கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பொன்னானி பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான முகமது. இவருக்கும், பாத்திமா (22) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது.
பாத்திமாவின் நடத்தை
இந்த நிலையில், முகமதுவுக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், போதைக்கு அடிமையான அவர், தனது மனைவி பாத்திமாவின் நடத்தையில் தீராத சந்தேகம் கொண்டுள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று வீட்டில் முகமதுவுக்கும் பாத்திமாவுக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற முகமது, பாத்திமாவைத் தாக்கியதுடன், தான் வைத்திருந்த துப்பட்டாவை எடுத்து அவரது கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் மூச்சுத்திணறிய பாத்திமா கண் இமைக்கும் நேரத்தில் உயிரிழந்தார். பாத்திமா இறந்ததை உணர்ந்த முகமது, கொலையை மறைக்கத் திட்டமிட்டார்.
கடற்கரையில் வீசப்பட்ட உடல்
யாரும் இல்லாத நள்ளிரவு நேரத்தில், பாத்திமாவின் உடலை பொன்னானி துறைமுகம் அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரைக்குக் கொண்டு சென்றார். அங்கு உடலைப் போட்டுவிட்டு, அதன் மேல் மணலை அள்ளிப் போட்டு மறைக்க முயன்றுள்ளார். பாதி உடல் வெளியே தெரியும் நிலையில், மணலை மட்டும் குவித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
மறுநாள் காலை, அந்த வழியாகச் சென்ற மக்கள் கடற்கரை மணலில் ஒரு பெண்ணின் கால் மட்டும் வெளியே தெரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த தெரு நாய்கள் அந்த பெண்ணின் காலைக் கடித்து இழுத்துக் கொண்டிருந்தது மக்களை மேலும் உறைய வைத்தது. உடனே இதுகுறித்து பொன்னானி காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது.
முன்னுக்குபின் முரண்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மணலுக்குள் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடலை மீட்டனர். விசாரணையில் அது பாத்திமா என்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவரது கணவர் முகமது முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இறுதியில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனது மனைவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, முகமதுவை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பாத்திமாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பொன்னானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகே இந்த கொலையில் வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்த முழு விவரமும் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். ஒன்றரை ஆண்டுகளில் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை சந்தேகத்தால் முடிவுக்கு வந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...!!! #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #ஏப்ரல் 30 முக்கிய தகவல் 📺
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சீதாராம் என்பவருக்கும், ரேணுகா என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்வில், ரேணுகாவின் தவறான பழக்கவழக்கங்கள் புயலை வீசியுள்ளன.
கணவர் சீதாராமுக்குத் தெரியாமல், ரேணுகா மூன்று வெவ்வேறு ஆண்களுடன் ரகசியத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதில் குறிப்பாக ரமணா ரெட்டி என்பவருடன் பழகியபோது, அவருடனான அந்தரங்கத் தருணங்களை ரேணுகா வீடியோவாகப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
மனைவியின் இந்தத் தவறான செயல்பாடுகள் மற்றும் அந்தரங்க வீடியோ விவகாரம் கணவர் சீதாராமுக்குத் தெரிய வந்துள்ளது. தான் உயிருக்கு உயிராக நேசித்த மனைவியின் துரோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத சீதாராம், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் விரக்தியடைந்த அவர், அருகில் உள்ள ஏரியில் குதித்துத் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சீதாராமின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்குக் காரணமான அந்தரங்க வீடியோ மற்றும் ரேணுகாவின் கள்ளத்தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்
#🔴தேர்தல் கருத்துக்கணிப்புகள்😎 #🗞️இன்றைய தேர்தல் களம்🟠 #👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅ #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க
#👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅ #🗞️இன்றைய தேர்தல் களம்🟠 #🔴தேர்தல் கருத்துக்கணிப்புகள்😎 #📺அரசியல் 360🔴 #🙋♂️தமிழக வெற்றி கழகம்
முதலில் பிரியாணி, அதன் பிறகு தர்பூசணியை அந்த குடும்பத்தினர் சாப்பிட்ட நிலையில், சில மணி நேரங்களிலேயே இந்தத் துயரம் நேர்ந்துள்ளது. மருத்துவ உலகமும் போலீசாரும் இந்த மர்மத்தை உடைக்கப் போராடி வருகின்றன.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள நெரிசலான பகுதி பிண்டி பஜார். அந்தேரியில் மொபைல் உதிரி பாகங்கள் கடை நடத்தி வந்த அப்துல்லா டொடாக்கியா (44), தன் மனைவி நஸ்ரின் (35) மற்றும் மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (12) ஆகியோருடன் சனிக்கிழமை வழக்கம் போல இரவு உணவு சாப்பிட்டுள்ளார்.
