
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#ஆன்மீகத் தகவல்🙏🙏 தோஷம், பித்ரு சாபம் என்றால் என்ன?
அதன் பாதிப்புகள் பற்றி இப்பதிவில் விளக்கமாக அறிந்துக் கொள்வோம்!
💥"பித்ரு தோஷம், பித்ரு சாபம் என்பது, ஒருவருக்கு அவருடைய முன்னோர்களால் வருவதாகும்.
ஒரு மகன் தன்னுடைய தாய்- தந்தையை உயிருடன் இருக்கும் பொழுது கவனிக்காவிட்டால் கூட, பசியால் வாடிய போதும், துன்பத்தை அனுபவித்த போதும், அந்த தாயும் தந்தையும் தன்னுடைய பிள்ளையை சபிக்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் இறந்த பிறகு சாபம் இடுவார்களா என்ன?
💥"பித்ரு தோஷம் (சாபம்) என்பது, நம் தாய், தந்தை, தாத்தா, பாட்டியால் வருவது அல்ல. அவர்களை சரியாக பராமரிக்கா விட்டால், பித்ரு தேவதைகள் நமக்குக் கொடுக்கக் கூடிய சாபம் தான், "பித்ரு சாபம்" ஆகும். இதனால் நம்முடைய வாழ்வில் பலவிதமான துன்பங்கள் ஏற்படுகிறது. நமக்கு பித்ருக்களின் தோஷம் அல்லது சாபம் இருக்கிறதா? பித்ருக்கள் நம் மீது கோபத்தில் இருக்கிறார்களா என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
💥#பித்ருதோஷம் :
💥"நமது வாழ்வில் நடக்கும் சில நிகழ்ச்சிகளை வைத்து நமக்கு பித்ரு தோஷம் உள்ளதா என்பதை அறியலாம். மேலும் துல்லியமாக அறிய நம் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் பேரருள் பெற்ற ஜோதிடர் ஐயாவை அணுகுவது சிறப்பு. அவர்கள் நமது ஜாதகத்தைப் பார்த்து பித்ரு தோஷம் உள்ளதா என்பதை அறிந்து கூறுவார்.
💥#பித்ருக்களின் #கோபத்தை #காட்டும் #அறிகுறிகள் :
💥"திருமண தடை, குழந்தையின்மை :
தக்க வயது வந்தும் உங்கள் வீட்டில் உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நடப்பதில் தாமதம் ஏற்படுவது. எந்த வரன் வந்தாலும் தட்டிச் செல்வது, பொருத்தம் அமையாமல் போவது போன்ற சில பல காரணங்களால் திருமணத்தில் தடை இருப்பது. ஒரு சிலருக்கு திருமணம் நடந்தும் பலஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது ஆகியவை முன்னோர்கள் தீராத கோபத்தில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் அறிகுறிகள் ஆகும்.
💥#கனவில் #முன்னோர்கள்!
💥"இறந்த நமது மூதாதையர்கள் கனவில் வந்து அமைதியாக இருந்தால் தோஷம் எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் நமது கனவில் வந்து அழுதால் அவர்கள் மன வருத்தத்தில் உள்ளார்கள் என்று அறியலாம். அவர்களது மன வருத்தமே நமக்கும் நமது சந்ததியர்க்கும் சாபமாக மாறும். அதை நீக்க அவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்ய வேண்டும். பித்ருதோஷம் நீங்க அவசியம் தோஷ நிவர்த்தி பூஜை செய்து கொள்ளவேண்டும், ஏழை எளியவர்கள் மற்றும் தேவையான வர்களுக்கு தானங்கள் அளிப்பதாலும் பித்ருக்கள் மனம் மகிழ்ந்து, மன அமைதி பெறுவார்கள்.
💥#சாப்பாட்டில் #தலைமுடி :
💥"உங்களுடைய சாப்பாட்டில் அடிக்கடி தலைமுடி இருக்கிறது என்றால் அதற்கு பித்ருக்களின் தோஷமே காரணமாக இருக்கும். உங்களின் பித்ருக்கள் பசியுடன் இருப்பதையும், நிறைவேறாத ஆசைகளுடனும், மன அமைதியின்றி வருத்தத்துடன் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் தான் உணவில் அடிக்கடி தலைமுடி தென்படுவது.
