RamaswamyAnnamali
ShareChat
click to see wallet page
@swamy_6943
swamy_6943
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் *தோசையில் மறைந்திருக்கும்* ஆன்மிக அதிசயம்!* உங்களுக்குத் தெரியுமா?* தோசைக்குள் ஆன்மிகமா? உங்களுக்குத் தெரியுமா நாம் தினமும் சாப்பிடுகின்ற தோசை மாவுக்குப் பயன்படுத்துகின்ற பொருட்களில் நவகிரக குணங்கள் அடங்கியுள்ளன. தோசை சுட பயன்படும் அக்னி சூரியபகவான். மாவில் முக்கியபங்கான அரிசியில் சந்திர பகவானும் உளுந்தில் சாயா கிரகங்களான ராகுவும் கேதுவும் உள்ளனர். வெந்தயத்தில் புத்தியை சுத்திகரிக்கும் புதன் பகவானும், தோசைக்கல் இரும்பில் சனி பகவானும், தோசையின் நிறத்தில் செவ்வாய் பகவானும் உள்ளனர். தோசையை சாப்பிடும் ஆண்களில் குரு பகவானும், பெண்களில் சுக்ர பகவானும் உள்ளனர். தோசையின் வட்ட வடிவு இந்த பிரபஞ்சத்தையே குறிக்கிறது. தோசையை முன்பக்கம் பின்பக்கம் வேக வைப்பது, அதாவது கடிகார வடிவில் சுற்றுவது இந்த உலகம் சுற்றுவதை குறிக்கிறது. ஆரம்ப காலங்களில் விசேஷ நாட்களில் தோசையை தெய்வத்திற்கு படைத்து வழிபட்டார்கள். இப்பொழுதும் மதுரை கள்ளழகர் கோவிலில் பெருமாளுக்கு தோசையை படைத்து பிரசாதமாக வழங்குகிறார்கள். காஞ்சிபுரம் வரதராஜபெருமாளுக்கு தோசை மாவில் மிளகு சீரகம் சேர்த்து படைக்கிறார்கள் பாடலாத்ரி நரசிம்மர் கோவிலில் பெருமாளுக்கு மிளகு தோசையை பித்தளை பானைகளில் வைத்து படைக்கிறார்கள். சீரங்கம் கோவிலில் பச்சரிசி, கருப்பு உளுந்து, மிளகு, சீரகம் சேர்த்து, தோசை நெய்யில் வார்க்கப்பட்டு பெருமாளுக்கு படைக்கப்படுகிறது; இதை சாம்பார் தோசை என்று கூறுகிறார்கள்.🌹
ஆன்மீக - Budha Sukra Chandra Angaraka Guru Surya Rethu snani R Budha Sukra Chandra Angaraka Guru Surya Rethu snani R - ShareChat
#ஆன்மீகத் தகவல்🙏🙏 #தெரிந்து கொள்வோம் முஸ்லிம் மக்கள் பிள்ளையாரை நம்புகிறார்கள்*
ஆன்மீகத் தகவல்🙏🙏 - ShareChat
01:15
#பத்திஸ்டேட்ஸ் #ஆன்மீக #பத்தி #தெரிந்து கொள்வோம் வென்ற காலசம்ஹார மூர்த்தி: திருக்கடையூர்* அபிராமியம்மை சமேத அமிர்தகடேஸ்வரர்! *🔱🔔 "மரண பயம் போக்கி, மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு வழங்கிய ஈசனின் மகா தலம்!" மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ள, அட்டவீரட்டத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் (திருக்கடவூர்) திருத்தலத்தின் சிறப்புகள்: 📖 தல வரலாறு: காலனை உதைத்த படலம் தவப்புதல்வன் மார்க்கண்டேயனுக்கு 16 வயது வரை மட்டுமே ஆயுள். அவனது 16-வது வயதில் உயிரைப் பறிக்க எமன் (காலன்) பாசக்கயிற்றை வீசினான். எமனுக்கு அஞ்சிய மார்க்கண்டேயன், அங்கிருந்த