ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
ShareChat
click to see wallet page
@2085919184
2085919184
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
@2085919184
🇮🇳வாட்ஸ்அப் 9344138689
கர்நாடக பகுதி கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த தேஜஸ்வினி, ஒரு தனியார் உணவகத்தில் பணியாற்றியபோது சந்தீப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கடந்த ஒரு மாதமாக இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், திருமணத்தை மீறிய இந்த உறவு எதிர்பாராத விதமாக ஒரு கொலைச் சம்பவத்தில் முடிந்துள்ளது. சம்பவத்தன்று, தேஜஸ்வினி தனது தோழியின் வீட்டில் சந்தீப்புடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த தேஜஸ்வினி சந்தீப்பைத் தாக்க, பதிலுக்கு ஆவேசமடைந்த சந்தீப் தான் வைத்திருந்த கத்தியால் தேஜஸ்வினியின் வயிற்றில் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, காயங்களுக்குத் தையல் போடப்பட்ட நிலையில் அவர் வீடு திரும்பியுள்ளார். இருப்பினும், வீடு திரும்பிய தேஜஸ்வினி மருத்துவர்கள் அறிவுறுத்திய மருந்துகளை உட்கொள்ளாமல், மீண்டும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காயங்கள் தீவிரமடைந்து, உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழக்கத் தொடங்கின. நிலைமை மோசமானதைத் தொடர்ந்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஒரு சாதாரண வாக்குவாதம், சரியான மருத்துவப் பராமரிப்பு இல்லாததால் கொலையில் முடிந்தது அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிக்கபள்ளாபுரா போலீசார், தலைமறைவாக இருந்த காதலன் சந்தீப்பைக் கைது செய்தனர். காவல்துறையினரின் விசாரணையில், தேஜஸ்வினி அடிக்கடி மது மற்றும் பணம் கேட்டுத் தன்னைத் துன்புறுத்தியதாகவும், அந்த ஆத்திரத்தில் ஏற்பட்ட மோதலில் தான் இந்த அசம்பாவிதம் நடந்ததாகவும் சந்தீப் வாக்குமூலம் அளித்துள்ளார். மதுப்பழக்கமும், ஒரு நிமிட ஆத்திரமும் இரண்டு குழந்தைகளின் வாழ்க்கையைத் தற்போது கேள்விக்குறியாக்கியுள்ளது #📢 மார்ச் 5 முக்கிய தகவல்கள் 🤗
📢 மார்ச் 5 முக்கிய தகவல்கள் 🤗 - "மருந்துக்கு பதில் மது!" ` உயிரைக் குடித்த பிடிவாதம் காதலன் குத்தியும் திருந்தாத பெண்.. கர்நாடகாவை உலுக்கிய கொலை சம்பவம்!! "மருந்துக்கு பதில் மது!" ` உயிரைக் குடித்த பிடிவாதம் காதலன் குத்தியும் திருந்தாத பெண்.. கர்நாடகாவை உலுக்கிய கொலை சம்பவம்!! - ShareChat
ரவி மோகன் - ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் ரவி மோகனின் தலையில் ஜெனிலியா முட்டுவது போன்ற காட்சி அனைவரையும் கவர்ந்து இழுப்பதாக இருந்தது. 'நம்ம தலைல முட்டுனவங்க தலையில மறுபடியும் நம்ம முட்டலைன்னா தலையில கொம்பு முளைக்கும், உனக்கு தெரியாதா' என ஜெனிலியா வெந்தியாக பேசும் இந்த காட்சி கலகலப்பை ஏற்படுத்தியது. இந்தக் காட்சியை நிஜமாக்கும் வகையில் ஒரு திருவிழாவே கர்நாடகாவில் நடந்துள்ளது. அந்தக் காலம் தொட்டு, இந்தக் காலம் வரையில் மாமியாரும் - மருமகளும் எதிரும் புதிருமாகவே இருந்து வருகின்றனர். மாமியார்களுடன் நாத்தனார்களையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம். கள யதார்த்தம் இப்படி இருக்க கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகாவில் உள்ள சிக்கீரண்ணாமாலிகே என்ற கிராமத்தில் ஒரு வினோத திருவிழா நடந்துள்ளது. இந்த திருவிழாவில் விசேஷம் என்னவென்றால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மருமகள்கள், தங்களது மாமியார் மற்றும் நாத்தனார்களின் தலையுடன் முட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஒவ்வொரு