
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் நிறைந்த திரியம்பகேஸ்வரர் ஆலயம்!* 🌹
ஆலயங்கள் அனைத்துமே அதிசயங்கள் நிறைந்ததாக இருப்பது வியப்புக்குரியது. நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆலயத்தை பற்றியும் படிக்கும்போதும் கேட்கும் போதும் கண்களால் காணும் போதும் ஒரு விஷயத்தை நாம் ஈர்க்கப்படுவோம் . சில விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இன்னும் சில நம்மை அதிசயிக்க வைக்கும்.
அப்படி நம்மை அதிசய வைக்க வைக்கும் ஆலயங்கள் ஒன்றுதான் மகாராஷ்டிராவில் வீற்றிருக்கும் திரியம்பகேஸ்வரர் திருக்கோவில்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரிலிருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திரயம்பகம் என்ற இடம் இங்குதான் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான திரயம்பகேஸ்வரர் ஆலயம் இருக்கிறது.
இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. பிரம்மகிரி நீலகிரி கலகிரி ஆகிய மூன்று மலைகளுக்கு நடுவில் பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் உள்ள கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில் பில்வ தீர்த்தம் விஸ்வநத் தீர்த்தம் முகுந்த தீர்த்தம் ஆகிய மூன்று நீர்நிலைகள் உள்ளன.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலையின் மீதுள்ள ஆலயத்தினை சூழ்ந்த பகுதிகள் மிகவும் ரம்மியமான ஆன்மீக வாழ்வுக்கான அமைதியான சூழலாக இருப்பதால் பல சித்தர்களும் ரிஷிகளும் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற இடமாக இதனை போற்றுகின்றனர்.
இக்கோவிலில் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய நீர் ஊற்று ஒன்று உள்ளது. எப்பொழுதும் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பது அதிசயமான நிகழ்வாகும்.
திரியம்பகேஸ்வரர் கோவில்
திரியம்பகேஸ்வரர் கோவில்
பிறர் ஜோதிர் லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாக கொண்டு அமைந்துள்ளன. ஆனால் இத்தவத்தில் உள்ள லிங்கம் பிரம்மா விஷ்ணு ருத்ரன் ஆகிய கடவுளின் முகங்கள் போன்ற அமைப்புடன் உள்ளன. தனித்துவமான அம்சமாகும்.
இந்தப் பகுதியில் வாழ்ந்த கௌதம ரிஷி என்னும் முனிவர் தன் மனைவியோடு இருந்த கடுமையான தவத்தின் பயனாக இங்கு சிவன் ஜடா முடியில். இருந்த கங்கையின் சில துளியை விழச் செய்ததாகவும் அதுவே இங்கு எப்போதும் நீர் ஊற்றாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.
அதோடு ரிஷியின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் பிரம்ம விஷ்ணு ஆகிய மூவரும் வரும் சுயம்பு வடிவில் இங்கு தங்கியதாகவும் கூறப்படுகிறது. திரியம்பகேஸ்வரர் வீற்றிருக்கும் கர்ப்ப கிரகம் தாழ்வாக உள்ளது. மேலேயுள்ள மண்டபத்தில் இருந்து தரிசனம் செய்ய வேண்டும். மும்மூர்த்திகள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்க பரம்பொருளுக்கு ஆவுடையார் மட்டுமே உள்ளது.
திரியம்பகேஸ்வரர் கோவில்
ஆவுடையார் உரல் போன்றுபள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்த்திகள் அர்ச்சனை செய்த மூன்று தாமரை மொட்டுக்களின் அடையாளம் உள்ளது. இத்தல இறைவனை வணங்கினால் வாழ்வில் அளவில்லாத ஆனந்தம் உண்டாகும் என்பது ஐதீகம். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் சிம்ம ராசியில் வரும்போது இத்தலத்தில் கும்பமேளா பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.🌹
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் ஆரோக்கியத்திலும் அற்புதப் பங்காற்றும் பவழமல்லி!*
பவழமல்லி என்கிற பாரிஜாத மரமானது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் பரலோகத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வரப்பட்டதாக புராணக் கதைகள் கூறுகின்றன. பாரிஜாத மலரின் மீது ருக்மணிக்கு கொள்ளைப் பிரியம். இதனை அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத செடியை கொண்டு வந்து ருக்மணியின் தோட்டத்தில் நட்டு வைத்தார். ஆனால், அந்த மரம் நன்றாக வளர்ந்து சத்யபாமாவின் அரண்மனையில் பூக்களைக் கொட்டியது. இதனால் ருக்மணி வருத்தமுற்றதாலேயே இதனை ‘வருத்தமரம்’ என்றும் அழைக்கின்றனர்.
