இரண்டு ஆண் குழந்தைகளுக்கு அம்மாவா நீங்க ?
This video is for you ❤ #👨👩👧👦என் குடும்பம்: என் உலகம்😍 #🤗குடும்ப பாசம் #👩அம்மா செல்லம் #👪 அன்பான குடும்பம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் கணேஷ்(15). கணேஷ் அதே பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பொதுத்தேர்வை எழுதிவிட்டு வீட்டிற்கு வந்த கணேஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவரது கணேஷின் தம்பி புவன்ராஜ், கணேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அலறியபடிக் கூச்சலிட்டார். புவன்ராஜுன் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கணேஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் கணேஷைப் பரிசோதித்து பார்த்து விட்டு, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தமிழ் மொழித் தேர்வை சரியாக எழுதவில்லை என மாணவன் வருந்தியதாக தெரிய வந்தது.
இது குறித்து வேலைக்கு சென்றிருந்த தனது தாய் பாரதியிடம் தொலைபேசியில் அழுதபடி கூறியதாகவும், அவர் ஆறுதல் கூறிய பின்னரும் மாணவன் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. ##📢மார்ச் 14 முக்கிய தகவல்🤗
அத்திவரதரை தரிசனம் செய்தால், சகல தோஷங்களும் முன்ஜென்ம பாவங்களும் நீங்கும். நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2019-ஆம் ஆண்டு அத்திவரதர் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு, 48 நாட்கள் பக்தர்களுக்கு சயன மற்றும் நின்ற கோலத்தில் அருள்பாலித்தார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் முதல் 24 நாட்கள் சயன நிலையிலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் தரிசனம் தந்தார்.
இதேபோல், கும்பகோணத்தில் வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் கோயிலிலும் அத்திவரதர் தரிசனம் நிகழ்வு நடக்க இருக்கிறது. பிரம்மன் கோயில் தெரு பகுதியில் உள்ள இந்த கோயில், கடந்த 1739-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 1800 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில், வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் ஆகியோர் தனித் தனி சந்நதிகளில் எழுந்தருளுகின்றனர். இந்த கோயிலில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்தால், சகல தோஷங்களும், முன்ஜென்ம பாவங்களும் நீங்கும். நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.இந்த கோயிலில், கடந்த 1915-ஆம் ஆண்டு அத்திவரதர் பாதாள அறையில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதன் பின்னர் சுமார் 98 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டுஅத்திவரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிலையில் 12 ஆண்டு களுக்கு பிறகு வருகிற 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பாதாள அறையில் இருந்து அத்திவரதர் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார். ஆகம விதிகளின் படி, காலை 8:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்களை தரிசனம் செய்ய ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மும்முரமாக செய்து வருகின்றனர். பக்தர்கள் மாசிமக உற்சவத்திலும் கலந்து கொண்டுஅத்திவரதரையும் தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம். #🙏ஆன்மீகம் #🙏கோவில் #✡️தோஷ பரிகாரங்கள் #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✡️ஜோதிட பரிகாரங்கள்
HP Gas: சிலிண்டரை முன்பதிவு செய்ய 92222-01122 என்ற எண்ணுக்கு BOOK என்று அனுப்ப வேண்டும்
Bharat Gas: சிலிண்டரை முன்பதிவு செய்ய 1800-22-4344 என்ற எண்ணுக்கு BOOK என்று அனுப்ப வேண்டும்.
எஸ்எம்எஸ் மூலமாக முன்பதிவு செய்வது எப்படி?
கேஸ் சிலிண்டர் முன்பதிவை எஸ்எம்எஸ் எனப்படும் குறுஞ்செய்தி மூலமாகவும் மேற்கொள்ளலாம். குறிப்பாக Indane சிலிண்டருக்கு 7718955555 என்ற எண்ணுக்கு உங்களுடைய 16 இலக்க கன்ஸ்யூமர் ஐடியை பதிவிட்டு, ஓர் இடைவெளி விட்டு REFILL என டைப் செய்து அனுப்பவும். எனினும் இதற்கு தொலைபேசி எண் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.