வீட்டிலும் மாமியார், நாத்தனார் - மருமகள்களிடையே பணிப்போர், தகராறு, சண்டைகள், போட்டி, பொறாமை என இருந்து வரும் நிலையில் ஒருவருடன் ஒருவர் தலையை முட்டி நேர்த்தி கடன் செலுத்தும் வினோதம், இந்த திருவிழாவில் நடந்துள்ளது. இந்த திருவிழாவை அப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த கிராமத்தில் உள்ள ஆகோபலா நரசிம்மசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வருடாந்திர திருவிழாவை ஒட்டி இந்த வினோத நேர்த்திக்கடன் செய்யப்படுகிறது. குடும்பத்துடன் இந்த திருவிழாவில் பங்கேற்க வருபவர்கள் மருமகள்கள் தங்களது மாமியார்களை தங்களுடைய தாயாகவும், நாத்தனார் தங்களுடைய சகோதரிகளாகவும் நினைக்க வேண்டும், அதுபோல மருமகள்களை மாமியார்கள் தங்களது மகள் போன்றும் நாத்தனார் தங்களது சகோதரி போன்றும் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த வினோதத் திருவிழா உணர்த்தும் கருத்தாக உள்ளது. குடும்பங்கள் செழிக்க வேண்டும், அனைவரும் ஆரோக்கியமாக ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ வேண்டும் என நரசிம்ம சாமி தேரோட்டத்தின் போது தேர் மீது வாழைப்பழம், வெல்லம் மற்றும் காசுகளை வீசி மருமகள்கள் தங்களது மாமியார் மற்றும் நாத்தனாரின் தலையில் முட்டி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு தங்களது மாமியார் மற்றும் நாத்தனார்களின் தலையில் முட்டி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தும் இது போன்ற திருவிழாக்கள் நம்மூரிலும் நடந்தால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். #✨பெண்கள் ஃபிட்னஸ் & ஹெல்த் 💪 #📝மகளிர் தின கோட்ஸ்✨ #👩‍🎓பெண்களின் சக்தி🔥 #gethu girls😎 #🌷மகளிர் தினம் விரைவில்🌟
✨பெண்கள் ஃபிட்னஸ் & ஹெல்த் 💪 - மாமியார் நாத்தனார் தலையில் மருமகள் முட்டிக்கொள்ளும் விநோத திருவிழா. எதுக்கு தெரியுமா? மாமியார் நாத்தனார் தலையில் மருமகள் முட்டிக்கொள்ளும் விநோத திருவிழா. எதுக்கு தெரியுமா? - ShareChat
அம்மு, பப்பு என்று பல பெயர்கள் இருந்தாலும், இந்த 'பேபி' என்ற ஒற்றை வார்த்தைக்கு எப்போதுமே காதலர்கள் மத்தியில் ஒரு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. சாதாரணமாகப் பெயர் சொல்லி கூப்பிடுவதை விட, இப்படிச் செல்லமாகக் கூப்பிடும்போது பெண்களுக்குள் ஒரு இனம் புரியாத சந்தோஷம் வருவது இயல்பு. இது வெறும் சினிமாத்தனமான ஒரு விஷயம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால், இதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய அறிவியல் ரீதியான உண்மையும், உளவியல் ரகசியமும் ஒளிந்திருக்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்ளும் போது பயன்படுத்தப்படும் இந்த வார்த்தை, பெண்களின் மூளையில் எப்பேர்ப்பட்ட மாயாஜாலங்களைச் செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம் வாங்க. மூளையில் நடக்கும் மாற்றம்! பொதுவாகவே பெண்கள் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அவர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களிடம் இருந்து அன்பான வார்த்தைகளை எப்போதுமே அதிகம் எதிர்பார்ப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், தங்களது துணை அவர்களை மிகவும் செல்லமாக அழைக்கும்போது, அவர்களின் மூளையில் டோபமைன் மற்றும் ஆக்ஸிடோசின் போன்ற மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் உடனடியாகச் சுரக்கத் தொடங்குகின்றன. இந்த ரசாயன மாற்றம் அவர்களுக்குள் ஒரு பாதுகாப்பான, ஆழமான அன்பைப் பெறுவது போன்ற உன்னதமான உணர்வைத் தருகிறது. யாரோ ஒருவர் நம்மைத் தாங்கிக்கொள்ள இருக்கிறார் என்ற ஒரு பெரிய நிம்மதி அந்த ஒற்றை வார்த்தையில் அவர்களுக்கு மிக எளிதாகக் கிடைத்துவிடுகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கும்! இன்றைய பரபரப்பான இயந்திர வாழ்க்கை முறையில் வேலைப்பளு, குடும்பப் பொறுப்புகள் எனப் பெண்கள் ஒவ்வொரு நாளும் பலவிதமான மன அழுத்தங்களைச் சந்திக்கிறார்கள். அலுவலகத்தில் ஆயிரம் டென்ஷனோடு ஒரு பெண் வீடு திரும்பும்போது, அவளது துணையிடம் இருந்து வரும் இந்த அன்பான அழைப்பு ஒரு பெரிய மேஜிக் போல வேலை செய்யும். விமர்சனம்: Fourth Floor - அந்த 4-வது மாடியில் அப்படி என்னதான் இருக்கிறது? அந்த வார்த்தையைக் கேட்ட மறுகணமே அவர்களின் நரம்பு மண்டலம் தளர்வடைந்து, மன அழுத்தம் சட்டெனக் குறையத் தொடங்குவதாக உளவியல் நிபுணர்கள் அடித்துச் சொல்கிறார்கள். எப்பேர்ப்பட்ட கோபத்தில் இருந்தாலும் சரி, இந்த ஒரு வார்த்தை அவர்களை அப்படியே கூல் ஆக்கிவிடும் சக்தி கொண்டது. உறவை பலப்படுத்தும்! வெறுமனே பேருக்குக் கூப்பிடுவதை விட, ஆழமான காதலோடு இப்படி அழைப்பது இரண்டு பேருக்கும் இடையிலான நெருக்கத்தைப் பன்மடங்கு அதிகரிக்கிறது. ஒரு பெண்ணை இப்படி அழைக்கும்போது, அவர் தன் குழந்தைப் பருவத்தில் எந்தவிதமான கவலையுமின்றி உணர்ந்த அதே பாதுகாப்பையும் கவனிப்பையும் மீண்டும் பெறுவதாகவே உணர்கிறார். 'Dancing Plague' - வரலாற்றின் விசித்திரமான நோய்... இது அறிவியலா? ஆன்மிகமா? உங்களுக்குத் தெரியுமா? இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், தங்களது காதல் உறவின் மீதான நம்பிக்கையையும் மிகப்பெரிய அளவில் வலுவாக்குகிறது. விலை உயர்ந்த பெரிய பெரிய பரிசுகள் கொடுத்து சமாதானம் செய்வதை விட, அன்பாகக் கூப்பிடும் இந்த ஒற்றை வார்த்தை பல பெரிய சண்டைகளை ஆரம்பத்திலேயே சுமுகமாக முடித்து வைத்துவிடும். எனவே, உங்களின் அன்பை வார்த்தைகளில் வெளிப்படுத்த எப்போதுமே தயங்காதீர்கள். அந்தச் சின்னச் சின்ன அன்பான செயல்கள்தான் ஒரு உறவை எப்போதுமே உயிர்ப்போடு வைத்திருக்கும். #🚹உளவியல் சிந்தனை #💪ஊக்குவிக்கும் கதைகள் #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📝என் இதய உணர்வுகள்
🚹உளவியல் சிந்தனை - பெண்கள் ' பேபி' என்று கூப்பிட்டால் ஏன் இவ்வளவு சந்தோஷப்படுகிறார்கள் தெரியுமா? இதோ அந்த சைக்காலஜி ரகசியம்! பெண்கள் ' பேபி' என்று கூப்பிட்டால் ஏன் இவ்வளவு சந்தோஷப்படுகிறார்கள் தெரியுமா? இதோ அந்த சைக்காலஜி ரகசியம்! - ShareChat
இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி உலகிலுள்ள அனைவருக்கும் இது பொருந்தும். பசியை உணர்ந்து இறைவனை நெருங்கும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு, தற்போது உணவுத் திருவிழாவாக மாறிவிட்டதோ எனக் கருதத் தோன்றுகிறது. நபிகள் நாயகம் கூறிய உணவு எடுத்துக்கொள்ளும் முறை மாறி, உணவு விருந்தாகவே நோன்பு துறத்தல் மாறியுள்ளது. இது குறித்தும் இதற்கான காரணங்கள் குறித்தும் பார்ப்போம். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்று இஸ்லாமியர்களுக்கு ரமலான் பண்டிகை. ரமலானின் முக்கிய அம்சமாக உள்ளது நோன்பு கடைப்பிடிப்பது. இது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று. பசியை உணர்ந்து, பசியிலும் ஒழுக்கத்தைப் பின்பற்றி இறைவனை நெருங்குவதற்காக ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. உணவு உண்ணாமலும் நீர் அருந்தாமலும் பசியுடன் நோன்பு இருப்பதால், உணவு கிடைக்காமல் வறுமையில் இருப்பவனின் பசியை நோன்பு இருப்பவனால் உணர முடியும். இறைவனின் மீதான அச்சமும் பசியுடன் இருப்பவன் மீதான இரக்கமும் மனிதத்தை