வடோதரா:
குஜராத் மாநிலம் வடோதராவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மணப்பெண் ஒருவர், சரியான நேரத்திற்குத் தனது திருமணத்திற்குச் செல்ல மேற்கொண்ட அதிரடி முடிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வடோதராவின் அஜ்வா சாலையில் மணப்பெண் சென்ற கார் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், போக்குவரத்து சீராவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இதனால் சற்றும் தாமதிக்காத மணப்பெண், உடனடியாக காரை விட்டு கீழே இறங்கினார்.
அங்கிருந்த ஒரு இருசக்கர வாகனத்தில் (Two-wheeler) ஏறி அமர்ந்து, நெரிசலைத் தாண்டிச் சென்று குறித்த நேரத்தில் திருமண மண்டபத்தைச் சென்றடைந்தார். மணக்கோலத்திலேயே அவர் துணிச்சலாக இந்த முடிவை எடுத்தது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இக்கட்டான சூழலிலும் பதற்றமடையாமல் சரியான நேரத்திற்குத் திருமணத்திற்குச் சென்ற மணப்பெண்ணின் இந்தச் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர். #👏Inspirational videos #🎥Trending வீடியோஸ்📺 #😊Positive Stories📰 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