கோச்சாரத்தில் சந்திரன் 11இல் இருப்பது போல...
அதே கோச்சாரத்தில் சூரியன் 11 இல் இருக்கும்போதும்
நற் பலன்களை வாரி வழங்குவார்...
அதேபோல......
குறிப்பாக.....
ஒரு நாளில் வரக்கூடிய லக்னம் என்பது ....
உங்களுடைய லக்னத்திற்கு பதினொன்றாவது லக்னமாக வரும்போது...
வெற்றி மேல் வெற்றி தரும்.
லாபம் மேல் லாபம் தரும்.
புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்...
நாளை...
அதாவது
2026 சித்திரை மாதம் .
மேஷ லக்னம்: அதிகாலை 05:09 AM முதல் 06:45 AM வரை.
நீங்கள்
மிதுன லக்னக்காரர்கள் எனில் நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி அடையும் நேரம் இது..
இதேபோன்று....
ரிஷப லக்னம்: காலை 06:45 AM முதல் 08:40 AM வரை.
நீங்கள்
கடக லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம்.
மிதுன லக்னம்: காலை 08:40 AM முதல் 10:55 AM வரை.
நீங்கள்
சிம்ம லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம்.
கடக லக்னம்: காலை 10:55 AM முதல் 01:15 PM வரை.
நீங்கள்
கன்னி லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம்.
சிம்ம லக்னம்: மதியம் 01:15 PM முதல் 03:32 PM வரை.
நீங்கள்
துலா லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம்.
கன்னி லக்னம்: மாலை 03:32 PM முதல் 05:49 PM வரை.
நீங்கள்
விருச்சிக லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம்.
துலாம் லக்னம்: மாலை 05:49 PM முதல் 08:08 PM வரை.
நீங்கள்
தனுஷ் லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம்.
விருச்சிக லக்னம்: இரவு 08:08 PM முதல் 10:27 PM வரை.
நீங்கள்
மகர லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம்.
தனுசு லக்னம்: இரவு 10:27 PM முதல் 12:31 AM (ஏப்ரல் 28) வரை.
நீங்கள்
கும்ப லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம்.
மகர லக்னம்: நள்ளிரவு 12:31 AM முதல் 02:13 AM (ஏப்ரல் 28) வரை.
நீங்கள்
மீன லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம்.
கும்ப லக்னம்: அதிகாலை 02:13 AM முதல் 03:40 AM (ஏப்ரல் 28) வரை.
நீங்கள்
மேஷ லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம்.
மீன லக்னம்: அதிகாலை 03:40 AM முதல் 05:05 AM (ஏப்ரல் 28) வரை.
நீங்கள்
ரிஷப லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம்.
உங்கள் ஜாதக #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628
வறுமை என்பது லட்சம் பாம்புகளின் நஞ்சை விட கொடியது....
ஒருவருக்கு பாம்பு கடித்தால்..
ரத்தம் உறைந்த நிலைக்குச் சென்று..
மூளை செயல் இழந்து..
இருதய துடிப்பை நிறுத்தி
இறுதியில் மரணிக்க வைக்கும்.
ஆனால் வறுமை பீடித்தால்..
ரத்தம் உரையாது
மூளை சீராக செயல்படும்
இருதயத் துடிப்பும் நன்றாக இருக்கும்
ஆனாலும் அவர்.
வாழ்ந்தே ஆக வேண்டிய நடமாடும் பிணமாக இருப்பார்.
அந்த அளவிற்கு வறுமை கொடியது.
முடிந்தவரை
ஒருவர் மற்றொருவரின் வறுமையை போக்க முயற்சிக்கும் பட்சத்தில்....
முப்பத்து முக்கோடி தேவர்களில் யாரேனும் ஒருவரின் கடைக்கண் பார்வையை பெறுவதற்கு தகுதியுடையவராகிறார்.
இதை நான் கூறவில்லை...
கொடிது கொடிது வறுமை கொடிது அதைவிட கொடிது இளமையில் வறுமை கொடிது என முழங்கிய
ஔவை பாட்டி முதல்
வறுமை ஒரு சமூக கொடுமை அதை நீக்குவதே ஒவ்வொருவரின் ஆன்மீக கடமை ....என்று வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் வீர கர்ஜனை வழியாக....
நம்மிடைய வாழ்ந்த
என்று சொல்வதை விட...
இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம். என்று சொல்வதில் பெருமையும் புலகாங்கிதமும் கொஞ்சம் கர்வமும் அடைய வைத்த....
இந்திய தாயின் செல்ல குழந்தை.
குழந்தை மனம் படைத்தவர்.
கள்ளம் கபடம் இல்லாதவர்.
ஒவ்வொரு இந்தியர்களிடமும் தந்தைக்கு நிகராக மரியாதையை பெற்றிருக்கக் கூடியவர்.
கடின உழைப்பாளி.
அதைவிட படிப்பாளி.
மாணவர்களின் நேசன்.
குழந்தைகளின் சினேகிதன்.
ஒவ்வொரு இந்தியர்களையும் தன் பிள்ளைகளாக நினைத்தவர்.
கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல் இந்திய திருநாட்டிற்காக உழைத்துச்சென்ற உத்தமர்.
நம்மிடையே வாழ்ந்து
உறக்கத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும்
அக்னி சிறகுகளால்
அன்பாக எழுப்பிய
மகான் அவர்கள் கூறியது.
மேலும்...ஐயா அவர்களால் அருளப்பட்ட பொன்மொழியானது.
மகனே, உனது வாழ்வில் துன்பத்தில் துவழும்.
யாராவது ஒருவரின் வாழ்வில்.
நீ ஏதேனும் ஒரு வகையில் மாற்றத்தை உருவாக்கி...
அவரை துன்பத்திலிருந்து மீட்டெடுத்து.
முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றால்...
நீ மனிதனாக பிறந்ததன் பலன் உன்னை முற்றிலும் வந்தடையும்..
மேலும்...கடவுள் எப்பொழுதும் உனக்கு அருள் செய்வார்...
இதை இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும்...
பேரன்பும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய...
முன்னாள்
இந்திய குடியரசு தலைவர்.
டாக்டர்.
திரு APJ. அப்துல் கலாம் அவர்கள் அருளியது.
#jayakannanastrologer
#ShareThisPost #help #poorpeople #Godgrace #humanity #tamil #தமிழ் #ஔவைபாட்டி #SwamiVivekananda #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
கிரகங்களில் முழு வலிமையானது
கேது கிரகம் மட்டுமே.....
எனென்றால் அது சன்னியாசி கிரகம்.
சன்னியாசி என்றால்.?
சாமியாராக போவது அல்ல.
ஒருவர் தான் வாழும் வாழ்வில் எது நடந்தாலும் பரவாயில்லை என நினைக்க வைக்கும்
பக்குவஞானம் அடைந்தவர்.
கேது பகவான்
நவக்கிரகங்களில்
முதன்மையானவர்..
புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும்,
குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட
கேதுவே பலம் வாய்ந்தவர்.
குணத்தில்....
வஞ்சகம் சூழ்ச்சி தற்பெருமை
சூதுவாது தெரியாத சாத்வீக குணங்களை தருகின்ற
சாது கிரகம்.
சித்தர்களை குறிப்பதும் கேது தான்.
சித்தன் போக்கு சிவன் போக்கு என்று இருக்க வைப்பவரும் கேதுதான்.
எனவே..
கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.
இவர்கள் இப்படி சாதுவாக இருப்பதினாலேயே,,
ஒருசில குடும்பங்களில் பல பிரச்சனைகளையும் சந்திப்பார்கள்..
கேதுவின் அருள்பார்வை அவ்வளவு எளிதில் ஒரு ஜாதகருக்கு கிடைக்காது.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை.
அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை.
என்பதற்கேற்ப
கேதுவின் அருள்பார்வை கிடைப்பது கடவுள் வரமளிப்பது போன்றதற்க்கு சமம்.
கேது தரும் தெளிந்த ஞானத்தையும்,
கேது கற்றுக் கொடுக்கும் படிப்பினையும்
கேது கொடுக்க்கூடிய எதையும்......
எந்த கிரகத்தாலும் தட்டி பறிக்க முடியாது எனும் ரீதியில்
ஜாதகரை சிந்திக்க வைக்கும்.
எனவே..
கேது பகவான்
ஒருவருடைய ஜாதகத்தில்
சுபத்துவமாக இருக்கும் பட்சத்தில்
ஜாதகர்
பல வெற்றிகளை பெற்றிருந்தாலும்
வாழ்க்கையில் உயரிய நிலைக்கு வந்தாலும்
அடக்கத்துடனும்
அமைதியுடனும்
இருந்து..
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
தன்னடக்கத்துடன் இருப்பார்கள்.
