ShareChat
click to see wallet page
search
ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பது, ஒரு தலைமுறையின் கல்வியைச் சிதைப்பதற்குச் சமம் தமிழகத்தில் உள்ள 182 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் லட்சக்கணக்கான ஏழை, எளிய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் முதுகெலும்பாகத் திகழ்பவர்கள் கௌரவ விரிவுரையாளர்கள். அத்தகைய 8,000க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தீர்க்க முனையாமல், அவர்களை வீதியில் இறங்கிப் போராட வைத்திருக்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பது என்பது, அந்த ஆசிரியர்களை மட்டும் பாதிப்பதல்ல; அது ஒரு தலைமுறையின் கல்வியையே சிதைப்பதற்குச் சமம் என்பதை இந்த அரசு உணர வேண்டும். கடந்த ஒரு வார காலமாகத் தமிழகம் முழுவதும் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கௌரவ விரிவுரையாளர்கள், தற்போது சென்னை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் முன்னெடுத்து வரும் காத்திருப்புப் போராட்டம், அவர்களின் வாழ்வாதாரப் போராட்டத்தின் உச்சகட்டமாகும். வகுப்பறையில் நின்று பாடம் எடுக்க வேண்டிய அறிஞர்கள், இன்று தங்கள் உரிமைகளுக்காக அலுவலக வாசலில் அமர்ந்து போராடும் அவலநிலை தொடர்வது தமிழகத்திற்கே நேர்ந்த இழுக்காகும். நியாயமான உரிமைகளுக்காக ஒரு ஜனநாயக நாட்டில் ஆசிரியர்கள் வீதியில் தவம் கிடப்பது நிர்வாகத் தோல்வியின் அடையாளம். அரசு இன்று அவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் இருப்பது அவர்களின் பிழைப்புவாத அரசியலையே காட்டுகிறது. கல்வித் துறையை மேம்படுத்துவதாகத் தம்பட்டம் அடிக்கும் இந்த அரசு, ஆசிரியர்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் மட்டும் மௌனம் சாதிப்பது ஏன்? விளம்பர அரசியலை விடுத்து, களத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகளில் இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும். எனவே, தமிழக அரசு உடனடியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கௌரவ விரிவுரையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வகுப்பறையில் இருக்க வேண்டியவர்கள் வாசலில் நிற்கும் நிலை நீடித்தால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதை திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும். #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - ShareChat