புதுச்சேரி, வாணரப்பேட்டை, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்ற வாலிபர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். ஜோசப்பிற்க்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தான் ஜோசப் ஷர்மிளாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் காதலை ஏற்க மறுத்த ஷர்மிளா காதலனுக்கு மறுப்பு தெரிவித்து ஜோசப்பிடம் தன்னை பின் தொடர்ந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கூறியதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக ஷர்மிளாவை தினம்தோறும் அவர் செல்லும் இடங்கள் மற்றும் அவர் வேலை செய்யும் கடைக்கு சென்று வரும் போதுபின்தொடர்ந்து சென்று காதலிக்குமாறும், தன்னிடம் பேசுமாறு ஜோசப் அவரை வற்புறுத்தி வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஷர்மிளா பெரிய கடை காவல் நிலையம் மற்றும் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஜோசப் குறித்து புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், ஷர்மிளா நேற்று வழக்கம் போல் அண்ணா சாலையில் இயங்கி வரும் தனியார் ஜவுளி நிறுவனத்தில் தனது பணியை முடித்துவிட்டு இரவு அண்ணா சிலை அருகே உள்ள உழவர் சந்தை வழியாக வீடு திரும்பிய பொழுது அங்கு ஜோசப் கையில் பெட்ரோல் கேனுடன் உடன் காத்திருந்திருக்கிறார். இதனிடையே அங்கு வந்த ஷர்மிளாவிடம் மீண்டும் தன்னை காதலிக்குமாறும் தன்னிடம் பேசும் மாறும் வற்புறுத்தியுள்ளார். எனவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஜோசப் அருகில் நின்று பேசி கொண்டிருந்த ஷர்மிளா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கிறார். இதில் தீ மளமளவென பரவி உடல் முழுவதும் எரிந்த நிலையில் ஷர்மிளா வெப்பம் தங்க முடியாமல் தன்னை காப்பாற்றிக்கொள்ள 100 அடி தூரத்திற்கு ஓடி சென்று கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் உடல் முழுவதும் எரிந்து80℅சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சர்மிளாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஒதியஞ்சாலை போலீசார் ஜோசப்பை கைது செய்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த முதுநிலை கண்காணிப்பாளர் கலைவாணன் தலைமையிலான போலீசார் தடயங்களை பார்வையிட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒதியஞ்சாலை காவல் நிலையம் அருகே பெண்ணின் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது #📢மார்ச் 14 முக்கிய தகவல்🫠
தேனி மாவட்டம் போடி சுப்புராஜ் நகரைச் சேர்ந்த 41 வயதாகும் அப்துல்லா ( கூலித்தொழிலாளி ஆவார் அவருடைய மனைவி அனீஸ் பாத்திமா (39). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் அனீஸ் பாத்திமாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதாகும் ஜெயபாண்டி என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. இது அப்துல்லாவுக்கு தெரியவந்ததால், கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இருப்பினும் அவர் தனது கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.
இந்த விவகாரம் அனீஸ் பாத்திமாவின் அண்ணன் ஜெய்லானிக்கு தெரியவந்துள்ளது. அவர் தனது தங்கையை கண்டித்தார். அதனால், அவர் தனது அண்ணன் மீது போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்துவிட்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள்.
தங்கம் விலை ஆறு மடங்கு உயருமா.. 1980ல் ஈரானில் நடந்த இதே சம்பவம்.. பொருளாதார நிபுணர் விளக்கம்
இதற்கிடையே கள்ளக்காதலனின் தூண்டுதலின்பேரில் அனீஸ் பாத்திமா தனது கணவருக்கு உணவில் விஷத்தை (பூச்சிக்கொல்லி மருந்து) கொஞ்சம், கொஞ்சமாக கலந்து தினமும் கொடுத்து வந்தார். மெல்லக் கொல்லும் விஷமாக அவர் இதை செய்து வந்த நிலையில், உணவின் சுவையில் மாற்றம் இருப்பதை அறிந்த அப்துல்லா இந்த விஷயத்தை அனீஸ் பாத்திமாவின் அண்ணன் ஜெய்லானியிடம் கூறினார்.
இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி அப்துல்லா உயிரிழந்தார். அவருடைய இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் அனீஸ் பாத்திமா தனது கள்ளக்காதலனுடன் தலைமறைவானார். இதனால், அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக போடி டவுன் போலீஸ் நிலையத்தில் ஜெய்லானி புகார் கொடுத்தார், அதன் பேரில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடல் உள்ளுறுப்புகளை சேகரித்து, மதுரை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு
ஆய்வு முடிவில், உணவில் கொஞ்சம், கொஞ்சமாக பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்ததால், அப்துல்லா உடல் நலம் பாதித்து உயிரிழந்து இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அனீஸ் பாத்திமா, ஜெயபாண்டி ஆகிய 2 பேரையும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்தது. வழக்கு விசாரணை முடிவில், அனீஸ் பாத்திமா மற்றும் ஜெயபாண்டி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஸ்வ #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் ர்ணம் ஜெ.நடராஜன் நேற்று தீர்ப்பளித்தார்.
