27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஒற்றை வரி குணநலன்கள்
என்று ....
தனிப்பட்ட முறையில் எதுவும் கிடையாது..
அனைத்து வித
கிரகம் மற்றும் நட்சத்திர பலன்களும்
சுபத்துவ பாவத்துவ விதிகளின் அடிப்படையிலேயே நிகழ்கிறது.
ஒரு சிலர்
நட்சத்திரக் குறியீட்டின் அடிப்படையிலும்.
நட்சத்திர அதிபதியின்
காரகத்துவ அடிப்படையிலும்.
நட்சத்திர பலனை எடுத்துரைத்தாலும்.
குறிப்பாக ...
ஒரு நட்சத்திரம்
அந்த நட்சத்திரத்திற்கு உண்டான அதிபதியின்
தன்மைகளுக்கு ஏற்பவும் ...
மேலும்..
ஒரு நட்சத்திரம் இடம்பெறக்கூடிய
ராசி அதிபதியினுடைய
தன்மையையும்
சேர்ந்தே பிரதிபலிக்கும்.
அந்த வகையில்....
01.அஸ்வினி
அடிதடியையும் அமைதியையும்
தெரிந்து வைத்துக் கொண்டுள்ள
சாதுவான நபர்
ஆனால் மிரண்டால் காடு கொள்ளாது.
02.பரணி
அதிகாரத்தையும் ஆடம்பரத்தையும்
ஒரே நேரத்தில்
விரும்புபவர்.
03.கிருத்திகை
அதிகார குணம்
சாந்தமான குணம்
கலந்த நபர்.
04. ரோகினி
அழகு நளினம் மென்மை பெண்மை தாய்மை போன்ற குணங்களை கலந்த நபர்.
05.மிருகசீரிடம்
கோபத்திலும் புத்திசாலித்தனத்தை கைவிடாத நபர்.
06.திருவாதிரை
சாதுரியத்துடன் தங்களுடைய தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள்பவர்.
07.புனர்பூசம்
எந்த நிலையிலும் கௌரவத்தை கைவிடாத நபர்.
08.பூசம்
அழகும் அசட்டுத்தனமும்
கலந்த கணவனை அல்லது மனைவியை சுதந்திரம் கொடுத்து விட்டுக் கொடுப்பது போல் விட்டு கொடுத்து
தங்களுடைய கட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய நபர்.
09.ஆயில்யம்
இவருடைய புத்திசாலித்தனத்தையும் செயல்பாடுகளையும்
பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவிக்கும் நபர்.
10.மகம்
பிறருடைய பொருளுக்கு ஆசைப்படாத
தங்களுடைய பொருளை பிறருக்கு விட்டு தராத
நபர்.
11.பூரம்
அதிகாரமும் அழகும் நிறைந்த
நபர் .
அதே சமயம் அழகால் ஆபத்தை எதிர்கொள்கிற நபர்.
அதிகாரத்தால் ஆபத்தை சமாளித்துக் கொள்ளக்கூடிய நபர்.
12.உத்திரம்
அனைவரும் அனைத்தும்
மிகச் சரியாக இருக்க வேண்டும்
என்கிற கொள்கையுடைநபர்.
13.ஹஸ்தம்
படித்த தாய்மையுள்ளம் கொண்ட பெண்.
படித்த பொறுமைமிக்க
ஆண்.
14.சித்திரை
மௌனமே புத்திசாலித்தனம்
என்பதை அறிந்து அதன் மூலம் தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளக்கூடிய நபர்.
15.சுவாதி
ஒருவரை பார்த்தவுடன் அவரை ஸ்கேன் செய்து அவருக்கு தகுந்தார் போல் நடந்து கொள்ளக்கூடிய
நபர்.
16.விசாகம்
வைராக்கியம் மிகுந்தவர்
பிறருடைய கண்களுக்கு
அது பிடிவாத குணமாக தெரியும்.
17.அனுஷம்
பொறுமையாக செயல்படுபவர்
தீர்க்கமாக முடிவெடுப்பவர்
இவர்களுடைய அதிகப்படியான பொறுமையும் முடிவெடுப்பதில் காலதாமதமும் பிறருடைய விமர்சனத்துக்கு உள்ளாகும்.
18.கேட்டை
பணத்தின் மதிப்பு தெரிந்தவர்
சேமிப்பு செய்பவர்
சிக்கனவாதி
19.மூலம்
அலட்டிக் கொள்ளாத ஆன்மீகவாதி
எதையும் எளிதில் கடந்து செல்லக்கூடிய பக்குவம் நிறைந்த நபர்.
20.பூராடம்
முயற்சியையும் போர்க் குணத்தையும் முதலீடாக கொண்டு வாழ்வின் ஒவ்வொரு கட்டமாக நகர்ந்து செல்லக் கூடிய நபர்.
21.உத்திராடம்
கௌரவத்தை கண் இமை போல நினைப்பவர்.
கௌரவமாக நடந்து கொள்வதன் மூலம் அதிர்ஷ்டத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் நபர்.
22.திருவோணம்
நண்பர்கள் அதிகம் உள்ள
தெரிந்தே நண்பர்களிடம் ஏமாறக்கூடிய
பரந்த மனம் படைத்தவர்.
23.அவிட்டம்
எதிரிகளின் அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாமலும்
எதிரிகளால் கிடைத்த சன்மானத்தை பெற்றுக் கொள்ள முடியாமலும்
தன்னைத்தானே முதல் எதிரியாக நினைத்துக் கொள்ளக்கூடிய நபர்.
24.சதயம்
செய்யும் செயலின் மூலமாக
மேல் நிலையிலிருந்து கீழ் நிலைக்கும்.
கீழ் நிலையில் இருந்து மேல் எடுக்கும் அடிக்கடி மிக எளிதாக சொல்லக்கூடய நபர்.
25.பூரட்டாதி
இரக்க குணமும் ஏமாளித்தனமும்
ஒருங்கே அமையப்பெற்ற நபர்.
26.உத்திரட்டாதி
பயந்த சுபாவம் உள்ளவராக வெளிக்காட்டிக் கொண்டு
வாழக்கூடிய
எதற்கும் பயப்படாத நபர்.
27.ரேவதி
இவர்களை நேசிப்பவரை விட
இவர்கள் நேசிக்கும் நபரை
தாங்கிப் பிடிக்கக்கடிய
நபர் இவர்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
78100 22628 #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள்


