ShareChat
click to see wallet page
search
#பத்திஸ்டேட்ஸ் #ஸ்ரீ ராம நாமே*ஸ்ரீராமநவமி🙏🏼 கும்பகோணம் *அருள்மிகு ஸ்ரீ சீதா பிராட்டி லக்ஷமணர் சகித *ஸ்ரீ பட்டாபிஷேக ராமர்*🙏🏼🙏🏼 *அருள்மிகு ஶ்ரீ ராமசாமி ஆலயம். கும்பகோணத்திலிருந்து சுமார் 1-1/2 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது *கும்பகோணத்தில் காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயில், இந்தியாவின் முக்கிய ராமர் கோயில்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. *கருவறையில் ராமனும் சீதையும் ஒரே பீடத்தில் பட்டாபிஷேகக் கோலத்தில் எழுந்தருளியுள்ளனர். ராமன் பட்டாபிஷேகம் செய்து கொண்டு அமர்ந்த கோலத்தில் இருப்பதால் அருகில் இலக்குவன் கை கூப்பியபடி ராமனது வில்லையும் சேர்த்துப் பிடித்து இரண்டு வில்லாக வைத்திருக்கிறார்.*லட்சுமணனுக்கு அருகில் பரதன் குடைபிடித்து இருக்கின்றார். சீதைக்கு அருகில் சத்ருக்னன் சாமரம் வீசுகிறார். *ராமனின் காலடியில் பட்டாபிஷேகம் காணக் கிடைத்த மகிழ்ச்சியில் அனுமன் தம்பூரா வாசிக்கும் நிலையில் தன்னை மறந்து இருக்கின்றார். *இத்தகைய அழகு வாய்ந்த கருவறையில் பட்டாபிஷேகக் காட்சி தமிழகத்தில் எங்கும் காணக் கிடைக்காத அரிய காட்சியாகும். *அதே போல நான்கு சகோதரர்களும் (ராமர், லட்சுமணன், பரதன், சத்ருக்னன்), சீதை மற்றும் அனுமன் ஆகியோர் ஒரே கருவறையில் காட்சியளிக்கின்றனர், இதுவும் எந்தவொரு ராமர் கோவிலிலும் காணமுடியாத அரிதான ஒன்றாகும். *வரலாறு* *தஞ்சையில் ராஜராஜசோழன் பெருவுடையார் கோயிலைக் கட்டினான். கங்கை கொண்ட சோழபுரத்தில் மன்னனர் ராஜேந்திரன் கோயில் கட்டினான். விசித்திர சித்தன் என்னும் மன்னன் பிரும்மா, விஷ்ணு, சிவன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் கோயில் கட்டினான். அவ்வகையில் கி.பி. 1614 முதல் 1640 வரை தஞ்சையை ஆண்டு வந்த தஞ்சை நாயக்க மன்னர் வழியில் வந்த ரகுநாத நாயக்கன் அவனின் இஷ்ட தெய்வமான பட்டாபிஷேக ராமனுக்கு கல்லால் கோயில் ஒன்றை அமைத்தான். மன்னனே நேரில் நின்று செய்ய முடியாத திருப்பணி ஆதலால் அவரது மந்திரி கோவிந்த தீட்சிதரைக் கொண்டு செய்தான் *குடந்தைக்கு அருகில் அமைந்துள்ள தாராபுரம். அந்நூரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குளம் வெட்டும்போது ஓரிடத்தில் கடப்பாறை பட்டவுடன் பெரியதாக ஓர் ஒலி உண்டானது. அப்போது இடி இடித்தது, மழை பெய்தது. குளம் வெட்டும் பகுதியில் தண்ணீர் சேர்ந்து ஓரிடத்தின் வழியாகக் கரைந்து ஓடியது அவ்வாறு ஓடிய ஓரிடத்தில் ஒரு சிலை தெரிந்தது. அவ்விடத்தை மழை நின்ற பிறகு அகழ்ந்து பார்க்கையில் 6 கற்சிலைகள் அழகழகாக ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகக் கிடைத்தன. மன்னனுக்கு செய்தி போனது. மகிழ்ந்தான் மன்னன். ஓடோடி வந்தான். தன் இஷ்ட தெய்வம் தனக்குக் காட்சி தந்ததைக் கண்டு