💥#வாழ்க்கையில் #பயம், #கவலை :
💥"எந்த காரணமும் இல்லாமல் மனதிற்குள் ஏதோ ஒரு பய உணர்வும், பதற்றமும், கவலையும் உங்களுக்கு இருந்து கொண்டே இருப்பதாக உணர்ந்தால் அதற்கு பித்ரு தோஷம் காரணமாக இருக்கும். உங்களின் முன்னோர்கள் உங்கள் மீது அதிருப்தியில் இருப்பதை காட்டுவதன் வெளிப்பாடே ஆகும். வீட்டிலும் அடிக்கடி சண்டை வருவதும், இறுக்கமான சூழ்நிலை இருப்பதற்கும் இது தான் காரணம்.
💥#வாழ்வில் #முன்னேற்றம் #இன்மை:
💥"நீங்கள் எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் உங்கள் செயல்களில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது. நீங்கள் முக்கியமான விஷயங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் ஏதாவது ஒரு தடை ஏற்பட்டுக் கொண்டே இருப்பது, சொல்ல முடியாத அளவிற்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருப்பது, வாழ்க்கையில் முன்னேற அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் தேக்க நிலையை எதிர் கொள்வது போன்றவை யாவும் முன்னோர்கள் உங்கள் மீது வருத்ததுடனும் கோபத்துடனும் உள்ளார்கள் என்று பொருள்.
💥#தந்தை.#தாய் #சொத்துக்கள்:
💥"தாய்.தந்தையர் தான் உழைத்து சம்பாதித்த சொத்துக்களை அவர்கள் உயிருடன் இருக்கும் போது பெற்றோரை கொடுமைப்படுத்தி மிரட்டி அவர்களிடம் கையெழுத்து வாங்கி தன் பெயரில் பத்திரம் மாற்றி எழுதிக்கொள்வது போன்ற செயல்களினால் அவர்கள் உயிருடன் இருக்கும் போது இறந்த பிறகும் அவர்களுக்கு ஆன்மா மனவேதனையுடன் இருக்கும்..
💥"நாம் வாழ்க்கையில் சனி.ராகு.கேது பிடியில் சிக்கும் போதும் பித்ருக்காரனாகிய சூரிய திசை, மாத்ருக்காரனாகிய சந்திர திசை நடக்கும் போதும் அவர்களுக்கு பித்ரு சாபம் இருந்தால் அப்போது மனதாலும் உடல் ரீதியாகவும் துன்பத்தை அனுபவிக்க வைத்து விடும்!
💥"பித்ரு தோஷம் இருந்தால் அது வம்சாவளியாக தொடரும்! இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் எவருக்கேனும் சனி.ராகு.கேது திசை இருந்து ராகு- கேது கால சர்ப்ப தோஷங்கள் இருந்தால் அவர்கள் மிகுந்த துன்பங்களை அனுபவிக்க வைக்க செய்து விடும்...
💥பித்ரு தோஷம் இருந்தால் அவர்களுக்கு பித்ருக்கள் ஆசி இருக்காது! பித்ருக்கள் ஆசி இல்லையெனில் குலதெய்வத்தின் அருள் இருக்காது! குடும்ப ஜாதகத்தில் ஏழரை சனி, சனி திசை, ராகு திசை, கேது திசை நடந்துக் கொண்டிருக்கும் போது பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம் இருந்தால் நாம் குலதெய்வம் கோவிலுக்கு எத்தனை முறை சென்றாலும் நமக்கு நற்பலன் ஏற்படாது!