HP கேஸ் சிலிண்டரை (Hindustan Petroleum) பெற, 9092223456 என்ற எண்ணுக்கு உங்களுடைய 16 இலக்க கன்ஸ்யூமர் ஐடியை பதிவிட்டு, ஓர் இடைவெளி விட்டு HPGAS என டைப் செய்து அனுப்பவும்.
அதேபோல பாரத் கேஸ் சிலிண்டரைப் பெற 7715012345 அல்லது 7718012345 என்ற எண்ணுக்கு கன்ஸ்யூமர் எண்ணை உள்ளிட்டு, ஓர் இடைவெளி விட்டு LPG என டைப் செய்து அனுப்பவும்.
செயலி மூலம் முன்பதிவு செய்வது எப்படி?
இவை இரண்டையும் விட மிகவும் எளிதான வழி செயலி மூலமாக புக் செய்வதுதான். இந்த மூன்று நிறுவனங்களும் தனித்தனியாக மூன்று செயலிகளை வைத்திருக்கின்றன. அந்த செயலிகளை பிளே ஸ்டோரில் நேரடியாக சென்று தரவிறக்கம் செய்தும் கேஸ் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய சிலிண்டர் எங்கே இருக்கிறது என்பதையும் நம்மால் ட்ராக் செய்ய முடியும்.
செயலி பெயர்கள் என்ன?
இண்டேன்: IndianOil ONE app.
எச்பி கேஸ்: HP Pay app.
பாரத் கேஸ்: Bharatgas app (or Hello BPCL).
ஜிபே, போன் பே, மொபிக்விக், அமேசான் ஆகிய தேர்ட் பார்ட்டி செயலிகள் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.
செயலி இல்லாமல் நேரடியாக இணையதளம் மூலமாகவும் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.
my.ebharatgas.com,
myhpgas.in,
cx.indianoil.in
இணைய வசதிகள் இல்லாதவர்கள் IVRS மற்றும் மிஸ்டு கால் சேவை மூலமாகவும், 24 * 7 முன்பதிவு செய்யலாம்.
இண்டேன்: 77189-55555
எச்பி கேஸ்: 88888-23456
பாரத் கேஸ்: 77150-12345 அல்லது 77180-12345
மிஸ்டு கால் சேவை
எச்பி கேஸ்: 84549-55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
பாரத் கேஸ்: 77109-55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். ##📢மார்ச் 14 முக்கிய தகவல்🤗
சித்தலிங்கப்பா அருகில் உள்ள கோவிலில் பூசரியாக பணியாற்றி வந்த நிலையில் காலையில் கோவிலுக்கு சென்று மீண்டும் மாலை வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
எனவே ஷாலினி வீட்டில் தனியாக இருந்த நிலையில் அவருக்கு பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் 33 வயதுடைய லாரி டிரைவர் ஹரிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறிஅடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இருவரும் அடிக்கடி ஜோடியாக வெளியில் சுற்றி வந்த நிலையில் இவர்களது கள்ளக்காதல் குறித்து ஒரு வருடத்திற்கு முன்பு அறிந்த சித்தலிங்கப்பா இருவரையும் கண்டித்திருக்கிறார்.