வாழச் செய்யும் வழியாகப் பார்க்கப்படுகிறது. பசித்தவனுக்கு உணவு அளிப்பது இறைவனை நம்புவதற்கு அடுத்தபடியான நற்செயலாக இஸ்லாமில் நம்பப்படுகிறது. இதனால், ரமலான் மாதத்தில் நாள் முழுவதும் நோன்பு இருந்து அதன் பிறகு நோன்பு துறக்கப்படுகிறது. ரமலான் மாத இறுதியில், அதாவது ரமலான் நாளில் (பெருநாள்), உணவு சமைத்துப் பாகுபாடின்றி அனைவருக்கும் அளிக்கப்படுகிறது. இதுவே ரமலான் சிறப்பு. ரமலான் நோன்பு என்பது நாள் முழுவதும் 14 மணி நேரம் வரை உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது. நோன்புக்கு முன்பு, அதிகாலை 4 மணிக்கு சஹர் என்ற பெயரில் உணவு எடுத்துக்கொள்வர். இது வீட்டில் வழக்கமாக சமைக்கும் உணவு. சஹர் என்பது நோன்புக்கு முன்பு உடலை தயார்ப்படுத்த எடுத்துக்கொள்ளும் உணவு. பின்னர் பகல் பொழுது முழுக்க உணவு, நீர் அருந்தாமல் மாலையில் இஃப்தார் என்ற பெயரில் உணவு எடுத்துக்கொள்ளப்படும். இது பெரும்பாலும் மாலை நேரத் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களில் அளிக்கப்படும். சிலர் வீடுகளிலும் எடுத்துக்கொள்வார்கள். இவ்வாறு நோன்பு நாள்களில் சஹர், இஃப்தார் என இரு வேளைகளில் உணவு எடுத்துக்கொள்வது வழக்கம். இதில் நோன்பின் நோக்கம் சிதையாமல் இருந்தது. பசியை உணர்ந்து, இறைவனை நினைத்து சுய கட்டுப்பாட்டை வளர்த்த நோன்பு, தற்போது நோன்பு துறத்தல் என்ற பெயரில் உணவுத் திருவிழாவாகவே மாறியுள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. நாள் முழுவதும் பசியைத் தாங்கி இருப்பதற்காக அளவாக எடுத்துக்கொள்ளப்படும் சஹர் உணவை, பல்வேறு உணவகங்கள் தற்போது பொட்டலம் கட்டி விற்கத் தொடங்கியுள்ளன. அதிகாலையிலேயே டெலிவரியும் செய்கின்றன. இதற்கு ஒரு படி மேலே, இஃப்தார் உணவானது தற்போது 'இஃப்தார் ஸ்நாக்ஸ்' என்ற பெயரில் பல்வேறு உணவகங்களிலும் சாலையோரக் கடைகளிலும் விற்பனையாகின்றன. பண்டிகை காலத்தையொட்டி சாலையோரக் கடைகள் அதிகரிப்பதையும் சிறு வியாபாரிகள் லாபம் ஈட்டுவதையும் தவிர்க்க முடியாது. இதைத் தவறாகவும் கூற முடியாது. ஆனால், இஃப்தார் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் நொறுக்குத் தீனிகளும், கட்லட் உள்ளிட்ட உணவுகளும் ஆரோக்கியமானவையாக இருப்பதில்லை என்பதே வருத்தம். நோன்பு துறக்கும்போது பேரீச்சை, நோன்புக் கஞ்சி, பழங்கள், பழரசம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. மிஞ்சிபோனால் வடை இருக்கும். ஆனால், தற்போது பல பெயர்களில் எண்ணெய்யில் பொரித்த பலகாரங்களுடனும், வகை வகையான நிற குளிர்பானங்களுடனுமே நோன்பு துறக்கப்படுகிறது. சிக்கன் கேண்டி, சிக்கன் கட்லட், பீட்சா, எண்ணெய்யில் பொரித்த ஐஸ்கிரீம், எண்ணெய்யில் பொரித்த நூடுல்ஸ், இறால் பாப்கார்ன் எனப் புதிய புதிய பெயர்களில் விற்கப்படும் உணவுகள் ஆரோக்கியமற்றவையாகவே இருக்கின்றன. நாள் முழுவதும் நீர் கூட அருந்தாமல் நோன்பு இருந்துவிட்டு நோன்பு துறக்கும்போது, இத்தகைய உணவுகளை உண்ண நேரும்போது உடல்நலக் கோளாறு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. நோன்பு துறக்கும்போது முதல் வாய் உணவு மிகவும் ருசியானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பழரசம், பேரீட்சை வைக்கப்படுகிறது. இஃப்தார் ஸ்நாக்ஸ் கடைகளால் நோன்பு துறக்கும் வழிமுறையும் சீரழிகிறது. பசியில் இருந்துவிட்டு உணவு எடுத்துக்கொள்ளும்போது உணவின் அருமையையும் பசியின் தன்மையையும் உள்ளூர உணர வேண்டும். ஆனால், தற்போது இஃப்தார் உணவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எல்லாம் நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, உடல் சோர்வு போன்றவற்றுக்கே