பெட்ரோல் முதல் தார் வரை… 🛢️ கச்சா எண்ணெயில் இருந்து இவ்வளவு பொருட்களா?
உலக பொருளாதாரத்தையே இயக்கும் சக்திகளில் முக்கியமானது கச்சா எண்ணெய் (Crude Oil). எண்ணெய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் இந்த கச்சா எண்ணெய் நேரடியாக பயன்படுத்த முடியாது. அதை பெரிய ரிஃபைனரிகளில் அதிக வெப்பத்தில் கொதிக்கவைத்து பல அடுக்குகளில் பிரித்தெடுத்து நமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களாக மாற்றுகிறார்கள்.
🔥 கச்சா எண்ணெயில் இருந்து கிடைக்கும் முக்கிய பொருட்கள்:
• LPG (சிலிண்டர்) – வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள்.
• பெட்ரோல் – கார்கள், இருசக்கர வாகனங்கள் இயங்க பயன்படும்.
• நாப்தா – பிளாஸ்டிக் மற்றும் ரசாயன பொருட்கள் தயாரிக்க பயன்படும்.
• மண்ணெண்ணெய் (Kerosene) – சமையல் மற்றும் விளக்குகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
• டீசல் – பேருந்து, லாரி போன்ற பெரிய வாகனங்களுக்கு முக்கிய எரிபொருள்.
• லூப்ரிகேன்ட் ஆயில் – வாகன எஞ்சின்களுக்கு பாதுகாப்பாக செயல்படும் எண்ணெய்.
• கப்பல் எரிபொருள் – பெரிய கப்பல்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கனரக எரிபொருள்.
• தார் (Bitumen) – சாலைகள் அமைக்க பயன்படும் முக்கிய பொருள்.
⚙️ இவை அனைத்தும் வெப்பநிலை அடிப்படையில் (Fractional Distillation) பிரிக்கப்பட்டு கிடைக்கிறது. அதனால் தான் ஒரு கச்சா எண்ணெய் உலகின் பல துறைகளுக்கும் அத்தியாவசியமாக உள்ளது.
👉 அதனால் தான் எண்ணெய் வளம் உள்ள நாடுகள் உலக அரசியலிலும், பொருளாதாரத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ##📢மார்ச் 14 முக்கிய தகவல்🤗
#💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ்
#😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
#😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹
#ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #💪Health டிப்ஸ்
#😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
இது என்ன புது ட்ரெண்டா இருக்கு!!! வைரலாகும் விஜய் ரசிகை வீடியோ!!! #💞விஜய் அண்ணா ரசிகை 💞 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎥Trending வீடியோஸ்📺 ##விஜய் தீவிர ரசிகை💐💐 #தளபதி விஜய் ரசிகை 🥰😎
இதெல்லாம் அநியாயமா இல்லையா...? வெறி பிடித்து பேசிய விஜய் ரசிகை #💞விஜய் அண்ணா ரசிகை 💞 ##விஜய் தீவிர ரசிகை💐💐 #தளபதி விஜய் ரசிகை 🥰😎 #🔥 விஜய் ரசிகை 🔥 #விஜய் ரசிகை 😍😍









![ஆரோகிய குறிப்புகள்🚹 - பாதங்களில்வக்கம் பாதம் அல்லது கணுக்காலில் வீக்கம் ஏற்படுவது இதயப் பிரச்னைகள் சிறுநீரக நோய்கள் அல்லது ரத்தவோட்ட பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம் 1 ] பாதங்களில்வக்கம் பாதம் அல்லது கணுக்காலில் வீக்கம் ஏற்படுவது இதயப் பிரச்னைகள் சிறுநீரக நோய்கள் அல்லது ரத்தவோட்ட பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம் 1 ] - ShareChat ஆரோகிய குறிப்புகள்🚹 - பாதங்களில்வக்கம் பாதம் அல்லது கணுக்காலில் வீக்கம் ஏற்படுவது இதயப் பிரச்னைகள் சிறுநீரக நோய்கள் அல்லது ரத்தவோட்ட பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம் 1 ] பாதங்களில்வக்கம் பாதம் அல்லது கணுக்காலில் வீக்கம் ஏற்படுவது இதயப் பிரச்னைகள் சிறுநீரக நோய்கள் அல்லது ரத்தவோட்ட பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம் 1 ] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_710529_3b26049a_1773462847529_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=529_sc.jpg)