இருப்பினும் ஹரிஷுடன் ஷாலினி தொடர்ந்து பழகி வரவே கணவன் மனைவி ஒருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் சித்தலிங்கப்பா ஷாலினியை அடித்து துன்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கணவனை பிரிந்து ஹரிஷுடன் வாழ நினைத்த ஷாலினி கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். கடவுள் பக்தி கொண்ட சித்தலிங்கப்பா வாரந்தோறும் வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
இதன் காரணமாக கடந்த (மார்ச் 06) ஆம் தேதி வெள்ளிக்கிழமை சித்தலிங்கப்பாவை கொள்ள ஹரிஷிற்கு ஷாலினி திட்டம் தீட்டி கொடுத்திருக்கிறார். அதன்படி சம்பவத்தன்று கோவிலுக்கு சென்ற சித்தலிங்கப்பாவை வழிமறித்த ஹரிஷ் மற்றும் அவரது நண்பர்கள் அவரை அடித்து கொலை செய்திருக்கின்றனர். பின்னர் உடல் மற்றும் இருசக்கர வாகனத்தை விபத்துபோல சித்தரிக்க அருகில் உள்ள குளத்தில் வீசி இருக்கின்றனர்.
பின்னர் கணவர் உடலை உறவினர்கள் துணையுடன் மீட்ட ஷாலினி அவசர அவசரமாக இறுதி சடங்கு செய்து புதைத்திருக்கிறார். இந்நிலையில் சித்தலிங்கப்பா இறப்பில் சந்தேகமடைந்த உறவினர்கள் புகாரளித்த நிலையில் போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த நிலையில் மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் தெரியவந்தது. மனைவி கணவனை கொலை செய்து நடமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்
ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் அன்றாட சிக்கல்களை தவிர்ப்பதை நோக்கமாக கொண்டு அவர்களுக்கான கொள்கைகளை உருவாக்கவும், விழிப்புணர்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆட்டிசம் உலகளாவிய பிரச்னையாக பார்க்கப்படுவதால் அதிக கவனமும் பெறுகிறது. அவர்களின் தனித்துவமான திறன்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் விதமாக இந்த ஆண்டு அதற்கான கொள்கையை ஐ.நா சபை வகுத்துள்ளது.
"வீடு, பணியிடம், கலைகள் மற்றும் கொள்கைகளை வகுப்பதில் பங்களிப்பு'' என்று பொருள் கொள்ளும்படி ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கபட்டவர்களை ஏற்றுக் கொள்ளும்வகையில் கருப்பொருளை உருவாக்கி உள்ளது. "உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். ஒரு போதும் நிறுத்தாதீர்கள்'' என்கிறார் ஸ்டீபென் வில்ட்ஷயர். ஆட்டிசம் குறித்து செயன்முறை சிகிச்சையாளர் (Occupational Therapist) அ.மோகன்ராஜ் அவர்களிடம் பேசினோம்.
ஆட்டிசம் குறைபாடு என்றால் என்ன?
ஆட்டிசம் குறைபாடு என்பது குழந்தை திறன் வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளில் ஒன்று. மூளையின் ஆரம்ப வளர்ச்சியின்போது ஏற்படும் நுண்மையான மாற்றங்களினால் சில நுட்பமான மன வேறுபாடுகள் உண்டாகின்றன. இவை குழந்தைகள் வளரும் போது பல வளர்ச்சிப் பின்னடைவுகளாகவும், பலவிதமான அறிகுறிகளாகவும் வெளிப்படுகின்றன. பொதுவாக தகவல் தொடர்புச் சிக்கல்கள், பேச்சு மொழி மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறன், மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான நடவடிக்கைகள், இறுக்கமான மன நிலை போன்ற அறிகுறிகள் ஆட்டிசத்தை அடையாளப்படுத்தும் முக்கியமான பண்புகள்.
ஆட்டிசத்திற்கான முறையான சிகிச்சை முறைகள் என்னென்ன?
ஆட்டிசம் முழுவதும் குணப்படுத்தி விட முடியாத குறைபாடு. தனி நபர் சிகிச்சை முறைகளை காட்டிலும் குழுவாக இணைந்த நடத்தை சிகிச்சை முறைகள் நல்ல பலனை தருவதாக இருக்கிறது. பேச்சுப் பயிற்றுனர் மூலம் பிறரை தொடர்புகொள்ளும் திறனை அறிந்து பேச்சுத்திறனை மேம்படுத்த முடியும். உதாரணமாக சைகைத்திறனை மேம்படுத்தி தொடர்பு கொள்ளச்செய்வது. குழந்தைகள் உளவியலாளர், வளர்ச்சிப் பரிணாமங்களை மதிப்பிட்டு, கற்றல் குறைபாடுகளைக் கண்டறிவதில் முக்கியமான பங்காற்றுகின்றனர்.