💥"குலதெய்வத்திற்கு படையல் வைத்து மனகுளிர செய்ய முயற்சித்தாலும் குலதெய்வம் முதலில் பித்ருக்களிடம் கேட்கும்.உன் பிள்ளை வந்திருக்கான்.. ரொம்ப கஷ்டப்படறேன் காப்பாத்துங்க என கேட்கறான் உதவலாமா? என கேட்கும்.அப்போது பித்ருக்கள் கண்ணீர் விட்டபடி எனக்கு தர்ப்பணம் பண்றதில்லை.. அமாவாசைக்கு வீட்டில் எங்களை நினைத்து படைப்பதில்லை எங்களை நினைத்துக்கூட பார்ப்பதில்லை என பித்ருக்கள் கண்ணீர் விட்டால் அடுத்த நொடி குலதெய்வத்தின் கதவு மூடப்பட்டு விடும்...
💥"பிறகு எத்தனை கோவில் கோவிலாக சுற்றி வந்தாலும் எத்தனை சித்தர்கள் ஜீவ சமாதிக்கு சென்று வழிப்பட்டு வந்தாலும் நம் துன்பங்கள் நம்மை விட்டு போகாது.
.பித்ரு தோஷத்தினால் துன்பத்தை அனுபவிததுக்கொண்டிருப்பவர்கள தான் இதை நன்கு உணர முடியும்..
நன்மையே நடக்கும்.
திருச்சிற்றம்பலம் 🙏
வாழ்க மகிழ்ச்சியுடன்.
#தெரிந்து கொள்வோம் #ஆன்மீக #👉வாழ்க்கை பாடங்கள் நல்லாசிரியர் என்பவர் எப்படி இருக்கவேண்டும்?'* என்று நம் பெரியோர்கள் வாழ்ந்துகாட்டினார்கள்.* ஒரு சில உதாரணங்கள் இதோ:
நிகழ்வு 1 - "'நான்' செத்தபின் வா"
நடாதூரம்மாள் என்ற ஒரு ஆசார்யர் தன் பாட்டனாரிடம் ஸ்ரீபாஷ்யம் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டார். பாட்டனாருக்கு வயது முதிர்ந்த காரணத்தால் அவரை எங்களாழ்வானிடம் சென்று கற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
அம்மாள் ஸ்ரீபாஷ்யம் கற்றுக்கொள்ள எங்களாழ்வான் திருமாளிகை (இல்லம்) அடைந்து கதவைத் தட்டினார். எங்களாழ்வான் யார் என்று கேட்க, அதற்கு அவர் “நான் வரதன்” என்று சொல்ல, எங்களாழ்வான் “'நான்' செத்தபின் வா" என்று அனுப்பிவிட்டார்.
அம்மாள் இல்லம் திரும்பிப் பாட்டனாரிடம் இதைப் பற்றி வினவினார். அதற்குப் பாட்டனார் “நாம் எப்பொழுதும் அறிமுகம் செய்யும்பொழுது அடியேன் என்று பணிவுடன் கூறவேண்டும். நான், எனது என்ற சொல்லை உபயோக்கப்படுத்தக் கூடாது. அதுவே அஹங்காரத்தின் காரணமாகும்” என்றார்.
அம்மாள் மறுபடியும் எங்களாழ்வான் திருமாளிகைக்குச் சென்று கதவைத் தட்டினார். இந்த முறை எங்களாழ்வான் யார் வந்திருப்பது என்று கேட்க, அம்மாள் “அடியேன் வரதன் வந்திருக்கிறேன்” என்று பதில் கூறினார். எங்களாழ்வான் இவரது பணிவை மெச்சி, இவரை மனமுவந்து வரவேற்று சிஷ்யராக ஏற்றுக்கொண்டு அவருக்குச் சிறந்த வைஷ்ணவ ஸம்ப்ரதாயக் கொள்கைகளையும் கற்பித்தார்.
நமக்கான முக்கியமான குறிப்பு: சீடனின் இலக்கணமே இப்படியென்றால் சீடனுக்கு ஞானம் போதிக்கும் ஒரு நல்லாசிரியர் எப்படி இருக்கவேண்டும்!!!