பவழமல்லி மலர்கள், இரவு மல்லிகை என்றும் அழைக்கப்படுகிறது. இது புதர் செடி வகையைச் சேர்ந்தது. இந்த மலர்களின் இதழ்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். தண்டு ஆரஞ்சு - சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த மலர்கள், பூஜை உள்ளிட்ட ஆன்மிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பவழமல்லி மலர்கள் பகலில் மலராமல், இரவு நேரத்தில் மட்டும் மலரும் தன்மை கொண்டது. இந்தப் பூக்கள் மிகுந்த வாசனை கொண்டவை.
இந்தப் பூக்கள் ஏன் சூரியன் உதிக்கும் முன் உதிர்ந்து விடுகின்றன என்று பலருக்கும் மனதில் கேள்வி எழலாம். அதற்கும் ஒரு கதை உள்ளது.
உலகிற்கே ஒளி தரும் சூரியனிடம் காதல் கொண்டாள் பாரிஜாதம் என்ற பெயர் கொண்ட அரசகுமாரி. அந்தக் காதலை ஏற்க மறுத்த சூரியனை எண்ணி மனமுடைந்து தன்னையே அவள் மாய்த்துக் கொண்டாளாம். அவளது அஸ்தியிலிருந்து இம்மரம் உருவாகியதாகவும், இம்மரம் வளர்ந்ததும் சூரியனின் பார்வையைத் தாங்க முடியவில்லை என்றும் கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு. இதன் காரணமாக இந்த மரம் இரவிலே பூக்களை மலர்வித்து காலையிலே பூக்களையெல்லாம் உதிர்த்து விடுகிறது என்றும் கூறப்படுகிறது.
சிவனுக்கும், திருமாலுக்கும் அர்ச்சனை செய்ய ஏற்ற மலர் இதுவாகும். இறைவனை அர்ச்சிப்பதற்கு உரிய எட்டு மலர்கள் உள்ளன. அந்த எட்டு மலரில் இந்த பாரிஜாத மலரும் ஒன்று. இறைவனுக்கு அர்ச்சனை செய்யவும் உதவுகிறது. இந்த செடி மரமாக வளர்ந்து பூ பூக்கும்போது வீட்டில் எந்தவித தீய சக்திகளும் அண்டாது.
மனிதர்களுக்குத் தெரியாத பல்வேறு மருத்துவக் குணங்களை இந்தப் பூக்கள் கொண்டுள்ளன. பவழமல்லி செடியின் இலைகள், பூக்கள், விதைகள், வேர்பட்டை என அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. ஆயுர்வேதத்தின்படி வாத தோஷத்தின் ஏற்றத்தாழ்வு காரணமாக இவை வலியை குறைக்க உதவுவதாக சொல்லப்படுகிறது.
தொற்று நோய்கள் மற்றும் தொற்று அல்லாத நோய்களுக்கு இவை சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் போன்று சரும வியாதிகளுக்கும் கூட இவை மருந்தாகிறது. மலமிளக்கி, இருமல் மற்றும் சளி பிரச்னை, உஷ்ணம், மூட்டுவலி, சியாட்டிகா போன்ற நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்கவும் இது உதவுகிறது.
பவழமல்லி இலைகள் கீல்வாதம் போன்ற வலி மிகுந்த நிலைகளை குறைப்பதற்கான பயனுள்ள மூலிகை மருந்தாகும். கீல் வாதம் என்பது வாத தோஷத்தின் தீவிரத்தால் ஏற்படுகிறது. வாதத்தால் உண்டாகும் கீல் வாதத்தில் வலி, வீக்கம், மூட்டு இயக்கக் குறைபாடு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. பவழமல்லி இலை நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் உகந்தது. மழைக் காலத்தில் சளி, இருமல், தலைவலி, உடம்பு வலி போன்ற அனைத்து உடல் உபாதைகளுக்கும் இது ஒரு அரிய மருந்தாகும்.🌹
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் என்பதே அறியாதவர் நரசிம்மர்!*
பெருமாளின் தசாவதாரத்தில் நரசிம்ம அவதாரமும் ஒன்று. சித்திரை மாதம் சதுர்த்தசி திதி சுவாதி நட்சத்திரம் கூடிய புண்ய தினத்தில் பிரதோஷ காலத்தில் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி அவதரித்தார். இவர் பிரதோஷ காலத்தில் அவதரித்ததால் ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் நரசிம்ம பூஜை, வழிபாடு செய்பவர்களும் உண்டு. பெருமாளின் நான்காவது அவதாரமாக அரக்கன் ஹிரண்யகசிபுவை அழிக்க பாதி மனிதனாகவும், பாதி மிருகமாகவும் (சிங்க வடிவில்) தோன்றினார். நரசிம்மருக்கு மூன்று கண்கள் உள்ளன. அவரை கலா, மகாகலா மற்றும் பரகலா என்றும் அழைக்கிறார்கள்.