செயல்வழி பயிற்றுனரின் வழிகாட்டுதலில் புலனுணர்வு சிகிச்சை முறைகள் மூலம் அன்றாடத் தேவைகளை நடவடிக்கைகளை இயல்பாக செய்யப் பழக்குவிக்க முடியும். புலங்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், உடலியக்கத் திறனை மதிப்பிடுவது, சுய உதவித் திறனை மேம்படுத்துவது, கண் பார்த்து கைகள் செய்யும் செயல்களை ஒருங்கிணைப்பது உணர்வுகளை சீராகக் கையாள்வது போன்றவைகளை பயிற்சிகள் மூலம் மேம்படுத்த முடியும். இவர்களோடு பெற்றோர்களும் சமூகமாகவும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
ஆட்டிசம் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு வகுப்பறையில் என்ன மாதிரியான மாற்றங்களை செய்தால் அவர்களுக்கு இலகுவானதாக இருக்கும்?
மன இறுக்கம் கொண்ட மாணவர்களுக்கு கற்றல் சமூகத் திறன்கள் மற்றும் தகவல் தொடர்புகள் ஆகியவற்றுடன் தனிபட்ட தேவைகள் இருக்கும், இதை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவரைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் அறிந்துகொள்ள, அந்த மாணவரால் தனது திறனை வெளிப்படுத்த திறன் இருக்கும் பட்சத்தில் அந்த மாணவரிடமே அவர்களின் முழுத் தகவலைக் கேட்டுப் பெற வேண்டும். இதன் மூலம் அவர்களைக் குறித்த ஆர்வமுள்ள தகவலை பகிர்ந்துக்கொள்வார்கள். அவர்களுக்கு விருப்பமான முறையில் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்க வேண்டும். பரிசுகள் அளித்து ஊக்குவிக்க வேண்டும்.
அவர்களுக்குப் பிடித்த பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளை வழங்க வேண்டும். மாணவர்கள் அச்சப்படாத வகையில் கற்பித்தல் உத்திகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு ஓய்வு தேவைப்படும் போது அதை அவர்களுக்கு மறுக்க கூடாது. இதெல்லாம் மிகச்சிறிய விடயமாக நமக்குத் தோன்றக் கூடும். ஆனால், ஆட்டிசம் பாதிக்கப் பட்ட குழந்தைகள் புறக்காரணிகளால் அதிகம் உணர்ச்சிவசப் படுகிறவர்களாக இருப்பார்கள். எளிய வகுப்பறை மாற்றம் கற்றல் திறனை மேம்படுத்தும்.
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி உரிமைகள் இங்கு எந்த அளவில் உள்ளது?
தமிழ்நாட்டில் சிறப்புத் தேவைகள் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் மருத்துவர்கள், உளவியலாளர்கள், செயன்முறை சிகிச்சையாளர், பேச்சு பயிற்சியாளர், சிறப்பு கல்வியாளர் என அனைவரையும் உள்ளடக்கிய குழுவாக இணைந்து இயங்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் சிறப்பு வழிகாட்டும் குழு உள்ளது. பள்ளிக் கல்லூரிகளும் அவர்களுக்கான சிறப்புக் கல்வியை வழங்குகிறது. அவரவர்களின் குறைபாடுகளின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு விதமான பள்ளிகளில் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள். மிதமான குறைபாடு உடைய குழந்தைகள் அனைவரும் ஒருங்கிணைந்த பள்ளிகளிலே சேர்த்துக் கொள்ளலாம். கொஞ்சம் தீவிரத்தன்மை அதிகம் கொண்ட, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு உடைய குழந்தைகள் சிறப்புப் பள்ளிகள் மூலம் கல்வி மற்றும் தொழிற்கல்வி படிப்புகள் வழங்கப் படுகின்றன. இந்தச் சூழல் இன்னும் மேம்பட வேண்டும்.
ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பு திட்டங்கள் எந்த அளவுக்கு உள்ளன?
வேலை வாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடிகள் மிகுந்துள்ள காலகட்டத்தில், வேலை வாய்ப்புகள் மிகுந்த சவாலான ஒன்றாக இருக்கிறது. துரிதகதியில் இயங்கும் நாம் மற்றவர்களின் குரலை செவிமெடுக்கவே தயங்கும் காலத்தில் நிதானமாக இயங்கும் அல்லது அதி துரிதமாக இயங்கும் ஒருவருக்கு வேலைவாய்ப்பை பெறுவது மிகுந்த கடினமான ஒன்றாக இன்றும் இருக்கிறது. அறிவார்ந்த சமூகமாக இயங்கும் நாம் ஒவ்வொருவருக்குமான உரிமையை வழங்க வேண்டியது நமது கடமையாக இருக்கிறது.
எர்ன்ஸ்ட் & யங் (Ernst & young) நிறுவனம் முன்னுதாரணமான நிறுவனமாக திகழ்கிறது. செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் முக்கிய பங்களிப்பாக ஆட்டிசம் பாதிக்கபட்டவர்களைப் பணியில் அமர்த்தி இருக்கிறது.
சமூக உரையாடல்களைத் தவிர்த்து அவர்களது தனி நபர் திறன்களில் கவனம் செலுத்தி ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. பகுப்பாய்வு, கணிதம், தகவல் செயலாக்கம் ஆகியவற்றில் வலுவான திறன்கள் உள்ளவர்களைக் கண்டறிந்து பணியில் அமர்த்தியதன் மூலம் அந்நிறுவனம் மிகச் சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறது. ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களின் பணித்திறன் உற்பத்தித் திறன் அனைவரும் வியக்கும் விதத்தில் இருப்பது கூடுதல் சிறப்பு.
சமூகப் பங்களிப்பும் பெற்றோர்களின் பங்களிப்பும் எந்த வகையில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அல்லது வளர்ந்தவர்களை மேம்படுத்தும்?
குழந்தைகள் ஒரு நேரத்தில் ஒரு சிந்தனை அல்லது யோசனையை மட்டுமே கையாள முடியும். ஆகையால் உரையாடல்களை மையமாகவும் எளிமையாகவும் இருக்கும் படி கவனத்தில் கொள்ள வேண்டும்.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் உண்மையிலேயே ஆர்வமுள்ள ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே பேச விரும்பலாம். குழந்தைகள் நம்மை விட புற நிகழ்வுகளை வித்தியாசமாகப் பார்த்து வேறுவிதமாக நடந்துக் கொள்ளக்கூடும். அவர்களின் அந்த நேர கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
சாதாரண ஒலிகள், சுவைகள், தொடுதல்கள், வாசனைகள் மற்றும் காட்சிகளை நாம் கவனிக்காமல் இருக்கலாம். ஆனால், அந்த சூழல் குழந்தைக்கு உடல் ரீதியாக அல்லது மனரீதியான துன்புறுத்தலாக அமையும். அதை எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தைகள் அதீதமாக கோபப்படும் போதோ அல்லது செய்கைகளுக்கு எதிர்வினையாற்றும் போதோ நிதானத்தை கைக்கொள்ள வேண்டும். நாம் விரும்பியபடி குழந்தைகள் பதில் அளிக்காமல் இருக்கலாம்.