பிரியாணி- தர்பூசணி
உறவினர்களுடன் சேர்ந்து அவர் பிரியாணி - புலாவ் விருந்து சாப்பிட்டுள்ளார். இரவு 10:30 மணிக்கு நடந்த அந்த விருந்தில் மற்ற உறவினர்களும் சாப்பிட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. விருந்துக்குப் பிறகு, இரவு 1 மணியளவில் இந்தக் குடும்பத்தினர் மட்டும் தனியாகத் தர்பூசணி பழத்தைச் சாப்பிட்டுள்ளனர். இதுதான் அவர்கள் மற்றவர்களுடன் பகிராமல் சாப்பிட்ட ஒரே உணவு.
இந்தச் சூழலில் அதிகாலை 5 மணி அளவில் நான்கு பேருக்கும் கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் உடல் அசதி ஏற்பட்டுள்ளது. முதலில் அருகே உள்ள மருத்துவர் வந்து சிகிச்சை கொடுத்துள்ளார். இருப்பினும், எந்தவொரு பலனும் இல்லை. நிலைமை மோசமானதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அவர்களைச் சபூ சித்திக் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு 12 வயது சிறுமி ஜைனப் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அடுத்தடுத்து உயிரிழப்பு
மற்ற மூவரும் ஜே.ஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. முதலில் தாய் நஸ்ரின் மதியம் உயிரிழந்தார். மாலை மூத்த மகள் ஆயிஷா உயிரிழந்தார். இரவு 10:30 மணியளவில் தந்தை அப்துல்லாவும் உயிரிழந்தார். ஒரே நாளில் ஒரு குடும்பமே மொத்தமாக அழிந்துபோனது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்பூசணி காரணம் இல்லை
பாதிக்கப்பட்டவர்களின் உடலில் கடுமையான புட் பாய்சனிங் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஜே.ஜே மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், "தர்பூசணி பழம் பழையதாக இருந்தாலோ அல்லது கெட்டுப் போயிருந்தாலோ கூட, அது இவ்வளவு விரைவாக நான்கு உயிர்களைப் பறிக்க வாய்ப்பில்லை" என்கிறார்கள் நிபுணர்கள்.
பழத்தில் ஏதாவது நச்சுத் தன்மையுள்ள கெமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கே.இ.எம் (KEM) மருத்துவமனை நிபுணர்களும் தர்பூசணி மட்டும் பொதுவாக இவ்வளவு கொடிய விளைவை ஏற்படுத்தாது என்றே கருதுகின்றனர். அதாவது பிரியாணி + தர்பூசணி சாப்பிட்டது பிரச்சனை இல்லை.. அந்த தர்பூசனியில் வேறு ஏதோ கெமமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பதே சந்தேகமாக இருக்கிறது.
பிரியாணி+ தர்பூசணி சாப்பிட்டால் மரணம்? பறிபோன 4 உயிர்கள்.. மருத்துவர்கள் தந்த மிக முக்கிய விளக்கம்!