ஏனெனில்...
கேது எனும் நிழல் கிரகத்திற்க்கு அதி தேவதையாக வருபவர்....
கடவுள்களின் முதல்வனான
வெற்றியின் சொரூபமான
பிள்ளை எம்பெருமானான
அடக்கம் அமைதியின் முழு உருவமான
கடவுள் கணபதி
என்பதால்.
ஜாதகர்....
தனிமை விரும்பிகளாகவும்
சாந்த சொரூபிகளாகவும்
கடவுள் தன்னுடன் இருப்பதைப் போன்ற ஒரு
உயரிய உணர்வுடன் இருப்பார்கள்.
___________________________________________
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628
P #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை arampurusha
புதன் கேது இணைவு பலன் என்ன என்று எளிதாக கேட்டு விடலாம்..
ஆனால் அதற்குள் ஒளிந்திருக்கக் கூடிய ஆழமான சூட்சமம் என்பது வேறு..
ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால்.?
புதன் அறிவு காரகன்
கேது ஞானகாரகன்.
புதன் ஜீவாத்மாவை போல நிரந்தரம் இல்லாதது.
கேது பரமாத்மாவை போல நிரந்தரமானது.
இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்...
கேதுவின் கட்டுப்பாட்டிற்குள் தான் புதன் வர வண்டும்.
புதனின் கட்டுப்பாட்டிற்குள் கேது வர மாட்டார்.
அதாவது..
நிரந்தரமான ஒன்று நிரந்தரம் இல்லாத ஒன்றை
எவ்வாறு பெருமைப்படுத்துகிறது எவ்வாறு சிறுமைப்படுத்துகிறது
என்பதே
புதன்கேது இனைவின் கேள்வியாகும்.
அந்த வகையில்.....
புதன் கேது உடன் இணைந்து புதனை தாண்டிய கேதுவால் புதன் சூட்சம வலுவில் இருக்கும் போது புதனின் காரகத்துவமான கல்விஅறிவை பெருக்குவார். புத்திசாலித்தனத்தை பெருக்குவார்.
புதன் கேது உடன் இணைந்து புதனை நோக்கி வருகின்ற கேதுவால் அதாவது பதனை கிரகணப்படுத்தும் நோக்கத்தில் வருகின்ற கேதுவால்.கல்வி அறிவு புத்திசாலித்தனத்தை தரவிடாமல் கேது சுருக்குவார்.
குறிப்பாக...
இந்த இணைவு எந்த பாவகத்தில் நிகழ்ந்துள்ளது
என்பதை பொருத்தும்.
சுபத்துவ பாபத்துவ அடிப்படையை பொருத்தும்..
மாறுபடும்.
அதாவது புதன் கேது இணைவு ஓடு கிரகணத்திலிருந்து...
கூடவே நல்ல ஸ்தானங்களில் அமர்ந்திருந்து..
சுபத்துவமும் அடைந்திருந்தால்
அளப்பரிய கல்வியை தரும்
கல்விக்கு ஏற்ற பணியை தரும்
பணிக்கு ஏற்ற மரியாதையையும்
புகழையும் தரும்.
சுருக்கமாக..
கல்வி கற்கும் காலத்திலும்
சிறந்த மாணவர் என்கிற புகழ் பெறுவார்கள்.
கல்வி கற்று பணியில் அமர்ந்த போதிலும் ..
இவர்களுடைய புத்திசாலித்தனத்தை பற்றி சிலாகித்து பேசி மகிழ்ந்து.
இவர்களுடைய புத்திசாலித்தனத்தினால் கிடைக்கக்கூடிய லாபத்தின் அடிப்படையில் அதற்குரிய மரியாதையையும் தந்து புகழவும் செய்வார்கள்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
7810022628
சம்சாரம் போனால் சகலமும் போச்சு...
இங்கே 'சம்சாரம்' என்பது நாம் வாழும் வாழ்க்கையின் அஸ்திவாரமாகவும் அச்சாணியாகவும் விளங்கக்கூடிய மனைவியை குறிக்கும்.
ஒருவருடைய ஜாதகத்தில் இல்லற வாழ்வு சிறப்பாக அமைந்தால் மட்டுமே மற்ற எல்லா பாக்கியங்களும் யோகங்களும் முழுமை பெறுகின்றன..
அந்த வகையில்...
ஜோதிடத்தில் மனைவியைக் குறிக்கும் கிரகம் சுக்கிரன்.
சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் பலமாக இருந்தால் மட்டுமே 'மகாலட்சுமி கடாட்சம்' கிட்டும்.
சுக்கிரன் பலம் பெற்று இருக்கக்கூடிய ஜாதகத்தில் மனைவி மகிழ்ச்சியாக இருப்பார்.
செல்வமும் சேரும்.
மேலும்...
ஏழாம் பாவகம் களத்திர ஸ்தானம்.
ஜாதகத்தில் 7-ம் இடம் என்பது வாழ்க்கைத்துணையை மட்டுமல்ல,..
நாம் அன்றாடம் சந்திக்கும் மக்கள் ,மற்றும் கூட்டுத் தொழிலையும் , செய்கின்ற வேலையையும், இன்ப துன்பங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர்களையும் குறிக்கும்.
ஒருவருக்கு 7 ஆம் பாவகம் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில்..
அது , அவரது சமூக உறவுகளில் நல்லிணக்கத்தையும் பாதிக்கும்.
மேலும் பொருளாதார கஷ்ட நஷ்டங்களையும் ,இன்ப துன்பங்களையும் இது போன்ற மனதில் உள்ள பாரத்தை பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர்களையும் நல்ல முறையில் தர மறுக்கும்.
மேலும் சந்திரன் என்பது தாயை குறிக்க கூடிய கிரகமாக இருந்தாலும்...
பொதுவாக பெண் கிரகம் என்பதாலும்...
தாய்க்குப்பின் தாரம் என்பதாலும்...
ஜாதகத்தில் சந்திரனும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்."
என்கிற சித்தர் பெருமான்களின் கூற்றின் அடிப்படையில்...
ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பது என்பது,
அவனது மனதை அவள் அமைதிப்படுத்த முடியும்.
பொதுவாக
வீட்டில் அமைதி இல்லையெனில், சமுதாயத்திடமும்,தொழிலிலும் கவனம் சிதறி சகல விஷயங்களிலும் குழப்பமும் கலக்கமும் அதன் மூலம் நஷ்டமும் பொருளாதார வீழ்ச்சியும் ஏற்படும்.
எனவேதான்...
ஒரு ஜாதகத்தில் பெண் கிரகங்களான...
சுக்கிரனும் சந்திரனும் மேலும் களத்திர பாவகமான 7 ஆம் இடமும் மிக மிக முக்கியம் என்பதை... பெரியவர்கள் சம்சாரம் போனால் சகலமும் போச்சு என்று
சூசகமாகவும் சூட்சமமாகவும் கூறியுள்ளார்கள்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
வக்கிரம் அடைந்த குருவின் பார்வை பற்றிய விளக்கம்....
பொதுவாக
முழுமையான இயற்கை சுபர் என்று வர்ணிக்கப்படும் குரு பகவானின் பார்வையை பற்றி விளக்கவே தேவையில்லை ஏனெனில் அது நன்மையையே செய்யும்...
இருந்த போதிலும்...
நீச்ச குருவின் வலிமைக்கும். உச்ச குருவின் வலிமைக்கும் உள்ள வித்தியாசத்தை போல.
வக்கிர குருவிற்க்கென்று தனித்துவம் உண்டு.
ஒருவருக்கு குரு திசை நடந்தால்..?
தோராயமாக முதல் எட்டு வருடத்திற்கு... குருவின் மூலத்திரிகோண வீடான தனசு வீட்டின் ஆதிபத்தியத்தை எடுத்து நடத்துவார்.
பிறகு மீன வீட்டின் ஆதிபத்தியத்தை எடுத்து நடத்துவார்.
அதே குரு...
வக்கிரமாகியிருந்து தசை நடந்தால்.?
முதலில் மீன வீட்டின் ஆதிபத்தியத்தை எடுத்து நடத்துவார்.
அதன் பிறகு தனுசு வீட்டின் ஆதிபத்தியத்தை எடுத்து நடத்துவார்.
என்கிற ரீதியில்....
ஒரு ஜாதகத்தில் குரு வக்கிரமாகி இருந்து...
அவருடைய பார்வையானது..
லக்னத்திற்கோ ,ஏதேனும் ஒரு பாவகத்திற்கோ, அல்லது தசை நடத்திக் கொண்டிருக்கின்ற கிரகத்திற்கோ.. குருவின் பார்வை விழும் பட்சத்தில்...
உங்களுடைய லக்னத்திற்கு
மீனம் எந்த பாவமாக வருகிறதோ...