வழிவகுக்கும். ஆரோக்கியம், சுவை பற்றிய கவலையின்றி நுகர்வு கலாசாரத்தில் சிக்கியுள்ள இளம் தலைமுறையினர் பலர், சமூக வலைதள விடியோக்களை நம்பி, விடியோக்களில் கூறுபவர்கள் பரிந்துரைக்கும் கடைகளுக்குச் சென்று உணவு ஆர்டர் செய்து புகைப்படம் எடுத்துப் பதிவிட வேண்டியது புதிய சடங்காக மாறியுள்ளது. இதில், மனிதாபிமானத்தை வளர்க்கும் நோக்கம் சிதைந்து, மக்களைப் புதிய உணவுகளைத் தேடத் தூண்டுகிறது. புதிய உணவுகளையும் புதிய கடைகளையும் அறிமுகம் செய்வதில் தவறில்லை. உணவு வகைகளை விமர்சித்து சமூக வலைதளங்களில் விடியோ பதிவேற்றம் செய்பவர்கள், உணவை அதீதமாக விளம்பரப்படுத்தி இளைஞர்களை, குறிப்பாக நோன்பு இருப்பவர்களை திசை திருப்பாமல், குறைந்தபட்ச பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம். பார்வையாளர்களைக் கவர்வதற்காக வகை வகையான நிறங்களில் உணவுகளை விற்பனை செய்பவர்கள், இஃப்தார் ஸ்நாக்ஸ் என்ற பலகையை வைக்காமலாவது அவற்றை விற்பனை செய்யலாம். நோன்பு இருப்பவர்களின் நோக்கத்தை இவை அவமதிக்கின்றன என்பதை இவர்கள் உணர வேண்டும். ரமலான் மாதத்தில் ஒரு நன்மை செய்தால் அது நூறு நன்மை செய்த பலனைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக இஸ்லாமியர்களுக்கு ரமலான் மாதம் என்றாலே செலவு மாதம்தான். புதுத்துணி, ஈகை உணவு என வீட்டிற்கும் சமூகத்திற்கும் செலவிடுவார்கள். இதனைத் தொடர்ந்து ஒன்றரை மாதத்தில் பக்ரீத் பண்டிகை. அதுவும் செலவு இழுக்கும் பண்டிகை. ஆகையால், கடைகளில் விற்பனை செய்யப்படும் பல பலகாரங்களை அன்றாடம் வாங்கி நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களால் நோன்பு துறக்க முடியாது. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இஃப்தார் ஸ்நாக்ஸ் விரும்பிகள் பலரும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களே. உடலையும் மனதையும் சீராக்க வந்த இந்த மாதம், மருத்துவமனைக்குச் செல்லும் மாதமாகிவிடக் கூடாது. நோன்புக் கஞ்சி, பழங்கள், தண்ணீர் என எளிமையான முறையில் நோன்பு துறப்பதே இறைவனை அடையும் உன்னத நோக்கத்தின் வழி என்பதை நோன்பு இருக்கும் சகோதரர்கள் உணர்ந்து சுயக் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. ரமலான் மாதம் வயிற்றுக்கு உணவிடுவதுடன் நின்றுவிடாமல், உண்மையான இறையச்சத்தையும் ஆரோக்கியத்தையும் தரும் மாதமாக அமையட்டும். #🌙ரம்ஜான் ஸ்பெஷல்🥘🥻 #🌙ரம்ஜான் வரலாறு📕 #🤲ரமலான் நோன்பு நேரம்⏰ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🌙ரம்ஜான் ஸ்பெஷல்🥘🥻 - ணவுத் உ திருவிழாவாகிறதா, ரமலான் நோன்பு? ணவுத் உ திருவிழாவாகிறதா, ரமலான் நோன்பு? - ShareChat
. சிகப்பு மிளகாய் சுற்றி போடுதல்:*🌶️ சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட திருஷ்டி கழியும் என்பதும் ஒரு நம்பிக்கை. திருஷ்டி இருந்தால் மிளகாய் வெடிக்கும் ஆனால் நமக்கு கமறாது. திருஷ்டி இல்லையெனில் நமக்கு நெடி ஏற்பட்டு கமறும். *3. கற்பூரம் ஏற்றுதல்:-*🔥 கற்பூரத்தை ஏற்றி வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு, தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்பூரத்தை வாசலில் போட்டுவிடுவர். கற்பூரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையுமாம். *4. படிகாரம் சுற்றுதல்:-*💎 மிளகாய் சுற்றி போடுவதுபோலவே படிகாரம் கொண்டும் திருஷ்டி சுற்றி போடலாம். திருஷ்டி இருந்தால் நெருப்பில் போடப்பட்ட படிகாரம் ஒரு பொம்மை மாதிரி மாறிவிடுமாம். *5. கருப்பு வளையல்:-*🧿 பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு கருப்பு வளையலை ஆரத்தியுடன் சேர்த்து சுற்றிபோடும் வழக்கம் இன்றும் நாம் பல வீடுகளில் காண்கிறோம். *6.