இப்படி இளநீர் குடிப்பது வாடிக்கையாக இருந்தாலும் அதை வித்தியாசமாக இப்படி பாயாசம் புட்டிங் செய்து சாப்பிட்டு பாருங்கள். சுவை நாவை விட்டு நீங்காது. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முழு இளநீர் - 1
தேங்காய் வழுக்கை -
துருவிய தேங்காய் - 1 கப்
கண்டன்ஸ் மில்க் - இனிப்பு சுவைக்கு ஏற்ப
கடற்பாசி - 5 கிராம்
தண்ணீர் - 100 மில்லி
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் துருவிய தேங்காயை மிக்ஸியில் அரைத்து தேங்காய் பால் எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக கடற்பாசியை தண்ணீரில் கழுவி பின் பாத்திரத்தில் 100 மில்லி தண்ணீர் சேர்த்து அதில் கடற்பாசி மற்றும் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சுங்கள். அது நன்கு கரைந்து கெட்டியான பதம் வரும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள்.
இப்போது இளநீரை ஒரு தட்டில் ஊற்றி அதில் சூடாக அப்படியே உருக்கிய கடற்பாசியை சேர்த்து நன்கு கலந்துவிடுங்கள்.
அந்த கலவையை அப்படியே ஆற விடுங்கள். ஃபிரிட்ஜில் கூட வைத்து எடுக்கலாம். அதை எடுத்ததும் ஜெல்லி ஸ்லைஸ் போல வர கத்தியால் மேலே கட்டம் கட்டமாக கோடு போட்டு அதை எடுக்கவும்.
இப்போது வழுக்கை தேங்காயுடன் கண்டன்ஸ் மில்க் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து அதை தேங்காய் பாலுடன் சேர்க்கவும். அதோடு இந்த ஜெல்லிகளையும் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
அவ்வளவுதான் இளநீர் புட்டிங் பாயாசம் தயார். கோடைக்கு இதமான பானமாக இருக்கும். #🍹 கோடைக்கால குளிர் பானங்கள் 🧊 #🏖️ சம்மர் ஸ்பெஷல் ஸ்டேட்டஸ்