சிவலிங்கத்தைக் கட்டியணைத்துக் கொண்டான். எமன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. இதனால் சினம் கொண்ட சிவபெருமான், லிங்கத்தைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டு, எமனைத் தனது காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார். மார்க்கண்டேயனுக்கு "என்றும் பதினாறு" என்ற சாகாவரத்தை அருளினார். பின்னர் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எமனை மீண்டும் உயிர்ப்பித்தார். ✨ ஆலயத்தின் சிறப்புகள்: இறைவன்: ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் (காலசம்ஹார மூர்த்தி) இறைவி: ஸ்ரீ அபிராமி அம்மன் (அபிராமி பட்டருக்காக அமாவாசையைப் பௌர்ணமியாக்கிய அன்னை). அதிசயம்: இன்றும் இத்தலத்து லிங்கத்தின் மீது எமன் வீசிய பாசக்கயிற்றின் தடம் தழும்பு போலக் காணப்படுவதைக் காணலாம். அமிர்தத் தலம்: தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமிர்தம் வைக்கப்பட்ட குடம் (கடம்) லிங்கமாக மாறிய தலம் இது. 🙏 வழிபாட்டு பலன்கள்: ஆயுள் பலம்: அறுபதாம் கல்யாணம் (மணிவிழா), பீமரத சாந்தி (70 வயது), சதாபிஷேகம் (80 வயது) போன்ற ஆயுள் விருத்தி சடங்குகள் செய்ய உலகிலேயே மிகச் சிறந்த தலம் இதுவாகும். மரண பயம் நீங்க: நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் மரண பயம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட நற்பலன் கிடைக்கும். சகல ஐஸ்வர்யம்: அபிராமி அந்தாதி பாராயணம் செய்பவர்களுக்குத் துயரங்கள் நீங்கி சகல செல்வங்களும் கிடைக்கும். அமைவிடம்: மயிலாடுதுறையிலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் சுமார் 23 கி.மீ தொலைவில் திருக்கடையூர் அமைந்துள்ளது. காலனை வென்ற காலசம்ஹார மூர்த்தியின் அருள் பெற்று நீடுழி வாழ்வோம்! 🙏🌹💐
பத்திஸ்டேட்ஸ் - திருகிகடையூரீ8 மார்கிகண்பேயனுக்காக எமனைகாலால் உதைத்து சமீஹாரம்செய்ததலம், Copy Righis @Roddlyur Anmigam reddiyuraanmigam ١ ٥٧ و வீரட்டானத் தலம் OILL திருகிகடையூரீ8 மார்கிகண்பேயனுக்காக எமனைகாலால் உதைத்து சமீஹாரம்செய்ததலம், Copy Righis @Roddlyur Anmigam reddiyuraanmigam ١ ٥٧ و வீரட்டானத் தலம் OILL - ShareChat
#☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙
☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 - ShareChat
00:12
#பத்திஸ்டேட்ஸ் #🙏 ஓம் நமசிவாய மூன்று கிளைகளும் எதை குறிக்கின்றன?