மகிழ்ந்து குடந்தையில் முக்கிய இடத்தினைத் தேர்வு செய்து தந்து கோயில் கட்டக் கூறினான். *மன்னன் உத்தரவின்படி கோவிந்த தீட்சிதரால் கோயில் கட்டும் பணி நடைபெற்றது. அழகிய கருவறை. அதன் மீது தஞ்சை பெருவுடையார் கோயிலைப் போன்ற விமானம், முன்புறம் மண்டபங்கள், அதோடு அழகிய வேலைப்பாடமைந்த சிற்பத் தூண்கள். அவற்றில் புராண வரலாற்றுச் சிறப்பம்சம் மிக்க கலைச்சிற்பங்கள். முன்புறம் எழிலான ராஜகோபுரத்துடன் கட்டுவிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. *நாயக்கர் காலக் கலைச் சிறப்பை விளக்கும் வகையில் ராமாயணம் முழுவதும் காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளது. *ராமாயண ஓவியங்கள், ஒரு சித்திரக்கதை போல, உள் சுவர்களில் வரிசையாக அமைந்துள்ளன *இது காட்சிவழி கதைசொல்லலுக்கு மிகவும் சிறந்தது *முன்புறம் அமைந்துள்ள மகாமண்டபம் ஒரு சிற்பக் கலைக்கூடம். *மகாமண்டபத்தில் ஸ்ரீநிவாசப பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அமர்ந்து இருந்தாலும் தென்புறத்தில் ராமகிருஷ்ணர் சன்னதியும் வடபுறத்தில் ஆழ்வார், ஆச்சாரியார்கள் சிற்பங்களும் உள்ளன. சுக்ரீவனுக்க பட்டாபிஷேகம் செய்தல், விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்தல் போன்ற அழகான சிற்பங்களுடன் ஒரு தூணில் திருக்கோயிலை எடுத்துக் கட்டிய ரகுநாத நாயக்கர் தன் மனைவியருடன் இருந்து காட்சி தருகிறார். *தசாவதாரங்கள், ரதி-மன்மதன் சிற்பங்கள் ஆகியன அழகாகக் கல்லிலே வடிக்கப்பட்டு உள்ளன. *தமிழகத்தில் சிறப்பாக பட்டாபிஷேக ராமனுக்கு என அமைந்த இத்திருக்கோயிலில் ஸ்ரீராமநவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரையில் அட்சய திருதியை அன்று கருடசேவை, கோகுலாஷ்டமி உறியடி, புறப்பாடு, ஆவனி புனர்பூசத்தில் திருக்கல்யாண உற்சவம், பவித்ரோத்சவம், தசரா உற்சவம் பத்து நாட்கள், திருக்கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி ஆகியவற்றோடு 10 நாட்கள் நடைபெறும் ஸ்ரீராமநவமி உற்சவம் 9ம் நாள் நவமியில் திருத்தேர் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு காட்சி தரும் பட்டாபிஷேக ராமரை தரிசனம் செய்தால் இழந்த பதவி, புகழ் திரும்பக் கிடைக்கும் என்பதும் நலன்கள் அனைத்தும் தவறாமல் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளதால் நாள்தோறும் கூட்டம் பெருகி வருகிறது. வரும் ஸ்ரீராம நவமிக்க தவறாமல் தரிசனம் செய்ய வேண்டிய திருக்கோயில்களுள் இதுவும் ஒன்று *ஸ்ரீராமர் காயத்ரி மந்திரம் " *ஓம் தசரதாய வித்மஹே சீதா வல்லபாய தீமஹி தந்நோ ராமஹ் ப்ரசோதயாத்"* விஷ்ணு சகஸ்ரநாமத்தில் ஸ்ரீராமர் துதி: "ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே! ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே!!" (ஸ்ரீ ராம ராம ராம...) ஜெய் ஸ்ரீராம்.
பத்திஸ்டேட்ஸ் - ShareChat