ஹெப்பூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான பரமேஷ் என்ற கார் ஓட்டுநர், ஏற்கனவே விவாகரத்தான நிலையில் ஆஷா என்ற பெண்ணை காதலித்து கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு மறுமணம் செய்துகொண்டார். இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி, காதல் மீது இருந்த நம்பிக்கையில் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். தொடக்கத்தில் சுமூகமாகச் சென்ற இவர்களது வாழ்க்கையில், ஆஷாவின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றம் விரிசலை உண்டாக்கத் தொடங்கியது.
கேட்டரிங் வேலைக்குச் சென்று வந்த ஆஷா, கடந்த சில ஆண்டுகளாகத் தேவையற்ற காரணங்களுக்காகப் பரமேஷிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்திருக்கிறார். மனைவியின் கோபத்தைப் பொறுத்துக்கொண்டு குடும்பம் நடத்தி வந்த பரமேஷுக்கு, ஒருகட்டத்தில் ஆஷாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் ஆஷாவிடம் கேட்டபோது, “பிடித்தால் இரு இல்லையெனில் விவாகரத்து கொடுத்துவிட்டுப் போ” என ஆஷா அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பரமேஷ் ஆஷாவைத் தீவிரமாகக் கண்காணித்தபோது, அவர் தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு நபருடன் முறையற்ற உறவில் இருப்பதைக் கண்டுபிடித்துக் கண்டித்துள்ளார்.
தங்கள் காதலுக்குத் தடையாக இருக்கும் கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த ஆஷா, கடந்த ஜனவரி 31-ம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பரமேஷை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், எவ்வித பதற்றமும் இன்றி உறவினர்களிடம் தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி, முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்து உடலை அடக்கம் செய்துள்ளார். யாரிடமும் பிடிபடாமல் நாடகமாடிய ஆஷா, கணவர் இறந்த இருபதே நாட்களில் தனது கள்ளக்காதலனைத் திருமணம் செய்துகொண்டதுதான் அவர் செய்த மிகப்பெரிய தவறாக முடிந்தது.
பரமேஷ் இறந்து சில நாட்களிலேயே ஆஷா மறுமணம் செய்துகொண்டது அவரது தங்கைக்கும் உறவினர்களுக்கும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போலீசார் ஆஷாவைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், கள்ளக்காதலனுக்காகத் தனது கணவனைத் திட்டமிட்டு கொலை செய்ததை ஆஷா ஒப்புக்கொண்டார். தற்போது ஆஷாவை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இந்தக் கொலையில் அவரது கள்ளக்காதலனுக்குத் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்துள்ளது #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #🎥மார்ச் 04 முக்கிய தகவல்🗞
பெர்சியன் வளைகுடாவில் பதற்றம்: USS Abraham Lincoln கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் என தகவல்
பெர்சியன் வளைகுடாவில் அமெரிக்காவின் USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பல் மீது ஈரான் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலின் காரணமாக கப்பல் கடலில் மூழ்கியதாக சில தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன. #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #😊Positive Stories📰 #🎥Trending வீடியோஸ்📺 #📺வைரல் தகவல்🤩 #📰மார்ச் 04 முக்கிய தகவல்🎥
நேரலையில் பேசிக் கொண்டிருந்த பெண்... திடீரென தாக்கிய ஏவுகணை! துபாயில் அதிர்ச்சி காட்சி வைரல்! #📰மார்ச் 04 முக்கிய தகவல்🎥 #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺 #😊Positive Stories📰 #📱சிறப்பு வீடியோக்கள்🎦
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதி கங்கா நகரைச் சேர்ந்த விகாஸ் கண்ணன் என்பவருக்கும், கன்னங்காடு பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி ஷோபியாவிற்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த ஷோபியா, திருமணத்திற்குப் பிறகும் தனது படிப்பைத் தொடர வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.
திருமணத்திற்குப் பிறகு ஷோபியா கர்ப்பமடைந்த நிலையில், இனி கல்லூரிக்குச் செல்ல வேண்டாம் என விகாஸ் கண்ணன் வற்புறுத்தியுள்ளார். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று கணவரின் எதிர்ப்பையும் மீறி ஷோபியா கல்லூரிக்குச் சென்று திரும்பியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மனமுடைந்த ஷோபியா தனது அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அவர் சடலமாகத் தொங்குவதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து வந்த அனுப்பர்பாளையம் போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, ஷோபியாவின் உறவினர்கள் மற்றும் கல்லூரி நண்பர்கள் மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். ஷோபியாவின் கணவர் விகாஸ் கண்ணன் ஒரு 'சைக்கோ' போல நடந்துகொண்டதாகவும், கல்லூரிக்குச் செல்லும்போது தலைநிறைய பூ வைப்பது உள்ளிட்ட சிறு விஷயங்களுக்குக் கூட டார்ச்சர் செய்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
திருமணமாகி மூன்றே மாதங்களில் பெண் தற்கொலை செய்துகொண்டதால், இச்சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ (RDO) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் கல்வி உரிமையைச் சிதைப்பதும், மனரீதியான சித்திரவதைகள் செய்வதும் எத்தகைய விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக அமைந்துள்ளது. விகாஸ் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தத் தற்கொலைச் சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #🔴இன்றைய முக்கிய செய்திகள்
கதறும் அமெரிக்க ராணுவம்
“போரை முடிவுக்குக் கொண்டு வந்து, அவளை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வா.” #america vs iran #iran & us war / ஈரான் & அமெரிக்க போர் #இஸ்ரேலுக்கு ஈரான் பகீர் மிரட்டல்! #👆அமெரிக்கா, ஈரான் இடையேயான பிரச்சினையை திருநெல்வேலிக்காரர் சமாதானப்படுத்துக் கிறார்
ரயிலில் பிரசவம் பார்த்த வாலிபர் 👶🚆
மும்பை ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட சூழலில், இளைஞர் விகாஷ் வீடியோ கால் மூலம் பெண் மருத்துவர் வழிகாட்டுதலுடன் உதவி செய்து பாதுகாப்பாக பிரசவம் பார்த்தார்.
‘நண்பன்’ படத்தை நினைவூட்டும் வகையில் நடந்த இந்த சம்பவத்தில், தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருப்பதாக தகவல். #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #😊Positive Stories📰 #🎥Trending வீடியோஸ்📺
வடோதரா:
குஜராத் மாநிலம் வடோதராவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மணப்பெண் ஒருவர், சரியான நேரத்திற்குத் தனது திருமணத்திற்குச் செல்ல மேற்கொண்ட அதிரடி முடிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வடோதராவின் அஜ்வா சாலையில் மணப்பெண் சென்ற கார் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், போக்குவரத்து சீராவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இதனால் சற்றும் தாமதிக்காத மணப்பெண், உடனடியாக காரை விட்டு கீழே இறங்கினார்.
அங்கிருந்த ஒரு இருசக்கர வாகனத்தில் (Two-wheeler) ஏறி அமர்ந்து, நெரிசலைத் தாண்டிச் சென்று குறித்த நேரத்தில் திருமண மண்டபத்தைச் சென்றடைந்தார். மணக்கோலத்திலேயே அவர் துணிச்சலாக இந்த முடிவை எடுத்தது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இக்கட்டான சூழலிலும் பதற்றமடையாமல் சரியான நேரத்திற்குத் திருமணத்திற்குச் சென்ற மணப்பெண்ணின் இந்தச் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர். #👏Inspirational videos #🎥Trending வீடியோஸ்📺 #😊Positive Stories📰 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
#☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲துஆக்கள்🕋