* சிவபெருமானுக்குரிய* படைக்கலங்களுள் முதன்மை பெற்றது சூலமாகும். அது தலைப்பகுதியில் மூன்று கூர்மையான பகுதிகளைக் கொண்டிருப்பதால் முத்தலைச் சூலம் என்றும் திரிசூலம் என்றும் அழைக்கப்படுகின்றது. சூலத்தை ஏந்தி நின்று அருள்புரிவதால் சிவபெருமான் சூலபாணி என்றும், சூலதரர் என்றும் அழைக்கப்படுகிறார். திரிசூலம், உயிர்களைப் பற்றியுள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை நீக்கி அவற்றிற்கு மோட்சத்தை அருள்கிறது. அது ஞானத்தை வழங்குவதாகவும் உள்ளது. அஸ்திரங்களுக்கு எல்லாம் தலைவனாக இருப்பதால் அதனை அஸ்திர ராஜன் எனவும் அழைப்பர். பகைவர்களை வென்று சுகமாக வாழவும், ஞானத்தினைப் பெற்று மகிழ்ச்சியாக வாழவும், திரிசூலத்தைச் சிவபெருமானாகவே போற்றி வழிபடுகின்றனர். இந்த விரதத்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். கண்ணுக்குப் புலனாகாத பகை விலகும். பொன்னால் திரிசூலத்தைச் செய்து, அதைச் சுற்றிலும் எட்டுத் திசைகளிலும் அஷ்டாயுதங்களை நிலைப்படுத்தி அஸ்திர பூஜை செய்வர். அத்தி மரத்தாலும், கருங்காலி மரத்தாலும் சூலங்களைச் செய்து வழிபடுகின்றனர். சூலத்தின் மையத்தில் மூன்று கிளைகளில் சிவபெருமானையும் இடது கிளையில் திருமாலையும் வலது கிளையில் பிரம்ம தேவனையும், மூன்றும் கூடுமிடத்தில் விநாயகர், முருகன், வீரபத்திரர், சாத்தன் ஆகியோரையும் அதன் கீழுள்ள கண்டத்தில் ஏகாதச ருத்திரர்களையும், அதன் கீழுள்ள பத்மத்தில் அஷ்டமாத்ருகா, அஷ்டலட்சுமிகள் ஆகியோரையும் பூஜிக்கின்றனர். திரிசூல வழிபாடு இல்லறத்தாருக்குப் பாதுகாப்பையும் செல்வத்தையும் அருள்கின்றது. அழிவிலிருந்து காப்பாற்றுகிறது. காசி நகருக்கு அவிமுத்தம் என்று பெயர் வழங்குகிறது. இதற்கு அழிவற்றது என்பது பொருள். இந்த தலத்தைத் திரிசூலம் தாங்கிக் கொண்டிருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. சூலாயுதத்தைத் தனியாக வழிபடுவதற்குப் பதில் சந்திரசேகரர் திருவுருவத்தில் சார்த்தி வைத்து வழிபடுவதும் உண்டு. திரிசூல விரதத்தை விரத மகாத்மியம் சிறப்புடன் விளக்குகிறது. சிவாலயங்களில் இவரை முதன்மை மூர்த்தியாகக் கொள்வர். கொடியேற்றம், கொடியிறக்கம் இவர் முன்பாகவே நடைபெறும். தீர்த்தவாரியில் நீருள் மூழ்கித் தீர்த்தம் அளிப்பவரும் இவரே. தினமும் ஸ்ரீபலி நாயகரைக் கொண்டு செய்யப்படும் ஸ்ரீபலி உற்சவம் பெருந்திருவிழாக்களில் சூலதேவரை வைத்துக் கொண்டே செய்யப்படுகின்றது. பெருந்திருவிழாவில் சுவாமி புறப்பாட்டிற்கு முன்பாகத் திரிசூலம் எடுத்துச் செல்லப்படுகின்றது. இதனைப் படை வலம் செய்தல் என்பர். திரிசூலத்தைச் சிவபெருமானாகவே போற்றுகின்றனர். சில ஆலயங்களில் திரிசூலத்தின் முன்புறம் உமாமகேஸ்வரர் அர்த்தநாரீஸ்வரர், ரிஷபாரூடர் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிராமிய தெய்வமான பிடாரி ஆலயங்களிலும் திரிசூலமே படைக்கலமாக உள்ளது. அதன் நடுவில் காளியின் உருவம் அமைக்கப்படுகின்றது. திரிசூலத்தை மிகப் பழங்காலந்தொட்டே மக்கள் சிறப்புடன் போற்றி வருகின்றனர். அது காவலின் சின்னமாக விளங்குகின்றது.