போலீஸ் விசாரணை
ஜே.ஜே மார்க் போலீசாரும் விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். தர்பூசணி பழத்தின் மாதிரிகள், இறந்தவர்களின் உடற்கூறுகள் மற்றும் வயிற்றில் இருந்த உணவு மாதிரிகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் இன்று அல்லது நாளை கிடைக்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, தர்பூசணி சாப்பிடுவதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இறந்தவர்களின் உடல் மும்பை மரைன் லைன்ஸ் பகுதியில் உள்ள மயானத்தில் திங்கட்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் கோடைக் காலத்தில் அமுதம் போன்றவை. அதிலும் தினசரி வெளியே செல்வோர் கட்டாயம் சாப்பிடும் ஒரு பழமாக தர்பூசணி இருக்கிறது. எனவே, இந்த மர்மத்திற்கான பதிலை போலீசார் சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. அப்போது தான் பொதுமக்களும் அச்சமின்றி தர்பூசணியை சாப்பிட முடியும் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஏற்படுத்திய தாக்கம், திராவிட கட்சிகளை தங்கள் தேர்தல் வியூகங்களை மாற்றியமைக்க கட்டாயப்படுத்தியுள்ளது. கடந்த கால தேர்தல்களில் ஓட்டுக்கு 500 ரூபாய் அல்லது 1000 ரூபாய் என்பது வழக்கமாக இருந்த நிலையில், இந்த முறை அது 5000 முதல் 6000 ரூபாய் வரை உயர்ந்ததற்கு விஜய்யின் வரவுதான் முக்கிய காரணம் என்று துக்ளக் ரமேஷ் சுட்டிக்காட்டுகிறார். “விஜய் இல்லாவிட்டால் ஓட்டுக்கு 5000 ரூபாய் கிடைத்திருக்காது, விஜய் இல்லாவிட்டால் ஓட்டுக்கு 6000 ரூபாய் கிடைத்திருக்காது” என்று அவர் கூறியிருப்பது, தேர்தல் களத்தில் நிலவும் கடும் போட்டியையும், ஒரு புதிய கட்சியின் எழுச்சியால் பழைய கட்சிகள் அடைந்துள்ள அச்சத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
தமிழக தேர்தல் வரலாற்றில் “பணம் வாங்குவது ஆனால் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுவது” என்ற மனநிலை எப்போதும் உண்டு என்றாலும், இந்த தேர்தலில் அது ஒரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. திராவிட கட்சிகளிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு, அதே சமயம் தங்களுக்கு பிடித்தமான மாற்றத்திற்காக வாக்களிக்கும் ஒரு மௌன புரட்சி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான், “தமிழகத்தில் முதல்முறையாகப் பணம் கொடுத்தவர்களுக்கு ஓட்டு போடாமல் இருந்தது இந்த தேர்தலாக தான் இருக்கும்” என்ற துக்ளக் ரமேஷின் கருத்து சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. மக்கள் பணத்தை ஒரு உரிமையாக பெற்றுக்கொண்டு, மனசாட்சிப்படி வாக்களித்துள்ளனர் என்ற வாதம் வலுப்பெற்றுள்ளது.
தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் துக்ளக் ரமேஷின் இந்த பேச்சை கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பதிவுகளில், தவெக ஆதரவாளர்கள் தங்கள் தலைவர் ஏற்படுத்திய மாற்றமே திராவிட கட்சிகளின் கஜானாவை காலி செய்ய வைத்துள்ளது என்று பதிவிட்டு வருகின்றனர். “எங்கள் தலைவரின் வருகை ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் நடுக்கத்தை ஏற்படுத்தியதால்தான், அவர்கள் இவ்வளவு பெரிய தொகையைத் தர முன்வந்தனர்; ஆனால் மக்கள் தெளிவான முடிவை எடுத்துவிட்டனர்” என்பதே தவெக நிர்வாகிகளின் சமூக வலைத்தள நிலைப்பாடாக உள்ளது. இது ஒருபுறம் பெருமையாக பேசப்பட்டாலும், மறுபுறம் தேர்தல் முறைகேடுகளின் உச்சத்தையும் காட்டுகிறது.