மண் சிறிது மண்ணை கையிலெடுத்து திருஷ்டி சுற்றிவிட்டு அதில் எச்சிலை 3 முறை துப்பச்செய்து அதை வெளியில் எறிந்தால் திருஷ்டி போய்விடும் என்பதும் இன்றும் நம்பப்படுகிறது. இன்று பல கிராமங்களில் இது நடைமுறையில் உள்ளது! *7. எலுமிச்சை🍋 குங்குமம்:-* சில வியாபார ஸ்தலங்களுக்கும், வண்டி வாகனம் , வீடு முதலியவற்றுக்கும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின்மேல் குங்குமத்தை நன்றாக தடவி திருஷ்டி சுற்றி விட்டு வாசல் வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிவதையும் இன்றும் நாம் பின்பற்றுகிறோம். *8. தேங்காய்🥥 உடைத்தல்:-* ஒரு தேங்காயின்மேல் கற்பூரத்தை ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்றும் பரவலாக நம்பப்பட்டு வருகிறது. *9. பூசணிக்காய் உடைத்தல்:-*🍈 பூசணிக்காயில் குங்குமத்தையும் சிறிது சில்லறைகளையும் போட்டு அதன்மீது கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்று பரவலாக நம்பப்பட்டு வருகிறது. *10. ஆரத்தி:-* கல்யாணம் மற்றும் பூஜை முதலியன முடிந்தவுடனும் மற்றும் சில முக்கியமான சமயத்திலும் ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் வெகு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவும் ஒரு விதமான திருஷ்டி கழித்தலே ஆகும். *11. பட்சி திருஷ்டி:-* குழந்தை பிறந்த வீடுகளில் மாடியில் குழந்தை துணியை உலர வைத்திருப்பார்கள். அவற்றை சூரியன் மறைவதற்குள் எடுத்துவிடுவார்கள். ஏனென்றால் சூரிய அஸ்தமன சமயத்தில்தான் பறவைகள் தமது கூட்டுக்கு திரும்புமாம். அப்பொழுது அவை இத்துணிகளைப்பார்த்து கண் வைக்குமாம். அது குழந்தைக்கு ஆகாது. ஆகவேதான் துணிகள் சூரியன் மறைவதற்குமுன் எடுக்கப்படுகின்றன. பொதுவாக நீங்கள் திருஷ்டி சுற்றி போடும்பொழுது அனைவரும் கையில் கருப்பு கயிறு அல்லது சிகப்பு கயிறு இருக்க வேண்டும்! நெற்றியில் பொட்டோ, குங்குமமோ அல்லது விபூதியோ இட்டுக்கொண்டிருக்க வேண்டும். கிழக்கு நோக்கி நிற்கச்சொல்லி திருஷ்டி சுற்றி போடவேண்டும். இப்படி சுற்றும்பொழுது திருஷ்டி மந்திரம் தெரிந்தவர்கள் அதை கூறி சுற்றுவர். பெரியவர்கள் "தன் திருஷ்டி, தாயார் திருஷ்டி, நாய் திருஷ்டி, நரி திருஷ்டி, உற்றார் திருஷ்டி… தீயசக்திகள் திருஷ்டி" என்று பலவிதமான திருஷ்டிகளை கூற கேட்டிருக்கிறேன். திருஷ்டி மந்திரத்தை மனதிற்குள்தான் கூறவேண்டுமாம். அதை ஒரு குருவின்மூலம் உபதேசம் பெற்றுதான் பிரயோகிக்க வேண்டும். பொதுவாக ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி மேலும் மிக முக்கியமான நாளான அமாவாசை தினங்கள் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தினமாக கருதப்படுகிறது. அதுவும் அமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வந்தால் அது திருஷ்டி சுற்றி போடுவதற்கு மிகவும் ஏற்ற தினமாகும். சூரிய அஸ்தமன சமயம்தான் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தருணமாக கருதப்படுகிறது. இந்த பழக்கத்தையெல்லாம் எப்படி நம்புவது என்றும் சிலர் கேட்கிறார்கள். ஒரு மனிதனுக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகள் மனக்குழப்பங்கள் நஷ்டங்கள் தீராத வியாதிகள்… வந்த வியாதி குணமடையாமல், வந்த தடைகள் விலகாமல் இருந்திருந்தால் யாராவது இன்று திருஷ்டி சுற்றி கொள்ள முன்வருவார்களா? பலன் கிடைப்பதனால்தானே இந்த பழக்கம் ஆயிரக்கணக்கான வருடங்களாக விட்டுப்போகாமல் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. *எண்ணம் போல் வாழ்க்கை* *எண்ணம் போல் தான் வாழ்க்கை* #👁கண் திருஷ்டி பரிகாரங்கள்🔯 #கண் திருஷ்டி எப்படி தெரிந்துகொள்ள #கண் திருஷ்டி விலக எளிய பரிகாரம் #கண்👀 திருஷ்டி🕳 #கண் திருஷ்டி பரிகாரம்
