ஆடி தன்னை உடையாதவாறு பார்த்துக் கொள்ளும்.. அதே போன்று நீயும் உன்னை அத்தகைய எதிர்வினையை நெருங்கும் போது கவனமாக, கோபப்படாமல் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டுகிறேன்..
வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து பிறகு வருத்தப்பட்டுக் கொண்டிருப்பது மேலும் இருக்கிற நேரத்தை வீணாக்குவதாகும்..
வாழ்வில் உயர வேண்டுமென்றால், சில நேரங்களில் நீங்கள் விருப்பப்பட்டு விழுவதால் தவறொன்றும் இல்லை..
என் இனத்தை அழித்துக் கொண்டே சென்றாலும், நாங்கள் என்னைத் தேடி வருபவர்களுக்கு நிழல் தந்து குளிர்விக்கிறோம். பறவைகளின் அரண்மனையே நான் தான்..
பிறரை வாழ வைத்துத் தான் பழக்கமே தவிர அழிப்பது அல்ல.. அந்த ஈன செயல் மரங்களின் அகராதியிலே கிடையாது..
நான் உயர்ந்து வளர வளர, என் கொடையின் பெருமையும் உயர்வதாகவே கருதுகிறோம்..
நான் எதையும் எனக்காக வைத்துக் கொள்வதில்லை, என் இலை வீழ்வது கூட எனது நேர்மையை பறைசாற்றும்...
எழு மனிதா, உன் வாழ்க்கை அடுத்தவருக்கு எடுத்துக்காட்டாக மாற என் கண் முன்னே வாழ்ந்து காட்டு பார்ப்போம்..
நீ பட்டாம்பூச்சியை நோக்கிப் பின் செல்லாதே!!! ஒரு தோட்டத்தை உருவாக்கி அதில் எண்ணற்ற பட்டாம்பூச்சிகளை வர வைத்து, அதனுடன் மகிழ்ந்து வாழப் பழகிக் கொள்வாயாக!!!
😊😊😊