நிகழ்வு 2 - "ஆளவந்தார் தம்முடைய சிஷ்யர்களுடன் வருவது போல் இருந்தது"
ஒரு நாள் இராமாநுஜர் அவருடைய சிஷ்யர்களுடன் நடந்து வரும்பொழுது அவருடைய குருவான பெரிய நம்பிகள் இராமாநுஜரை விழுந்து சேவித்தார்.
பிறகு பெரிய நம்பியிடம் "ஏன் சேவித்தீர்?" என்று எல்லோரும் கேட்க “ஆளவந்தார் தம்முடைய சிஷ்யர்களுடன் வருவது போல் இருந்தது" என்று கூறினார். ஆளவந்தார் பெரிய நம்பிகளுடைய குரு!! தமது குருவைத் தமது சீடரில் கண்டார்!!
'வார்த்தாமாலை' என்ற கிரந்தத்தில் ஒரு முக்கியமான வரி - “ஆசார்யர்கள் தங்களுடைய சிஷ்யர்கள் மேல் மிகவும் மரியாதை வைத்திருப்பார்கள்.” இதன்படியே வாழ்ந்தவர் பெரிய நம்பிகள்.
நமக்கான முக்கியமான குறிப்பு: ஒரு நல்லாசிரியர் தம்மை ஒரு ஆசாரியன் என்றே நினைக்கமாட்டார்!!!
#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் உபநிஷதங்கள் – வகைகள் (Upanishads Types)
உபநிஷதங்கள் என்பது வேதங்களின் இறுதி பகுதி. அவை ஆன்மிக ஞானத்தையும், பரபிரம்மத் தத்துவத்தையும் விளக்குகின்றன.
மொத்தம் பாரம்பரியமாக 108 உபநிஷதங்கள் உள்ளன என்று கருதப்படுகிறது. அவை பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
🔱 1️⃣ முக்ய (முக்கிய) உபநிஷதங்கள் – 10
இவை ஆதிசங்கரர் பாஷ்யம் எழுதிய முக்கியமானவை:
ஈசாவாச்ய உபநிஷத்
கேன உபநிஷத்
கட உபநிஷத்
பிரஷ்ன உபநிஷத்
முண்டக உபநிஷத்
மாண்டூக்ய உபநிஷத்
தைத்திரிய உபநிஷத்
ஐதரேய உபநிஷத்
சாண்டோக்ய உபநிஷத்
பிருஹதாரண்யக உபநிஷத்
👉 இவை ஆத்மா – பரமாத்மா ஒன்றே என்ற அத்வைத சித்தாந்தத்தை விளக்குகின்றன.
📜 2️⃣ வேத அடிப்படையிலான வகைகள்
உபநிஷதங்கள் நான்கு வேதங்களின் கீழ் பிரிக்கப்படுகின்றன:
🔹 ரிக் வேத உபநிஷதங்கள் – 10
🔹 யஜூர் வேத உபநிஷதங்கள் – 32
🔹 சாம வேத உபநிஷதங்கள் – 16
🔹 அதர்வ வேத உபநிஷதங்கள் – 31
🕉 3️⃣ தத்துவ அடிப்படையிலான வகைகள்
🔸 வேதாந்த உபநிஷதங்கள் – பரபிரம்மம் பற்றியது
🔸 சைவ உபநிஷதங்கள் – சிவ தத்துவம்
🔸 வைஷ்ணவ உபநிஷதங்கள் – விஷ்ணு தத்துவம்
🔸 சாக்த உபநிஷதங்கள் – சக்தி தத்துவம்
🔸 யோக உபநிஷதங்கள் – யோக மார்க்கம்
🔸 சந்நியாச உபநிஷதங்கள் – துறவற வாழ்க்கை
🌺 சிறப்பு குறிப்பு
✨ உபநிஷதங்கள் "வேதாந்தம்" என்றும் அழைக்கப்படுகின்றன.
✨ "தத் த்வம் அசி", "அஹம் பிரஹ்மாஸ்மி" போன்ற மகாவாக்கியங்கள் இதில் உள்ளன.
✨ ஆன்ம ஞானம் பெறும் உயர்ந்த மார்க்கம் இதுவே.









