
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#பத்தி #ஆன்மீக #தெரிந்து கொள்வோம் இடத்தில் மனமும் பிரபஞ்சமும் இணைகிறதோ* அங்கு தான் ஆன்மிகம் பிறக்கிறது"*
நமக்கு தெளிவான மனநிலை இல்லாத போது தான் நாம் அடுத்தவரை பார்த்து விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளோம்.
தெளிவு வந்து விட்டால் நம்மை நாமே உள்ளுணர்ந்து சிரித்துக்கொள்வோம்.
தண்ணீரில் தூசியும் மனதில் ஆசையும் வந்துவிட்டால் அது தெளிவற்ற நிலைக்கு சென்றுவிடும்.
அதை தெளிவடைய செய்வது தான் தியானம்.
எது உங்களை நல்லவிதமாக உணரவைக்குமோ எதன் மூலம் உங்கள் மனம் பேரானந்த நிலைக்கு ஆட்படுகிறதோ எதன் மூலம் ஐம்புலன்களும் அடங்குகிறதோ எது உங்களை பிரபஞ்சத்துடன் இணைக்கிறதோ அதுவே தியானம்.
நீங்கள் அழுதாலும் சரி அல்லது சிரித்தாலும் சரி உணவு உண்டாலும் சரி உறங்கினாலும் சரி வேலை செய்தாலும் சரி அத்தனையுமே தியானம் தான்.
தன்னை மறப்பது பரவசநிலைக்கு செல்வது தான் தியானம்.
எண்ணங்களற்ற நிலைக்கு மாற வேண்டும்.
எண்ணங்கள் அற்ற நிலையில் தான் மனம் முழுமை அடைந்து நிற்கும்.
முழுமை என்றால் அசைவற்ற நிலை.
இன்னும் தெளிவாக சொல்வதனால் உடலுறவின் போது உச்சக்கட்ட நிலையின் போது மனம் அடைகின்றதே அந்த நிலைதான்.
மனம் அந்த நேரத்தில் தான் அசைவின்றி நிற்கும். அதாவது உச்சக்கட்ட பேரானந்த நிலையின்போது அனைத்துவிதமான மனதின் எண்ணங்கள் அனைத்தும் ஸ்தம்பிக்கின்றன.
ஒவ்வொரு கணத்திலும் நீங்கள் முழுமை அடையலாம். அது உங்கள் அணுகுமுறையில் தான் இருக்கிறது.
இந்த அற்புத நிலையை அடைய நீங்கள் எதையும் இழக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்த இடத்தில் மனமும் பிரபஞ்சமும் இணைகிறதோ அங்கு தான் ஆன்மிகம் பிறக்கிறது. அது மதம் இனம் கடந்த நிலை.
எந்த கணத்திலும் எதுவும் அழியலாம். சும்மா தத்துவங்களை மட்டுமே பேசி பொழுதை கழிப்பதும் வீணே.
வாழும் வாழ்க்கையின் உள்ளே புகுந்து நடக்கும் விசயங்களை தோண்டி துருவி ஆராய்வது தான் சிறந்தது. ஆனால் அதற்கு மனதில் துணிவு வேண்டும். வேதங்கள் சாஸ்திரங்கள் மட்டும் படித்துக்கொண்டு இருந்தால் அனுபவம் வந்து விடாது. அதை தூக்கி எறிந்துவிட்டு அனுபவப்படுங்கள். அது மட்டுமே உங்களக்கு ஞானத்தை கொடுக்கும்.
நீங்கள் தேடும் அந்த பேரானந்த நிலை என்பது நீங்கள் படிக்கும் நூல்களிலோ அல்லது புரியாத தத்துவங்களிலோ இல்லை. நீங்கள் சுயம் கற்று தெளிவதிலே தான் இருக்கிறது.
சித்தர்கள் மீது பக்தி கொண்டாடுவதை விட அவர்களை அவர்களின் ஆசீர்வாதத்தோடு பின்தொடர முயல்வதே சிறந்தது.
பக்தியில் ஆசீர்வாதம் மட்டுமே கிடைக்கும். ஆனால் அவர்கள் அரவணைப்பு மட்டுமே நமக்கு ஞானத்தை கொடுக்கும்.
🙏🌺🙏
#👉வாழ்க்கை பாடங்கள் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #🚹உளவியல் சிந்தனை #🚹உளவியல் சிந்தனை
#🕰️ கோடைக்கால நினைவுகள்🌞 *நட்சத்திரம்*
*நாளை*
*தொடங்குகிறது*
🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍
அக்னி_நட்சத்திரம்
பிறந்த கதை
முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள்.
தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது.
அவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால்தான் தீரும்.
எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான்.
அவ்வனத்தில் உள்ள அரக்கர்களும் கொடிய விலங்குகளும் தாவரங்களும் சாந்தமான விலங்குகளும் தங்களை அக்னி தேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன.
"அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்' என வருணன் கூறினான்.
இதையறிந்த அக்னி கிருஷ்ணரிடம் ஓடி, "நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்' என முறையிட்டான்.
கிருஷ்ணன் அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான்.
அப்போது அக்னி தேவன் தன் ஏழு நாக்குகளால் வனத்தை எரிக்க முற்பட்டான்.
அப்போது கிருஷ்ணர், "21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். அதற்குள் உன் பசியைத் தீர்த்துக் கொள்' என்றார்.
அதன்படி அக்னி காண்டவ வனத்தை அழித்து விழுங்கி, தன் பசி தணிந்த அந்த 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர தினம் என்றும் கத்திரி வெயில் என்றும் கூறுகின்றனர்.
அக்னி நட்சத்திர நாளில் முருகனையும், மீனாட்சி அம்மையையும் வழிபடுவது நல்லது.
பரணிக்குரிய துர்க்கையையும், ரோகிணிக்குரிய பிரம்மனையும் வழிபடுவதுடன், கிருத்திகைக்குரிய தேவதை அக்னியையும் வழிபட்டால் நற்பலன் கிடைக்கும்.
அகமும் புறமும் குளிரும் வண்ணம் தருமம் செய்து இறைவனை வணங்கி வழிபாடு செய்து, கத்திரி வெயிலில் கடவுள் அருள் பெறலாமே...
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் குருவோ அவர் சிவன்.*
எவர் சிவனோ அவர் ஜகத்குரு.*
குருவைக் காட்டிலும் அதிகமான
தத்துவம் இல்லை.
குருவைக் காட்டிலும் அதிகமான
தவம் இல்லை.
குருவைக் காட்டிலும் அதிகமான
ஞானம் இல்லை.
குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை.
குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை.
குருவிற்கு சமமான உயர்வுமில்லை.
சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள் எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டே இருக்கும்.
தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி.
பூஜைக்கு மூலம் குருவின் பாதம்.
மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்.
முக்திக்கு மூலம் குருவின் கிருபை.
ஹர ஹர சங்கர!!!
ஜெய ஜெய சங்கர!!!
#🤣 லொள்ளு #🤣காமெடி ஸ்டேட்டஸ் #😆சிரிப்போ சிரிப்பு😉









