
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#இரணியன்*இரணியன் என்னும் அரக்கன்* தன்னையே எல்லோரும் கடவுள் என தொழவேண்டும்* என்று எண்ண இரணியனின் மகன் பிரகலாதன்,* மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி பூஜித்து வந்தான்.
இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான்.
இரணியன் தன் சகோதரி - நெருப்பினால் எரியாத தன்மை படைத்த ஹோலிகாவின் உதவியை நாடினான். தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொடுட்டு இரணியன் பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் அமரும்படி கூறினான்.
மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான்.
ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்கிறார்கள்.
இரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா இளம் பிரகல்லாதனை நெருப்பில் போட முயன்ற போது அதிலிருந்து வியக்கத்தக்க வகையில் அவர் தப்பித்த
நினைவாக நெருப்புகள் மூட்டப்படுகின்றன.
ஹோலிகா எரிந்தாள், ஆனால் கடவுள் விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரகல்லாதன், தனது அசைக்க முடியாத தெய்வபக்தியின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தான்.
ஆன்மீகம் (Spirituality)
#பத்தி #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
#பத்தி #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙
#பத்தி #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙
#பத்தி #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் பாதிப்புகள்* நீங்குவதற்கான பிரத்யேக வழிபாடு*
ஒவ்வொருவரும் தங்களது தினசரி வாழ்வியலை திட்டமிட்டு,* அதனை பூர்த்தி செய்வதற்காக உழைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் மனநிலை - உடல்நிலை- சமூக அணுகுமுறை - ஆகியவை அவர்களின் எண்ணப்படி இயல்பாக நடைபெறும்.
இதில் ஏதேனும் குறுக்கீடுகள் ஏற்பட்டு உங்களுடைய உளவியலில் பாதிப்புகளையும்,அதிர்வுகளையும் ஏற்படுத்தி, உங்களது கவனத்தை திசை திருப்பி, செயலில் தாக்கத்தை ஏற்படுத்தினால் அவை செய்வினையின் பக்க விளைவாக இருக்கக்கூடும்.
அறிமுகமான மற்றும் அறிமுகமற்ற நபர்களின் மூலமாக செய்வினை பாதிப்பிற்கு ஆளாகியிருந்தால் மேலே விவரிக்கப்பட்டிருக்கும் தினசரி வாழ்வியல் பாதிப்புகள் உண்டாகும். இதனை நாள்ககை கடத்தாமல் துல்லியமாக அவதானித்து ,பிரத்யேக வழிபாட்டின் மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை தேட வேண்டும் என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
செய் வினையால் பாதிக்கப்பட்டிருந்தால் முதலில் உங்களுடைய மன நிலையிலும், எண்ணங்களிலும், மற்றவர்களை பார்க்கும் பார்வையிலும் திடீரென அசாதாரணமான நிலைப்பாடு ஏற்படும்.
இதை தவிர்த்து உங்களின் இயல்பை மீட்டெடுக்க வேண்டும் என்றால்... ஆன்மீக பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்திற்கு சென்று அங்குள்ள யோக நரசிம்மரின் திரு உருவ புகைப்படத்தை வாங்கி வீட்டிற்கு எடுத்து வந்து, அதனை வீட்டில் வரவேற்பறையில் அதாவது அந்தப் புகைப்படத்தை நீங்கள் வைத்து பூஜித்து வலம் வரும் வகையில் வைத்திட வேண்டும்.
அதனைத் தொடர்ந்து அந்த யோக நரசிம்மரின் புகைப்படத்திற்கு ஆறு தீபங்களை சிவப்பு வண்ண திரிகளால் ஏற்றி, அரளி பூ சாற்றி வழிபட வேண்டும். அந்தத் தருணத்தில் பன்னிரண்டு முறை யோக நரசிம்மரை வலம் வந்து, செய்வினை பாதிப்பிலிருந்து மீள வேண்டும் என பிரார்த்தித்தால். உங்களுக்கு பரிபூரணமான அருள் கிடைத்து செய்வினை தோஷம் நீங்கிவிடும். இந்தப் பிரார்த்தனையை தொடர்ந்து ஒன்பது நாட்கள் மேற்கொண்டால் உரிய பலன் முழுமையாக கிடைக்கும்.
#ஆன்மீக #🙏கோவில் மீனாட்சி: *அன்னை ஆளும் ஞான பூமி! *👑 சொக்கநாதரின் பேரன்பு!*
கடம்பவனத்தின் பேரதிசயம்
தென்பாண்டி நாட்டின் மகுடம், கலைகளின் சங்கமம் மதுரை! இங்கு ஈசன் அதிகாரத்தைக் காட்டவில்லை, அன்பைக் காட்டுகிறான். அன்னையின் ஆட்சி நடக்கும் மதுரையின் ரகசியங்கள் இதோ... 👇
✨
மற்ற சிவத்தலங்களில் சிவபெருமானுக்குத்தான் முதல் பூசை நடக்கும். ஆனால் மதுரையில் அன்னை மீனாட்சிக்குத்தான் முதல் பூசை, முதல் மரியாதை. "பெண்மையைப் போற்றும்" மிக உயரிய தலம் இது. மதுரையில் மீனாட்சி அம்மனே பட்டத்தரசி. இன்றும் மதுரையின் அரசாட்சி அவரிடமே இருப்பதாக ஐதீகம். பெண்களின் வீரத்திற்கும், அறிவிற்கும் அடையாளமாக அன்னை இங்கு வீற்றிருக்கிறார்.
மதுரையில் ஈசன் ஒரு அரசனாகவே வாழ்ந்தார். ஏழைப் பாட்டிக்கு (வந்தி) பிட்டுக்கு மண் சுமந்தது, வேடன் உருவம் எடுத்தது என அவர் செய்த 64 திருவிளையாடல்களும் மதுரையின் ஒவ்வொரு கல்லிலும் பதிந்துள்ளன.பக்திக்காகத் தன் பரம்பொருள் நிலையைக் கூட மறந்து, ஒரு சாதாரண கூலியாளாக வந்து மண் சுமந்து பிரம்படி பட்ட ஈசனின் கருணையை மதுரையில் மட்டுமே காண முடியும்.
சிதம்பரத்தில் இடது காலைத் தூக்கி ஆடும் நடராஜர், மதுரையில் மட்டும் வலது காலைத் தூக்கி ஆடுவார். தன் பக்தன் ராஜசேகர பாண்டியன் கேட்டுக் கொண்டதற்காக, கால் வலிக்குமே என்று கருதி ஈசன் தன் காலை மாற்றி ஆடிய இடம் இது. உலகிலேயே மதுரை வெள்ளியம்பலத்தில்தான் நடராஜப் பெருமான் வலது காலைத் தூக்கி ஆடுகிறார். பக்தனின் விருப்பத்திற்காகத் தன் நிலையையே மாற்றிக் கொண்ட எளியவன் நம் ஈசன்!
"அதிகாரத்தால் அடைய முடியாத இறைவனை, மதுரையில் மீனாட்சியின் அன்பால் எளிதாக அடையலாம்!" 🙏
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏 ஓம் நமசிவாய #அங்காள பரமேஸ்வரி