பத்திஸ்டேட்ஸ் - ShareChat
#ஆன்மீக #👉வாழ்க்கை பாடங்கள் #தெரிந்து கொள்வோம் கங்கையையும் தன்னிடம் வரவழைத்த கவிஞர் வித்யாபதி!* பிரபல கவிஞர் வித்யாபதி, எதிரே நின்ற சிறுவனைப் பார்த்தார். “என்ன வேண்டும் உனக்கு?” என்று கேட்டார். “ஒரு வேலை வேண்டும் ஐயா”. “என்னிடம் ஏது வேலை? நான் ஒரு கவிஞன். ஒலை, எழுதுகோல், எழுத்தாணி இவை இருந்தால் போதும் எனக்கு. என்னிடம் ஏது வேலை?” “ஐயா அப்படிச் சொல்லாதீர்கள். ஓலைகளை நறுக்கி வைப்பேன். எழுத்தாணியைச் சீர்படுத்துவேன். மாதாஜிக்கு தேவையானதையும் கூடச் செய்வேன்.” “சரி! உனக்கு என்ன வேண்டும். சம்பளம் எவ்வளவு எதிர்பார்க்கிறாய்?" “ஐயோ, சம்பளமா! வேண்டவே வேண்டாம். இரண்டு வேளை சாப்பாடு, தங்க இடம். அது போதும்.” வித்யாபதி மனம் இரங்கினார். “உன் பெயர் என்ன?” “உகனா.” “சரி, உகனா, உன் வேலையை ஆரம்பி.” உகனா வேலையை ஆரம்பித்தான். அறைகள் சுத்தப்படுத்தப்பட்டன. சுவடிகள் சரியாக அடுக்கி வைக்கப்பட்டன. மாதாஜியின் வேலையில் பாதி குறைந்து விட்டது. ஒரு நாள் வித்யாபதி பயணமாகப் புறப்பட்டார். உகனாவும் கூட வந்தான். “நீ எதற்கு” என்று கேட்டார் வித்யாபதி. “நான் எதற்கா? பின் யார் உங்கள் பெட்டியைத் தூக்குவதாம்?” உகனாவும் கூடவே பெட்டியைத் தூக்கிக் கொண்டு சென்றான். சிறிது நேரம் கழித்து வித்யாபதிக்கு களைப்பாக இருந்தது. ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். “தாகமாக இருக்கிறது. உகனா!” “இதோ தண்ணீர் கொண்டு வருகிறேன். இங்கேயே உட்கார்ந்திருங்கள்” என்ற உகனா சற்று தூரம் சென்றான். தன் காலால் தரையை அமுக்கினான். என்ன ஆச்சரியம். பூமி பிளந்து ஒரு நீரோடை உருவாகி ஓட ஆரம்பித்தது. அதிலிருந்து ஒரு குவளையில் நீரை எடுத்துக் கொண்டு சென்று வித்யாபதியிடம் கொடுத்தான் உகனா. வித்யாபதி நீரைக் குடித்தார். கங்கை ஜலமோ? தேவாமிர்தம் தோற்றது! “உகனா! நீ யார் உண்மையைச் சொல்!” என்றார் வித்யாபதி. “அட, இந்த நீர் இனிக்கிறது. அவ்வளவு தான்!” என்றான் உகனா. “அதிருக்கட்டும். நீ யார்? உண்மையைச் சொல்!” என்றார் வித்யாபதி மீண்டும். சிவனார் மனம் கனிந்தார். உகனா சிவபிரான் தோற்றத்தில் காட்சி அளித்தார். வித்யாபதி திடுக்கிட்டார். “இதுவா நான் பூஜை செய்த லட்சணம்! சிவபிரானையா நான் வேலை வாங்கினேன்?” விக்கி விக்கி அழுதார் வித்யாபதி. “வித்யாபதி! கவலைப்படாதே! உனக்கு இன்னும் நான் வேலைக்காரனாக இருந்து சேவை செய்யத் தயார். நானாகத் தான் உன்னிடம் வந்தேன். உன்னுடைய அற்புதமான பாடல்களை நீ பாடி நான் கேட்க வந்தேன். உனக்கு தரிசனம் தந்தாயிற்று. நான் வருகிறேன்.” “ஐயோ! அது முடியவே முடியாது. இது தான் பக்தியின் பலன். இது தான் எனது பூஜை பலித்ததற்கு அடையாளம். நீங்கள் என்னை விட்டுப் போகவே கூடாது.” “சரி, வித்யாபதி! நான் சம்மதிக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நான் உகனாவாகத் தான் இருப்பேன். நான் யார் என்பதை