யோக நரசிம்மர், வீர நரசிம்மர், உக்கிர நரசிமர், லட்சுமி நரசிம்மர், கோப நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என்று நரசிம்மரின் ஒன்பது முக்கியமான தோற்றங்கள் கோவில்களில் காணப்படுகின்றன. அநேகமாக எல்லா பெருமாள் கோவில்களிலும் நரசிம்மருக்கு ஒரு சன்னதி அமைந்திருப்பதைக் காணலாம்.
பொதுவாக ஸ்ரீ மஹாவிஷ்ணு எடுத்த அனைத்து அவதாரங்களும் அசுரர்களை அழித்து, தர்மத்தை காக்கவும், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டி பக்தர்களை துன்பங்களிலிருந்து காத்து ரட்சிக்கவும் எடுத்தவையே ஆகும். ஆனால் இந்த அவதாரங்களிலேயே மிகவும் சிறப்புக்குரிய அவதாரமாக எல்லோராலும் போற்றப்படுவது திருமாலின் நான்காவது அவதாரமாகிய நரசிம்ம அவதாரம் ஆகும். ஏனென்றால் மற்ற அவதாரங்கள் அனைத்திலும் அவதாரம் எடுத்து சிறிது காலம் பொறுத்து, நேரம் காலம் பார்த்து, போர் செய்து அதற்கு பிறகு தான் தர்மம் நிலைநாட்டப்பட்டது, பக்தர்கள் காப்பாற்றப்பட்டனர்.
ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படியில்லை. நாளை என்பதே அறியாதவர் நரசிம்மர் என்பார்கள்.
தானே கடவுள் என்னும் கர்வத்துடன் இருந்தவன் இரண்யன். அவனுடைய ஐந்து வயது புதல்வவன் பிரகலாதன் சிறுவயது முதலே நாராயண பக்தனாக இருக்கிறான். அதனால் கோபமுற்று அவன் தந்தையாகிய இரண்யன் அவனை பலமுறை கொல்ல முயற்சி செய்து தோல்வி அடைகிறான்.
கடைசியாக "நீ சொல்லும் நாராயணன் எங்கே இருக்கிறார்? அவரை எனக்குக் காட்டு!" என்று புதல்வனிடம் கர்ஜிக்கிறான்.
"அவர் எங்கும் இருப்பார்! தூணிலும் இருப்பார்! துரும்பிலும் இருப்பார்!" என்று பிரகலாதன் சொல்கிறான்.
இரண்யன் ஒரு தூணை சுட்டிக்காட்டி, "அந்த கடவுள் இந்தத் தூணில் இருப்பானா?" என்று கேட்க பிரகலாதன் "இருப்பார்" என்று சொல்கிறான். இரண்யன் அந்தத் தூணை தன் கதாயுதத்தால் பிளக்கும் நேரத்தில், அந்த நிமிடம், அந்த நொடியே தன் பக்தனை காப்பதற்காக அவன் சுட்டிக் காட்டிய தூணிலியே அவதாரம் எடுத்து எழுந்தருளியவர் நரசிம்ம பெருமாள்.
மனித உடலும், சிங்கத்தலையும் கொண்டு ஆக்ரோஷமாக கர்ஜித்தவாறே பிரசன்னமானார். இரண்யன் வரம் பெற்றதைப் போலவே மனிதனும் இல்லாமல், மிருகமும் இல்லாத உருவம், மேலேயும் இல்லாமல், கீழேயும் இல்லாமல், இரவும் இல்லாமல் பகலும் இல்லாமல், ஆயுதம் இல்லாமல் வெறு கைகளாலேயே இரண்யனை வதம் செய்தார்.
நரசிம்மருக்கு மிகவும் பிடித்த பானகத்தை நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்தால் மிக சிறந்த பலன்களை பெறலாம். மோட்சத்தையே சுலபமாகத் தரக்கூடிய ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி, பக்தர்கள் வேண்டும் அனைத்து பலன்களையும் தாமதமின்றி உடனே அளிக்கக்கூடியவர். நரசிம்மர் வழிபாடு நம் அனைத்து துன்பங்களையும் நீக்கும் என்று பத்ம புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தன் பக்தனான பிரகலாதன் பிரார்த்தித்த நொடியே பிரசன்னமானதால் அவர் 'நாளையே இல்லாத நரசிம்மர்' என போற்றப்படுகிறார்.🌹