அவர்களுக்கு உணர்ச்சிகளைக் கையாள கடினமானதாக இருக்கக்கூடும். அந்தப் புரிதலோடு குழந்தைகளை அணுக வேண்டும். ஆட்டிசம் குறைபாடு உடைய குழந்தைகள் நேர்மறை எண்ணங்களுக்கு சிறந்த முறையில் பதிலளிக்கின்றனர். மன இறுக்கம் கொண்ட குழந்தை அடிப்படையில் எல்லா குழந்தைகளையும் போல் ஒரு குழந்தை. அறியப்படாத சாத்தியக்கூறுகளுடன் வளர்ந்து வரும் குழந்தை அந்த குழந்தையால் என்ன செய்ய முடியும் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டாம். குறைபாடுகளின் மூலம் நம் குழந்தைகளை குறைத்து நாமே மதிப்பிட வேண்டாம். #👶குழந்தை பராமரிப்பு #⏱ஒரு நிமிட கதை📜 #🧘🏼மன அமைதிக்கான டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம் #📝என் இதய உணர்வுகள்
முழங்கால்களில் இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா? அதற்காக கடைகளில் விற்கப்படும் பல க்ரீம்களை வாங்கியும் பயன்படுத்தியுள்ளீர்களா?
ஆயினும் எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லையா? அப்படியானால் இயற்கை வழிகளை ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள். அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு முழங்கால் பகுதிகளில் பராமரிப்பு கொடுக்கும் போது, அவற்றில் உள்ள பண்புகள் முழங்கால்களில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை முழுமையாக நீக்கி, சருமத்திற்கு ஒரு நல்ல நிறத்தைக் கொடுக்கும். கீழே முழங்கால் கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. எலுமிச்சை மற்றும் தேன்
எலுமிச்சையில் ப்ளீச்சிங் பண்புகள் இருப்பதோடு, வைட்டமின்-சி-யும் அதிகம் உள்ளன. அதே சமயம் தேன் சருமம் வறட்சியடையாமல் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும். இப்படிப்பட்ட எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முழங்கால்களில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும். இப்படி தொடர்ந்து தினமும் பயன்படுத்தும் போது, முழுங்கால்களில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமமும் மென்மையாக இருக்கும்.
2. பேக்கிங் சோடா ஸ்க்ரப்
பேக்கிங் சோடா சருமத்தில் உள்ள இறந்த செல்களை திறம்பட வெளியேற்றி, நல்ல மாற்றத்தைக் காட்டும். அப்படிப்பட்ட பேக்கிங் சோடாவை ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் சிறிது நீரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முழங்கால்களில் தடவி மென்மையாக சில நிமிடங்கள் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தும் போது, சரும நிறம் படிப்படியாக மேம்படும்.
3. கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல் சருமத்தில் பல மாயங்களை புரியக்கூடியது. குறிப்பாக சருமத்தை வறட்சியடையாமல், ஈரப்பதத்துடனும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள உதவும். அதற்கு கற்றாழை ஜெல்லை முழங்கால்களில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் பயன்படுத்தி வந்தால், முழங்கால்களில் உள்ள கருமை மறைவதைக் காணலாம்.
4. உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கில் உள்ள நொதிகளும், மைல்டு ப்ளீச்சிங் பண்புகளும், சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும். அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அதை முழங்கால்களில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் பயன்படுத்தி வரும் போது, முழங்கால்களில் இருக்கும் கருமை நீங்கி, முழங்கால்கள் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
5. தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்
தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஆழமாக ஊடுருவி ஈரப்பதமூட்டும். அதே சமயம் சர்க்கரை சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றும். அதற்கு தேங்காய் எண்ணெயுடன் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, முழங்கால்களில் தடவி சிறிது நேரம் ஸ்க்ரப் செய்து, ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து அடிக்கடி பயன்படுத்தும் போது, முழங்கால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி, முழங்கால்கள் பட்டுப்பான்று மென்மையாகவும், ட்டுப் போன்றும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.) #🌴 Summer முடி பராமரிப்பு 💇♀️ #🤵ஃபேஷன் ரகசியங்கள்🥻 #⛱️Summer அழகு டிப்ஸ் #💁♀️இயற்கை அழகு குறிப்புகள் #😎Summer ஹெல்த் டிப்ஸ்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவில் வசித்து வருபவர் அஜித் வயசு 26 இவரின் மனைவி சுதா இவர்களுக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், 6 மற்றும் 2 வயதுகளில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சுதாவுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இது குறித்து அறிந்த கணவன், மனைவி சுதாவிடம் இது குறித்து கேட்டு வந்ததில் கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வேலை முடித்து வீட்டிற்கு வந்த அஜித், மனைவி வீட்டில் இல்லாததை கவனித்து, சுதாவைத் தேடி சென்றுள்ளார். அப்போது அவர் அருகிலுள்ள பக்கத்து வீட்டு இளைஞரின் வீட்டிலிருந்து வெளியே வருவதைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். அப்போது கோபத்தில் அஜித் சுதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் வீட்டிற்குள் அழைத்துச் சென்று தாக்கிய பின்னரும் ஆத்திரம் தீராமல் அரிவாளை எடுத்து சுதாவை தலையை வெட்டியுள்ளார். அதன் பின்னர் சுதாவின் தலையை வாசலில் வைத்துள்ளார். அலறியபடியே அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவலளித்த நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாவின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, அஜித்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 ##📢மார்ச் 13 முக்கிய தகவல்🤗
கேரள மாநிலம் இடிகேஷன் தலைமறைவாக இருந்த இவரை நெய்யாற்றின்கரை பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ##📢மார்ச் 13 முக்கிய தகவல்🤗
தனது மனைவிகளைத் திருப்திப்படுத்தவும் அவர்களுக்குப் புதிய நகைகளை அணிவித்து அழகு பார்க்கவுமே தான் இத்தகைய திருட்டு மற்றும் வழிப்பறிச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது பாகுலேயன் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை மொத்தம் 22 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்தது அம்பலமானது. கணவனை இழந்தவர்கள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களைக் குறிவைத்துத் தனது பெயரை மாற்றி மாற்றிச் சொல்லி அவர் இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்.
தாஸ், பாபு, ராஜன், கல்யாணராமன் எனப் பல பெயர்களில் உலா வந்த இவர் மீது கேரளா முழுவதும் ஐம்பதிற்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனையடுத்துப் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். 22 மனைவிகளுக்காகத் திருட்டில் ஈடுபட்ட இந்த நபரால் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Kolundhiya ketu illanu solluvena 😅😅 #😅Funny Caption வீடியோ மீம்ஸ்📱 #💑கணவன் மனைவி காமெடி😂 #🔴கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு #🙄வித்தியாசமான வீடியோக்கள்😂 #🤩இன்றைய காமெடி🤣






![#📢மார்ச் 14 முக்கிய தகவல்🤗 - |]r/ BOOKNOWI சிலிண்டர் புக் பண்ண முடியலையா? கேஸ் சிலிண்டர் புக் செய்ய இதோ 6uglB6iT! 6 (mLurj |]r/ BOOKNOWI சிலிண்டர் புக் பண்ண முடியலையா? கேஸ் சிலிண்டர் புக் செய்ய இதோ 6uglB6iT! 6 (mLurj - ShareChat #📢மார்ச் 14 முக்கிய தகவல்🤗 - |]r/ BOOKNOWI சிலிண்டர் புக் பண்ண முடியலையா? கேஸ் சிலிண்டர் புக் செய்ய இதோ 6uglB6iT! 6 (mLurj |]r/ BOOKNOWI சிலிண்டர் புக் பண்ண முடியலையா? கேஸ் சிலிண்டர் புக் செய்ய இதோ 6uglB6iT! 6 (mLurj - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_727855_22f19668_1773440725278_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=278_sc.jpg)