முடிவாக, துக்ளக் ரமேஷின் இந்த விமர்சனம் தமிழக அரசியலின் கசப்பான உண்மையை நையாண்டியுடன் வெளிப்படுத்துகிறது. ஒரு புதிய கட்சியின் வருகை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக, ஓட்டுக்கு கொடுக்கப்படும் பணத்தின் மதிப்பை உயர்த்தியுள்ளது என்ற விமர்சனமும் இதில் பொதிந்துள்ளது. எனினும், பணம் கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்ற திராவிட கட்சிகளின் கணக்கை விஜய் மாற்றியமைப்பாரா? அல்லது பண பலமும் அதிகார பலமும் வழக்கம் போல தங்கள் ஆதிக்கத்தை செலுத்துமா? என்பதற்கான விடை வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரிந்துவிடும். அதுவரை, “பணத்தை பெற்றுக்கொண்டு விஜய்க்கு நன்றி சொல்லுங்கள்” என்ற இத்தகைய கருத்துக்கள் விவாத பொருளாகவே இருக்கும். #🗞️இன்றைய தேர்தல் களம்🟠 #🔴தேர்தல் கருத்துக்கணிப்புகள்😎 #📺அரசியல் 360🔴 #🙋♂️தமிழக வெற்றி கழகம் #🔥நம் ஓட்டு நம் உரிமை💪
சென்னை திருவொற்றியூர் மணலி பகுதியை சேர்ந்தவர் 37 வயதுடைய முத்துக்குமார் இவர் மணலி மாநகராட்சி மண்டலத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த நிலையில் அதே பாதி சேர்ந்த சுந்தரி என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது....
இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் ஒரு வருட முன்பு மனைவி இறந்து தனியாக வசித்த உறவினர் சதீஷ்குமார் என்பவரை முத்துக்குமார் அழைத்து வந்து தனது வீட்டில் தங்க வைத்திருக்கிறார்.
இந்நிலையில் முத்துக்குமார் தினந்தோறும் காலை வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலையில் தான் வீடு திரும்புவார் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் வீட்டில் தனியாக இருந்த குணசுந்தரிக்கும், சதிஷ்குமாருக்கும்இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் கணவனை விட்டு காதலனுடன் வாழ நினைத்த குணசுந்தரி கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெரியபாளையத்தில் உள்ள அம்மா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் குணசுந்தரி தனது கள்ளக்காதலன் சதீஷ்குமாருடன் வீட்டை விட்டு வெளியேறியது தெரிவந்தது. இதனால் மனமுடைந்து விரக்தியில் இருந்த முத்துக்குமார் இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் இறப்பதற்கு முன்பு செல்போனில் ஆடியோ பதிவு செய்தும், கடிதம் எழுதி வைத்தும் "எனது மரணத்திற்கு காரணம் மனைவி குணசுந்தரியும் சதீஷ்குமாரும் தான்" என தெரிவித்துள்ளார்.
தன்னை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலி காவல் நிலைய போலீசார் இறந்த முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் இது குறித்து சட்டரீதியாக எவ்வித நடவடிக்கை எடுக்க முடியாது என போலீசார் புகாரை வாங்க மறுத்ததால் பிரேத பரிசோதனை முடித்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குகொண்டுவரப்பட்ட முத்துக்குமார் உடலை வழியில் மடக்கி பொன்னேரி நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மணலி காவல் நிலைய உதவி ஆணையர் விவேகானந்தன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு புகார் மீது நடவடிக்கை எடுப்பதாகஉறுதி அளித்ததை அடுத்து மறியலைகைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பொன்னேரி நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் முத்துக்குமார் எழுதி வைத்த கடிதத்தில் "என் மனைவி வேற என்ன கரணம் சொல்லி இருந்தாலும் நான் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டேன் ஆனால் என்னிடம் நல்ல முறையில் நடந்து கொண்டு இப்படி செய்தது என்னால் தங்க முடியவில்லை, கடந்த (ஏப் 2) ஆம் தேதி கூட நாங்கள் ஒன்றாக குளித்து உடலுறவு கொண்டோம், குண பிறகு இரண்டு நாட்களிலேயே என்னை ஏமாற்றிவிட்டால்" என எழுதி வைத்திருப்பது முத்துக்குமாரின் உறவினர்கள் மீது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #கூடா நட்பு கேடாய் முடியும்.. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 ##📺ஏப்ரல் 28 முக்கிய தகவல்👉
#⚡️Trending Quotes✍️ #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #👍உன்னால் முடியும் #⏱ஒரு நிமிட கதை📜
#❤️காதல் நட்பு போன்றது🤝 #🤝நேர்மையான துணை👫 #👩❤️👨Long Distance Relationship #💑என் முதல் காதல்😊 #💝இதயத்தின் துடிப்பு நீ