👁கண் திருஷ்டி பரிகாரங்கள்🔯 - 23 சம்பந்தமாக கண்திருஷ்டி திருஷ்டி சுத்திபோடுவதில் இத்தனை வகைகளா. ?? 23 சம்பந்தமாக கண்திருஷ்டி திருஷ்டி சுத்திபோடுவதில் இத்தனை வகைகளா. ?? - ShareChat
ஹெப்பூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான பரமேஷ் என்ற கார் ஓட்டுநர், ஏற்கனவே விவாகரத்தான நிலையில் ஆஷா என்ற பெண்ணை காதலித்து கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு மறுமணம் செய்துகொண்டார். இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி, காதல் மீது இருந்த நம்பிக்கையில் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். தொடக்கத்தில் சுமூகமாகச் சென்ற இவர்களது வாழ்க்கையில், ஆஷாவின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றம் விரிசலை உண்டாக்கத் தொடங்கியது. கேட்டரிங் வேலைக்குச் சென்று வந்த ஆஷா, கடந்த சில ஆண்டுகளாகத் தேவையற்ற காரணங்களுக்காகப் பரமேஷிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்திருக்கிறார். மனைவியின் கோபத்தைப் பொறுத்துக்கொண்டு குடும்பம் நடத்தி வந்த பரமேஷுக்கு, ஒருகட்டத்தில் ஆஷாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் ஆஷாவிடம் கேட்டபோது, “பிடித்தால் இரு இல்லையெனில் விவாகரத்து கொடுத்துவிட்டுப் போ” என ஆஷா அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பரமேஷ் ஆஷாவைத் தீவிரமாகக் கண்காணித்தபோது, அவர் தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு நபருடன் முறையற்ற உறவில் இருப்பதைக் கண்டுபிடித்துக் கண்டித்துள்ளார். தங்கள் காதலுக்குத் தடையாக இருக்கும் கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த ஆஷா, கடந்த ஜனவரி 31-ம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பரமேஷை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், எவ்வித பதற்றமும் இன்றி உறவினர்களிடம் தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி, முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்து உடலை அடக்கம் செய்துள்ளார். யாரிடமும் பிடிபடாமல் நாடகமாடிய ஆஷா, கணவர் இறந்த இருபதே நாட்களில் தனது கள்ளக்காதலனைத் திருமணம் செய்துகொண்டதுதான் அவர் செய்த மிகப்பெரிய தவறாக முடிந்தது. பரமேஷ் இறந்து சில நாட்களிலேயே ஆஷா மறுமணம் செய்துகொண்டது அவரது தங்கைக்கும் உறவினர்களுக்கும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போலீசார் ஆஷாவைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், கள்ளக்காதலனுக்காகத் தனது கணவனைத் திட்டமிட்டு கொலை செய்ததை ஆஷா ஒப்புக்கொண்டார். தற்போது ஆஷாவை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இந்தக் கொலையில் அவரது கள்ளக்காதலனுக்குத் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்துள்ளது #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #🎥மார்ச் 04 முக்கிய தகவல்🗞
காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 - ( మ  கள்ளக்காதலனுடன் Tn ுந்த ೭6U6urBlrಹ மனைவி". நேரில் பார்த்த கொன்று . கணவனை மீண்டும் 20 நாட்களுக்குள் நடந்த அதிர்ச்சி ! ( మ  கள்ளக்காதலனுடன் Tn ுந்த ೭6U6urBlrಹ மனைவி". நேரில் பார்த்த கொன்று . கணவனை மீண்டும் 20 நாட்களுக்குள் நடந்த அதிர்ச்சி ! - ShareChat