யாரிடமும் நீ சொல்லக் கூடாது.” வித்யாபதி சம்மதித்தார். உகனா வித்யாபதியுடன் சேர்ந்து வாழ அவர் தனது பூஜையை மகிழ்ச்சியுடன் செய்து வந்தார். ஆனால், ஒரு நாள் வித்யாபதியின் மனைவி மிஸ்ரைன் ஏதோ ஒரு காரணத்தினால் கோபம் கொண்டு உகனாவை அடித்து விட்டாள். இதைப் பார்த்த வித்யாபதி துடிதுடித்து விட்டார். “ஆஹா! இவரை யார் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். நாம் ஆராதிக்கும் தெய்வத்தையே நீ அடித்து விட்டாயே” என்று உரக்கக் கத்திப் புலம்பினார். அவ்வளவு தான்! அந்தக் கணமே உகனா மறைந்து விட்டான். கொடுத்த வாக்கை மீறியதால் உகனாவை இழந்த வித்யாபதி பெரும் துக்கத்தை அடைந்தார். பாடினார்: “உகனா! தும் பின் ரஹ்யோ ந ஜாய்!” “உகனா நீ இல்லாமல் எப்படி வாழ்வது?” அப்புறம் உகனாவைக் காணவே காணோம்! வரலாறு கூறும் செய்தி இது தான்: பின்னர் கங்கா நதி தனது போக்கை மாற்றிக் கொண்டு நான்கு மைல்கள் கடந்து வித்யாபதி வீட்டிற்கு வந்தது. அவரது பக்தியை உலகிற்கு உணர்த்தியது. கங்கையையும், சிவபிரானையும் தன்னிடம் வரச் செய்த சிவ பக்தரான வித்யாபதி ஒரு அபூர்வ கவிஞர் தான்! பீஹாரில் வாழ்ந்த கவிஞரான வித்யாபதி வாழ்ந்த காலம் 1352-1448. இவர் 96 வயது வரை வாழ்ந்து நூற்றுக்கணக்கான பக்திப்பாடல்களை இயற்றியுள்ளார். இவரது வாழ்க்கை சரிதம் பல அபூர்வ சம்பவங்களைக் கொண்டதாகும்.🌹
ஆன்மீக - சிவபிரானையும் கங்கையையும் தன்னிடம் வரவழைத்த கவிஞர் வித்யாபதி! சிவபிரானையும் கங்கையையும் தன்னிடம் வரவழைத்த கவிஞர் வித்யாபதி! - ShareChat
#☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙
☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 - ShareChat
00:10
#☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙
☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 - ShareChat
00:12
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏 ஓம் நமசிவாய #அங்காள பரமேஸ்வரி
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - ShareChat
01:47
#👉வாழ்க்கை பாடங்கள் #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
👉வாழ்க்கை பாடங்கள் - வாழ்க்கையின் ரகசியங்கள் *எவ்வளவு பொறுமையுடன் இருக்கிறோமோ, அவ்வளவு "ల_ufDl6o6u' *எவ்வளவு தூரமாக ுக்கிறோமோ, அவ்வளவு மமரியாதை" *எவ்வளவு குறைவான பாசத்தை காட்டுகிறோமோ அவ்வளவு மன அமைதி" ە எவ்வளவு குறைவாக ஆசைப்படுகிறோமோ அவ்வளவு ஈநிம்மதி" * எவ்வளவு குறைவாகப் பேசுகிறோமோ அவ்வளவு ஈமதிப்பு" வாழ்க்கையின் ரகசியங்கள் *எவ்வளவு பொறுமையுடன் இருக்கிறோமோ, அவ்வளவு "ల_ufDl6o6u' *எவ்வளவு தூரமாக ுக்கிறோமோ, அவ்வளவு மமரியாதை" *எவ்வளவு குறைவான பாசத்தை காட்டுகிறோமோ அவ்வளவு மன அமைதி" ە எவ்வளவு குறைவாக ஆசைப்படுகிறோமோ அவ்வளவு ஈநிம்மதி" * எவ்வளவு குறைவாகப் பேசுகிறோமோ அவ்வளவு ஈமதிப்பு" - ShareChat