அந்த பாவகாதிபதியின் பார்வையை பெற்றிருப்பது போலவே அது அமையும்.
உதாரணமாக ....
மேஷ லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு தன்னுடைய லக்னத்திற்க்கு வக்கிரமடைந்த குரு பார்வை கிடைக்கும் பட்சத்தில்...
பாக்ய அதிபதி லக்னத்தை பார்ப்பதாக என்ன வேண்டுமா?
விரையாதிபதி லக்னத்தை பார்ப்பதாக என்ன வேண்டுமா.?
என்றால்.
விரையாதிபதி பார்ப்பதாகவே கொள்ள வேண்டும்.
அதேபோல...
மேலும் ஒரு உதாரணமாக...
கடக லக்னத்திற்கு அட்டமாதிபதி சனி திசை நடக்கும் போது...
வக்கிரமடைந்த குருவின் பார்வை சனியின் மீது விழுகும் போது...
கடக லக்னத்திற்கு பாக்கிய அதிபதியின் பார்வையைப் போல செயல்பட்டு வெளிநாட்டிற்கு அனுப்புமா.? என்றால் ...கிடையாது...
எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல...
ஏற்கனவே அட்டமாதிபதி தசையில் அவதிப்பட்டு கொண்டிருக்கிற ஒருவரிடம் கடன் நோய் எதிரி என்கிற ஆறாம் ஆதிபத்திய பலனையும் சேர்த்து அனுபவிக்க வைக்கும்...
இந்த பதிவு...
வக்கிரம் அடைந்த குருவின் பார்வை பலனை
புரிந்து கொள்ள மட்டுமே
இதுவே இறுதி நிலை அல்ல.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628
ஐந்தில் கேது இருந்தும் குழந்தை பிறப்பது எப்படி.?
பொதுவாக..
ஐந்தில் கேது இருந்தால்.?
புத்திர பாக்கியம் இல்லை என்று சொல்லிவிட முடியாது.
அதற்கு...
பலவிதமான பகுப்பு ஆய்வுகள் தேவை.
அதில் சில..
பொதுவாக ஐந்தாம் இடம் என்பது புத்திர ஸ்தானம் மட்டுமல்ல,பூர்வ புண்ணிய ஸ்தானமும் கூட.
பூர்வ புண்ணிய அதிபதி பாதிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில். குழந்தை பிறப்பது மட்டுமல்ல நல்லொழுக்கம் உள்ள குழந்தையாகவும் பிறக்கும்.
சரி..
இதில் கவனிக்க வேண்டியது.
ஐந்தாம் அதிபதிக்கு உரிய கிரகம் எது என்பதே...
ஐந்தாம் பாவக அதிபதி இயற்கை சுப கிரகமாக இருந்தால்...
ஐந்தாம் பாவகமும் பாவக அதிபதியும் குருவின் தொடர்பை பெற்று.
ஐந்தாம் அதிபதியின் தசையில் சந்தான பாக்கியம் உண்டாகும்.
ஒருவேளை...
ஐந்தாம் பாவக அதிபதி
இயற்கை பாவ கிரகமாக இருந்தால் லக்கினத்திற்கு மறைவு ஸ்தானமான 3,6,8,12 போன்ற வகையில் மறைந்து ஆட்சி உச்சம் நட்புவீடு போன்ற வகைகளில் அமர்ந்து.
குருவின் தொடர்பு அல்லது லக்னத்திற்கு திரிகோணாதிபதியின் தொடர்பை பெற்று தசை நடத்தும் பட்சத்தில்..
புத்திர பாக்கியம் உண்டாகும்.
ஒருவேளை ஐந்தில் அமர்ந்த கேது திசையே நடக்கிறது என்றால்.?
கேதுவிற்கு ஐந்தில் அதாவது
லக்னத்திற்கு ஒன்பதாம் இடத்தில்
குரு அமர்ந்து...
குருவின் பார்வையைப் பெற்ற கேது தசையிலும் புத்திர சம்பத்து உண்டாகும்.
மேலும்...
புத்திர காரகன் குரு பகவான்
லக்னத்திற்கு 11 ஆம் அதிபதியுடன் இணைந்திருக்க...
இரண்டிற்கும் மேற்பட்ட மழலைச் செல்வங்கள் வீட்டில்
தவழ்வார்கள்.
#✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628
சுழலும் கிரகங்கள் யாவும் உனை கைவிட்டால்..?