பெர்சியன் வளைகுடாவில் பதற்றம்: USS Abraham Lincoln கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் என தகவல் பெர்சியன் வளைகுடாவில் அமெரிக்காவின் USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பல் மீது ஈரான் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலின் காரணமாக கப்பல் கடலில் மூழ்கியதாக சில தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன. #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #😊Positive Stories📰 #🎥Trending வீடியோஸ்📺 #📺வைரல் தகவல்🤩 #📰மார்ச் 04 முக்கிய தகவல்🎥
📱சிறப்பு வீடியோக்கள்🎦 - ShareChat
00:23
நேரலையில் பேசிக் கொண்டிருந்த பெண்... திடீரென தாக்கிய ஏவுகணை! துபாயில் அதிர்ச்சி காட்சி வைரல்! #📰மார்ச் 04 முக்கிய தகவல்🎥 #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺 #😊Positive Stories📰 #📱சிறப்பு வீடியோக்கள்🎦
📰மார்ச் 04 முக்கிய தகவல்🎥 - ShareChat
00:25
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதி கங்கா நகரைச் சேர்ந்த விகாஸ் கண்ணன் என்பவருக்கும், கன்னங்காடு பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி ஷோபியாவிற்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த ஷோபியா, திருமணத்திற்குப் பிறகும் தனது படிப்பைத் தொடர வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு ஷோபியா கர்ப்பமடைந்த நிலையில், இனி கல்லூரிக்குச் செல்ல வேண்டாம் என விகாஸ் கண்ணன் வற்புறுத்தியுள்ளார். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று கணவரின் எதிர்ப்பையும் மீறி ஷோபியா கல்லூரிக்குச் சென்று திரும்பியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மனமுடைந்த ஷோபியா தனது அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அவர் சடலமாகத் தொங்குவதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த அனுப்பர்பாளையம் போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, ஷோபியாவின் உறவினர்கள் மற்றும் கல்லூரி நண்பர்கள் மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். ஷோபியாவின் கணவர் விகாஸ் கண்ணன் ஒரு 'சைக்கோ' போல நடந்துகொண்டதாகவும், கல்லூரிக்குச் செல்லும்போது தலைநிறைய பூ வைப்பது உள்ளிட்ட சிறு விஷயங்களுக்குக் கூட டார்ச்சர் செய்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. திருமணமாகி மூன்றே மாதங்களில் பெண் தற்கொலை செய்துகொண்டதால், இச்சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ (RDO) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் கல்வி உரிமையைச் சிதைப்பதும், மனரீதியான சித்திரவதைகள் செய்வதும் எத்தகைய விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக அமைந்துள்ளது. விகாஸ் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தத் தற்கொலைச் சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #🔴இன்றைய முக்கிய செய்திகள்
🔴இன்றைய முக்கிய செய்திகள் - 1ul "எதுக்கு டி உனக்கு இவ்வளவு பூ". 19 வயது இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய சைக்கோ கணவன் ஜன்னல் வழியே காத்திருந்த  பேரதிர்ச்சி..! 1ul "எதுக்கு டி உனக்கு இவ்வளவு பூ". 19 வயது இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய சைக்கோ கணவன் ஜன்னல் வழியே காத்திருந்த  பேரதிர்ச்சி..! - ShareChat
கதறும் அமெரிக்க ராணுவம் “போரை முடிவுக்குக் கொண்டு வந்து, அவளை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வா.” #america vs iran #iran & us war / ஈரான் & அமெரிக்க போர் #இஸ்ரேலுக்கு ஈரான் பகீர் மிரட்டல்! #👆அமெரிக்கா, ஈரான் இடையேயான பிரச்சினையை திருநெல்வேலிக்காரர் சமாதானப்படுத்துக் கிறார்
america vs iran - ShareChat
00:10