உன்னை சுமக்கும் பூமி கூட உனை சுமக்க மறுப்பது போல் தோன்றும்.
கட்டிய மனைவி அல்லது கட்டிய கணவன், பெற்ற பிள்ளைகளும் உற்றார் உறவினர் நண்பர்களும் மனித கற்சிலையாக மாறிவிடுவர்.
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயும் உன்னிடம் அந்நியமாக நடந்து கொள்வார்.
பெற்ற தகப்பன் என்ன.?படைத்த பிரம்மனே எதிரி போல தெரிவார்.
இந்நிலையில்....
ஆதியும் அந்தமும் இல்லாத
பரம்பொருளின் மைந்தனான.
ஞானக்கொழுந்தான
முழுமுதற் கடவுளான
நவகிரகங்களை அடக்கி ஆளுகின்ற
தும்பிக்கையுடன் இருக்கின்ற
ஸ்ரீ விநாயகப் பெருமானை
முழு நம்பிக்கையுடன்
நாள்தோறும் வணங்கிடு.
தடைகள் விலகி
கிரகங்கள் ஒவ்வொன்றாக உனக்கு வழி விடுவதை போன்ற உணர்வை....
உனக்குள் நீ உணர்வாய்.
அனைவரும் கிரகங்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும்
அனைத்து கிரகங்களும் இறைவனின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
எனவே...
ஒருவரை...கிரகங்கள்... அவருடைய ஜாதகத்தின் வழியாக
மோசமான கிரக அடைவுகள் மூலமாகவோ.
தொடர்ந்து அவயோக தசா புத்திகளை அனுபவிக்க வைப்பதன் மூலமாகவோ...
அந்த நபரை...
கிரகங்கள் அனைத்தும் கைவிடும் போது.!!
இறைவனின் கையை இறுக பற்றிக் கொள்ள...
அந்த நபர்...
இறைவனின் நேரடி கட்டுப்பாட்டிற்கு செல்வார்.
சுருக்கமாக...
விநாயகர் ....
மூன்று முறை தன் தாய் தந்தையரை சுற்றி வந்து பழத்தை பெற்றுக் கொண்டார்.
நீ மூன்று முறை விநாயகரை சுற்றி வந்து அரை குடம் நீரால் குளிர்வித்து அரைமுழம் அருகம்புல்லினால் அலங்கரித்து திருநீர் அணிந்து சரணாகதி அடைந்து உனக்கான கோரிக்கையை வைத்தால்.
அடுத்த கணமே உன்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற தயாராகி விடுவார்.
தூய உள்ளம் படைத்த
ஞான ஊற்றின் பேரொளியான
அன்பு கருணை அமைதியின் வடிவான..
அதி அற்புதம் நிறைந்த
அதிசய பிள்ளையார்.
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628 #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
ஏழில் சனி திக்பலத்துடன் சுபத்துவம் இன்றி இருந்தால்..? கணவனால் அல்லது மனைவியால் அல்லது நண்பரால் ...என்னற்ற அவமானங்கள் ஏற்படும்.
ஏழில் சனி திக் பலத்துடன் பாவத்துவம் அடைந்திருந்தால்.? கணவனால் அல்லது மனைவியால் அல்லது நண்பரால் அசிங்க அவமானம் மற்றும் துரோகத்துடன் கூடிய ஆபத்தும் உண்டு.
ஏழில் சனி திக்பலத்துடன் பாவத்துவமும் சுபத்துவமும் அடைந்திருந்தால்...கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் புரிதல் இல்லாத நிலை ஏற்பட்டு அதன் மூலம் சண்டை சச்சரவுகள் அதன் மூலம் பிரிவும் ஏற்பட்டு இறுதியில் சேருவர்.
ஏழில் சனி திக் பலத்துடன் சுபத்துவம் அடைந்திருந்தால்...
கணவனை புரிந்து கொள்ளக் கூடிய மனைவியும்.
மனைவியை புரிந்து கொள்ளக்கூடிய கணவனும்.
கணவனாக இருந்தால் பொறுமையான மனைவியும்.
மனைவியாக இருந்தால் பொறுமையான கணவனும்.
அமையப்பெற்று....
கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும்
பெருமையும் புகழும் உண்டாகி
நீண்ட நாள் இணை பிரியாத கணவன் மனைவியாக பிறர் கண் படும் படி
ஜாடிக்கு ஏற்ற மூடியாக
வாழ்வார்கள்.
உங்கள் ஜாதக #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628












